Author: admin

இந்த வார ஜாதகத்திற்கு வரவேற்கிறோம், அங்கு வான சீரமைப்புகள் இராசி அறிகுறிகளின் வாழ்க்கையைப் பற்றிய நுண்ணறிவை வழங்குகின்றன. தொழில் மற்றும் அன்பு முதல் நிதி மற்றும் ஆரோக்கியம் வரை, இந்த முன்னறிவிப்புகள் வாரம் உங்களுக்கு என்ன இருக்கிறது என்பதைப் பற்றிய ஒரு பார்வையை அளிக்கிறது. உங்கள் முடிவுகள், உணர்ச்சிகள் மற்றும் தொடர்புகளை அண்ட ஆற்றல்கள் எவ்வாறு பாதிக்கலாம் என்பதைக் கண்டறியவும், உங்கள் சூரிய அடையாளத்தின் பாதைகள் வழியாக உங்களுக்கு வழிகாட்டும். எனவே, மேலும் தாமதமின்றி, வெற்றிக்கான கணிப்புகளின் நிறுவனர் விஷால் பர்த்வாஜ் அளித்த இந்த கணிப்புகளை உடைப்போம்.

Read More

அன்புமணி-ராமதாஸ் இடையேயான பிரச்சினைக்கு பிற கட்சிகள்தான் காரணம் என்பதை ஏற்க முடியாது என்று பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி கூறினார். திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் நேற்று பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்த ஜி.கே.மணி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: உங்களுக்கும் (செய்தியாளர்களுக்கும்), கட்சியினருக்கும் தெரியாமல் எங்கேயாவது சென்றுவிடுவது அல்லது உயிருடன் இருக்கக்கூடாது என்று இரு முடிவுகளை நான் எடுத்துள்ளேன். அந்த அளவுக்கு வேதனைக்கு உள்ளாகியுள்ளேன். பாமகவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சரி செய்ய தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். கடந்த 45 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்துக் கொண்டிருக்கும் நான், கட்சி சிதறிப் போக வேண்டுமென்று கருதுவேனா? நான் எந்தப் பதவிக்கும் ஆசைப்பட்டது இல்லை. ராமதாஸும், அன்புமணியும் விரைவாக சந்திக்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு தொண்டரின் விருப்பம். இதற்காக இருவரிடமும் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன். கட்சியில் எந்தப் பொறுப்பாளர்களையும் மாற்ற வேண்டாம் என்று தொடர்ந்து ராமதாஸிடம் வற்புறுத்தி வருகிறேன். சில ஊடகங்களில் என்னைப் பற்றி தவறான தகவல் பரப்பப்படுகிறது.…

Read More

தமிழக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கோடை விடுமுறை முடிந்து வரும் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. எனவே, சொந்த ஊர் சென்றவர்கள், தாங்கள் தங்கியிருக்கும் ஊர்களுக்கு திரும்புவார்கள். இதற்காக 850 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நெல்லை உள்ளிட்ட ஊர்களில் இருந்து இயக்கப்படும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகள், குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளில் ஏராளமான இருக்கைகள் உள்ளதால், அவற்றை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முன்பதிவு செய்து பயணித்தால், பேருந்து எண்ணிக்கையை கணக்கிட்டு, கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும், அனைத்து முக்கிய நிலையங்களிலும் சிறப்பு பேருந்து சேவையைக் கண்காணிக்க அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Read More

அமெரிக்கா, இந்தியா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா, சீனா, கனடா, மெக்ஸிகோ உட்பட பல்வேறு நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாக அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். இதற்கு பதிலடியாக கடந்த ஏப்ரலில் அவர் சமர்சீர் வரி விகிதத்தை அறிவித்தார். இதன்படி சீன பொருட்களுக்கு அதிகபட்சமாக 145 சதவீத வரியை அமெரிக்கா விதித்தது. இதுதொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அண்மையில் சுமுக தீர்வு எட்டப்பட்டது. இதன்படி சீன பொருட்களுக்கு 30 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்கா, சீனா இடையே அண்மையில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்திய பொருட்களுக்கு 26 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது. இதை குறைப்பது தொடர்பாக அமெரிக்காவுடன் இந்திய அமைச்சர்கள், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வாஷிங்டனில்…

Read More

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக 6 பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 106 கல்லூரிகள் செயல்படுகின்றன. இந்தக் கல்லூரிகளில் தற்போது செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 27-ம் தேதி நடைபெறவிருந்த பி.காம். பட்டப் படிப்பில் தொழிற்சாலை சட்டம் (இன்டஸ்ரியல் லா ) என்ற பாடத் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அன்று அத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும், புதிய வினாத்தாள் தயாரிக்கப்பட்டு நேற்று முன்தினம் மறுதேர்வு நடத்தப்பட்டது. இதனிடையே, பல்கலைக்கழக தேர்வு வினாத்தாள் கசிந்தது குறித்து விசாரித்து, நடவடிக்கை எடுக்குமாறு நெல்லை பேட்டை காவல் நிலையத்தில் பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரட்டீஸ் புகார் அளித்தார். அதில், “கடந்த 27-ம் தேதி நடைபெறவிருந்த தொழிற்சாலை சட்டம் பாடத்துக்கான வினாத்தாளை 26-ம் தேதி இரவு 10 மணிக்கு பல்கலைக்கழக…

Read More

சசி தரூர் தலைமையிலான இந்திய எம்பிக்கள் குழுவின் விளக்கத்தை ஏற்று பாகிஸ்தான் ஆதரவு அறிக்கையை கொலம்பியா திரும்ப பெற்று உள்ளது. கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக கடந்த மே 7-ம் தேதி பாகிஸ்தானில் செயல்பட்ட 9 தீவிரவாத முகாம்களை இந்திய விமானப் படை அழித்தது. அப்போது சுமார் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆனால் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்ததாக உலக நாடுகளிடம் பாகிஸ்தான் அரசு கூறியது. இதை நம்பிய கொலம்பிய அரசு, பாகிஸ்தான் உயிரிழப்புக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தது. இந்த சூழலில் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தலைமையிலான எம்பிக்கள் குழு கொலம்பியா தலைநகர் போகோட்டாவுக்கு சென்றுள்ளது. அந்த நாட்டு வெளியுறவு துறை துணை அமைச்சர் ரோஸா யோலான்டாவை, இந்திய குழுவினர் நேற்று சந்தித்துப் பேசினர். இதன்பிறகு கொலம்பிய அமைச்சர் ரோஸா கூறும்போது, “இந்திய குழுவினர்…

Read More

மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றிகரமாக நடந்ததாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகேயுள்ள மகேந்திரகிரியில் இஸ்ரோ திரவ இயக்க உந்தும வளாக மையம் செயல்பட்டு வருகிறது. விண்ணில் விண்கலங்களை செலுத்துவதற்குத் தேவையான கிரையோஜெனிக் இன்ஜின், விகாஷ் இஞ்ஜின்கள், பி.எஸ்.4 இன்ஜின்கள் ஆகியவை இங்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் விண்ணில் செலுத்தப்பட இருக்கும் ஜிஎஸ்எல்வி மார்க்-3 விண்கல சோதனையும் இங்கு நடைபெறுகிறது. இங்கு வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட ராக்கெட் இன்ஜின்கள் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, செயற்கைகோள்கள் பொருத்தப்பட்டு, விண்ணில் செலுத்தப்படுகின்றன. ஜிஎஸ்எல்வி ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கிரையோஜெனிக் இன்ஜின்களில் பல்வேறு கட்ட சோதனைகள் மகேந்திரகிரியில் நடைபெற்று வருகின்றன. அதன்படி, மகேந்திரகிரி இஸ்ரோ மைய இயக்குநர் ஆசீர் பாக்யராஜ் மற்றும் விஞ்ஞானிகள் முன்னிலையில் நேற்று நடைபெற்ற இன்ஜின் சோதனை…

Read More

சவாலை ஆராயும்போது உங்கள் தேர்வுகளின் அடிப்படையில், உங்கள் உளவுத்துறையின் அளவை மதிப்பிடுவதற்கு இந்த ப்ரைண்டீசர் உதவும். உங்கள் IQ ஐ தீர்மானிப்பதற்கான ஒரு சுவாரஸ்யமான முறை இந்த தேர்வை எடுப்பதாகும். சிக்கலை ஸ்கேன் செய்து தீர்வைக் கொண்டு வருவதன் மூலம் இந்த மூளை புதிர்களை தீர்க்க நீங்கள் தர்க்கரீதியான பகுத்தறிவு திறன்களைப் பயன்படுத்த வேண்டும்.மூளை விளையாட்டுகளுக்கு தீர்க்க ஆக்கபூர்வமான சிந்தனை தேவைப்படுவதால், அவை எளிதான புதிர்களுக்கு சூழ்ச்சியைச் சேர்க்கின்றன. பதில் உடனடியாகத் தெரியவில்லை, எனவே அதைக் கண்டுபிடிக்க நீங்கள் சற்று வித்தியாசமாக சிந்திக்க வேண்டும். எனவே நாங்கள் ஒரு புதிரான ப்ரைண்டீஸரை உருவாக்கியுள்ளோம், அதில் ஒரு தோட்டத்திலிருந்து இந்த காட்சியில் மறைக்கப்பட்ட பூனையை நீங்கள் அடையாளம் காண வேண்டும்.மேலே உள்ள படத்தில் பூனை எங்கு மறைக்கிறது என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். ஏராளமான தோட்டக்கலை கருவிகளைக் கொண்ட தோட்ட அமைப்பை புதிரில் காணலாம். தீர்வு நேரடியானது ஆனால் சிக்கலானது என்பதால், கேள்விக்கு…

Read More

இனி நம்மை யாராலும் பிரிக்க முடியாது என்று திமுக கட்சி எம்.பி. கனிமொழி பேசியுள்ளார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவை உலகுக்கு அம்பலப்படுத்தவும், ‘ஆபரேஷன் சிந்தூர்’ போன்ற இந்தியாவின் தற்காப்பு உரிமையை எடுத்துரைக்கவும் சர்வதேச நாடுகளுக்கு இந்திய பிரதிநிதிகள் சென்றுள்ளனர். இதற்காக அமைக்கப்பட்டுள்ள 7 அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவில், தி.மு.க. எம்.பி. கனிமொழி தலைமையிலான குழுவும் ஒன்று. இந்த குழுவினர் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணமாகி உள்ளனர். இதில் ரஷ்யா, சுலோவேனியா, கிரீஸ் உள்ளிட்ட நாடுகளில் தங்கள் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் லாத்வியா நாட்டை அடைந்தனர். லாத்வியா நாட்டின் ரிகா நகரில் வசிக்கும் இந்தியர்களுடன் கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழுவினர் கலந்துரையாடினர். அப்போது கனிமொழி பேசியதாவது: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் இந்திய சுற்றுலாப் பயணிகள் தாக்கப்பட்டனர். அப்போது அவர்களின் குடும்பங்கள், அன்புக்குரியவர்கள், குழந்தைகள் முன்னிலையில் 26 அப்பாவி உயிர்களை இழந்தோம். பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியர்களை பிரித்துப் பார்க்க…

Read More

வேளாங்கண்ணி பேராலயத்தில் மாதாவுக்கு தங்க கீரிட முடிசூட்டும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கானோர் மெழுகுவத்தி ஏந்தி பங்கேற்றனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. மே மாதம் மாதாவுக்கு உகந்த மாதமாக கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, மே 6-ம் தேதி முதல் சனிக்கிழமைதோறும் வேளாங்கண்ணி பழைய மாதா ஆலயத்தில் திருப்பலி, தேர்பவனி மற்றும் திவ்ய நற்கருணை ஆசிர் ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து, முக்கிய நிகழ்ச்சியான மாதாவுக்கு தங்க கிரீட முடிசூட்டும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி, தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னர், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் இருந்த மாதாவின் சொரூபத்துக்கு ஆயர் சகாயராஜ், தங்க கிரீடத்தை கொண்டு முடி சூட்டினார். தொடர்ந்து, தேர்பவனி நடைபெற்றது. இதில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மெழுகுவத்தி ஏந்தி கலந்துகொண்டனர்.

Read More