Author: admin

சென்னை: ​தென்​னிந்​திய பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நில​வு​கிறது. வடக்கு அந்​த​மான் கடல் பகு​தி​களில் நேற்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நில​வியது. இதன் காரண​மாக மத்​திய வங்​கக்​கடல் பகு​தி​களில் ஒரு காற்​றழுத்த தாழ்வு பகுதி உரு​வாகக்​கூடும். இது மேற்கு வடமேற்கு திசை​யில் நகர்ந்​து, மத்​தி​யமேற்கு மற்​றும் அதையொட்​டிய வடமேற்கு வங்​கக்​கடல் பகு​தி​களில் ஓரிரு நாளில் காற்​றழுத்த தாழ்வு மண்​டல​மாக வலுப்​பெறக்​கூடும். இது மேலும், மேற்​கு-வடமேற்கு திசை​யில் நகர்ந்​து, தெற்கு ஒடிஸா- வடக்கு ஆந்​திர கடலோரப் பகு​தி​ களில் அக்​.3-ம் தேதி வாக்​கில் கரையை கடக்​கும். இதனால் தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும், புதுச்​சேரி மற்​றும் காரைக்​கால் பகு​தி​களி​லும், இன்று இடி, மின்​னலுடன் கூடிய லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். பலத்த தரைக்​காற்று மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்​தில் வீசக்​கூடும். செங்​கல்​பட்​டு, விழுப்​புரம், கள்​ளக்​குறிச்சி மற்​றும் திரு​வண்​ணா​மலை மாவட்​டங்​களின் ஓரிரு இடங்​களில் நாளை கனமழை பெய்ய…

Read More

திருவள்ளூர்: மீஞ்​சூர் அருகே எண்​ணூர் அனல்​மின் நிலைய கட்​டு​மான பணி​யில் சாரம் சரிந்து விழுந்​து, வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் உயி​ரிழந்த சம்​பவம், பொது​மக்​கள் மத்​தி​யில் கடும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. திரு​வள்​ளூர் மாவட்​டம், வாயலூரில் இரு 660 மெகா வாட் திறனுடைய எண்​ணூர் சிறப்பு பொருளா​தார மண்டல மிக உய்ய அனல் மின் திட்ட கட்​டு​மானப் பணி​கள் சமீப கால​மாக நடை​பெற்று வரு​கிறது. பாரதமிகு நிறு​வனம் சார்​பில் நடை​பெற்று வரும் இந்த கட்​டு​மான பணி​யில், 3 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடு​பட்டு வரு​கின்​றனர். கட்​டு​மான பணி​யில் தற்​போது, சுமார் 70 சதவீத பணி​கள் முடிவடைந்​த​தாக கூறப்படுகிறது. இந்​நிலை​யில், எண்​ணூர் சிறப்பு பொருளா​தார மண்டல மிக உய்ய அனல் மின் நிலைய கட்​டு​மான பணி​யில், அனல்​மின் நிலைய முகப்பு பகுதி அமைக்​கும் பணி​யில் நேற்று மாலை சுமார் 30-க்​கும் மேற்​பட்ட வடமாநில தொழிலா​ளர்​கள் ஈடு​பட்டு வந்​துள்​ளனர். அப்​போது, திடீரென இரும்பு கம்​பிகளால்…

Read More

சென்னை: சென்​னை, சேலம் கோட்​டங்​களுக்கு உட்​பட்ட 20 ரயில் நிலை​யங்​களில் ‘எலெக்ட்​ரானிக் இன்ட்​டர் லாக்​கிங்’ என்ற நவீன சிக்​னல் முறையை செயல்​படுத்த ரயில்வே வாரி​யம் ரூ.230 கோடி ஒதுக்​கீடு செய்​துள்​ளது. தெற்கு ரயில்​வே​யில் உள்ள முக்கிய வழித்​தடங்​களில் ரயில்​களின் வேகத்தை அதி​கரிக்​க​வும், பாது​காப்​பாக இயக்​க​வும் ரயில்வே நிர்​வாகம் பல்​வேறு நடவடிக்​கைகளை எடுத்துவரு​கிறது. தண்​ட​வாளம், சிக்​னல் முறை​களை மேம்​படுத்​து​வது உட்பட பல்​வேறு பணி​களை மேற்​கொண்டு வருகிறது. அதன் ஒரு பகு​தி​யாக ‘எலெக்ட்​ரானிக் இன்ட்​டர் லாக்​கிங்’ என்ற நவீன சிக்​னல் முறையை செயல்​படுத்த ரயில்வே வாரி​யம் அனுமதி அளித்​துள்​ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே அதி​காரி​கள் கூறிய​தாவது: ‘எலெக்ட்​ரானிக் இன்ட்​டர் லாக்​கிங்’ என்​பது ரயில்​களை பாது​காப்​பாக இயக்க ரயில்வே கையாளும் இயந்​திர தொழில்​நுட்ப கட்​டமைப்பு ஆகும். இது இயந்​திர​வியல், மின்​சா​ர​வியல் தொடர்​புடையது. ஒரு தடத்​தின் வழி​யாக ரயிலை உள்ளே வரவழைக்​கவோ, அனுப்​பவோ தேவைப்​படும் பாயின்ட்​கள், ரயில் செல்​வதற்கு ஏற்ப பூட்​டப்​பட்​டு, ரயில்​களை பாது​காப்​பாக அனு​ம​திக்​கும் ‘சிக்​னல்…

Read More

கரூர்: கரூரில் கடந்த சனிக்கிழமை (செப்.27) அன்று தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மக்கள் உயிரிழந்தது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் 2-வது நாளாக இன்றும் (செப். 29-ம் தேதி) விசாரணை மேற்கொண்டு வருகிறார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் இதுவரை 41 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. மேலும், 110 பேர் காயமடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த வேலுசாமிபுரம் வடிவேல் நகரைச் சேர்ந்த விமல் மகனான ஒன்றரை வயது குழந்தையின் வீட்டில் இன்று (செப்.29-ம் தேதி) காலை அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தினார். தொடர்ந்து கரூர் ஏமூர் புதூரை சேர்ந்த சக்திவேல் மனைவி பிரியதர்ஷினி (35), தரணிகா (14) உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரிடம் அருணா ஜெகதீசன் விசாரணை…

Read More

சென்னை: கரூரில் பாதிக்கப்பட்டோரை விஜய் சந்திக்காதது குறித்து கேள்விக்கு, “தம்பி போகலைன்னா என்ன? அண்ணன் நான் தான் சென்றேனே?” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்தார். சென்னை விமானநிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான், “இப்போது எங்களுடன் மின் துறை அமைச்சர் வந்தார். அவர், மின்கம்பத்தில் தொண்டர்கள் ஏறும்போது தவெகவினர்தான் மின்சாரத்தை துண்டிக்குமாறு சத்தம் போட்டனர் என்றும், சிலர் ஜெனரேட்டரில் ஏறி விழுந்ததில் காலில் அடிப்பட்டது என்றும் அவர் சொன்னார். விஜய் வருவதற்காக நீண்ட நேரம் ஆனது. காலை 8 மணி முதலே காலை உணவு, மதிய உணவு, குடி தண்ணீர் இல்லாமல் காத்திருந்துள்ளனர். அதனால் ஒரு மயக்க நிலைக்கு வந்துள்ளனர். கூட்டத்திலிருந்து வெளியே செல்லலாம் என்றாலும், நெரிசலைக் கடந்து செல்ல முடியவில்லை என்று சொல்கின்றனர். அதுபோலத்தான் பலர் சிக்கிக்கொண்டனர். எதிர்க்கட்சி தலைவர் கூட்டம் நடத்திய இடத்தில்தான் தவெக கூட்டத்துக்கு அனுமதி கொடுத்ததாகவும், விஜய் குறித்த நேரத்துக்கு…

Read More

சென்னை: கரூர் சம்பவம் தொடர்பாக ஊடகச் செய்திகளைப் படித்த பிறகு, காட்சிகளைப் பார்த்த பிறகு நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன என்று எனக்குத் தோன்றுகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “கரூரில் நடந்த துயர நிகழ்வில் 41 பேர் இறந்திருக்கிறார்கள். அதில் 17 ஆண்கள், 15 பெண்கள், 9 குழந்தைகள் என்பது நெஞ்சை உலுக்குகிறது. பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இறந்தவர்களுக்கு என் அஞ்சலி. அவர்கள் குடும்பத்தினர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைவார்கள் என்று நம்புகிறேன். கரூரில் நடந்த துயர நிகழ்வு பற்றித் தமிநாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையே காங்கிரஸ் கட்சியின் கருத்து. அதுவே என்னுடைய கருத்து. ஊடகச் செய்திகளைப் படித்த பிறகு, காட்சிகளைப் பார்த்த பிறகு நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன என்று எனக்குத் தோன்றுகிறது.…

Read More

பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தியின் முதன்மை அடையாளம் சளி, காய்ச்சல் மற்றும் பல்வேறு வகையான நோய்த்தொற்றுகளின் பல நிகழ்வுகளின் மூலம் வெளிப்படுகிறது. வலுவான நோயெதிர்ப்பு அமைப்புகளை பராமரிக்கும் நபர்கள் நோய்களிலிருந்து விரைவாக குணமடைவார்கள், அரிதாகவே நோய்வாய்ப்படுகிறார்கள். தொடர்ச்சியான தொண்டை, சைனஸ் நோய்த்தொற்றுகள் மற்றும் தோல் நோய்த்தொற்றுகளை நீங்கள் அனுபவிக்கும் போது உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு கிருமிகளை எதிர்த்துப் போராடத் தவறிவிட்டது. நோய்த்தொற்றுகளின் காலம் நீளமாகி, உங்கள் உடல் அவர்களுடன் சண்டையிடும்போது அவற்றின் தீவிரம் அதிகரிக்கிறது. உங்கள் உடல் மீண்டும் மீண்டும் நோய்த்தொற்றுகளிலிருந்து அதிக மன அழுத்தத்தை அனுபவிக்கிறது, இது உங்கள் வாழ்க்கைத் தரத்தை குறைக்கிறது, எனவே நீங்கள் சரியான கவனிப்பைப் பெற வேண்டும், மேலும் நோய் எதிர்ப்பு சக்தி சிக்கல்களைக் கையாள வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

Read More

சென்னை: தவெக பரப்​புரை​யில் ஏற்​பட்ட உயி​ரிழப்​பு​கள் குறித்து சிபிஐ விசா​ரணைக்கு தமிழக அரசு ஆணை​யிட வேண்​டும் என அதி​முக, பாஜக, பாமக கட்​சிகள் வலி​யுறுத்​தி​யுள்​ளன. அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: கரூரில் நடந்த உயி​ரிழப்பு சம்​பவத்​துக்கு மக்​களின் உணர்​வாக மக்​களின் சந்தேகங்களை பதிவு செய்​திருந்​தேன். அதற்கு உரிய பதில் அளிக்க திராணி இல்​லாமல், சமூக வலை​தளங்​களில் அவதூறு பரவுவ​தாக கூறி​யிருக்​கும் முதல்​வரின் போட்​டோஷூட் வீடியோவே, தமிழகத்​துக்கு வாய்த்​திருக்​கும் முதல்​வர் எப்​படிப்​பட்​ட​வர் என்​ப​தற்கு சாட்​சி. காவல்​துறை பிரச்​சா​ரம் செய்ய ஒதுக்​கிய இடத்​தில் குளறு​படிகள், திமுக​வின் வழக்​க​மான ஆம்​புலன்ஸ் அரசி​யல், தடியடி நடந்த காட்​சிகள் இவை எல்​லாம் வதந்​தி​யா? கள்​ளக்​குறிச்​சி​யில் ஏற்​பட்ட கள்​ளச்​சா​ராய மரணங்​களுக்கு கனக்​காத இதயம், கலங்​காத கண்​கள், இப்​போது மட்​டும் கலங்​கு​கிற​தா, இதில் இன்​னும் கொடுமை​யாக முதல்​வர் அமைத்த ஒருநபர் விசா​ரணை ஆணை​யம் விசா​ரிக்​கும் காட்​சிகள் ஊடகங்​களில் தொடர்ந்து வந்து கொண்​டிருக்​கின்​றன. அதைப் பார்க்​கும் மக்​களுக்​கே, இது ஒருதலைபட்​ச​மான அரசின் தவறுகளை மூடி…

Read More

கொங்கு மண்டலம் எங்கள் கோட்டை என மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே வருகிறது அதிமுக. ஆனால், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் மட்டும் அவர்களின் செல்வாக்கு செல்லுபடியாகவில்லை. காரணம், பாஜக சகவாசம். இங்குள்ள சுமார் 30 ஆயிரம் முஸ்லிம் வாக்குகள் தேர்தலுக்குத் தேர்தல் திமுக-வுக்கு கைகொடுப்பதால் கொங்கு மண்டலத்தில் இந்தத் தொகுதி திமுக கோட்டையாகவே இருக்கிறது. அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பள்ளபட்டியில் சுமார் 30 ஆயிரம் முஸ்லிம் சமுதாய வாக்குகள் உள்ளன. இது தொகுதியில் உள்ள மொத்த வாக்குகளில் சுமார் 15 சதவீதமாகும். தேர்தலுக்குத் தேர்தல் அரவக்குறிச்சியின் அரசியல் தலையெழுத்தை எழுதுவதும் இந்த வாக்குகள் தான். 2011-ல், முன்னாள் எம்எல்ஏ-வான கே.சி.பழனிசாமியும், அதிமுக சார்பில் தற்போதைய பாஜக மாவட்டத் தலைவரான வி.வி.செந்தில்நாதனும் அரவக்குறிச்சியில் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் சுமார் 5 ஆயிரம் வாக்குகள் முன்னணியிலேயே இருந்து வந்த செந்தில்நாதன், பள்ளபட்டி வாக்குகளை எண்ண ஆரம்பித்ததுமே பின்னடைவை நோக்கிப் பயணித்தார்.…

Read More

அதிமுக கூட்டணியில் இம்முறை தங்களுக்கு 40 தொகுதிகளை கேட்க வேண்டும் என மனக்கணக்குப் போட்டுக் கொண்டிருக்கும் பாஜக, குறைந்தபட்சம் ஒரு மாவட்டத்துக்கு ஒரு தொகுதியையாவது கேட்டுப்பெற வேண்டும் என்ற திட்டத்திலும் இருப்பதாகச் சொல்கிறார்கள். இதில் தங்களுக்கு கூடுதல் செல்வாக்குள்ள கோவை மாவட்டத்தில் இம்முறை கூடுதலாக ஒரு தொகுதியை கேட்கவிருப்பதாக பாஜக-வினர் பேச ஆரம்பித்திருப்பது கோவை அதிமுக-வினர் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கிறது. கோவை மாவட்​டத்​தில் உள்ள 10 தொகு​தி​களில் கோவை தெற்கை பாஜக-​வும் மற்ற 9 தொகு​தி​களை அதி​முக-​வும் கடந்​த​முறை கைப்​பற்​றின. அதே​போல் மக்​கள​வைத் தேர்​தலில் அதி​முக துணை​யின்றி போட்​டி​யிட்ட பாஜக-​வின் அண்​ணா​மலை, சுமார் நாலரை லட்​சம் வாக்​கு​களைப் பெற்று அதிமுக-வை மூன்​றாமிடத்​துக்கு தள்​ளி​னார். அதி​லும் குறிப்​பாக, கோவை வடக்​கு, கவுண்​டம்​பாளை​யம் சட்​டப் பேர​வைத் தொகு​தி​களில் அதி​முக-வை விட பாஜக-வுக்கு கூடு​தல் வாக்​கு​கள் விழுந்​தன. இதையெல்​லாம் கணக்​குப் போட்​டுத்​தான் இம்​முறை தங்​களுக்கு கோவை​யில் கூடு​தலாக இன்​னொரு தொகு​தியை ஒதுக்க வேண்​டும் என…

Read More