சென்னை: தவெக பரப்புரையில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும் என அதிமுக, பாஜக, பாமக கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: கரூரில் நடந்த உயிரிழப்பு சம்பவத்துக்கு மக்களின் உணர்வாக மக்களின் சந்தேகங்களை பதிவு செய்திருந்தேன். அதற்கு உரிய பதில் அளிக்க திராணி இல்லாமல், சமூக வலைதளங்களில் அவதூறு பரவுவதாக கூறியிருக்கும் முதல்வரின் போட்டோஷூட் வீடியோவே, தமிழகத்துக்கு வாய்த்திருக்கும் முதல்வர் எப்படிப்பட்டவர் என்பதற்கு சாட்சி. காவல்துறை பிரச்சாரம் செய்ய ஒதுக்கிய இடத்தில் குளறுபடிகள், திமுகவின் வழக்கமான ஆம்புலன்ஸ் அரசியல், தடியடி நடந்த காட்சிகள் இவை எல்லாம் வதந்தியா? கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட கள்ளச்சாராய மரணங்களுக்கு கனக்காத இதயம், கலங்காத கண்கள், இப்போது மட்டும் கலங்குகிறதா, இதில் இன்னும் கொடுமையாக முதல்வர் அமைத்த ஒருநபர் விசாரணை ஆணையம் விசாரிக்கும் காட்சிகள் ஊடகங்களில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. அதைப் பார்க்கும் மக்களுக்கே, இது ஒருதலைபட்சமான அரசின் தவறுகளை மூடி…
Author: admin
கொங்கு மண்டலம் எங்கள் கோட்டை என மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே வருகிறது அதிமுக. ஆனால், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் மட்டும் அவர்களின் செல்வாக்கு செல்லுபடியாகவில்லை. காரணம், பாஜக சகவாசம். இங்குள்ள சுமார் 30 ஆயிரம் முஸ்லிம் வாக்குகள் தேர்தலுக்குத் தேர்தல் திமுக-வுக்கு கைகொடுப்பதால் கொங்கு மண்டலத்தில் இந்தத் தொகுதி திமுக கோட்டையாகவே இருக்கிறது. அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பள்ளபட்டியில் சுமார் 30 ஆயிரம் முஸ்லிம் சமுதாய வாக்குகள் உள்ளன. இது தொகுதியில் உள்ள மொத்த வாக்குகளில் சுமார் 15 சதவீதமாகும். தேர்தலுக்குத் தேர்தல் அரவக்குறிச்சியின் அரசியல் தலையெழுத்தை எழுதுவதும் இந்த வாக்குகள் தான். 2011-ல், முன்னாள் எம்எல்ஏ-வான கே.சி.பழனிசாமியும், அதிமுக சார்பில் தற்போதைய பாஜக மாவட்டத் தலைவரான வி.வி.செந்தில்நாதனும் அரவக்குறிச்சியில் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் சுமார் 5 ஆயிரம் வாக்குகள் முன்னணியிலேயே இருந்து வந்த செந்தில்நாதன், பள்ளபட்டி வாக்குகளை எண்ண ஆரம்பித்ததுமே பின்னடைவை நோக்கிப் பயணித்தார்.…
அதிமுக கூட்டணியில் இம்முறை தங்களுக்கு 40 தொகுதிகளை கேட்க வேண்டும் என மனக்கணக்குப் போட்டுக் கொண்டிருக்கும் பாஜக, குறைந்தபட்சம் ஒரு மாவட்டத்துக்கு ஒரு தொகுதியையாவது கேட்டுப்பெற வேண்டும் என்ற திட்டத்திலும் இருப்பதாகச் சொல்கிறார்கள். இதில் தங்களுக்கு கூடுதல் செல்வாக்குள்ள கோவை மாவட்டத்தில் இம்முறை கூடுதலாக ஒரு தொகுதியை கேட்கவிருப்பதாக பாஜக-வினர் பேச ஆரம்பித்திருப்பது கோவை அதிமுக-வினர் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கிறது. கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் கோவை தெற்கை பாஜக-வும் மற்ற 9 தொகுதிகளை அதிமுக-வும் கடந்தமுறை கைப்பற்றின. அதேபோல் மக்களவைத் தேர்தலில் அதிமுக துணையின்றி போட்டியிட்ட பாஜக-வின் அண்ணாமலை, சுமார் நாலரை லட்சம் வாக்குகளைப் பெற்று அதிமுக-வை மூன்றாமிடத்துக்கு தள்ளினார். அதிலும் குறிப்பாக, கோவை வடக்கு, கவுண்டம்பாளையம் சட்டப் பேரவைத் தொகுதிகளில் அதிமுக-வை விட பாஜக-வுக்கு கூடுதல் வாக்குகள் விழுந்தன. இதையெல்லாம் கணக்குப் போட்டுத்தான் இம்முறை தங்களுக்கு கோவையில் கூடுதலாக இன்னொரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என…
கரூர்: தவெக மாநாட்டில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகனை கைது செய்து கரூர் நகர காவல் நிலையத்தில் வைத்து எஸ்.பி. கே.ஜோஷ்தங்கையா, ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்தன் உள்ளிட்டோர் விடிய, விடிய 10 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். மேலும் தவெகவைச் சேர்ந்த பவுன்ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டு அவரும் கரூர் நகர காவல் நிலையம் அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் வேலுசாமிபுரத்தில் செப்.27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக கரூர் நகர போலீஸார் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன், பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த், மாநில இணைச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அளித்த புகாரின்பேரில்…
பழங்கள் இயற்கையின் பரிசு, ஊட்டச்சத்து, நீரேற்றம் மற்றும் பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. இந்தியாவில் அனுபவித்த பல பழங்களில், பாபுகோஷா ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளார், குறிப்பாக பருவமழை. அதன் தாகமாக அமைப்பு மற்றும் புத்துணர்ச்சியூட்டும் சுவைக்கு பெயர் பெற்ற இந்த பழம் உடலில் அதன் குளிரூட்டும் விளைவுக்காக பரவலாக விரும்பப்படுகிறது. பொதுவாக ஆங்கிலத்தில் பேரிக்காய் என்று குறிப்பிடப்படும் பாபுகோஷா, சுவையாக மட்டுமல்ல, அதிக சத்தானதல்ல. ஃபைபர், வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பிய இது செரிமானத்தை ஆதரிக்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, மேலும் உங்களை நீரேற்றமாக வைத்திருக்கிறது. பாபுகோஷா, அதன் ஆங்கில பெயர் மற்றும் அதன் ஏராளமான சுகாதார நன்மைகளை உற்று நோக்கலாம்.பேரிக்காய்: பாபுகோஷாவின் ஆங்கில பெயர்பாபுகோஷா இந்தியாவில், குறிப்பாக வட இந்தியாவில் ஒரு பிரபலமான பழமாகும், மேலும் இது பெரும்பாலும் நாஷ்பதி (ஆசிய பேரிக்காய்) உடன் குழப்பமடைகிறது. இருவரும் பேரிக்காய் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், பாபுகோஷா ஒரு தனித்துவமான…
திருச்சி: ‘டெட் விவகாரத்தில் பள்ளி கல்வித் துறை, தமிழக அரசு சார்பாக சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளோம். நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது’ என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “செப்டம்பர் 1-ம் தேதி டெட் தேர்ச்சி என்பது மிக அவசியம் என்று தீர்ப்பு வந்தது. இது அனைத்து ஆசிரியர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது அனைத்து ஆசிரியர் சங்கங்களையும் அழைத்து இதுகுறித்து கருத்து கேட்கப்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற உத்தரவினை தொடர்ந்து, மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கவும் பள்ளிக் கல்வி முறை சீர்குலைவதை தடுக்கவும், உச்ச நீதிமன்றத்தில் பள்ளிக் கல்வித்…
லிப்ஸ்டிக் என்பது பலரால் தினமும் பயன்படுத்தப்படும் பிரபலமான ஒப்பனை ஆகும், இது வண்ணத்தை சேர்க்கிறது மற்றும் நம்பிக்கையை அதிகரிக்கும். இருப்பினும், சமீபத்திய ஆராய்ச்சி உதடு தயாரிப்புகளில் உள்ள சில பொருட்களிலிருந்து சுகாதார அபாயங்களை எடுத்துக்காட்டுகிறது. ஆய்வுகள் காட்மியம் மற்றும் ஈயம் போன்ற கனரக உலோகங்களை பலவிதமான உதட்டுச்சாயங்களில் கண்டறிந்துள்ளன, அவை காலப்போக்கில் உடலில் உருவாக்கப்படலாம். இந்த உலோகங்கள் நச்சுத்தன்மையுள்ளவை என்று அறியப்படுகின்றன, மேலும் நீண்டகால வெளிப்பாடு நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான சுகாதார பிரச்சினைகளின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும். எப்போதாவது பயன்பாடு தீங்கு விளைவிக்க வாய்ப்பில்லை என்றாலும், பொருட்களைப் பற்றி அறிந்திருப்பதும் பாதுகாப்பான மாற்றுகளைத் தேர்ந்தெடுப்பதும் உதட்டுச்சாயம் பயன்பாட்டுடன் தொடர்புடைய சுகாதார அபாயங்களைக் குறைக்க உதவும்.நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய உதட்டுச்சாயங்களில் தீங்கு விளைவிக்கும் பொருட்கள்லிப்ஸ்டிக்ஸில் பலவிதமான பொருட்கள் இருக்கலாம், அவற்றில் சில தீங்கு விளைவிக்கும். இது போன்ற கனரக உலோகங்கள் இருப்பதை ஆராய்ச்சி அடையாளம் கண்டுள்ளது:காட்மியம்: நுரையீரல் புற்றுநோய் மற்றும் சிறுநீரக சேதத்துடன்…
சென்னை: கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில், தவெக பிரச்சாரத்தின்போது அதிக எண்ணிக்கையிலான ஆம்புலன்ஸ்கள் வந்தது எப்படி என்பது தொடர்பாக தமிழக அரசின் ஊடகச் செயலர் பி.அமுதா, சுகாதாரத் துறைச் செயலர் பி.செந்தில்குமார் ஆகியோர் வீடியோ ஆதாரங்களுடன் விளக்கம் அளித்தனர். கரூரில் கடந்த 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தின்போது நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பாக விஜய் சில கருத்து களை வீடியோவில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தமிழக அரசின் ஊடகச் செயலரும், வருவாய்த் துறைச் செயலருமான பி.அமுதா, சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், சுகாதாரத் துறைச் செயலர் பி.செந்தில்குமார் ஆகியோர் நேற்று தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர். அப்போது, விஜய் பிரச்சாரம் தொடர்பான வீடியோ காட்சிகளை காண்பித்து, கூட்ட நெரிசல் நிகழ்வுகளை விவரித்தனர். அப்போது அமுதா கூறியதாவது: கரூர் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான கருத்துகள் பகிரப்படுகின்றன. அன்று…
சில நேரங்களில், சிறிய இருண்ட புள்ளிகள் அல்லது நூல் போன்ற வடிவங்கள் பார்வைக் கடந்து செல்கின்றன, குறிப்பாக பிரகாசமான வானம் அல்லது வெற்று சுவரைப் பார்க்கும்போது. கண்கள் அவற்றில் கவனம் செலுத்த முயற்சிக்கும்போது அவை மறைந்துவிடும், ஆனால் விரைவாக இயக்கத்துடன் திரும்பலாம். இந்த புள்ளிகள் கண் மிதவைகள் அல்லது புள்ளிகள் என்று அழைக்கப்படுகின்றன. பெரும்பாலும் பாதிப்பில்லாதது என்றாலும், அவை சில நேரங்களில் கண்களின் ஆரோக்கியத்தைப் பற்றி ஆழமான பொருளைக் கொண்டு செல்ல முடியும்.கண் மிதவைகள் மற்றும் மங்கலான இடங்கள் என்ன?கண்ணுக்குள், விட்ரஸ் என்று அழைக்கப்படும் ஜெல்லி போன்ற திரவம் உள்ளது. காலப்போக்கில், இந்த விட்ரஸ் குறைவாக உறுதியாக மாறி சற்று சுருங்கத் தொடங்குகிறது. அதற்குள் கொலாஜனின் சிறிய கொத்துகள் விழித்திரையில் நிழல்களைக் காட்டுகின்றன, மேலும் இந்த நிழல்கள் மிதவைகள் அல்லது மங்கலான இடங்களாகத் தோன்றும். பிரகாசமான ஒளி பின்னணியில் அவை அதிகம் காணப்படுகின்றன, அதனால்தான் அவை திடீரென்று வானம் அல்லது வெள்ளை…
சென்னை: விரைவில் அனைத்து உண்மைகளும் வெளியே வரும். ‘சி.எம். சார்’ பழி வாங்க வேண்டும் என்றால் என் மீது கை வையுங்கள்; தொண்டர்களை விட்டுவிடுங்கள் என்று வீடியோ வெளியிட்டுள்ளார் தவெக தலைவர் விஜய். கரூரில் தவெக பிரச்சாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து விஜய் மவுனமாக இருந்ததால், அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவும், எதிர்ப்புகளும் குவிந்தன. இந்நிலையில், தவெக தலைவர் விஜய் 2 நாட்களுக்குப் பிறகு கரூர் சம்பவம் தொடர்பாக நேற்று வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் பேசியிருப்பதாவது: என் வாழ்க்கையில் இதுபோன்ற வலி நிறைந்த தருணத்தை நான் எதிர்கொண்டது கிடையாது. சுற்றுப் பயணத்தில் என்னை மக்கள் பார்க்க வருவதற்கு, அவர்கள் என் மீது வைத்துள்ள அன்பும், பாசமும்தான் காரணம். அந்த அன்புக்கும், பாசத்துக்கும் நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன். அதனால்தான் இந்த சுற்றுப் பயணத்தில் மற்ற எல்லா விஷயங்களையும் தாண்டி, அரசியல்…
