Author: admin

மும்பை: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்று காலை அறிவித்தார். இந்நிலையில், அது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா. “எல்லோரும் உங்களின் சாதனைகள் மற்றும் மைல்கல்கள் குறித்துதான் பேசுவார்கள். ஆனால், யாரும் காணாத உங்களது போராட்டங்கள், வெளிக்காட்டாத உங்களது கண்ணீர், கிரிக்கெட் மீது நீங்கள் கொண்டுள்ள நேசத்தையும் நான் அறிவேன். அது என் நினைவில் உள்ளது. ஒவ்வொரு டெஸ்ட் தொடருக்கு பிறகும் நீங்கள் பக்குவமடைந்தீர்கள். சர்வதேச கிரிக்கெட்டில் நீங்கள் வெள்ளை சீருடையில்தான் ஓய்வு பெறுவீர்கள் என நான் கற்பனை செய்தது உண்டு. ஆனால், நீங்கள் எப்போதும் உங்கள் மனம் சொல்வதை செய்வீர்கள்” என அந்த பதிவில் அனுஷ்கா கூறியுள்ளார். 2011 முதல் 2025 வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் சிங்க நடை போட்டவர் கோலி. சவாலான ஆடுகளம், சவாலான கள சூழல்,…

Read More

கேரளாவில் அதிக வசூல் செய்த மலையாள படம் என்ற மாபெரும் சாதனையை படைத்தது ‘துடரும்’. ஏப்ரல் 25-ம் தேதி தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா நடிப்பில் வெளியான படம் ‘துடரும்’. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், விளம்பரப்படுத்துதலும் இல்லாமல் இப்படம் வெளியானது. முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடன், இப்படத்தின் வசூல் வேட்டை தொடங்கியது. தற்போது கேரளாவில் அதிக வசூல் செய்த மலையாளப் படம் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. இதுவரை கேரளாவில் மட்டும் ரூ.90 கோடி வசூலைக் கடந்திருக்கிறது ‘துடரும்’. ஒரே ஆண்டில் ’எம்புரான்’ மற்றும் ‘துடரும்’ என்ற இரண்டு மாபெரும் வெற்றியைக் கொடுத்திருக்கிறார் மோகன்லால். மேலும், உலகளவில் ரூ.200 கோடி வசூலை ‘துடரும்’ கடந்திருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது. கேரளா மட்டுமன்றி வெளிநாடுகளிலும் இப்படத்தின் வசூல் குறையவே இல்லை. இப்படம் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே பல மடங்கு லாபம் கிடைத்திருக்கிறது. இன்றைய வசூலை கணக்கிட்டால் கண்டிப்பாக கேரளாவில் மட்டும் ரூ.100 கோடி…

Read More

மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் எழுந்தருளும் மண்டகப்படி பகுதியில் நின்றிருந்த பொறியாளர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். மேலும், சாலையோரம் இறந்த நிலையில் கிடந்தவர் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வினை காண மதுரை மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலை 3 மணி முதலாக கள்ளழகர் எழுந்தருளும் மண்டகப்படி பகுதிகளுக்குள் அனுமதிச்சீட்டு வைத்திருந்த முக்கிய பிரமுகர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். அப்பகுதியில், திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியைச் சேர்ந்த பூமிநாதன் (65) என்ற பொறியாளர் நின்று கொண்டிருந்தார். திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பூமிநாதனை ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது, அனைத்து…

Read More

டாக்டர் ஜி ஜோ என அழைக்கப்படும் டாக்டர் ஜோசப் சல்ஹாப், ஆரோக்கியமான கல்லீரலை பராமரிக்க பல தின்பண்டங்களை பரிந்துரைக்கிறார். அவரது பரிந்துரைகளில் தர்பூசணி கொண்ட சுண்ணாம்பு, வெண்ணெய் பழத்துடன் புளிப்பு, இனிப்பு உருளைக்கிழங்குடன் கிம்ச்சி மற்றும் பாதாம் பருப்புடன் அக்ரூட் பருப்புகள் ஆகியவை அடங்கும். பெர்ரிகளுடன் டார்க் சாக்லேட், கிரேக்க தயிர் கொண்ட கிவி மற்றும் இலவங்கப்பட்டை கொண்ட ஆப்பிள்களையும் அவர் பரிந்துரைக்கிறார், இவை அனைத்தும் ஆக்ஸிஜனேற்றிகள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரோபயாடிக்குகள் மூலம் கல்லீரல் ஆரோக்கியத்தை ஆதரிக்கின்றன. கல்லீரல் நம் உடலில் முக்கிய பங்கு வகிக்கிறது. சுமார் 3 பவுண்டுகள் எடையுள்ள இந்த உறுப்பு, புரதங்களின் செரிமானம், கனிம சேமிப்பு, பித்த உற்பத்தி மற்றும் இரத்த வடிகட்டுதல் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்ட செயல்பாடுகளைச் செய்கிறது. ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு கல்லீரல் ஆரோக்கியம் மிக முக்கியமானது. இன்ஸ்டாகிராமில் 1.3 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் ஜோசப்…

Read More

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடங்கப்பட்ட பிறகு, பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 22-ம் தேதி கொடூர தாக்குதல் நடத்தி சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேரை சுட்டுக் கொன்றனர். இதற்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை இந்திய ராணுவம் கடந்த 7-ம் தேதி மேற்கொண்டு, பாகிஸ்தான் மற்றும் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசியது. இதில், 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆபரேஷன் சிந்தூர்: மறுநாள், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள 15 முக்கிய நகரங்களை குறிவைத்து ஏவுகணை மற்றும் 400 ட்ரோன்களை பாகிஸ்தான் வீசியது. இந்தியா தனது அதிநவீன ஆயுதங்களான எல்-70…

Read More

சென்னை: மத்திய கடல்சார் மீன்வள தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தில், 2025-27-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வரும் ஜூன் 16-ம் தேதி கடைசி நாளாகும். மத்திய மீன்வளத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், மத்திய கடல்சார் மீன்வள தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் (சிப்நெட்) சார்பில், 2025-27-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மரைன் ஃபிட்டர், வெசல் நேவிகேட்டர் ஆகிய இரு பயிற்சிகள் இந்நிறுவனத்தில் அளிக்கப்படும். பயிற்சிக் காலம் 2 ஆண்டுகள். கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் தலா 40 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 2025 ஆக.1-ம் தேதியன்று 15 முதல் 20 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.350. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.175. சென்னை, ராயபுரத்தில் உள்ள சிப்நெட் நிறுவனத்தில் இப்பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின்போது ரூ.1,500 அரசு…

Read More

டேராடூன்: உத்தராகண்ட்டில் சார் தாம் யாத்திரை சீராகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை மாநில அரசு உறுதி செய்துள்ளது என்று அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘உத்தராகண்டில் சார் தாம் யாத்திரை சீராகவும் பாதுகாப்பாகவும் நடைபெற்று வருகிறது. ஹெலிகாப்டர் சேவைகளும் செயல்பாட்டில் உள்ளன. சார் தாம் யாத்திரை சீராகவும் பாதுகாப்பாகவும் செயல்படுவதை மாநில அரசு உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக தெரிவித்துள்ள முதல்வர் புஷ்கர் சிங் தாமி, “சார் தாம் யாத்திரை சீராகவும், பாதுகாப்பாகவும், நன்கு ஒழுங்கமைக்கப்பட்டதாகவும் செயல்படுவதை உறுதி செய்வதற்கு மாநில அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பே அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமையாகும்” என தெரிவித்துள்ளார். சார் தாம் யாத்திரை மாநிலம் முழுவதும் பாதுகாப்பாக நடத்தப்படுகிறது. பயண வழித்தடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஹெலிகாப்டர் சேவைகளும் சீராக இயங்குகின்றன. உண்மையான நிலைமையை மதிப்பிடவும், தேவையான மேம்பாடுகளை உறுதி செய்யவும், சார்…

Read More

‘கூலி’ படத்துக்குப் பின் அடுத்த திட்டங்கள் என்ன என்பதை லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, நாகார்ஜுனா, உபேந்திரா, ஆமிர்கான், ஸ்ருதிஹாசன், சவுபின் சாஹீர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கூலி’. ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதற்குப் பின் ‘கைதி 2’ படத்தினை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். இதனிடையே தனது அடுத்த திட்டங்கள் என்ன என்பதை லோகேஷ் கனகராஜ் பேட்டியொன்றில் கூறியிருக்கிறார். “அடுத்து ‘கைதி 2’ இயக்கவுள்ளேன். பின் கமல் சாருடன் ‘விக்ரம் 2’ பண்ணவுள்ளேன். அந்தக் கதையும் இன்னும் முடியவில்லை. அடுத்து இறுதியாக ‘லியோ 2’ இயக்கவுள்ளேன். பின் ‘ரோலக்ஸ்’ கதாபாத்திரத்தை வைத்து தனிப்படம் ஒன்று இயக்க இருக்கிறேன். அதற்கு ஐடியா இருக்கிறது. சூர்யா சாருடன் இது குறித்து பேசியிருக்கிறேன். இருவருமே எங்களுடைய படங்களை முடித்து நேரம் வரும் போது அப்படத்தில் இணைந்து பணியாற்றுவோம்” என்று…

Read More

சென்னை: “தமிழகத்தின் பல மாவட்டங்களில் பெய்த கோடை மழை காரணமாக, தினசரி மின்தேவை குறைந்தது. இதனால், தினசரி மின்தேவையை எளிதாக பூர்த்தி செய்ய முடியும்,” என மின்வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர். தமிழகத்தின் தினசரி மின்தேவை 16 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் உள்ளது. கோடைக் காலத்தில் வீடுகளில் ஏசி, மின்விசிறி உள்ளிட்டவற்றின் பயன்பாடு அதிகம் உள்ளதால், மின்தேவையும் அதிகரிக்கிறது. இதன்படி, கடந்த 2024 மே 2-ம் தேதி 20,830 மெகாவாட்டாக மின்தேவை அதிகரித்தது. இதுவே இதுவரை உச்ச அளவாக உள்ளது. நடப்பாண்டு மார்ச் மாதத்திலேயே வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியது. அத்துடன், மின்சார வாகனங்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. எனவே, இந்த ஆண்டு கோடைக் காலத்தில் மின்தேவை 22 ஆயிரம் மெகாவாட்டை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. அதிகரிக்கும் மின்தேவையை பூர்த்தி செய்வதற்காக ஏப்ரல், மே மாதங்களில் கூடுதலாக 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் ஒரு யூனிட் ரூ.9-க்கு வாங்க தனியார் நிறுவனங்களுடன் மின்வாரியம்…

Read More

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ரோஹித் சர்மா ஓய்வு அறிவித்ததையடுத்து சுனில் கவாஸ்கர் அவரைப் புகழ்ந்து பேசியுள்ளார். ரோஹித் சர்மா 67 டெஸ்ட் போட்டிகளில் 4,301 ரன்களை எடுத்துள்ளார். 24 போட்டிகளில் இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்திய ரோஹித், அதில் 12-ல் வெற்றி கண்டுள்ளார். 9 போட்டிகளில் தோற்றுள்ளார். 2023-ல் இந்திய அணி அவரது கேப்டன்சியில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று இறுதியில் ஆஸ்திரேலியாவிடம் செம உதை வாங்கியது நினைவிருக்கலாம். ரோஹித் 3 இரட்டைச் சதங்களை ஒருநாள் போட்டியில் அடித்திருக்கலாம். அவரது அணுகுமுறை ஆக்ரோஷமாக இருக்கலாம், அதற்காக விவ் ரிச்சர்ட்ஸ் உடன் ஒப்பிடுவது என்பதெல்லாம் ரிச்சர்ட்ஸ் ஆட்டத்தை அருகில் இருந்து பார்த்த சுனில் கவாஸ்கருக்கு அடுக்குமா என்பதுதான் நம் கேள்வி. முதலில் ரோஹித் குறித்து சுனில் கவாஸ்கர் என்ன சொல்கிறார் என்பதைப் பார்ப்போம்: கிரிக்கெட்டில் விவ் ரிச்சர்ட்ஸ் ஆடுவதை பார்க்கும் பாக்கியம் எனக்கு உண்டு. விவ் ரிச்சர்ட்ஸ் ஆடும்…

Read More