உதய்பூர்: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரிலுள்ள பாலேஸ்வரி மாதா தேவி சிலைக்கு பக்தர்கள் ரூ.51 லட்சம் மதிப்புள்ள கரன்சி நோட்டுகளால் அலங்காரம் செய்து உள்ளனர். புவானா பகுதியில் பிரசித்தி பெற்ற பாலேஸ்வரி மாதா கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் தற்போது நவராத்திரி திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி பாலேஸ்வரி மாதாவுக்கு ரூ.51,51,551 மதிப்புடைய கரன்சி நோட்டுகளால் நேற்று முன்தினம் பக்தர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. ரூ.500, ரூ.200, ரூ.100, ரூ.50 நோட்டுகளால் இந்த அலங்காரம் நடைபெற்றதாக கோயிலை நிர்வகிக்கும் பாலேஸ்வர் யுவ மண்டல் கமிட்டி தெரிவித்துள்ளது. இந்த அலங்காரத்துக்கு கடந்த 3 ஆண்டுகளாக பக்தர்களிடமிருந்து நன்கொடையை கோயில் நிர்வாகம் பெற்று வந்தது. முதலாண்டில் அம்மனுக்கு ரூ.11,11,111 மதிப்புடைய நோட்டுகளால் அலங்காரமும், 2-ம் ஆண்டில் ரூ.21,21,121 மதிப்புடைய நோட்டுகளால் அலங்காரமும், 3-ம், ஆண்டில் ரூ.31,31,131 மதிப்புடைய நோட்டுகளால் அலங்காரமும் நடைபெற்றது. தற்போது 4-ம் ஆண்டாக ரூ.51,51,151 மதிப்புடைய நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பான வீடியோ…
Author: admin
அகமதாபாத்: இந்தியா – மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை (2-ம் தேதி) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரலை செய்கிறது. ராஸ்டன் சேஸ் தலைமையிலான மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை (2-ம் தேதி) காலை தொடங்குகிறது. மேற்கு இந்தியத் தீவுகள் அணி தனது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என இழந்த நிலையில் இந்திய டெஸ்ட் தொடரை அணுகுகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3-வது டெஸ்டில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தது மோசமான சாதனையை படைத்திருந்தது. இதைத் தொடர்ந்து மேற்கு இந்தியத் தீவுகள்…
சென்னை: ஆயுதபூஜை பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து 4.80 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். நாடு முழுவதும் இன்று ஆயுத பூஜை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை கோயம்பேடு, பாரிமுனை, தியாகராய நகர், பெரம்பூர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பொறி, கடலை, வாழைப்பழம், இலை, தேங்காய், பழங்கள் உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. இதேபோல, மாநிலம் முழுவதும் ஆயுத பூஜைக்கான பொருட்களை வாங்க லட்சக்கணக்கான மக்கள் கடைவீதிகளில் திரண்டனர். இதனால் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களுக்குச் செல்வதற்காக சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.சென்னையில் இருந்து நேற்று இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகள் மூலம் 2 லட்சத்துக்கும் மேற்பட் டோர் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். இந்நிலையில், நேற்றும் வழக்கம்போல ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட் டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்…
புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் காசா போர் நிறுத்த திட்டத்துக்கு பிரதமர் மோடி முழு ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் முதல் இஸ்ரேல் ராணுவத்துக்கும் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அண்மையில் 21 அம்ச அமைதி திட்டத்தை அறிவித்தார். ‘‘தீவிரவாதம் இல்லாத அமைதி மண்டலமாக காசா மாற்றப்படும். ஹமாஸ் பிடியில் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். உயிரிழந்த இஸ்ரேலியர்களின் உடல்களை ஒப்படைக்க வேண்டும். காசாவில் இருந்து இஸ்ரேல் ராணுவம் படிப்படியாக வெளியேறும். பாலஸ்தீனர்களை கொண்ட குழுவின் தலைமையில் காசா இடைக்கால நிர்வாகம் அமைக்கப்படும். இதில் ஹமாஸுக்கு இடம் அளிக்கப்படாது’’ என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதிபர் ட்ரம்பின் போர் நிறுத்த திட்டத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புதல் அளித்துள்ளார். இதுகுறித்து அமெரிக்க அதிபர்…
ஷார்ஜா: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டி 20 கிரிக்கெட் போடடியில் 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நேபாளம் அணி தொடரை 2-0 என கைப்பற்றி சாதனை படைத்தது. ஷார்ஜாவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற 2-வது டி 20 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நேபாளம் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 173 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஆசிப் ஷேக் 47 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 68 ரன்களும் சந்திப் ஜோரா 39 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 63 ரன்களும் விளாசினர். மேற்கு இந்தியத் தீவுகள் அணி தரப்பில் அகீல் ஹோசைன், கைல் மேயர்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர். 174 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 17.1 ஓவர்களில் 83 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர்…
ஹைபா: இஸ்ரேலின் ஹைபா நகரில் இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மேயர் இதுகுறித்து கூறியதாவது: வரலாற்று சங்கத்தை சேர்ந்த ஒருவர் ஒரு நாள் என் வீட்டு கதவை தட்டி முழுமையான ஆராய்ச்சி செய்த புத்தகம் ஒன்றை வழங்கினார். அதில், இந்த நகரத்தை ஒட்டோமான்களிடமிருந்து விடுவித்தது ஆங்கிலேயர்கள் அல்ல, இந்தியர்கள் தான் என்பதை ஆதாரங்களுடன் விளக்கியிருந்தார். ஆனால், அதுவரை இந்த நகரம் பிரிட்டிஷ் வீரர்களால்தான் விடுவிக்கப்பட்டது என்பதாக எங்களுக்கு தொடர்ச்சியாக போதிக்கப்பட்டு வந்தது. அப்படிப்பட்ட தீரம் மிகுந்த இந்திய வீரர்களுக்கு இங்கு அஞ்சலி செலுத்துவது பெருமையாக உள்ளது. இனி வரலாற்றுப் பாடப்புத்தகங்களில் எங்களை விடுவித்தது பிரிட்டிஷ்காரர்கள் அல்ல, இந்தியர்கள்தான் என்பதை மாற்றி அச்சிட நடவடிக்கை எடுத்து வருகிறோம். முதலாம் உலகப்போரின்போது, ஈட்டி, வாள் உள்ளிட்ட ஆயுதம் ஏந்திய இந்திய குதிரைப்படை பிரிவுகள், கார்மல் மலையின் பாறை சரிவுகளில் இருந்து ஒட்டோமான் படைகளை விரட்டி அடித்தது.…
ஹைதராபாத்: தசரா பண்டிகையை முன்னிட்டு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 7 கிலோ தங்கம், ரூ.5 கோடி நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம் செய்து வழிபட்டனர். ஆந்திர மாநிலத்தில் தசரா பண்டிகையை மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். அம்மன் கோயில்களில் பல லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்து வழிபட்டு வருகின்றனர். சமீபத்தில் அமலாபுரம் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு ரூ.4.41 கோடி நோட்டுகளால் மகாலட்சுமி அலங்காரம் செய்திருந்தனர். விசாகப்பட்டினம், குருபோம் மார்க்கெட் பகுதியில் 148 ஆண்டுகள் பழமையான கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இக்கோயில் அம்மனுக்கு 7 கிலோ தங்க ஆபரணங்கள், 12 கிலோ வெள்ளி ஆபரணங்கள், ரூ.5 கோடி மதிப்பிலான கரன்சி நோட்டுகளால் மகாலட்சுமி அலங்காரம் செய்திருந்தனர். மேலும் 250 பெண்கள் மூலம் கோடி குங்குமார்ச்சனை நடத்தினர். சுற்றுவட்டாரத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.
தாதா சாகேப் விருது பெற்ற நடிகர் மோகன் லாலுக்கு அக். 4-ம் தேதி பிரமாண்ட பாராட்டு விழா நடத்தப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. நடிகர் மோகன் லாலுக்கு திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது செப்.23-ம் தேதி வழங்கப்பட்டது. இதையடுத்து மோகன் லாலை கவுரவிக்கும் விதமாக கேரள அரசின் சார்பில் அக். 4-ம் தேதி ‘மலையாளம் வனோலம், லால் சலாம்’ எனும் பெயரில் பாராட்டு விழா நடைபெற இருக்கிறது. இதைக் கேரள கலாச்சாரத்துறை அமைச்சர் சாஜி செரியன் தெரிவித்தார். திருவனந்தபுரத்தில் உள்ள சென்ட்ரல் மைதானத்தில் நடைபெறும் இவ்விழாவில், கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் முக்கிய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்வுக்கான லோகோ வெளியிடப்பட்டுள்ளது. “மலையாள சினிமாவுக்கு நடிகர் மோகன் லால் கடந்த 50 ஆண்டுகளாகச் சிறப்பான பங்களிப்பைச் செய்துள்ளார்” என்று அமைச்சர் சாஜி செரியன் கூறினார். இந்நிகழ்வில் மலையாள நடிகர், நடிகைகள், பாடகர்கள், அரசியல் தலைவர்கள்…
சென்னை: சென்னை புறநகர் பகுதிகளில் ஞாயிறு, பண்டிகை நாட்களையொட்டி வரும் தேசிய விடுமுறை நாட்களில், வழக்கமாக 30 சதவீதம் வரை ரயில் சேவைகள் குறைத்து இயக்கப்படும். அதன்படி ஆயுதபூஜை, காந்தி ஜெயந்தி அடுத்தடுத்த நாட்களில் (அக்.1, 2) வருகின்றன. எனவே இன்றும், நாளையும் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு, சென்ட்ரல் – அரக்கோணம், சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை உள்ளிட்ட மின்சார ரயில் வழித்தடங்களில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கப்படும்.
நம்மில் நிறைய பேர், ஒரு கட்டத்தில் நம் சிறுநீரை ஒரு சிறிய நுரையைப் பெறுவதைப் பார்க்கிறோம் – சிறுநீர் கழிப்பின் போது சிறுநீரில் நுரை குமிழ்கள் இருப்பது நுரை சிறுநீரை உருவாக்குகிறது. சிறுநீரில் நுரை இருப்பது இயல்பானதாக இருக்கும், ஆனால் இது சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கும் சாத்தியமான சுகாதார சிக்கல்களையும் குறிக்கலாம். எப்படி என்று பார்ப்போம் …நுரை சிறுநீரின் பொதுவான காரணங்கள்பலமான அல்லது வேகமான சிறுநீர் கழித்தல்கழிப்பறைக்குள் சிறுநீரின் விரைவான ஓட்டம், நுரை உற்பத்தி செய்யும் காற்று பைகளை உருவாக்குகிறது. ஒரு கொள்கலனில் வேகமான நீர் கொட்டுவதற்கான செயல்முறை நுரை உருவாக்கத்திற்கு ஒத்த விளைவை உருவாக்குகிறது. இந்த வகை நுரையின் தோற்றம் பொதுவாக எந்தவொரு உடல்நலப் பிரச்சினைகளையும் குறிக்காமல் வேகமாக மறைந்துவிடும்.லேசான நீரிழப்புமக்கள் போதுமான தண்ணீரை உட்கொள்ளாதபோது உடல் செறிவூட்டப்பட்ட சிறுநீரை உற்பத்தி செய்கிறது. சிறுநீரில் கழிவுப்பொருட்களின் செறிவு அதிகரிக்கிறது, நீர் உள்ளடக்கம் குறையும் போது குமிழி உருவாவதற்கு வழிவகுக்கிறது. ஒரு…
