Author: admin

பரேலி: உத்​தரபிரதேசம், கான்​பூர் மாவட்​டம் ராவத்​பூரில், கடந்த மாதம் 4-ம் தேதி மிலாடி நபி பண்​டிகை​யையொட்டி நடை​பெற்ற ஊர்​வலத்​தில் ‘ஐ லவ் முகமது’ என்ற வாசகம் தாங்​கிய பேனர்​களை​யும் கொண்டு சென்​றனர். இதற்கு இந்​துக்​கள் எதிர்ப்பு தெரி​வித்​தனர். இது தொடர்​பாக செப்டம்பர் 26-ம் தேதி இருதரப்​பினர் இடையே மோதல் ஏற்​பட்டு கலவர​மாக மாறியது. இந்​நிலை​யில், பரேலி நகரில் டாக்​டர் நபீஸ் அகமதுக்கு சொந்​த​மான ராஸா பேலஸ் என்ற திரு​மணம் மண்​டபத்தை மாவட்ட வளர்ச்சி ஆணைய அதி​காரி​கள் போலீ​ஸாரின் உதவி​யுடன் நேற்று இடித்​தனர். கட்​டு​மான விதி​கள் மீறப்​பட்​டுள்​ள​தால் அந்​தக் கட்​டிடத்தை இடித்​த​தாக அதி​காரி​கள் தெரி​வித்​தனர். மேலும் பரேலி நகரில் ஆக்​கிரமித்து கட்​டப்​பட்​டிருந்த கடைகள் மற்​றும் வீடு​களின் ஒரு பகு​தியை அதி​காரி​கள் நேற்று இடித்​தனர். மேலும் ஆக்​கிரமிப்பு செய்​யப்​பட்​டுள்ள கட்​டிடங்​களை அடை​யாளம் காணும் பணி​யில் அதி​காரி​கள் ஈடு​பட்​டுள்​ளனர். இது​போல பர்​ஹத் என்​பவருக்கு சொந்​த​மான வீட்​டுக்கு அதி​காரி​கள் சீல் வைத்​தனர். சமீபத்​தில் நடந்த வன்​முறையைத் தூண்​டிய​தாக…

Read More

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ (81). காய்ச்சல், சளி, இருமல் பிரச்சினை ஏற்பட்டதால், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை பரிசோதனை செய்து தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள் அளித்து வருகின்றனர். வைகோ நலமுடன் இருப்பதாகவும், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Read More

ஹைதராபாத்: தெலங்​கா​னா​வில் தசரா பண்​டிகையை கொண்​டாட மாமி​யார் வீட்​டிற்கு வந்த மரு​மக​னுக்கு 100 வகை​யான உணவு​களு​டன் பிரம்​மாண்ட விருந்து அளிக்​கப்​பட்​டது. அதோடு மரு​மக​னுக்கு ஒரு சவரன் நகை பரி​சாக வழங்​கப்​பட்​டது. தெலங்​கானா மாநிலம், வனபர்த்தி மாவட்​டத்தைச் சேர்ந்​தவர் சிந்​து. இவருக்​கும் வாரங்​கலை சேர்ந்த சுரேஷ் என்​பவருக்​கும் கடந்த 2 மாதங்​களுக்கு முன்பு திருப்​ப​தி​யில் திரு​மணம் நடை​பெற்​றது. திரு​மணத்​துக்கு பிறகு நவராத்​திரி பண்​டிகை வந்​த​தால் புதுமண தம்​ப​தி​யினர் கொத்​தகோட்​டா​விற்கு வரும்​படி பெண் வீட்​டார் அழைப்பு விடுத்​தனர். இதையேற்று சுரேஷும் சிந்​து​வும் கொத்​தகோட்​டாவுக்கு சென்​றனர். பெண் வீட்​டார் சார்​பில் புதுமண தம்​ப​திக்கு உற்​சாக வரவேற்பு அளிக்​கப்​பட்​டது. மரு​மக​னுக்​காக 101 வகை​யான உணவு​களை சமைத்து தரு​வ​தாக மாமி​யார் உறுதி அளித்​திருந்​தார். அதில் ஒன்று குறைந்​தால்​கூட ஒரு சவரன் நகை போட வேண்​டும் என்று நகைச்​சுவைக்​காக மரு​மகன் நிபந்​தனை விதித்​தார். இந்த சூழலில் 60 இனிப்பு வகைகள், முறுக்​கு, சீடை என 30 அரிசி மாவு வகைகள்,…

Read More

கரூர்: கரூர் தவெக பிரச்​சார கூட்​டத்​தில் 41 பேர் உயி​ரிழந்த வழக்கு தொடர்​பான ஆவணங்​களை, வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலை​மையி​லான சிறப்பு புல​னாய்​வுக் குழு​விடம் ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்​தன் நேற்று ஒப்​படைத்​தார். கரூர் வேலு​சாமிபுரத்​தில் கடந்த செப். 27-ம் தேதி நடந்த தவெக பிரச்​சார கூட்​டநெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். இது தொடர்​பாக விசா​ரணை நடத்த ஓய்​வு​பெற்ற உயர் நீதி​மன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலை​மை​யில் ஒரு நபர் விசா​ரணை ஆணை​யம் அமைக்​கப்​பட்​டது. அவர் சம்பவ இடத்தை பார்​வை​யிட்​டு, மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெறு​வோர் மற்​றும் உயி​ரிழந்​தோர் குடும்​பத்​தினரை சந்​தித்து விசா​ரணை நடத்​தி​னார். இவ்​வழக்​கில் முதலில் விசா​ரணை அதி​காரி​யாக கரூர் டிஎஸ்பி செல்​வ​ராஜ் நியமிக்​கப்​பட்​டிருந்​தார். பின்​னர் அவர் மாற்​றப்​பட்டு ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்​தன் நியமிக்​கப்​பட்​டார். இந்​நிலை​யில், இந்த வழக்கு தொடர்​பாக விசா​ரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலை​மை​யில், சிறப்பு புல​னாய்​வுக் குழுவை அமைத்து உயர் நீதி​மன்​றம்…

Read More

சில நேரங்களில் அதிகப்படியான உணவு என்பது தன்னைக் கட்டுப்படுத்தாததற்கான காரணம் அல்ல, உண்மையில், தொடர்ச்சியான மன அழுத்தமும் அதிகப்படியான உணவை உட்கொள்வதற்கு வழிவகுக்கும். கார்டிசோல் வெளியிடப்படும் போது ஆய்வுகள் காட்டுகின்றன, இது பசியை அதிகரிக்கிறது. ‘மன அழுத்தம் சாப்பிடுவது’ என்று ஒரு சொல் உள்ளது, அதன் பின்னால் ஹார்மோன்கள் உள்ளன. இதேபோல், தூக்கமின்மையும் கார்டிசோலை வெளியிடலாம், இதனால், ஒரு நபரை மன அழுத்தத்தை உண்ணும் ஒரு கட்டத்திற்கு தள்ளும். தூக்க அட்டவணையை சரிசெய்தல், தியானம் மற்றும் உடற்பயிற்சி போன்ற நடவடிக்கைகளை மன அழுத்தத்தை வெளியிடுவதற்கு மாற்றியமைப்பது, அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகியதால் அதிகப்படியான உணவைத் தர உதவும்.

Read More

அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் மேரிலாந்தில் உள்ள இஸ்கான் கோவிலில் துசெஹ்ராவின் “துடிப்பான” கொண்டாட்டத்தில் சேர்ந்தது, மேலும் ஆன்மீகம் மற்றும் இடைக்கால நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் இஸ்கான் நடித்த பாத்திரத்தை பாராட்டினார்.விவரங்களை அமெரிக்காவில் இந்திய தூதரகம் ஞாயிற்றுக்கிழமை (உள்ளூர் நேரம்) எக்ஸ்.”தூதரகம் இஸ்கான் கோயிலில் துடிப்பான துசெஹெரா கொண்டாட்டங்களில் இணைந்தது, எம்.டி.இந்த நிகழ்வில் லெப்டினன்ட் கோவ் அருணா மில்லர் மற்றும் பல மேரிலாந்து மாநில அரசு பிரமுகர்கள் மற்றும் அமைச்சர் பொருளாதார மற்றும் அமைச்சர் (சி.ஏ & பி), ஈ.ஓ.ஐ.முன்னதாக, ஜனாதிபதி த்ரோபாடி முர்மு, விஜயதாஷாமி முன்னிலையில் தேசத்திற்கு வாழ்த்தியதில், திருவிழாவின் உண்மை, நீதி மற்றும் நல்லிணக்கத்தின் செய்தியை எடுத்துரைத்தார்.தனது செய்தியில், ஜனாதிபதி, “விஜயதாஷாமியின் நல்ல சந்தர்ப்பத்தில், எனது அன்பான வாழ்த்துக்களையும் சக குடிமக்களுக்கும் வாழ்த்துக்கள்” என்று கூறினார்.”அதர்மா மீது தர்மத்தின் வெற்றியைக் குறிக்கும் விஜயதாஷாமியின் திருவிழா, உண்மை மற்றும் நீதியின் பாதையைப் பின்பற்றுவதற்கு நம்மைத் தூண்டுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரவணா…

Read More

புதுடெல்லி: தென் அமெரிக்க நாடான கொலம்​பி​யா​வில் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி 2 நாட்​களுக்கு முன்​னர் சுற்​றுப் பயணம் மேற்​கொண்​டார். அப்​போது இஐஏ பல்​லைக்​கழகத்​தில் மாணவர்​களு​டன் ராகுல் காந்தி உரை​யாடி​னார். அப்​போது அவர் பேசும்​போது, ‘‘இந்​தி​யா​வில் பல மதங்​கள், மொழிகள், கலாச்​சா​ரங்​கள் உள்​ளன. ஜனநாயக அமைப்பு அனை​வருக்​கும் இடமளிக்​கும் ஒரு தளமாக செயல்​படு​கிறது. தற்​போது, அந்த ஜனநாயக அமைப்பு பாஜக தலை​மையி​லான அரசின் கீழ் பல திசைகளில் இருந்​தும் தாக்​குதலுக்கு உள்​ளாகி வரு​கிறது. இது​தான் இந்​தி​யா​வுக்கு மிகப்​பெரிய அச்​சுறுத்​தலாக உள்​ளது’’ என்று குற்​றம் சாட்​டி​னார். இதற்கு பாஜக எம்​.பி. நிஷி​காந்த் துபே கடும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து செய்​தி​யாளர்​களிடம் பேசிய நிஷி​காந்த் கூறிய​தாவது: அடிப்​படை இல்​லாத விஷ​யங்​களை எல்​லாம் ராகுல் காந்தி வெளி​நாட்​டில் பேசி வரு​கிறார். வெளி​நாட்​டில் இருந்து கொண்டு இந்​திய அரசின் மீது சர்ச்​சைக்​குரிய வகை​யில் பேசுகிறார். அந்த பேச்​சுகள், இந்​திய அரசி​யலமைப்பு சட்​டம் மற்​றும் அரசு கொள்​கைகளைப்…

Read More

மும்பை: ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதி​ரான ஒரு நாள் கிரிக்​கெட் தொடரில் பங்​கேற்​கும் இந்​திய அணிக்கு ஷுப்​மன் கில் கேப்​ட​னாக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். கேப்​டன் பதவியி​லிருந்து ரோஹித் சர்மா விடுவிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், அவர் அணி​யில் தொடர்​கிறார். மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்​கெ​தி​ரான டெஸ்ட் தொடரில் இந்​திய அணி தற்​போது விளை​யாடி வரு​கிறது. இந்த தொடர் முடிந்​தவுடன் இந்​திய அணி ஆஸ்​திரேலியா சென்​று, அந்த அணிக்கு எதி​ராக 3 போட்​டிகள் கொண்ட ஒரு​நாள் தொடர், 5 போட்​டிகள் கொண்ட சர்​வ​தேச டி20 தொடரில் விளை​யாட உள்​ளது. இந்​தத் தொடர் வரும் 19-ம் தேதி தொடங்​கு​கிறது. இந்​தத் தொடருக்​கான இந்​திய அணியை இந்​திய கிரிக்​கெட் கட்​டுப்​பாட்டு வாரி​யம்​(பிசிசிஐ) நேற்று தேர்வு செய்து அறி​வித்​துள்​ளது. இது​நாள் வரை இந்​திய அணி​யின் கேப்​ட​னாக செயல்​பட்டு வந்த ரோஹித் சர்​மா, பதவியி​லிருந்து விடுவிக்​கப்​பட்​டுள்​ளார். புதிய கேப்​ட​னாக ஷுப்​மன் கில்​லும், துணை கேப்​ட​னாக ஸ்ரே​யாஸ் ஐயரும் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். அதே​நேரத்​தில் அணி​யில் ரோஹித் சர்​மா, விராட்…

Read More

தஞ்சாவூர்: அமமுக பொதுச் செய​லா​ளர் டிடி​வி.​தினகரன். தஞ்​சாவூரில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: கரூர் விவ​காரத்​தில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பொறுப்​புட​னும், நிதான​மாக​வும் செயல்​பட்டு வரு​கிறார். யாரை​யும் கைது செய்ய வேண்​டும் என்ற நோக்​கம் முதல்​வருக்கு இல்லை என்று தெரி​கிறது. 41 பேர் அநி​யாய​மாக உயிரிழந்​துள்​ளனர். இது தொடர்​பாக குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​து, கைது செய்ய வேண்​டிய அவசி​ய​மும் அரசுக்கு உள்​ளது. ஆனால், விஜய் கைது செய்​யப்பட​வில்​லை. நான் அரசுக்கு ஆதர​வாகப் பேச​வில்​லை. நடுநிலை​யாகப் பார்க்​கும்​போது, எல்​லாம் சரி​யாக தான் நடக்​கிறது. தவெக​வும் திட்​ட​மிட்டு செய்​ய​வில்​லை. நிர்​வாகி​களுக்கு அனுபவம் குறைவு என்​ப​தால் விபத்து​ நடந்​துள்​ளது. விஜய் தார்​மிகப் பொறுப்பு ஏற்​றிருந்​தால், நீதி​மன்​றம் கண்​டனம் தெரி​வித்​திருக்​காது. ஆனால், தங்​களின் மீது பழி வந்​து​விடும் என ஆலோ​சகர்​களோ, வழக்​கறிஞர்​களோ கூறிய​தால், விஜய் அமை​தி​யாக இருக்​கிறார் என்று நான் கருதுகிறேன். இவ்​விவ​காரத்​தில் பல தலை​வர்​கள் நிதான​மாக பேசி​னார்​கள். ஆனால், எம்​.பி.க்​கள் குழு அமைத்​து, பழனி​சாமிக்கு நிக​ராக பாஜக அரசி​யல்…

Read More

காரைக்கால்: இந்​திய கடலோர காவல் படைக்​காக உள்​நாட்​டில் தயாரிக்​கப்​பட்ட அதிநவீன ரோந்​துக் கப்​பல், காரைக்​காலில் நேற்று நடை​பெற்ற விழா​வில் நாட்​டுக்கு அர்ப்​பணிக்​கப்​பட்​டது. இந்​திய கடலோர காவல் படை​யின் காரைக்​கால் மையம் நிரவி பகு​தி​யில் செயல்​பட்டு வரு​கிறது. காரைக்​கால் மாவட்​டம் வாஞ்​சூரில் உள்ள அதானி கப்​பல் துறை​முகத்தில் உள்ள தளத்​தில் இருந்து கடலோர காவல் படைக்​குச் சொந்​த​மான ரோந்​துக் கப்​பல்​கள், படகு​கள் இயக்​கப்​படு​கின்​றன. இந்​நிலை​யில், இந்த மையத்​தின் செயல்​பாடு​களை மேம்​படுத்​தும் வகை​யில், கோவா கப்​பல் கட்​டும் தளத்​தில் புதி​தாக தயாரிக்​கப்​பட்ட ‘அக் ஷர்’ என்று பெயரிடப்​பட்ட அதிநவீன ரோந்​துக் கப்​பலை நாட்​டுக்கு அர்ப்​பணிக்​கும் விழா காரைக்​கால் துறை​முக வளாகத்​தில் நேற்று நடை​பெற்​றது. மத்​திய பாது​காப்​புத் துறை கூடு​தல் செயலர் தீப்தி மொஹில் சாவ்லா சிறப்பு அழைப்​பாள​ராக கலந்​து​கொண்​டு, கப்​பலை இயக்​கி​ வைத்​துப் பேசி​ய​தாவது: இந்​திய கடலோர காவல் படை​யின் மேம்​பாட்​டுக்கு அக் ஷர் ரோந்​துக் கப்​பல் பெரிதும் உதவும். 60 சதவீதம் உள்​நாட்​டுப் பொருட்​கள், தளவாடங்​களை…

Read More