புதுடெல்லி: மணிக்கு 7,400 கிமீ வேகத்தில் சீறிப் பாயும் த்வனி ஏவுகணை டிசம்பரில் சோதனை செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏவுகணை தொழில்நுட்பத்தில் ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகியவை முன்னோடிகளாக உள்ளன. இந்த நாடுகளுக்கு இணையாக இந்தியாவும் ஏவுகணை தொழில்நுட்பத்தில் அதிவேகமாக முன்னேறி வருகிறது. குறிப்பாக இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைக்கு உலகம் முழுவதும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. தற்போது பிரம்மோஸைவிட அதிவேகமாக சீறிப் பாயும் த்வனி என்ற ஏவுகணையை மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) தயாரித்து உள்ளது. இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை மணிக்கு 7,400 கி.மீ. வேகத்தில் சீறிப் பாயும் திறன் கொண்டதாகும். இதுகுறித்து டிஆர்டிஓ வட்டாரங்கள் கூறியதாவது: ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் ஒலியைவிட 5 முதல் 6 மடங்கு வேகத்தில் சீறிப் பாயும். இந்த வகை ஏவுகணை முதலில் வானத்தை நோக்கி சுமார் 100 கி.மீ. தொலைவை தாண்டி செல்லும். அதாவது வளிமண்டலத்தை தாண்டி சென்றுவிடும். பின்னர்…
Author: admin
கரூர்: கரூர் ஆட்சியர் குறித்து முதநூலில் அவதூறு பதிவு தொடர்பாக பிஆர்ஓ புகாரில் தாந்தோணிமலை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் வேலுசாமிபுரத்தில் செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 116 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக முகநூலில் செல்வராமச்சந்திரன் சின்னதுரை என்ற பெயரில் ஆட்சியர் மீ.தங்கவேல் குறித்து அவதூறாக நேற்று பதிவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கரூர் எஸ்.பி. அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் அளித்த புகாரின்பேரில் தாந்தோணிமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த முகநூல் பதிவில், “இந்த கரூர்ல கலெக்டர், கலெக்டர்னு ஒருத்தர் இருப்பாரு அவருக்கு வேலை ஸ்கூலுக்கு போய் ரீல்ஸ் போடுறது. பாலத்துக்கு அடியில் ரீல்ஸ் போடுறது. டூவீலர் ஓட்டுறவன ஓவர்டேக் பண்ணி ஏன் ஹெல்மெட் போடலை என்று சொல்லி அந்த வீடியோ போடுறது. இந்த சம்பவத்தின் போது எந்த…
இந்த வார ஜாதகத்திற்கு வரவேற்கிறோம், அங்கு வான சீரமைப்புகள் இராசி அறிகுறிகளின் வாழ்க்கையைப் பற்றிய நுண்ணறிவை வழங்குகின்றன. தொழில் மற்றும் அன்பு முதல் நிதி மற்றும் ஆரோக்கியம் வரை, இந்த முன்னறிவிப்புகள் வாரம் உங்களுக்கு என்ன இருக்கிறது என்பதைப் பற்றிய ஒரு பார்வையை அளிக்கிறது. உங்கள் முடிவுகள், உணர்ச்சிகள் மற்றும் தொடர்புகளை அண்ட ஆற்றல்கள் எவ்வாறு பாதிக்கலாம் என்பதைக் கண்டறியவும், உங்கள் சூரிய அடையாளத்தின் பாதைகள் வழியாக உங்களுக்கு வழிகாட்டும். எனவே, மேலும் தாமதமின்றி, வெற்றிக்கான கணிப்புகளின் நிறுவனர் விஷால் பர்த்வாஜ் அளித்த இந்த கணிப்புகளை உடைப்போம்.
காசர்கோடு: கேரள மாநிலம் காசர்கோடு நகரில் உள்ள கும்பாலா அரசு மேல்நிலைப் பள்ளியில், கடந்த வெள்ளிக்கிழமை கலை திருவிழா நடைபெற்றது. இதில் பாலஸ்தீனம் தொடர்பான கதை சொல்லும் நிகழ்ச்சியை நடத்த மாணவர்கள் முயன்றுள்ளனர். அப்போது 2 ஆசிரியர்கள் அந்த நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தி உள்ளனர். இதையடுத்து, பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தின் அவசர கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, ஆசிரியர்களின் இந்த செயலைக் கண்டித்து முஸ்லிம் மாணவர்கள் கூட்டமைப்பு மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியை தடுத்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு பள்ளிக் கல்வித் துறை இயக்குநருக்கு மாநில கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி உத்தரவிட்டுள்ளார்.
அகமதாபாத்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். இதையடுத்து டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. மேற்கு இந்தியத் தீவுகள் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கடந்த 2-ம் தேதி தொடங்கியது. முதலில் விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 2-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் 5 விக்கெட் இழப்புக்கு 448 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல்.ராகுல் 100, துருவ் ஜூரல் 125, ரவீந்திர ஜடேஜா 104 ரன்கள்…
சென்னை: பாஜகவுடன் விஜய் மறைமுக கூட்டணி வைத்திருப்பதாக வெளியாகும் தகவல்கள் அனைத்தும் திமுக செய்யும் சதி என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை கோபாலபுரத்தில் அமைந்துள்ள காதி பவனில் சுதேசி பொருட்களை ஊக்குவிக்கும் வகையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் காதிப் பொருட்களை வாங்கினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மணிப்பூர், குஜராத், கும்பமேளாவுக்கு அனுப்பாத மத்திய குழுவை தமிழகத்துக்கு மட்டும் பாஜக அரசு அனுப்புகிறது என முதல்வர் கேள்வி எழுப்பியிருக்கிறார். கரூருக்கு விஜய் வரும்போது ஏன் மின்சாரம் தடைபட்டது, தவெகவினர் கேட்ட இடத்தில் ஏன் அனுமதி வழங்க வில்லை, ஒரு அரசியல் கட்சி தலைவர் வரும்போது மின் விளக்குகளை அனைப்பதும், தடியடி நடத்துவதும், செருப்பை வீசுவதையும் முதல்வர் அனுமதிக்கிறாரா, சம்பவம் நடந்த அரை மணி நேரத்தில் முதல்வரால் எப்படி அங்கு புறப்பட்டு வர முடிந்தது? இரவோடு இரவாக 40 உடல்களுக்கு பிரேத பரிசோதனை செய்தது…
கிரேக்க தயிர் மற்றும் தொங்கிய தயிர் ஒரே மாதிரியானது என்று பலர் கருதுகின்றனர், ஏனெனில் இரண்டும் தடிமனாகவும், கிரீமி, மற்றும் தயிரைக் கஷ்டப்படுத்துவதன் மூலம் தயாரிக்கப்படுகின்றன. இருப்பினும், ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் நேஹா சாவ்லா எக்ஸ் பற்றி விளக்கியபடி, இருவரும் அவர்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகிறார்கள், அவை ஊட்டச்சத்துக்கு என்ன வழங்குகின்றன என்பதில் கணிசமாக வேறுபடுகின்றன. ஹங் தயிர் என்பது தண்ணீரை அகற்றும், மாறுபட்ட பாக்டீரியா விகாரங்களைப் பயன்படுத்தி புளிக்கவைக்கப்படுகிறது. கிரேக்க தயிர், மறுபுறம், கட்டுப்படுத்தப்பட்ட நிலைமைகளின் கீழ் குறிப்பிட்ட தெர்மோபிலிக் பாக்டீரியாவுடன் தயாரிக்கப்படுகிறது, இது ஒரு தனித்துவமான அமைப்பு, சுவை மற்றும் அதிக ஊட்டச்சத்து அடர்த்தியைக் கொடுக்கிறது. அதன் தொழில்துறை வடிகட்டுதல் செயல்முறை தொங்கிய தயின் புரத உள்ளடக்கத்தை கிட்டத்தட்ட இரட்டிப்பாக்குகிறது, இது உடற்பயிற்சி, தசை மீட்பு மற்றும் திருப்திக்கு சிறந்த தேர்வாக அமைகிறது. இதேபோன்ற தோற்றம் இருந்தபோதிலும், அவை விஞ்ஞான ரீதியாக உலகங்கள் தவிர.கிரேக்க தயிர் ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டி…
கொச்சி: கேரளாவின் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் பீட்டர். இவர் கடந்த 1989-ம் ஆண்டில் ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூரின் விடில்லா கிளையில் ரூ.39,000-ஐ நிரந்தர வைப்பு நிதியில் முதலீடு செய்துள்ளார். இவர் கடந்த 2022-ம் ஆண்டு இறந்துவிட்டார். இந்நிலையில் ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இதனால் பீட்டரின் மகன் ஜார்ஜ் என்பவர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் தனது தந்தையின் நிரந்தர வைப்பு நிதி ஆவணம், இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றை சமர்ப்பித்து தனது தந்தையின் நிரந்தர வைப்பு நிதி பணத்தை கேட்டுள்ளார். வங்கி இணைப்பு காரணமாக ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூரின் பழைய ஆவணங்கள் தங்களிடம் இல்லை என ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கூறி பணத்தை தர மறுத்தது. இதுகுறித்த புகாரை எர்ணாகுளம் மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயம் விசாரித்து அளித்த தீர்ப்பில், ‘‘நிரந்தர வைப்பு நிதி ரசீது…
சென்னை: ‘திமுக ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் 1,968 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்’ என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: நாடு முழுவதும் 2023-ம் ஆண்டுக்கான தற்கொலைகள் மற்றும் விபத்து உயிரிழப்புகள் குறித்த புள்ளிவிவரங்களை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது. இதில், தமிழகத்தில் மொத்தம் 19,483 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 22,686 பேர் தற்கொலை செய்துகொண்ட மராட்டியத்துக்கு அடுத்தபடியாக அதிக தற்கொலைகள் நிகழும் மாநிலம் தமிழகம்தான். விவசாயிகள் வாழ வழியற்ற மாநிலமாக தமிழகம் திகழ்வதையே இது காட்டுகிறது. இதற்கு முன் 2022-ம் ஆண்டில் 738 விவசாயிகளும், 2021-ம் ஆண்டில் 599 விவசாயிகளும் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். திமுக ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் 1,968 விவசாயிகள் தற்கொலை செயது கொண்டுள்ளனர். விவசாயிகளின் தற்கொலைகளுக்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், அவற்றில் முதன்மையானது விவசாயிகளால் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய முடியாததுதான். அதுகுறித்த…
இதய நோய் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 17.9 மில்லியன் உயிர்களைக் கோருகிறது. ஆனால் ஒரு புதிய ஆய்வில், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் எச்சரிக்கை இல்லாமல் அரிதாகவே நிகழ்கிறது. தென் கொரியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மில்லியன் கணக்கான மக்களிடமிருந்து தரவுகளை பகுப்பாய்வு செய்தனர், இதய தொடர்பான நிகழ்வுகளை அனுபவித்த 99% க்கும் மேற்பட்ட நபர்கள் குறைந்தது அடையாளம் காணக்கூடிய ஆபத்து காரணியையாவது வைத்திருப்பதைக் கண்டுபிடித்தனர், அதாவது உயர் இரத்த அழுத்தம், உயர்த்தப்பட்ட இரத்த சர்க்கரை, கொழுப்பு ஏற்றத்தாழ்வு அல்லது புகைபிடிக்கும் வரலாறு அவர்களின் நோயறிதலுக்கு முன்னர். இந்த கண்டுபிடிப்புகள், அமெரிக்கன் கார்டியாலஜி கல்லூரியின் ஜர்னலில் வெளியிடப்பட்டவை, மாரடைப்பு திடீரென வேலைநிறுத்தம் செய்கின்றன என்ற நீண்டகால நம்பிக்கையை சவால் செய்கின்றன, பெரும்பாலான நிகழ்வுகளை கணிக்க முடியும் மற்றும் தடுக்க முடியும் என்பதை வலியுறுத்துகிறது.மாரடைப்பின் மறைக்கப்பட்ட அறிகுறிகள் பெரும்பாலான மக்கள் புறக்கணிக்கிறார்கள்இதய நோய் பெரும்பாலும் அமைதியாக உருவாகிறது. எச்சரிக்கை அறிகுறிகள் ஒரு பெரிய நிகழ்வுக்கு…
