புதுடெல்லி: கடந்த 1999-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை ஹர்கத் உல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த 5 தீவிரவாதிகள் கடத்தினர். இந்த விமானம் ஆப்கானிஸ்தானின் காந்தகாருக்கு கடத்தி செல்லப்பட்டது. விமானத்தில் 178 பயணிகள், 2 விமானிகள், 13 ஊழியர்கள் என 193 பேர் இருந்தனர். அவர்களை பத்திரமாக மீட்க மத்திய அரசு சார்பில் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன்படி இந்திய சிறைகளில் இருந்த 3 தீவிரவாதிகள் விடுதலை செய்யப்பட்டு, விமான பயணிகள் மீட்கப்பட்டனர். இந்தியன் ஏர்லைன்ஸ் விமான கடத்தலுக்கு தீவிரவாதி அப்துல் ரவூப் அசார் என்பவர் மூளையாக செயல்பட்டார். பாகிஸ்தானின் பாவல்பூரில் உள்ள ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாமில் தீவிரவாதி அப்துல் ரவூப் அசார் தங்கியிருந்தார். இந்திய ராணுவம் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலின்போது அவர் உயிரிழந்தார். ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின்…
Author: admin
சென்னை: சென்னை விமான நிலையம், கார்கோ, துறைமுகம் உள்ளிட்ட இடங்களில் இருந்து 273 சுங்கத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையராக இருந்த சீனிவாச நாயக், சுங்கத்துறையில் இருந்து ஜிஎஸ்டி துறைக்கு சமீபத்தில் மாற்றப்பட்டார். இதையடுத்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையராக, டெல்லி சுங்கத்துறை ஆணையராக இருந்த தமிழ் வளவன் பொறுப்பேற்றார். இந்நிலையில் சென்னை சுங்கத்துறையில் கூடுதல், இணை, துணை, உதவி ஆணையர்கள் உட்பட 273 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, சென்னை விமான நிலைய சுங்கத்துறையில் இருப்பவர்கள், விமான நிலைய கார்கோ சுங்கப் பிரிவுக்கும், மற்றும் சென்னை துறைமுகம், ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத்துறை தலைமை அலுவலகம், ஜிஎஸ்டி வரி விதிப்பு பிரிவு ஆகியவற்றுக்கும் இடமாற்றப்பட்டுள்ளனர். வழக்கமான நடவடிக்கைதான்: அதேபோல், ஜிஎஸ்டி பிரிவில் உள்ளவர்கள், சென்னை விமான நிலைய சுங்கத்துறை, விமான நிலைய கார்கோ பிரிவு, சென்னை துறைமுகம் ஆகிய…
கோப்பு – பில் கேட்ஸ் (காலா கெஸ்லர்/தி நியூயார்க் டைம்ஸ்) தொழில்நுட்ப கோடீஸ்வரரும் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸும் உலகெங்கிலும் உள்ள அவரது பரோபகார படைப்புகளுக்காக அறியப்படுகிறார்கள். மே 8 அன்று, கேட்ஸ் தனது மீதமுள்ள 99% செல்வத்தை பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்கு அடுத்த 20 ஆண்டுகளில் நன்கொடையாக வழங்குவதாக அறிவித்தார். கேட்ஸ் அறக்கட்டளை 2045 க்குள் அதன் செயல்பாடுகளை மூடிவிடும் என்றும் அவர் பகிர்ந்து கொண்டார்.69 வயதான பில் கேட்ஸ், 168 பில்லியன் டாலர் தனிப்பட்ட செல்வத்தைக் கொண்டுள்ளார், இது அவரை உலகின் ஐந்தாவது பணக்காரராக ஆக்குகிறது என்று ப்ளூம்பெர்க்கின் பில்லியனர்களின் குறியீட்டின்படி.அவர் தனது முடிவைப் பற்றி தனது தனிப்பட்ட வலைப்பதிவில் வெளியிட்டார். அவர் எழுதினார், “நான் இறக்கும் போது மக்கள் என்னைப் பற்றி நிறைய விஷயங்களைச் சொல்வார்கள், ஆனால் ‘அவர் பணக்காரர் இறந்தார்’ அவர்களில் ஒருவராக இருக்க மாட்டார் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்…
இது AI- உருவாக்கிய படம், இது பிரதிநிதித்துவ நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. Aஒரேகான் கடற்கரையிலிருந்து சுமார் 300 மைல் தொலைவில் உள்ள நீருக்கடியில் எரிமலை மீண்டும் உயிர்ப்பிக்கிறது, விஞ்ஞானிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் எந்த நேரத்திலும் வெடிப்பு ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கின்றனர்.அசாக்சியல் சீமவுண்ட் அறியப்பட்ட இந்த எரிமலை கடலின் மேற்பரப்புக்கு அடியில் கிட்டத்தட்ட ஒரு மைல் தொலைவில் உள்ளது மற்றும் சமீபத்திய வாரங்களில் செயல்பாட்டின் தெளிவான அறிகுறிகளைக் காட்டுகிறது.என்.பி.சி செய்திகளின்படி, ஆராய்ச்சியாளர்கள் மார்ச் மாத இறுதியில் மற்றும் ஏப்ரல் தொடக்கத்தில் ஒரு நாளைக்கு 1,000 பூகம்பங்களை பதிவு செய்தனர். மூன்று தசாப்தங்களாக அச்சு படித்த ஒரேகான் மாநில பல்கலைக்கழகத்தின் எரிமலை நிபுணர் பில் சாட்விக், “கடற்பரப்பு உண்மையில் அதிகரித்து வருகிறது, அது ஒரு பெரிய சமிக்ஞை” என்று கூறினார். இந்த வீக்கம் மாக்மா கட்டமைப்பின் அடியில் குவிந்து வருவதைக் குறிக்கிறது, வெடிப்பதற்கு அறியப்பட்ட முன்னோடி.புவியியல் ஹாட் ஸ்பாட் மற்றும் பசிபிக் மற்றும்…
முதல் பார்வையில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்பது பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 இடங்களில் ஒருங்கிணைந்த தாக்குதலாகத் தெரிகிறது. ஆனால் இந்த நடவடிக்கை, இந்திய சமூகம் மற்றும் அரசியல் பற்றி ஆழமானப் புரிதலுடன் பிரதமர் நரேந்திர மோடியால் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 22-ல் பஹல்காமில் பாகிஸ்தான் தொடர்புடைய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். மணமான இந்துப் பெண்களின் நெற்றித் திலகம் துடைக்கப்பட்ட துயரம் நிகழ்ந்தது. இதற்கு 15 நாட்களில் மே 7-ல் இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இதற்கானப் பெயரை இந்திய ராணுவம் முதன்முறையாக கவனமாக சிந்தித்தது. காரணம் இந்த நடவடிக்கையை இந்திய மக்களுடன் உணர்வுபூர்வமாக இணைக்கவும் விரும்பியது. இதற்கு பிரதமர் மோடியே யோசித்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனப் பெயரிட்டிருந்தார். இந்த தாக்குதல் பாகிஸ்தானுக்கு கற்பனை செய்து பார்த்திராத சேதத்தை ஏற்படுத்தி விட்டது. இந்திய ராணுவ நடவடிக்கை தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தும் பொறுப்பு, ராணுவத்தின் இரண்டு பெண் அதிகாரிகளான…
சென்னை: ஒவ்வொருவரையும் தொழில்முனைவோராக உருவாக்கும் பணியை ரெப்கோ நுண்கடன் நிறுவனம் செய்து வருவது பாராட்டுக்குரியது என, கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வி.கீதாலஷ்மி கூறினார். ரெப்கோ நுண்கடன் நிறுவனத்தின் 15-வது ஆண்டு விழா சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் வரவேற்புரை ஆற்றுகையில், “ரெப்கோ நுண்கடன் நிறுவனம் கடந்த 2010-ம் ஆண்டு நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் தனது முதல் கிளையை தொடங்கி, தற்போது 130 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. தென் மாநிலங்களில் 12 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி கடன் வழங்கியுள்ளது. மகளிர் மேம்பாட்டுக்காக இந்நிறுவனம் பணியாற்றி வருகிறது” என்றார். ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் தலைவர் சி.தங்கராஜு தலைமை விருந்தினராக பங்கேற்று பேசும்போது, “இந்தியாவில் தற்போது ஆயிரம் ஆண்களுக்கு 1,200 பெண்கள் உள்ளனர். அதாவது சுமார் 70 கோடி பெண்கள் உள்ளனர். இந்தியா வல்லரசாகும் கனவை நனவாக்க பெண்கள்…
தூங்கும் போது கூட, எங்கள் மூளை நிறைய ஆச்சரியமான காரியங்களைச் செய்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை சரிசெய்வதிலிருந்து அறிவாற்றல் செயல்பாட்டை அதிகரிக்கும் வரை, எங்கள் மூளை தூக்கத்தில் கூடுதல் கடினமாக உழைக்கிறது.இருப்பினும், இப்போது, நீங்கள் தூங்கும்போது உங்கள் நினைவகத்தை 226% அதிகரிக்க ஒரு வழி உள்ளது! எப்படி, நீங்கள் கேட்கலாம்? இரவில் இனிமையான வாசனை திரவியங்களில் சுவாசிப்பதன் மூலம். இங்கே எப்படி …வாசனை உணர்வுஎங்கள் வாசனை உணர்வு மூளையின் நினைவகம் மற்றும் உணர்ச்சி மையங்களுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. மூளையின் தாலமஸ் வழியாக சமிக்ஞைகளை அனுப்பும் மற்ற புலன்களைப் போலல்லாமல், ஆல்ஃபாக்டரி சிஸ்டம் சிக்னல்களை நேராக லிம்பிக் அமைப்புக்கு அனுப்புகிறது, இது நினைவகம் மற்றும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது. இந்த தனித்துவமான பாதை என்றால், வாசனை நம் மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதை கடுமையாக பாதிக்கும், குறிப்பாக கற்றல் மற்றும் நினைவகம் தொடர்பான பகுதிகளில்.சமீபத்தில், கலிஃபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள், இர்வின்,…
கர்நாடக இந்து அறநிலைய மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, ஆபரேஷன் சிந்தூரில் ஈடுபட்ட இந்திய ராணுவ வீரர்களுக்காக அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜை நடத்துமாறு உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று அனைத்து இந்து கோயில்களிலும் ஆபரேஷன் சிந்தூரில் ஈடுபட்ட இந்திய ராணுவ வீரர்களுக்கு கூடுதல் பலமும், பாதுகாப்பும் கிடைக்க வேண்டும் என சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள ஹனுமன் கோயிலில் நடைபெற்ற பூஜையில் அமைச்சர் ராமலிங்க ரெட்டி பங்கேற்று, பிரார்த்தனை செய்தார். இந்நிலையில் சிறுபான்மை யினர் நலத்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் கூறுகையில், ‘‘மே 9-ம் தேதி கர்நாடகாவில் உள்ள அனைத்து மசூதிகளிலும் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது, ஆபரேஷன் சிந்தூரில் ஈடுபட்ட இந்திய ராணுவ வீரர்களுக்கு கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்க பிரார்த்தனை செய்ய உத்தரவிட்டுள்ளேன். பெங்களூரு கே.ஆர்.மார்க்கெட்டில் உள்ள ஜும்மா மசூதியில் நடைபெறும் தொழுகையில் நானும் பங்கேற் கிறேன்” என்றார்.
சென்னை: நடப்பாண்டு பிளஸ்-2 பொதுத் தேர்வை தமிழக சிறைகளில் உள்ள 2 பெண் கைதிகள் உட்பட 130 கைதிகள் எழுதினர். தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், 10 கைதிகள் மட்டும் தேர்ச்சி பெறவில்லை. புழல் சிறையில் தேர்வு எழுதிய 21 பேரில் 18 பேரும், புழல் மத்திய சிறையில் தேர்வு எழுதிய 4 பேரில் 2 பேரும், வேலூர் மத்திய சிறையில் தேர்வு எழுதிய 9 பேரில் 5 பேரும், கடலூர் மத்திய சிறையில் தேர்வு எழுதிய 7 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதேபோல கோவையில் 20, சேலத்தில் 8, திருச்சியில் 22, மதுரையில் தேர்வு எழுதிய 30 பேரில் 29 பேரும், பாளையங்கோட்டையில் 7 பேரும், மதுரை மற்றும் திருச்சி பெண்கள் தனிச்சிறையில் தலா ஒருவரும் தேர்ச்சி பெற்றனர். பாளையங்கோட்டை மத்திய சிறை கைதி மீனாட்சி சுந்தரம் 524 மதிப்பெண்களும், அதே சிறைக் கைதி வைத்திலிங்கம் 517 மதிப்பெண்களும்,…
சென்னை: பொது பயன்பாடு மற்றும் அரசு ஆவணங்களில் இருந்தும் ‘காலனி’ என்ற சொல் நீக்கப்படுவதாக அறிவித்ததற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் பாராட்டு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆணையத்தின் தலைவர் நீதிபதி தமிழ்வாணன், துணை தலைவர் இமயம், உறுப்பினர்கள் ஆனந்தராஜா, ரேகா பிரியதர்ஷினி, செல்வக்குமார், பொன்தோஸ், இளஞ்செழியன் ஆகியோர் அனுப்பிய கடிதத்தில், ‘பொது பயன்பாடு மற்றும் அரசு ஆவணங்களில் இருந்து காலனி என்ற சொல் நீக்கப்படும் என அறிவித்திருப்பதன் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனில் முதல்வர் அதிக அக்கறையுடன் செயல்படுவது உறுதியாகி இருக்கிறது. இதற்காக முதல்வருக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் மனப்பூர்வமாக பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது’ என கூறியுள்ளனர்.