உயர் இரத்த அழுத்தம் அல்லது உயர் இரத்த அழுத்தம், உலகின் மிகவும் பொதுவான இருதய நோயாகும், இது 1.2 பில்லியனுக்கும் அதிகமான நபர்களில் நிகழ்கிறது. பெரும்பாலான நிகழ்வுகளில் உயர் இரத்த அழுத்தம் சிகிச்சைக்கு மருந்து தேவைப்பட்டாலும், உணவு என்பது பாராட்டப்படாத மற்றும் சக்திவாய்ந்த சிகிச்சை முகவர். வாஸ்குலர் அழற்சி, நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தி மற்றும் தமனி பழுது போன்ற அடிப்படை உயிரியல் வழிமுறைகளின் மட்டத்தில் இயற்கையாகவே செயல்படுவதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் சில ஊட்டச்சத்துக்களின் செயல்திறனை ஆதரிப்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றன. சில உணவுப் பொருட்களை அவற்றின் நுண்ணூட்டச்சத்து உள்ளடக்கத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுப்பதன் மூலம், மருந்து சிகிச்சையின் பொதுவாகக் காணப்பட்ட பாதகமான விளைவுகள் இல்லாமல் உயர் இரத்த அழுத்தத்தை மாற்றியமைக்க முடியும். ஆரோக்கிய ஆர்வலரும், சிறந்த விற்பனையான எழுத்தாளருமான டாக்டர் எரிக் பெர்க், இயற்கையாகவே இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்த உணவுப் பொருட்கள் உட்கொள்ள வேண்டிய சில நுண்ணறிவுகளைப் பகிர்ந்து…
Author: admin
புதுடெல்லி: மும்பை தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிராக போரை தொடங்க வேண்டாம் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தடுத்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், கடந்த 2008, நவம்பர் 26-ம் தேதி மும்பையின் முக்கிய இடங்களில் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 166 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதன் பிறகு மத்திய உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பாட்டீல் பதவி விலகினார். அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இந்நிலையில் செய்தி சேனல் ஒன்றுக்கு ப.சிதம்பரம் அளித்த பேட்டியில் கூறியதாவது: மும்பை தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க இந்தியா பரிசீலித்தது. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் அழுத்தம் மற்றும் மூத்த ராஜதந்திரிகளின் ஆலோசனை காரணமாக அந்த முடிவு கைவிடப்பட்டது. போரை தொடங்க வேண்டாம்…
மதுரை: கரூரில் செப்.27-ம் தேதி தவெக நடத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் உள்ளிட்டோர் மீது கரூர் போலீஸார் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், கரூர் நகரப் பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நேற்று தனித்தனியாக முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். அதில் கூறியிருப்பதாவது: தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நடந்த சம்பவம் முற்றிலும் எதிர்பாராதது. துரதிருஷ்டவசமானது. அனுமதி கோரும் கடிதத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையை விட அதிகளவில் கூட்டம் கூடியது. பெண்கள், குழந்தைகள் பொதுக் கூட்டத்துக்கு வரவேண்டாம் என தவெக தலைவர் வலியுறுத்தியுள்ளார். இருப்பினும், போலீஸார் உரிய வழி முறைகளை வகுக்கத் தவறிவிட்டனர். கட்டுக்கடங்காத கூட்டம்…
மத்திய தரைக்கடல் உணவை கடைசி நாளில் வைக்கலாம், ஏனெனில் இது கல்லீரல் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கான நன்மைகளை நிரூபித்துள்ளது. உணவு, ஆலிவ் எண்ணெய், கொட்டைகள், பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் மீது உணவு வலியுறுத்த வேண்டும், ஆனால் சிவப்பு இறைச்சி இல்லை. வேகவைத்த ப்ரோக்கோலி, ஆலிவ் எண்ணெய் ஆடை மற்றும் புதிய பழ இனிப்பு கொண்ட குயினோவா சாலட், உங்கள் உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களை வழங்கும். மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களிலிருந்து கல்லீரல் நன்மைகள், அவை வீக்கத்தைக் குறைக்கும் மற்றும் கொழுப்பு முறிவை அதிகரிக்கும். உணவு முறை சமநிலையை பராமரிக்கும் போது மாறுபட்ட உணவை ஊக்குவிக்கிறது, இது கல்லீரல் சுகாதார பாதுகாப்பிற்கான நீண்டகால தீர்வாகவும், கொழுப்பு கல்லீரல் சிகிச்சையாகவும் பின்பற்றுவதை எளிதாக்குகிறது.மறுப்பு: இந்த கட்டுரை தகவல் மட்டுமே மற்றும் மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாக இல்லை
உதய்பூர்: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரிலுள்ள பாலேஸ்வரி மாதா தேவி சிலைக்கு பக்தர்கள் ரூ.51 லட்சம் மதிப்புள்ள கரன்சி நோட்டுகளால் அலங்காரம் செய்து உள்ளனர். புவானா பகுதியில் பிரசித்தி பெற்ற பாலேஸ்வரி மாதா கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் தற்போது நவராத்திரி திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி பாலேஸ்வரி மாதாவுக்கு ரூ.51,51,551 மதிப்புடைய கரன்சி நோட்டுகளால் நேற்று முன்தினம் பக்தர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. ரூ.500, ரூ.200, ரூ.100, ரூ.50 நோட்டுகளால் இந்த அலங்காரம் நடைபெற்றதாக கோயிலை நிர்வகிக்கும் பாலேஸ்வர் யுவ மண்டல் கமிட்டி தெரிவித்துள்ளது. இந்த அலங்காரத்துக்கு கடந்த 3 ஆண்டுகளாக பக்தர்களிடமிருந்து நன்கொடையை கோயில் நிர்வாகம் பெற்று வந்தது. முதலாண்டில் அம்மனுக்கு ரூ.11,11,111 மதிப்புடைய நோட்டுகளால் அலங்காரமும், 2-ம் ஆண்டில் ரூ.21,21,121 மதிப்புடைய நோட்டுகளால் அலங்காரமும், 3-ம், ஆண்டில் ரூ.31,31,131 மதிப்புடைய நோட்டுகளால் அலங்காரமும் நடைபெற்றது. தற்போது 4-ம் ஆண்டாக ரூ.51,51,151 மதிப்புடைய நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பான வீடியோ…
அகமதாபாத்: இந்தியா – மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை (2-ம் தேதி) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரலை செய்கிறது. ராஸ்டன் சேஸ் தலைமையிலான மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை (2-ம் தேதி) காலை தொடங்குகிறது. மேற்கு இந்தியத் தீவுகள் அணி தனது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என இழந்த நிலையில் இந்திய டெஸ்ட் தொடரை அணுகுகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3-வது டெஸ்டில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தது மோசமான சாதனையை படைத்திருந்தது. இதைத் தொடர்ந்து மேற்கு இந்தியத் தீவுகள்…
சென்னை: ஆயுதபூஜை பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து 4.80 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். நாடு முழுவதும் இன்று ஆயுத பூஜை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை கோயம்பேடு, பாரிமுனை, தியாகராய நகர், பெரம்பூர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பொறி, கடலை, வாழைப்பழம், இலை, தேங்காய், பழங்கள் உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. இதேபோல, மாநிலம் முழுவதும் ஆயுத பூஜைக்கான பொருட்களை வாங்க லட்சக்கணக்கான மக்கள் கடைவீதிகளில் திரண்டனர். இதனால் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களுக்குச் செல்வதற்காக சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.சென்னையில் இருந்து நேற்று இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகள் மூலம் 2 லட்சத்துக்கும் மேற்பட் டோர் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். இந்நிலையில், நேற்றும் வழக்கம்போல ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட் டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்…
புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் காசா போர் நிறுத்த திட்டத்துக்கு பிரதமர் மோடி முழு ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் முதல் இஸ்ரேல் ராணுவத்துக்கும் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அண்மையில் 21 அம்ச அமைதி திட்டத்தை அறிவித்தார். ‘‘தீவிரவாதம் இல்லாத அமைதி மண்டலமாக காசா மாற்றப்படும். ஹமாஸ் பிடியில் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். உயிரிழந்த இஸ்ரேலியர்களின் உடல்களை ஒப்படைக்க வேண்டும். காசாவில் இருந்து இஸ்ரேல் ராணுவம் படிப்படியாக வெளியேறும். பாலஸ்தீனர்களை கொண்ட குழுவின் தலைமையில் காசா இடைக்கால நிர்வாகம் அமைக்கப்படும். இதில் ஹமாஸுக்கு இடம் அளிக்கப்படாது’’ என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதிபர் ட்ரம்பின் போர் நிறுத்த திட்டத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புதல் அளித்துள்ளார். இதுகுறித்து அமெரிக்க அதிபர்…
ஷார்ஜா: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டி 20 கிரிக்கெட் போடடியில் 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நேபாளம் அணி தொடரை 2-0 என கைப்பற்றி சாதனை படைத்தது. ஷார்ஜாவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற 2-வது டி 20 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நேபாளம் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 173 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஆசிப் ஷேக் 47 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 68 ரன்களும் சந்திப் ஜோரா 39 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 63 ரன்களும் விளாசினர். மேற்கு இந்தியத் தீவுகள் அணி தரப்பில் அகீல் ஹோசைன், கைல் மேயர்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர். 174 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 17.1 ஓவர்களில் 83 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர்…
ஹைபா: இஸ்ரேலின் ஹைபா நகரில் இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மேயர் இதுகுறித்து கூறியதாவது: வரலாற்று சங்கத்தை சேர்ந்த ஒருவர் ஒரு நாள் என் வீட்டு கதவை தட்டி முழுமையான ஆராய்ச்சி செய்த புத்தகம் ஒன்றை வழங்கினார். அதில், இந்த நகரத்தை ஒட்டோமான்களிடமிருந்து விடுவித்தது ஆங்கிலேயர்கள் அல்ல, இந்தியர்கள் தான் என்பதை ஆதாரங்களுடன் விளக்கியிருந்தார். ஆனால், அதுவரை இந்த நகரம் பிரிட்டிஷ் வீரர்களால்தான் விடுவிக்கப்பட்டது என்பதாக எங்களுக்கு தொடர்ச்சியாக போதிக்கப்பட்டு வந்தது. அப்படிப்பட்ட தீரம் மிகுந்த இந்திய வீரர்களுக்கு இங்கு அஞ்சலி செலுத்துவது பெருமையாக உள்ளது. இனி வரலாற்றுப் பாடப்புத்தகங்களில் எங்களை விடுவித்தது பிரிட்டிஷ்காரர்கள் அல்ல, இந்தியர்கள்தான் என்பதை மாற்றி அச்சிட நடவடிக்கை எடுத்து வருகிறோம். முதலாம் உலகப்போரின்போது, ஈட்டி, வாள் உள்ளிட்ட ஆயுதம் ஏந்திய இந்திய குதிரைப்படை பிரிவுகள், கார்மல் மலையின் பாறை சரிவுகளில் இருந்து ஒட்டோமான் படைகளை விரட்டி அடித்தது.…
