சென்னை: ‘திமுக ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் 1,968 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்’ என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: நாடு முழுவதும் 2023-ம் ஆண்டுக்கான தற்கொலைகள் மற்றும் விபத்து உயிரிழப்புகள் குறித்த புள்ளிவிவரங்களை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது. இதில், தமிழகத்தில் மொத்தம் 19,483 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 22,686 பேர் தற்கொலை செய்துகொண்ட மராட்டியத்துக்கு அடுத்தபடியாக அதிக தற்கொலைகள் நிகழும் மாநிலம் தமிழகம்தான். விவசாயிகள் வாழ வழியற்ற மாநிலமாக தமிழகம் திகழ்வதையே இது காட்டுகிறது. இதற்கு முன் 2022-ம் ஆண்டில் 738 விவசாயிகளும், 2021-ம் ஆண்டில் 599 விவசாயிகளும் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். திமுக ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் 1,968 விவசாயிகள் தற்கொலை செயது கொண்டுள்ளனர். விவசாயிகளின் தற்கொலைகளுக்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், அவற்றில் முதன்மையானது விவசாயிகளால் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய முடியாததுதான். அதுகுறித்த…
Author: admin
இதய நோய் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 17.9 மில்லியன் உயிர்களைக் கோருகிறது. ஆனால் ஒரு புதிய ஆய்வில், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் எச்சரிக்கை இல்லாமல் அரிதாகவே நிகழ்கிறது. தென் கொரியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மில்லியன் கணக்கான மக்களிடமிருந்து தரவுகளை பகுப்பாய்வு செய்தனர், இதய தொடர்பான நிகழ்வுகளை அனுபவித்த 99% க்கும் மேற்பட்ட நபர்கள் குறைந்தது அடையாளம் காணக்கூடிய ஆபத்து காரணியையாவது வைத்திருப்பதைக் கண்டுபிடித்தனர், அதாவது உயர் இரத்த அழுத்தம், உயர்த்தப்பட்ட இரத்த சர்க்கரை, கொழுப்பு ஏற்றத்தாழ்வு அல்லது புகைபிடிக்கும் வரலாறு அவர்களின் நோயறிதலுக்கு முன்னர். இந்த கண்டுபிடிப்புகள், அமெரிக்கன் கார்டியாலஜி கல்லூரியின் ஜர்னலில் வெளியிடப்பட்டவை, மாரடைப்பு திடீரென வேலைநிறுத்தம் செய்கின்றன என்ற நீண்டகால நம்பிக்கையை சவால் செய்கின்றன, பெரும்பாலான நிகழ்வுகளை கணிக்க முடியும் மற்றும் தடுக்க முடியும் என்பதை வலியுறுத்துகிறது.மாரடைப்பின் மறைக்கப்பட்ட அறிகுறிகள் பெரும்பாலான மக்கள் புறக்கணிக்கிறார்கள்இதய நோய் பெரும்பாலும் அமைதியாக உருவாகிறது. எச்சரிக்கை அறிகுறிகள் ஒரு பெரிய நிகழ்வுக்கு…
லக்னோ: உ.பி. தலைநகர் லக்னோவில் தூய்மை கங்கை மற்றும் கிராமப்புற நீர் வழங்கல் துறையின் மறு ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமை வகித்துப் பேசியதாவது: உ.பி.யில் 1.28 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் நீர்ப்பாசன வசதி பெறும் வகையில் பருவகால ஆறுகள் மற்றும் ஓடைகளின் குறுக்கே 6,448 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. மாநிலத்தில் தடுப்பணைகள், குளங்கள் கட்டுவதையும் அவற்றை மீட்டெடுப்பதையும் ஒரு வெகுஜன இயக்கமாக அதிகாரிகள் மாற்ற வேண்டும். மக்களின் கூட்டுப் பங்கேற்பு மூலம் இவை பெரிய அளவில் மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறினார்.
சென்னை: ‘தவெக தலைவர் விஜய்யை அரசியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று சிலர் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகிறார்கள்’ என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மட்டுமே பன்னாட்டு நிறுவனங்கள் அமைகின்றன. இதனால், தென் மாவட்டங்களில் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல், வாழ்வாதாரம் பாதிக் கப்படுகிறார்கள். இந்த மாவட்டங்களில் தொழிற்சாலைகள் தொடங்க தொடர்ந்து குரல் கொடுத்து வந்தோம். தற்போது, தூத்துக்குடியில் தொடங்கப்பட்டுள்ள கார் கம்பெனிகளில் 300-க்கும் மேற்பட்டோர் வேலையில் அமர்ந்துள்ளனர். ஆனால், இந்த வேலையில் உள்ளூர் வாசிகள் மிகக் குறைவு. அதேபோல் கட்டுமான நிறுவனங்களிலும் ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து ஆட்கள் வேலையில் அமர்த்தப்படுகிறார்கள். அவற்றில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்க சட்டமியற்ற வேண்டும். இவற்றை முன்வைத்து, அக்.16-ம் தேதி தூத்துக்குடியில் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். அதைத்தொடர்ந்து, போதுமான…
சில நேரங்களில் அதிகப்படியான உணவு என்பது தன்னைக் கட்டுப்படுத்தாததற்கான காரணம் அல்ல, உண்மையில், தொடர்ச்சியான மன அழுத்தமும் அதிகப்படியான உணவை உட்கொள்வதற்கு வழிவகுக்கும். கார்டிசோல் வெளியிடப்படும் போது ஆய்வுகள் காட்டுகின்றன, இது பசியை அதிகரிக்கிறது. ‘மன அழுத்தம் சாப்பிடுவது’ என்று ஒரு சொல் உள்ளது, அதன் பின்னால் ஹார்மோன்கள் உள்ளன. இதேபோல், தூக்கமின்மையும் கார்டிசோலை வெளியிடலாம், இதனால், ஒரு நபரை மன அழுத்தத்தை உண்ணும் ஒரு கட்டத்திற்கு தள்ளும். தூக்க அட்டவணையை சரிசெய்தல், தியானம் மற்றும் உடற்பயிற்சி போன்ற நடவடிக்கைகளை மன அழுத்தத்தை வெளியிடுவதற்கு மாற்றியமைப்பது, அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகியதால் அதிகமயமான நபர்களுக்கு உதவும்.
திருமலை: திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நேற்று முன்தினம் பக்தர்களிடம் தேவஸ்தான நிர்வாக அதிகாரி அணில்குமார் தொலைபேசி மூலம் குறைகளை கேட்டறியும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, 23 பக்தர்கள் வெவ்வேறு பகுதிகளில் இருந்து தொலைபேசி மூலம் தங்களது குறைகளை நிர்வாக அதிகாரிக்கு எடுத்துரைத்தனர். அப்போது கடப்பாவிலிருந்து ஸ்ரீநிவாசுலு எனும் பக்தர் “ரூ.300 சிறப்பு தரிசன ஆன்லைன் டிக்கெட்டுகளை மட்டும் தனியாக ஒரு நாளில் வழங்கப்பட வேண்டும்” என கேட்டுக்கொண்டார். இதுகுறித்து பரிசீலிக்கப்படும் என அதிகாரி தெரிவித்தார். திருப்பூரில் இருந்து நாகேஸ்வர ராவ் எனும் பக்தர் “கோயிலுக்குள் சில தேவஸ்தான ஊழியர்கள் தரக்குறைவாக நடந்து கொள்கின்றனர். அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என பேசினார்.
கோல்ட்ரிப் இருமல் மருந்தை குழந்தைகளுக்கு அளிக்க வேண்டாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். குரோம்பேட்டை ஹோலி ஏஞ்சல்ஸ் மேல்நிலைப் பள்ளியில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர், முகாமில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ அரங்குகளை பார்வையிட்டு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதில் ஆட்சியர் சினேகா, பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் சோமசுந்தரம், துணை இயக்குநர் பானுமதி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், மருத்துவர்கள் பங்கேற்றனர். முகாமில் ரத்த பரிசோதனை, காசநோய், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு விதமான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. மேலும் முகாமில் பொது மருத்துவம், இதயம், எலும்பு, நரம்பியல், தோல், மகப்பேறு, குழந்தைகள், நுரையீரல், அறுவை சிகிச்சை, கண், காது மூக்கு தொண்டை, மனநலம், பல், சித்தா, இயன்முறை…
வயதுவந்த தோல் உயிரணுக்களிலிருந்து ஆரம்ப கட்ட மனித கருக்களை வெற்றிகரமாக உருவாக்குவதன் மூலம் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஒரு அற்புதமான மைல்கல்லை அடைந்துள்ளனர். மேம்பட்ட டி.என்.ஏ கையாளுதல் மற்றும் கருத்தரித்தல் நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம், விஞ்ஞானிகள் பாரம்பரிய முட்டை செல்களை நம்பாமல் கருக்களை உருவாக்க முடிந்தது. இந்த முன்னோடி ஆராய்ச்சி இனப்பெருக்க மருத்துவத்தில் புதிய சாத்தியங்களைத் திறக்கிறது, கருவுறுதல் சிகிச்சைகளை மாற்றும். இது வயது தொடர்பான கருவுறாமை, மரபணு கோளாறுகள் அல்லது உயிரியல் பெற்றோருக்குரிய ஒரே பாலின உறவுகளில் உள்ளவர்களுக்கு பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் தம்பதிகளுக்கு நம்பிக்கையை வழங்கக்கூடும். இந்த வேலை இன்னும் ஆரம்ப கட்டங்களில் இருந்தாலும், கடுமையான நெறிமுறை மேற்பார்வைக்கு உட்பட்டாலும், மனித இனப்பெருக்கத்தின் எதிர்காலத்தை மாற்றியமைக்க செல்லுலார் மறுபிரதுத்தம் மற்றும் ஸ்டெம் செல் தொழில்நுட்பத்தின் திறனை இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது, ஆராய்ச்சி மற்றும் மருத்துவ பயன்பாடுகளுக்கு முன்னோடியில்லாத வகையில் வழிகளை வழங்குகிறது.விஞ்ஞானிகள் தோல் செல்களைப் பயன்படுத்தி மனித கருக்களை உருவாக்க,…
பரேலி: உத்தரபிரதேசம், கான்பூர் மாவட்டம் ராவத்பூரில், கடந்த மாதம் 4-ம் தேதி மிலாடி நபி பண்டிகையையொட்டி நடைபெற்ற ஊர்வலத்தில் ‘ஐ லவ் முகமது’ என்ற வாசகம் தாங்கிய பேனர்களையும் கொண்டு சென்றனர். இதற்கு இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக செப்டம்பர் 26-ம் தேதி இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. இந்நிலையில், பரேலி நகரில் டாக்டர் நபீஸ் அகமதுக்கு சொந்தமான ராஸா பேலஸ் என்ற திருமணம் மண்டபத்தை மாவட்ட வளர்ச்சி ஆணைய அதிகாரிகள் போலீஸாரின் உதவியுடன் நேற்று இடித்தனர். கட்டுமான விதிகள் மீறப்பட்டுள்ளதால் அந்தக் கட்டிடத்தை இடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பரேலி நகரில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள் மற்றும் வீடுகளின் ஒரு பகுதியை அதிகாரிகள் நேற்று இடித்தனர். மேலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கட்டிடங்களை அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதுபோல பர்ஹத் என்பவருக்கு சொந்தமான வீட்டுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். சமீபத்தில் நடந்த வன்முறையைத் தூண்டியதாக…
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ (81). காய்ச்சல், சளி, இருமல் பிரச்சினை ஏற்பட்டதால், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை பரிசோதனை செய்து தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள் அளித்து வருகின்றனர். வைகோ நலமுடன் இருப்பதாகவும், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
