Author: admin

சென்னை: கரூர் சம்பவம் தொடர்பாக ஊடகச் செய்திகளைப் படித்த பிறகு, காட்சிகளைப் பார்த்த பிறகு நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன என்று எனக்குத் தோன்றுகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “கரூரில் நடந்த துயர நிகழ்வில் 41 பேர் இறந்திருக்கிறார்கள். அதில் 17 ஆண்கள், 15 பெண்கள், 9 குழந்தைகள் என்பது நெஞ்சை உலுக்குகிறது. பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இறந்தவர்களுக்கு என் அஞ்சலி. அவர்கள் குடும்பத்தினர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைவார்கள் என்று நம்புகிறேன். கரூரில் நடந்த துயர நிகழ்வு பற்றித் தமிநாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையே காங்கிரஸ் கட்சியின் கருத்து. அதுவே என்னுடைய கருத்து. ஊடகச் செய்திகளைப் படித்த பிறகு, காட்சிகளைப் பார்த்த பிறகு நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன என்று எனக்குத் தோன்றுகிறது.…

Read More

பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தியின் முதன்மை அடையாளம் சளி, காய்ச்சல் மற்றும் பல்வேறு வகையான நோய்த்தொற்றுகளின் பல நிகழ்வுகளின் மூலம் வெளிப்படுகிறது. வலுவான நோயெதிர்ப்பு அமைப்புகளை பராமரிக்கும் நபர்கள் நோய்களிலிருந்து விரைவாக குணமடைவார்கள், அரிதாகவே நோய்வாய்ப்படுகிறார்கள். தொடர்ச்சியான தொண்டை, சைனஸ் நோய்த்தொற்றுகள் மற்றும் தோல் நோய்த்தொற்றுகளை நீங்கள் அனுபவிக்கும் போது உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு கிருமிகளை எதிர்த்துப் போராடத் தவறிவிட்டது. நோய்த்தொற்றுகளின் காலம் நீளமாகி, உங்கள் உடல் அவர்களுடன் சண்டையிடும்போது அவற்றின் தீவிரம் அதிகரிக்கிறது. உங்கள் உடல் மீண்டும் மீண்டும் நோய்த்தொற்றுகளிலிருந்து அதிக மன அழுத்தத்தை அனுபவிக்கிறது, இது உங்கள் வாழ்க்கைத் தரத்தை குறைக்கிறது, எனவே நீங்கள் சரியான கவனிப்பைப் பெற வேண்டும், மேலும் நோய் எதிர்ப்பு சக்தி சிக்கல்களைக் கையாள வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

Read More

சென்னை: தவெக பரப்​புரை​யில் ஏற்​பட்ட உயி​ரிழப்​பு​கள் குறித்து சிபிஐ விசா​ரணைக்கு தமிழக அரசு ஆணை​யிட வேண்​டும் என அதி​முக, பாஜக, பாமக கட்​சிகள் வலி​யுறுத்​தி​யுள்​ளன. அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: கரூரில் நடந்த உயி​ரிழப்பு சம்​பவத்​துக்கு மக்​களின் உணர்​வாக மக்​களின் சந்தேகங்களை பதிவு செய்​திருந்​தேன். அதற்கு உரிய பதில் அளிக்க திராணி இல்​லாமல், சமூக வலை​தளங்​களில் அவதூறு பரவுவ​தாக கூறி​யிருக்​கும் முதல்​வரின் போட்​டோஷூட் வீடியோவே, தமிழகத்​துக்கு வாய்த்​திருக்​கும் முதல்​வர் எப்​படிப்​பட்​ட​வர் என்​ப​தற்கு சாட்​சி. காவல்​துறை பிரச்​சா​ரம் செய்ய ஒதுக்​கிய இடத்​தில் குளறு​படிகள், திமுக​வின் வழக்​க​மான ஆம்​புலன்ஸ் அரசி​யல், தடியடி நடந்த காட்​சிகள் இவை எல்​லாம் வதந்​தி​யா? கள்​ளக்​குறிச்​சி​யில் ஏற்​பட்ட கள்​ளச்​சா​ராய மரணங்​களுக்கு கனக்​காத இதயம், கலங்​காத கண்​கள், இப்​போது மட்​டும் கலங்​கு​கிற​தா, இதில் இன்​னும் கொடுமை​யாக முதல்​வர் அமைத்த ஒருநபர் விசா​ரணை ஆணை​யம் விசா​ரிக்​கும் காட்​சிகள் ஊடகங்​களில் தொடர்ந்து வந்து கொண்​டிருக்​கின்​றன. அதைப் பார்க்​கும் மக்​களுக்​கே, இது ஒருதலைபட்​ச​மான அரசின் தவறுகளை மூடி…

Read More

கொங்கு மண்டலம் எங்கள் கோட்டை என மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே வருகிறது அதிமுக. ஆனால், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் மட்டும் அவர்களின் செல்வாக்கு செல்லுபடியாகவில்லை. காரணம், பாஜக சகவாசம். இங்குள்ள சுமார் 30 ஆயிரம் முஸ்லிம் வாக்குகள் தேர்தலுக்குத் தேர்தல் திமுக-வுக்கு கைகொடுப்பதால் கொங்கு மண்டலத்தில் இந்தத் தொகுதி திமுக கோட்டையாகவே இருக்கிறது. அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பள்ளபட்டியில் சுமார் 30 ஆயிரம் முஸ்லிம் சமுதாய வாக்குகள் உள்ளன. இது தொகுதியில் உள்ள மொத்த வாக்குகளில் சுமார் 15 சதவீதமாகும். தேர்தலுக்குத் தேர்தல் அரவக்குறிச்சியின் அரசியல் தலையெழுத்தை எழுதுவதும் இந்த வாக்குகள் தான். 2011-ல், முன்னாள் எம்எல்ஏ-வான கே.சி.பழனிசாமியும், அதிமுக சார்பில் தற்போதைய பாஜக மாவட்டத் தலைவரான வி.வி.செந்தில்நாதனும் அரவக்குறிச்சியில் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் சுமார் 5 ஆயிரம் வாக்குகள் முன்னணியிலேயே இருந்து வந்த செந்தில்நாதன், பள்ளபட்டி வாக்குகளை எண்ண ஆரம்பித்ததுமே பின்னடைவை நோக்கிப் பயணித்தார்.…

Read More

அதிமுக கூட்டணியில் இம்முறை தங்களுக்கு 40 தொகுதிகளை கேட்க வேண்டும் என மனக்கணக்குப் போட்டுக் கொண்டிருக்கும் பாஜக, குறைந்தபட்சம் ஒரு மாவட்டத்துக்கு ஒரு தொகுதியையாவது கேட்டுப்பெற வேண்டும் என்ற திட்டத்திலும் இருப்பதாகச் சொல்கிறார்கள். இதில் தங்களுக்கு கூடுதல் செல்வாக்குள்ள கோவை மாவட்டத்தில் இம்முறை கூடுதலாக ஒரு தொகுதியை கேட்கவிருப்பதாக பாஜக-வினர் பேச ஆரம்பித்திருப்பது கோவை அதிமுக-வினர் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கிறது. கோவை மாவட்​டத்​தில் உள்ள 10 தொகு​தி​களில் கோவை தெற்கை பாஜக-​வும் மற்ற 9 தொகு​தி​களை அதி​முக-​வும் கடந்​த​முறை கைப்​பற்​றின. அதே​போல் மக்​கள​வைத் தேர்​தலில் அதி​முக துணை​யின்றி போட்​டி​யிட்ட பாஜக-​வின் அண்​ணா​மலை, சுமார் நாலரை லட்​சம் வாக்​கு​களைப் பெற்று அதிமுக-வை மூன்​றாமிடத்​துக்கு தள்​ளி​னார். அதி​லும் குறிப்​பாக, கோவை வடக்​கு, கவுண்​டம்​பாளை​யம் சட்​டப் பேர​வைத் தொகு​தி​களில் அதி​முக-வை விட பாஜக-வுக்கு கூடு​தல் வாக்​கு​கள் விழுந்​தன. இதையெல்​லாம் கணக்​குப் போட்​டுத்​தான் இம்​முறை தங்​களுக்கு கோவை​யில் கூடு​தலாக இன்​னொரு தொகு​தியை ஒதுக்க வேண்​டும் என…

Read More

கரூர்: தவெக மாநாட்டில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகனை கைது செய்து கரூர் நகர காவல் நிலையத்தில் வைத்து எஸ்.பி. கே.ஜோஷ்தங்கையா, ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்தன் உள்ளிட்டோர் விடிய, விடிய 10 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். மேலும் தவெகவைச் சேர்ந்த பவுன்ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டு அவரும் கரூர் நகர காவல் நிலையம் அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் வேலுசாமிபுரத்தில் செப்.27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக கரூர் நகர போலீஸார் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன், பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த், மாநில இணைச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அளித்த புகாரின்பேரில்…

Read More

பழங்கள் இயற்கையின் பரிசு, ஊட்டச்சத்து, நீரேற்றம் மற்றும் பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. இந்தியாவில் அனுபவித்த பல பழங்களில், பாபுகோஷா ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளார், குறிப்பாக பருவமழை. அதன் தாகமாக அமைப்பு மற்றும் புத்துணர்ச்சியூட்டும் சுவைக்கு பெயர் பெற்ற இந்த பழம் உடலில் அதன் குளிரூட்டும் விளைவுக்காக பரவலாக விரும்பப்படுகிறது. பொதுவாக ஆங்கிலத்தில் பேரிக்காய் என்று குறிப்பிடப்படும் பாபுகோஷா, சுவையாக மட்டுமல்ல, அதிக சத்தானதல்ல. ஃபைபர், வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பிய இது செரிமானத்தை ஆதரிக்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, மேலும் உங்களை நீரேற்றமாக வைத்திருக்கிறது. பாபுகோஷா, அதன் ஆங்கில பெயர் மற்றும் அதன் ஏராளமான சுகாதார நன்மைகளை உற்று நோக்கலாம்.பேரிக்காய்: பாபுகோஷாவின் ஆங்கில பெயர்பாபுகோஷா இந்தியாவில், குறிப்பாக வட இந்தியாவில் ஒரு பிரபலமான பழமாகும், மேலும் இது பெரும்பாலும் நாஷ்பதி (ஆசிய பேரிக்காய்) உடன் குழப்பமடைகிறது. இருவரும் பேரிக்காய் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், பாபுகோஷா ஒரு தனித்துவமான…

Read More

திருச்சி: ‘டெட் விவகாரத்தில் பள்ளி கல்வித் துறை, தமிழக அரசு சார்பாக சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளோம். நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது’ என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “செப்டம்பர் 1-ம் தேதி டெட் தேர்ச்சி என்பது மிக அவசியம் என்று தீர்ப்பு வந்தது. இது அனைத்து ஆசிரியர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது அனைத்து ஆசிரியர் சங்கங்களையும் அழைத்து இதுகுறித்து கருத்து கேட்கப்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற உத்தரவினை தொடர்ந்து, மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கவும் பள்ளிக் கல்வி முறை சீர்குலைவதை தடுக்கவும், உச்ச நீதிமன்றத்தில் பள்ளிக் கல்வித்…

Read More

லிப்ஸ்டிக் என்பது பலரால் தினமும் பயன்படுத்தப்படும் பிரபலமான ஒப்பனை ஆகும், இது வண்ணத்தை சேர்க்கிறது மற்றும் நம்பிக்கையை அதிகரிக்கும். இருப்பினும், சமீபத்திய ஆராய்ச்சி உதடு தயாரிப்புகளில் உள்ள சில பொருட்களிலிருந்து சுகாதார அபாயங்களை எடுத்துக்காட்டுகிறது. ஆய்வுகள் காட்மியம் மற்றும் ஈயம் போன்ற கனரக உலோகங்களை பலவிதமான உதட்டுச்சாயங்களில் கண்டறிந்துள்ளன, அவை காலப்போக்கில் உடலில் உருவாக்கப்படலாம். இந்த உலோகங்கள் நச்சுத்தன்மையுள்ளவை என்று அறியப்படுகின்றன, மேலும் நீண்டகால வெளிப்பாடு நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான சுகாதார பிரச்சினைகளின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும். எப்போதாவது பயன்பாடு தீங்கு விளைவிக்க வாய்ப்பில்லை என்றாலும், பொருட்களைப் பற்றி அறிந்திருப்பதும் பாதுகாப்பான மாற்றுகளைத் தேர்ந்தெடுப்பதும் உதட்டுச்சாயம் பயன்பாட்டுடன் தொடர்புடைய சுகாதார அபாயங்களைக் குறைக்க உதவும்.நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய உதட்டுச்சாயங்களில் தீங்கு விளைவிக்கும் பொருட்கள்லிப்ஸ்டிக்ஸில் பலவிதமான பொருட்கள் இருக்கலாம், அவற்றில் சில தீங்கு விளைவிக்கும். இது போன்ற கனரக உலோகங்கள் இருப்பதை ஆராய்ச்சி அடையாளம் கண்டுள்ளது:காட்மியம்: நுரையீரல் புற்றுநோய் மற்றும் சிறுநீரக சேதத்துடன்…

Read More

சென்னை: கரூரில் 41 பேர் உயி​ரிழந்த விவ​காரத்​தில், தவெக பிரச்​சா​ரத்​தின்​போது அதிக எண்​ணிக்​கையி​லான ஆம்​புலன்ஸ்​கள் வந்​தது எப்​படி என்​பது தொடர்​பாக தமிழக அரசின் ஊடகச் செயலர் பி.அ​மு​தா, சுகா​தா​ரத் துறைச் செயலர் பி.செந்​தில்​கு​மார் ஆகியோர் வீடியோ ஆதா​ரங்​களு​டன் விளக்​கம் அளித்​தனர். கரூரில் கடந்த 27-ம் தேதி தவெக தலை​வர் விஜய் பிரச்​சா​ரக் கூட்​டத்​தின்​போது நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். 100-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். இது தொடர்​பாக விஜய் சில கருத்​து களை வீடியோ​வில் தெரி​வித்​திருந்​தார். இந்​நிலை​யில், தமிழக அரசின் ஊடகச் செயலரும், வரு​வாய்த் துறைச் செயலரு​மான பி.அ​மு​தா, சட்​டம்​-ஒழுங்கு கூடு​தல் டிஜிபி டேவிட்​சன் தேவாசீர்​வாதம், சுகா​தா​ரத் துறைச் செயலர் பி.செந்​தில்​கு​மார் ஆகியோர் நேற்று தலை​மைச்செயல​கத்​தில் செய்​தி​யாளர்​களுக்​குப் பேட்​டியளித்​தனர். அப்​போது, விஜய் பிரச்​சா​ரம் தொடர்​பான வீடியோ காட்​சிகளை காண்​பித்​து, கூட்ட நெரிசல் நிகழ்​வு​களை விவரித்​தனர். அப்​போது அமுதா கூறிய​தாவது: கரூர் சம்​பவம் தொடர்​பாக சமூக வலை​தளங்​களில் தவறான கருத்​துகள் பகிரப்​படு​கின்​றன. அன்று…

Read More