Author: admin

காரைக்கால்: இந்​திய கடலோர காவல் படைக்​காக உள்​நாட்​டில் தயாரிக்​கப்​பட்ட அதிநவீன ரோந்​துக் கப்​பல், காரைக்​காலில் நேற்று நடை​பெற்ற விழா​வில் நாட்​டுக்கு அர்ப்​பணிக்​கப்​பட்​டது. இந்​திய கடலோர காவல் படை​யின் காரைக்​கால் மையம் நிரவி பகு​தி​யில் செயல்​பட்டு வரு​கிறது. காரைக்​கால் மாவட்​டம் வாஞ்​சூரில் உள்ள அதானி கப்​பல் துறை​முகத்தில் உள்ள தளத்​தில் இருந்து கடலோர காவல் படைக்​குச் சொந்​த​மான ரோந்​துக் கப்​பல்​கள், படகு​கள் இயக்​கப்​படு​கின்​றன. இந்​நிலை​யில், இந்த மையத்​தின் செயல்​பாடு​களை மேம்​படுத்​தும் வகை​யில், கோவா கப்​பல் கட்​டும் தளத்​தில் புதி​தாக தயாரிக்​கப்​பட்ட ‘அக் ஷர்’ என்று பெயரிடப்​பட்ட அதிநவீன ரோந்​துக் கப்​பலை நாட்​டுக்கு அர்ப்​பணிக்​கும் விழா காரைக்​கால் துறை​முக வளாகத்​தில் நேற்று நடை​பெற்​றது. மத்​திய பாது​காப்​புத் துறை கூடு​தல் செயலர் தீப்தி மொஹில் சாவ்லா சிறப்பு அழைப்​பாள​ராக கலந்​து​கொண்​டு, கப்​பலை இயக்​கி​ வைத்​துப் பேசி​ய​தாவது: இந்​திய கடலோர காவல் படை​யின் மேம்​பாட்​டுக்கு அக் ஷர் ரோந்​துக் கப்​பல் பெரிதும் உதவும். 60 சதவீதம் உள்​நாட்​டுப் பொருட்​கள், தளவாடங்​களை…

Read More

விஜயவாடா: ஆந்​தி​ரா​வில் ஆட்​டோ, டாக்​ஸி, மேக்ஸி கேப் போன்ற வாடகை வாக​னங்​களின் ஓட்​டுநர்​களுக்கு ஆண்​டுக்கு ரூ.15 ஆயிரம் வழங்​கும் திட்​டத்தை முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு நேற்று விஜய​வா​டா​வில் தொடங்கி வைத்​தார். ஆந்​திர மாநிலம் விஜய​வா​டா​வில் ‘ஆட்டோ ஓட்​டுநர்​களின் சேவை​யில்’ எனும் புதிய திட்​டத்தை முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு நேற்று தொடங்கி வைத்​தார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: அறி​வித்​ததை போலவே அறிவிக்​கப்​பட்ட தேதி​யில், இத்​திட்​டத்தை தொடங்கி வைப்​ப​தில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். இந்த திட்​டத்​தின் கீழ் மாநிலம் முழு​வ​தி​லும் ஆட்​டோ, டாக்​ஸி, மேக்ஸி கேப் போன்ற வாடகை வாக​னங்​களின் ஓட்​டுநர்​களுக்கு ஆண்​டுக்கு ரூ.15 ஆயிரம் நிதி​யுதவி வழங்​கப்​படும். இத்​தொகை அவர​வர் வங்​கிக் கணக்​கு​களில் நேரடி​யாக செலுத்​தப்​படும். இதற்​காக அரசுக்கு ஆண்​டுக்கு ரூ.436 கோடி செல​வாகும். இதன் மூலம் 2.64 லட்​சம் ஆட்டோ ஓட்​டுநர்​கள், 20,072 டாக்ஸி ஓட்​டுநர்​கள், 6,400 மேக்ஸி கேப் ஓட்​டுநர்​கள் என மொத்​தம் 2.90 லட்​சம் பேர் பயன் அடை​வார்​கள்.…

Read More

புதுடெல்லி: யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்துவதில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்க கோரி ஹிமான்ஷு குமார் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஏ.எஸ்.சந்துருக்கர் அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த மே 15-ம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, முதல்நிலை தேர்வு முடிந்த உடனே விடைக் குறிப்புகள் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட மூத்த வழக்குரைஞர் ஜெய்தீப் குப்தா தெரிவித்தபோது, யுபிஎஸ்சி சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் நாளை மீண்டும் விசாரிக்கவுள்ள நிலையில், யுபிஎஸ்சி ஏற்கெனவே எடுத்த நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது. முதல்நிலை தேர்வு முடிந்த உடனே விடைக் குறிப்புகள் வெளியிடப்படும் என்று தெரிவித்துப் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

Read More

மூலவர்: ஸ்ரீபகவத் படித்துறை விநாயகர் தல வரலாறு: வேதாரண்யத்தில் ஸ்ரீபகவர் மகரிஷி தன் சீடருடன் வசித்து வந்தார். முனிவரின் தாயார் இறக்கும் தருவாயில் அவரிடம், “நான் இறந்ததும் என் அஸ்தியை கலசத்தில் சேகரித்து புனிதத் தலங்களுக்கு எடுத்துச் செல். எங்கு என்னுடைய அஸ்தி மலர்களாக மாறுகிறதோ, அங்கு ஓடும் புனிதநதியில் கரைத்து விடு” என்று கூறிவிட்டு உயிர் துறந்தார். இதனால் ஸ்ரீ பகவர் தன் சீடருடன் தாயாரின் அஸ்தியை எடுத்துக்கொண்டு தீர்த்த யாத்திரை சென்றார். அவர் கும்பகோணம் (குடந்தை) வந்து காவிரி நதியில் நீராடும்போது, சீடனுக்கு பசி காரணமாக ஏதாவது பலகாரம் இருக்கும் என்று அஸ்திக் கலசத்தை திறந்து பார்க்க அதில் மலர்கள் இருக்கக் கண்டு ஏமாற்றம் அடைந்து முன்பு இருந்தது போல மூடிவைத்து விடுகிறார். இச்செயல் குருவுக்கு தெரியாது. காசியில்தான் அஸ்தி மலருமென்று எண்ணிய குருநாதர் காசியிலும் மலராதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது குடந்தையில் நடந்ததை சீடர் குருவிடம்…

Read More

தொப்பை கொழுப்பு என்பது தோற்றத்தைப் பற்றியது மட்டுமல்ல, இது வளர்சிதை மாற்றம், செரிமானம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அமைதியாக பாதிக்கும். குடல் சுகாதார நிபுணர் பிரசாந்த் தேசாய்ஒரு ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் உடற்பயிற்சி உடலியல் நிபுணர், தொப்பை கொழுப்பை இழப்பதற்கான ரகசியம் தீவிர உணவுகள் அல்லது முடிவற்ற கார்டியோவைப் பற்றியது அல்ல என்பதை வலியுறுத்துகிறது. இது குடலைப் புரிந்துகொள்வது, ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவது மற்றும் இயற்கையாகவே வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தும் எளிய பழக்கங்களை உருவாக்குவது பற்றியது. வெறும் 15 நாட்களில் தொப்பை கொழுப்பை உருக உதவும் 10 நடைமுறை வழிகள் இங்கே.

Read More

பாட்னா: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் குறித்து அனைத்து கட்​சிகளின் தலை​வர்​களு​டன் தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் பாட்​னா​வில் நேற்று முக்​கிய ஆலோ​சனை நடத்​தி​னார். பிஹார் சட்​டப்​பேர​வை​யின் பதவிக் காலம் நவம்​பர் 22-ம் தேதி​யுடன் நிறைவடைகிறது. அந்த மாநிலத்​தில் நவம்​பரில் பேர​வைத் தேர்​தல் நடை​பெறும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இந்த சூழலில் தேர்​தல் ஆணை​யம் சார்​பில் பிஹார் தலைநகர் பாட்​னா​வில் உள்ள நட்​சத்​திர ஓட்​டலில் நேற்று அனைத்து கட்சி கூட்​டம் நடை​பெற்​றது. இதில் தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார், தேர்​தல் ஆணை​யர்​கள் விவேக் ஜோஷி, சுக்​பீர் சிங் சாந்து மற்​றும் மாநில தேர்​தல் ஆணைய அதி​காரி​கள் கலந்து கொண்​டனர். ஆளும் ஐக்​கிய ஜனதா தளம், பாஜக கூட்​ட​ணியை சேர்ந்த தலை​வர்​கள், பிர​தான எதிர்க்​கட்​சிகளான ராஷ்டிரிய ஜனதா தளம், காங்​கிரஸ் மற்​றும் கம்​யூனிஸ்ட் கட்​சிகளின் தலை​வர்​கள் கூட்​டத்​தில் பங்​கேற்​றனர். பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் தொடர்​பாக அனைத்து கட்​சிகளின் தலை​வர்​களு​டன் தலை​மைத் தேர்​தல் ஆணை​யர்…

Read More

திருமலை: புரட்டாசி மாதம் முழுவதும் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. ஏற்கெனவே பிரம்மோற்சவ விழாவில் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திருமலையில் குவிந்தனர். பிரம்மோற்சவத்தின் 9 நாட்களில் பக்தர்கள் சுமார் ரூ.25 கோடியை உண்டியலில் காணிக்கை செலுத்தினர். பிரம்மோற்சவ விழா முடிந்த நிலையில், நேற்று 3-வது புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, வெள்ளிக்கிழமை முதலே திருமலையில் பக்தர்கள் குவியத் தொடங்கினர். ஆனால், வெள்ளிக்கிழமை இரவு 11 மணி முதல் திருமலையில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. விடிய, விடிய மழை பெய்ததால், பக்தர்கள் மிகவும் அவதிப்பட்டனர். 3-ம் தேதி வெள்ளிக்கிழமை மட்டும் சுவாமியை 73,581 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இதில் 28,976 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.60 கோடி உண்டியல் மூலம் காணிக்கை செலுத்தினர். தர்ம தரிசனத்தில் சுவாமியை தரிசிக்க 15 முதல் 18 மணி நேரம் ஆனது. இதற்காக கோயிலுக்கு வெளியே சுமார் 3 கி.மீ. தூரம் வரை…

Read More

புதுடெல்லி: சென்னையில் பிறந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ் 31 வயதில் நாட்டின் இளம் பில்லியனர் பட்டியலில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். ‘எம்3எம் ஹுருன் இந்தியா பணக்காரர் பட்டியல் 2025’ வெளியாகி உள்ளது. இதில், ரூ.1,000 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள 1,687 பேர் இடம்பிடித்துள்ளனர். கடந்த ஆண்டைவிட 284 பேர் கூடுதலாக இடம்பிடித்துள்ளனர். இதில் 148 பேர் புதிதாக இந்தப் பட்டியலில் இணைந்துள்ளனர். அந்த வகையில், சென்னையில் பிறந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ் (31) முதல் முறையாக இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.21,190 கோடி ஆகும். மேலும் 1 பில்லியன் டாலருக்கு மேல் (ரூ.8,900 கோடி) சொத்து வைத்துள்ள 350 இந்தியரில் இளையவர் (இளம் பில்லியனர்) என்ற சாதனையையும் படைத்துள்ளார். ஸ்டார்ட்-அப் நிறுவனமான பெர்ப்ளெக்சிட்டியின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஸ்ரீனிவாஸ், தகவல் தொடர்பு முறையை வேகமாக மாற்றி வரும் செயற்கை நுண்ணறிவு துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்.…

Read More

ஹைதராபாத்: ஹைத​ரா​பாத்​தைச் சேர்ந்த இளம் பல் மருத்​து​வர், அமெரிக்​கா​வில் நேற்று காலை மர்ம நபரால் சுட்டு கொல்​லப்​பட்​டார். ஹைத​ரா​பாத் பிஎன் நகரைச் சேர்ந்​தவர் போலே சந்​திரசேகர். இவர் பிடிஎஸ் பட்​டப்​படிப்பை முடித்து விட்​டு, கடந்த 2023-ம் ஆண்டு மேற்​படிப்​புக்​காக அமெ ரிக்​கா​வின் டெக்​ஸாஸ் மாகாணத்​தில் உள்ள டல்​லஸ் நகரில் குடியேறி​னார். கடந்த 6 மாதங்​களுக்கு முன்பு மேற்​படிப்பு முடித்த சந்​திரசேகர், அங்கு ஒரு நிரந்தர வேலையை தேடிக்​கொண்​டே, ஒரு காஸ் நிறு​வனத்​தில் பணி​யாற்றி வந்​துள்​ளார். இந்​நிலை​யில், நேற்று அதி​காலை​யில் அடை​யாளம் தெரி​யாத நபர் சந்​திரசேகரை துப்​பாக்​கி​யால் சுட்​டுக் கொன்​று​விட்டு தலைமறை​வாகி விட்​டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலே சந்திரசேகரின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்​துள்​ளனர். தங்​களது மகன் உயர்ந்த அந்​தஸ்தை அடை​வான் என்று நம்​பிய அந்த பெற்​றோர் அப்​படியே உறைந்து போயுள்​ளனர். அவர்​களை நேற்று நேரில் சந்​தித்த முன்​னாள் அமைச்​சர் ஹரீஷ் ராவ், பிஆர்​எஸ் கட்சி எம்​எல்ஏ சுதீர் ரெட்டி ஆகியோர் இரங்​கல்…

Read More

டோக்கியோ: ஜப்​பான் நாட்​டின் முதல் பெண் பிரதம​ராக சனே டகைச்சி தேர்ந்​தெடுக்​கப்​படு​வார் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. ஜப்​பான் நாட்​டில் லிபரல் ஜனநாயகக் கட்சி (எல்​டிபி) ஆட்​சி​யில் உள்​ளது. இக்​கட்​சி​யின் தலை​வர் மற்​றும் ஜப்​பான் பிரதமர் ஷிகெரு இஷி​பா, ஓராண்​டுக்​குப் பிறகு பதவி வில​கு​வ​தாக ஏற்​கெனவே அறி​வித்​திருந்​தார். இதற்​கிடை​யில், ஜப்​பான் நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களி​லும் லிபரல் ஜனநாயகக் கட்சி பெரும்​பான்மை இழந்​தது. இதனால் பிரதமர் பதவியை ஷிகெரு கடந்த மாதம் ராஜி​னாமா செய்​தார். அதனால், ஆளும் லிபரல் டெமாக்​ரடிக் கட்​சி​யின் புதிய தலை​வரை தேர்ந்​தெடுப்​ப​தற்​கான தேர்​தல் நேற்று டோக்​கியோ​வில் நடை​பெற்​றது. இதில் முன்​னாள் பொருளா​தார பாது​காப்பு அமைச்​சர் சனே டகைச்சி (64), வேளாண் அமைச்​சர் ஷிஞ்​சிரோ கொய்​சுமி ஆகியோர் போட்​டி​யிட்​டனர். முதல் கட்​ட​மாக கட்​சிக்​குள் நடை​பெற்ற வாக்​கெடுப்​பில் சனே டகைச்சி வெற்றி பெற்​றார். உட்​கட்சி தேர்​தலில் சனே 183 வாக்​கு​களும் கொய்​சுமி 164 வாக்​கு​களும் பெற்​றனர். இதையடுத்து லிபரல் ஜனநாயகக் கட்​சித் தலை​வ​ராக சனே…

Read More