கண் மிதவைகள் சிறியவை, நிழல் வடிவங்கள் அல்லது நூல் போன்ற இழைகள், அவை உங்கள் பார்வையில் செல்கின்றன, பெரும்பாலும் பிரகாசமான அல்லது வெற்று பின்னணிக்கு எதிராக மிகவும் கவனிக்கப்படுகின்றன. இந்த பொதுவான காட்சி இடையூறுகள், மருத்துவ ரீதியாக மயோடெசோபியாஸ் என அழைக்கப்படுகின்றன, பொதுவாக ஜெல் அல்லது உயிரணுக்களின் கொத்துகள் விழித்திரையில் நிழல்களைத் தூண்டும்போது நிகழ்கின்றன. மிதவைகள் பெரும்பாலும் பாதிப்பில்லாதவை மற்றும் இயற்கையான வயதான செயல்முறையின் ஒரு பகுதியாக இருக்கும்போது, அவை சில நேரங்களில் கவனம் தேவைப்படும் அடிப்படை கண் நிலைமைகளைக் குறிக்கலாம். மிதவைகளில் திடீர் அதிகரிப்பு, ஒளியின் ஒளிரும் அல்லது பார்வையில் ஏற்படும் மாற்றங்கள் கடுமையான சிக்கல்களைக் குறிக்கலாம். கண் ஆரோக்கியத்தை பராமரிக்க காரணங்களைப் புரிந்துகொள்வது மற்றும் எப்போது கவனிக்க வேண்டும் என்பது அவசியம்.4 கண் மிதவைகளின் காரணங்கள் அது உங்கள் பார்வையை பாதிக்கும்யுவைடிஸ்யுவைடிஸ் என்பது கருவின் நடுத்தர அடுக்கு, ஐரிஸ், சிலியரி உடல் மற்றும் கோரொய்டை உள்ளடக்கிய யுவியாவின் வீக்கம்.…
Author: admin
சென்னை: எண்ணூர் அனல் மின நிலையக் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: “எண்ணூரில் பெல் நிறுவனம் மேற்கொண்டு வரும் மின் உற்பத்தி நிலையக் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒன்பது பணியாளர்கள் இறந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மின்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரையும், மின்வாரிய தலைவர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆகியோரையும் உடனே நேரடியாகச் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்த பணியாளர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கிடவும், அவர்களது உடலை அவர்களது சொந்த மாநிலத்திற்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆணையிட்டுள்ளேன்” இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நடந்தது என்ன? – திருவள்ளூர் மாவட்டம், வாயலூரில் 2×660 MW மெகா…
டாக்டர் மேத்தாவின் பரிந்துரை மிகவும் எளிது. படுக்கைக்குச் செல்வதற்கு முன், மூக்கை மெதுவாக கிள்ளுங்கள், காற்று நுழைவதற்கு ஒரு சிறிய பத்தியை மட்டுமே விட்டுவிட்டு வெளியேறவும். பின்னர், மெதுவான, ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொள்ளுங்கள். அதை முழுமையாக விடுவிக்கவும். இந்த நடைமுறையை 7 முதல் 21 சுவாசங்களின் மூன்று சுழற்சிகளில் மீண்டும் செய்யவும்.காற்றின் இந்த மென்மையான கட்டுப்பாடு, இயற்கையான வாசோடைலேட்டரான ஒரு சிறிய அளவு நைட்ரிக் ஆக்சைடு தக்கவைக்க உடலை அனுமதிக்கிறது. பல்வேறு ஆய்வுகளின்படி, நைட்ரிக் ஆக்சைடு இரத்த நாளங்கள் விரிவுபடுத்தவும், சுழற்சியை மேம்படுத்தவும், இதயத்தின் அழுத்தத்தை எளிதாக்கவும் உதவுகிறது. இந்த வழியில், இரவில் சில நிமிடங்கள் கவனமாக சுவாசிப்பது தூக்கத்தின் போது இதயத்திற்கு அமைதியான ஒரு சக்திவாய்ந்த கேடயத்தை உருவாக்கும்.
சென்னை: கரூரில் தவெக பிரச்சார கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து சந்தோஷ் நாராயணன் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: “கரூர் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட அப்பாவிகளின் உயிரிழப்பு மிகவும் தனிப்பட்ட முறையில் பாதித்துள்ளது. உண்மையிலேயே என் இதயத்தை இது நொறுக்கியுள்ளது. இந்த ஏற்றுக்கொள்ள முடியாத துயரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அமைதி காண வேண்டும் என நான் மனதார விரும்புகிறேன். இந்த கொடூரமான சம்பவத்தினால் ஏற்பட்ட காயம், கோபம் மற்றும் இயலாமை ஆகியவற்றில் இருந்து என்னை மீட்க எனக்கு சிறிது காலம் தேவைப்பட்டதற்காக வருந்துகிறேன். புரிதலற்ற பேராசை, அதிகாரம் மற்றும் புகழுக்கான தீராத பசி, பொதுமக்களின் கண்ணோட்டத்தை மாற்றக்கூடிய முழுமையான முயற்சி இல்லாமை, இன்னும் கூடுதல் அதிகாரத்திற்கான பேய்த்தனமான தாகம், அத்துடன் அதிக அதிர்ஷ்டமும் சேர்ந்து நம்மை இங்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது. வெளிப்படைத்தன்மையை செயல்படுத்தும் ஒரு சூழலை உருவாக்க நாம்…
சென்னை: கரூர் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்ட வீடியோ உரை என்பது முழுமையான அரசியல் உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகம் 27-ம் தேதி கரூரில் நடத்திய பரப்புரைக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி இதுவரை 41 அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோயுள்ளன. பலர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். விரும்பத்தகாத நிகழ்வு நடைபெற்ற நொடியில் இருந்தே தன்னார்வத்துடன் பொதுமக்களும், மருத்துவத் துறை, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு மக்களின் மதிப்புமிக்க உயிர்களைப் பாதுகாத்துள்ளது. தமிழக முதல்வர் உள்பட அமைச்சர்களும், அதிகாரிகளும் 27-ம் தேதி இரவு முதலே நேரில் கரூர் சென்று இப்பணிகளை விரைவுபடுத்தி வருகிறார்கள். உயிரிழந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் நிவாரணத் தொகையும் அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் உட்பட தமிழ்நாட்டின்…
செல்லப்பிராணிகளின் மூல உணவை உணவளிப்பது, ஒரு பிரபலமான போக்கு, சால்மோனெல்லா மற்றும் ஈ.கோலை போன்ற கொடிய நோய்க்கிருமிகள் காரணமாக விலங்குகள் மற்றும் மனிதர்கள் இருவருக்கும் கணிசமாக ஆபத்தை ஏற்படுத்துகிறது. உரிமையாளர்களின் நல்ல நோக்கங்கள் இருந்தபோதிலும், வல்லுநர்கள் இந்த உணவுகள் நிரூபிக்கப்பட்ட சுகாதார நன்மைகளை வழங்குவதில்லை மற்றும் கடுமையான நோயை ஏற்படுத்தும். நல்வாழ்வை உறுதி செய்வதற்காக ஒழுங்காக சமைத்த அல்லது வணிக ரீதியாக பதப்படுத்தப்பட்ட செல்லப்பிராணி உணவுகளைத் தேர்ந்தெடுப்பது பாதுகாப்பானது. அமெரிக்காவில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் செல்லப்பிராணிகளையும் குடும்ப உறுப்பினர்களையும் கொடிய நோய்த்தொற்றுகளுக்கு ஆபத்தில் கொண்டுள்ளனர். அவர்களின் தூய நோக்கங்களை குறை கூறுங்கள். எப்படி? மூல உணவுப் பொருட்களை தங்கள் செல்ல நாய்கள் மற்றும் பூனைகளுக்கு உணவளிப்பதன் மூலம். அவர்கள் அறியாமல் கொடிய நோய்க்கிருமிகளுக்கு தங்களை அம்பலப்படுத்துகிறார்கள், இவை அனைத்தும் தங்கள் செல்லப்பிராணிகளை சத்தான உணவை உணவளிக்கும் என்ற நம்பிக்கையில். ஆனால் என்ன நினைக்கிறேன்? இந்த அபாயங்கள் அனைத்தும் கூட…
சென்னை: ‘கரூர் கூட்ட நெரிசல் துயரச் சம்பவத்தில் பாஜகவின் சதியை முறியடிக்க காங்கிரஸ் தலையீடு அவசியம்’ என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “கரூர் துயரச் சம்பவத்தை திசை திருப்ப முயற்சிக்கும் வகையில் பாஜக எம்.பி.-க்கள் குழு அமைத்து ஆய்வு செய்து வருகிறது. எனவே, பிற மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.-க்கள் கொண்ட குழுவை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி நியமனம் செய்ய வேண்டும். அவர்களை கரூருக்கு அனுப்பி வைக்க வேண்டும். பாஜகவின் சதி முறியடிக்கப்பட வேண்டுமானால் காங்கிரஸ் கட்சியின் தலையீடு உடனடி தேவையாக இருக்கிறது. கரூர் துயரை திசைதிருப்ப நினைப்பவர்கள், சிபிஐ விசாரணை என்னும் கோரிக்கையை முன்வைக்கின்றனர். தொடர்ந்து அரசியல் பிரச்சினை யாக தேர்தல் வரை கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர். இந்த கொடுந்துயரை வைத்து அரசியல் செய்ய நினைப்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிரான துரோகம். எந்த காரணத்தைச் சொன்னாலும் தவெக…
சென்னை: “கரூர் விவகாரம் குறித்து பேசுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள் போன்றோர் இருக்கும் போது வருவாய் செயலர் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதன் அவசியம் என்ன? உண்மைச் சம்பவத்தை மறைப்பதற்கு இப்படிப்பட்ட நாடகத்தை அரசு அரங்கேற்றி வருகிறது” என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி விமர்சித்துள்ளார். இதற்கு, அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்து சாடியுள்ளார். எடப்பாடி பழனிசாமி இன்று தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “கரூர் துயரச் சம்பவத்துக்கு பிறகு ஸ்டாலின் அரசு முற்றிலும் சீர்குலைந்த நிலையில் உள்ளது. மக்களை பாதுகாப்பதில் ஏற்பட்ட தங்களின் தோல்வியை விரைவாக மறைத்து, இந்த விபத்துக்கான காரணத்தை பிறர் மீது சுமத்த வேண்டும் என்பதே அரசின் நோக்கமாக தெரிகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள் போன்றோர் இருக்கும்போது, வருவாய் செயலர் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதன் அவசியம் என்ன? ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஏற்கெனவே ஒரு விசாரணைக்குழு…
கோவை: ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.87,000-ஐ நெருங்கியிருக்கிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து வரலாறு காணாத வகையில் உயர்ந்து கொண்டே வருவதால் கோவையில் தங்க நகை விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர். தொழில் நகரான கோவை தங்க நகை தயாரிப்பிலும் உலகளவில் புகழ் பெற்று விளங்குகிறது. 45 ஆயிரம் பொற்கொல்லர்கள் உள்ளிட்ட ஒரு லட்சம் பேர் இந்தத் தொழிலில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். வழக்கமாக கோவை மாவட்டத்தில் தினமும் 200 கிலோ அளவிலான தங்க நகை விற்பனை நடைபெறுவது வழக்கம். தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட்ராம் கூறியது: “தங்கத்தின் மீது 3 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. முன்பு தங்கம் இறக்குமதிக்கு 15 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. தொழில் துறையினர் கோரிக்கையை ஏற்று மக்களுக்கு உதவும் வகையில்…
