பழம்பெரும் இந்தி நடிகையும் பிரபல இயக்குநர் சாந்தா ராமின் மனைவியுமான சந்தியா (வயது 94) மும்பையில் காலமானார். பிரபல இந்தி இயக்குநர் சாந் தாராமின் அமர் பூபாலி (1951) என்ற மராத்திப் படம் மூலம் அறிமுகமானவர் சந்தியா. தொடர்ந்து சாந்தாராம் இயக் கிய இந்தி மற்றும் மராத்தி படங் களில் நடித்து வந்தார். இயக்கு நர் சாந்தாராமைத் திருமணம் செய்துகொண்ட இவர், தனது நடிப்பு மற்றும் நடனத் திறமை கு களால் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருந்தார். ‘ஜனக் ஜனக் பாயல் பஜே’ திரைப்படம் மிகச் சிறந்த புகழை அவருக்குப் பெற்று தந்தது. ‘தீன் பத்தி சார் ரஸ்தா’, ‘ஜனக் ஜனக் பாயல் பாஜே, ‘தோ ஆங்கேன் பாரா ஹாத்’, ‘பிஞ்ச்ரா’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். வயது முதிர்வு காரணமாக அவதிப் பட்டு வந்த அவர், நேற்று கால மானார். அவர் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரை உலகினர்,…
Author: admin
கரூர்: கரூர் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் விஜய் வாகனம் மற்றும் ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 27-ம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக நாமக்கல்லில் இருந்து கரூர் வரும் வழியில் கரூர் மாவட்ட எல்லையான தளவாபாளையம் பகுதியில் விஜய்க்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்பொழுது அஜாக்கிரதையாக இருவர் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்று கீழே விழுந்தனர். லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இதையடுத்து கரூர் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் விஜய் வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் வாகனம் மீதும், இருசக்கர வாகனங்கள் ஓட்டிச் சென்ற இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
117 வயது வரை வாழ்ந்த மரியா பிரண்யாஸ் மோரேரா, “மேஜிக் மரபணு” மூலம் ஆசீர்வதிக்கப்படவில்லை, அவளுடைய ரகசியம் அவளுடைய குடலில் இருந்தது. செல் அறிக்கைகள் மெடிசின் (2024) இல் வெளியிடப்பட்ட ஒரு அற்புதமான ஆய்வில், உலகின் மிகப் பழமையான உயிருள்ள பெண், விஞ்ஞானிகளுக்கு M116 என அறியப்பட்டவர், குறிப்பிடத்தக்க இளமை குடல் நுண்ணுயிர் மற்றும் வலுவான வளர்சிதை மாற்றத்தைக் கொண்டிருந்தார், அது அவரது இறுதி நாட்கள் வரை ஆரோக்கியமாக இருந்தது.
டார்ஜிலிங்: மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் மாயமாயினர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. கடந்த மாதம் டெல்லி, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் போன்ற மாநிலங்களில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இப்போது, மேற்குவங்க மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் இமயமலையை ஒட்டி உள்ள மலைப் பிரதேசங்களான டார்ஜிலிங், கலிம்போங், கூச்பெஹார், ஜல்பைகுரி போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதில், டார்ஜிலிங்கில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். இந்த நிலச்சரிவானது டார்ஜிலிங்கின் மிரிக் – சுகியாபோக்ரி சாலையில் உள்ள மலைப்பாதைகளில் நிகழ்ந்துள்ளது. இதனால் போக்குவரத்து முடங்கியுள்ளது. மேலும், வீடுகள், சாலைகள் மண்ணில் புதைந்துள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. தொலைத் தொடர்பு…
சென்னை: “கரூர் சம்பவத்தில் தவெக தலைவர் விஜய்யை கைது செய்தால் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். பின்னாளில் இது அனைத்து அரசியல் கட்சிகளையும் பாதிக்கும்” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போதும், “கரூர் சம்பவத்துக்கு தவெக தலைவர் விஜய் தார்மீக பொறுப்பேற்றிருக்க வேண்டும். தார்மீக பொறுப்பு என்பது குற்றத்தை ஏற்பதாக ஆகாது. விஜய்யை கைதுசெய்தால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்பதால் இந்த விவகாரத்தில் முதல்வர் நிதானமாக செயல்படுகிறார். முதல்வர் ஸ்டாலின் 50 ஆண்டுகாலம் அனுபவமிக்க தலைவர். நான் நியாயமான விஷயத்தைக் கூறினால், முதல்வருக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறுகிறார்கள். அனைத்து கட்சிகளும் பேரணி, பொதுக்கூட்டம், மாநாடு நடத்துகிறோம். நம்மை மீறி தவறு நடப்பது இயல்புதான். அதற்கு அனைத்து, தலைவர்களையும் கைது செய்ய வேண்டிய சூழல் உருவாகும். இது பின்னாளில் திமுகவையும் பாதிக்கும். கரூர் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினை உயர்த்திப் பேசவில்லை. உண்மையைப் பேசுகிறேன். தவெக தலைவர்…
வளர்சிதை மாற்ற செயலிழப்பு-தொடர்புடைய ஸ்டீடோடிக் கல்லீரல் நோய் (MASLD) உள்ளிட்ட கொழுப்பு கல்லீரல் நோய் ஒரு பெரிய உலகளாவிய சுகாதார அக்கறையாக பெருகிய முறையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது முதன்மையாக கல்லீரலை பாதிக்கும் அதே வேளையில், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும், குறிப்பாக இதயத்திலும் இது குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை ஆராய்ச்சி காட்டுகிறது. கொழுப்பு கல்லீரல் உள்ள நபர்கள் பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சி, கரோனரி தமனி நோய் மற்றும் இதய செயலிழப்பு போன்ற இருதய பிரச்சினைகளை உருவாக்கும் அபாயத்தில் உள்ளனர். நாள்பட்ட அழற்சி, இன்சுலின் எதிர்ப்பு மற்றும் மாற்றப்பட்ட லிப்பிட் வளர்சிதை மாற்றம் போன்ற காரணிகள் கல்லீரல் கொழுப்பு திரட்சியை இதய ஆரோக்கியத்துடன் இணைக்கின்றன. அபாயங்களைக் குறைப்பதற்கும் கல்லீரல் மற்றும் இருதய செயல்பாடு இரண்டையும் பாதுகாக்க ஆரம்பகால கண்டறிதல், வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் மருத்துவ மேலாண்மை அவசியம்.கொழுப்பு கல்லீரல் நோய் மற்றும் இதய நோயுடனான அதன் தொடர்பைப் புரிந்துகொள்வதுகல்லீரல் உயிரணுக்களில் அதிகப்படியான…
துருக்கி: சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்கின் தலைமுடியைப் பிடித்து இழுத்து, அவரை இஸ்ரேல் கொடியை ஏந்தும் படியும், முத்தமிடும்படியும் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் கொடுமைப்படுத்தியதாக அவருடன் இருந்த தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர். பாலஸ்தீனத்தின் காசா பகுதி வாழ் மக்களுக்கு வேண்டிய நிவாரண உதவி பொருட்களுடன் பார்சிலோனாவில் இருந்து 50 படகுகளில் சுமார் 500 செயற்பாட்டர்கள் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் பயணம் மேற்கொண்டனர். இந்தப் படகுகளில் சில, கடந்த புதன்கிழமை இரவு பாலஸ்தீன பிரதேசத்தை அடைந்தது. அப்போது அதனை இஸ்ரேல் கடற்படையினர் இடைமறித்தனர். இதில் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் பயணித்த படகும் அடங்கும். அவர்கள் அனைவரையும் இஸ்ரேலிய படையினர் சிறைப்பிடித்தனர்.அவர்களில் ஒரு சிலரை நாடு கடத்தினர். அவர்கள் சனிக்கிழமை துருக்கி வந்தடைந்தனர். துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையம் வந்த ஆர்வலர்களில் 36 பேர் துருக்கி நாட்டவராவர். அவர்களுடன் அமெரிக்க, ஐக்கிய அரபு அமீரக, அல்ஜீரிய, மொரோக்கோ, இத்தாலி, குவைத், லிபியா, மலேசியா,…
சென்னை: கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் சேலம் ‘ஃபேக் வெட்டிங்க்’ நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் நடைபெறுவது போல், சேலம் மாநகரில் ‘ஃபேக் வெட்டிங்க்’ இன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. சேலம் மாவட்டத்தில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் வருங்கால இளைய தலைமுறையினரின் வாழ்க்கை தடம் மாறி செல்வதற்கு வாய்ப்பாக அமைகிறது. அதாவது, மாணவர்கள், இளைஞர்கள் தங்களுடைய தனித்திறமைகளை கல்வி, விளையாட்டு, கலை, விஞ்ஞானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதித்தவர்களை, புதுமைகளை செய்தவர்களை அடையாளம் கண்டு அவர்களின் அனுபவங்களை பகிர்ந்துதல், திறமைகளை வெளிப்படுத்துதல் போன்ற சமூக நலன் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தினால், அது எதிர்கால இளைய தலைமுறைக்கு வழிகாட்டுதலாக இருக்கும். ஆனால், வியாபார நோக்கத்துடன், கலை நிகழ்ச்சிகள் என்ற பெயரால் நடுத்தெருவில் ஆபாச கூத்தும், கும்மாளமும் ஆடல்,…
உலகெங்கிலும் உள்ள ஐந்தாவது மிகவும் பொதுவான புற்றுநோயான வயிற்று புற்றுநோய் பெரும்பாலும் அஜீரணம் என்று தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான உயிர்களைக் கோருவதன் மூலம் தாமதமாக நோயறிதல் ஒரு முக்கிய காரணமாக மாறி வருகிறது. வயிற்று புற்றுநோயின் தீவிரம் அதன் நுட்பமான தொடக்கத்தில் உள்ளது. ஆரம்பகால நோயறிதல் முக்கியமானது, ஏனெனில் வயிற்று புற்றுநோயை அதன் ஆரம்ப கட்டங்களில் கண்டறிவது உயிர்வாழும் விகிதங்களையும் சிகிச்சை விளைவுகளையும் கணிசமாக மேம்படுத்துகிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. சாதாரண அஜீரணத்திற்கும் வயிற்று புற்றுநோயின் அறிகுறிகளுக்கும் இடையில் வேறுபடுவது உயிரைக் காப்பாற்றும் வித்தியாசத்தை ஏற்படுத்தும். அஜீரணம் மற்றும் வயிற்று புற்றுநோய்: வித்தியாசத்தை எவ்வாறு அடையாளம் காண்பதுஅஜீரணம் பெரும்பாலும் பொதுவான செரிமான பிரச்சினையாகும், இது டிஸ்பெப்சியா என்றும் அழைக்கப்படுகிறது. இது உலகெங்கிலும் மில்லியன் கணக்கானவர்களால் அனுபவிக்கப்படுகிறது. அஜீரணம் வழக்கமாக உணவுக்குப் பிறகு அச om கரியம், வீக்கம் அல்லது அவ்வப்போது குமட்டலை ஏற்படுத்துகிறது. இந்த நிலை பொதுவாக…
புதுடெல்லி: சுதர்சன சக்கர திட்டத்தின் கீழ் மத்திய அரசின் ‘அட்வான்ஸ்டு வெப்பன் அண்ட் எகியூப்மென்ட் இண்டியா’ (ஏடயுள்யூஇஐஎல்) நிறுவனத்திடம் இருந்து 6 ஏகே-630 வான் பாதுகாப்பு துப்பாக்கி அமைப்புகளை இந்திய ராணுவம் கொள்முதல் செய்ய உள்ளது. இதற்கான டெண்டரை ராணுவம் நேற்று வெளியிட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: டிரோன்கள், ராக்கெட், பீரங்கி குண்டுகள் ஆகியவற்றின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்த ஆயுதம் பயன்படுத்தப்படும். பாகிஸ்தானுடனான சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் அதிக மக்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்புக்கு இவை பயன்படுத்தப்படும். இந்த வான் பாதுகாப்பு துப்பாக்கி அமைப்பானது ஒரு டிரெய்லரில் பொருத்தப்பட்டு, கனரக வாகனத்தால் இழுத்துச் செல்லப்படும். இதன் மூலம் 4 கி.மீ. தொலைவு வரையிலும் நிமிடத்திற்கு 3,000 சுற்றுகள் வரையிலும் தாக்குதல் நடத்த முடியும். அனைத்து காலநிலையிலும் இதனை பயன்படுத்த முடியும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
