கரூர் கொடிய சம்பவம் தமிழ்ச் சமுதாயத்துக்கு உழைப்பவர் யார், தமிழ்ச் சமுதாயத்தைத் தமக்காக தவறான வழியில் அழைத்துச் செல்பவர்கள் யார் என அடையாளம் காட்டிவிட்டதாக திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தற்போது ஐந்தாம் ஆண்டில் வெற்றி நடை போடும் திராவிட மாடல் அரசு, வாக்களித்தவர் வாக்களிக்காதவர் என்று வேறுபாடு பாராமல் நன்மைகள் செய்து வருகிறது. இந்த அரசு அமைந்த பிறகு உருவாக்கி வரும் அனைத்துத் திட்டங்களும் எல்லோருக்கும் பயனளிக்கும் திட்டங்கள்தான் என்பதை எல்லோரும் உணர்ந்து வருகின்றனர். அண்மையில் அண்மையில் கரூரில் மனிதர்களால் இழைக்கப்பட்ட பேரவலம் நிகழ்ந்து, 41 பேர் உயிரிழந்தார்கள் எனும் கொடிய செய்தி வரத் தொடங்கிய நேரத்திலேயே, நெரிசலுக்கு ஆளாகி, மூச்சுத்திணறி உயிரிழந்தவர்கள் போக, சிகிச்சை பெறுபவர்கள் எல்லோரும் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்கள் என்று பார்க்காமல், அனைவரும் தமிழர்கள் என்ற எண்ணத்தில், தலைமைச் செயலகம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மாவட்ட ஆட்சியருக்கும், காவல் துறை…
Author: admin
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணையில் இருந்து முதல்வர் பின்வாங்கியது ஏன் என்று நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் தமிழக பாஜக துணைத் தலைவர் குஷ்பு நேற்று கூறியதாவது: கரூர் சம்பவம் குறித்து முதல்வரிடம் கேட்பதற்கு நிறைய கேள்விகள் உள்ளன. ஆனால், எந்த கேள்விக்கும் அவரிடம் இருந்து பதில் வராது. கரூர் பற்றி கேட்டால் உடனே மணிப்பூர் பற்றி பேசுகின்றனர். மணிப்பூரில் நடந்தது எல்லைப் பிரச்சினை. அதற்கும் கரூர் சம்பவத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இரண்டையும் ஒப்பிடக் கூடாது. அப்படி ஒப்பிட்டால், தேவையில்லாத பல விஷயங்களை பேச வேண்டி வரும். ஒரு நபர் விசாரணை….: கரூர் சம்பவம் நடந்த உடனே அதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என விஜய் கூறினார். ஆனால், ஒரு நபர் விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. சிபிஐ விசாரணையில் இருந்து முதல்வர் பின்வாங்கியது ஏன் என்றும் தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் அக்.14-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் அக்.13-ம் தேதி நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவையின் இந்தாண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 6-ம் தேதி தொடங்கியது. ஆளுநர் உரை மீதான விவாதம் 4 நாட்கள் நடைபெற்றன. அதன்பின், மார்ச் 14-ம் தேதி தமிழக அரசின் 2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட், 15-ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இரு பட்ஜெட்கள் மீதான விவாதம் மார்ச் 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து கடந்த மார்ச் 24-ம் தேதி துறைதோறும் மானிய கோரிக்கை விவாதம் தொடங்கி ஏப்.29-ம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து, ஏப்.29-ம் தேதி பேரவை மீண்டும் கூடும் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது. சட்டப்பேரவை விதிகளின்படி, ஒரு பேரவைக் கூட்டம் முடிவுற்றால் அடுத்த கூட்டம் 6 மாதங்களில்…
மரியாதைக்குரிய இந்திய பிரதானமான நெய், அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் மேம்பட்ட செரிமானம் போன்ற பல சுகாதார நன்மைகளை வழங்குகிறது, தவறாக பேய்க் கொல்லப்பட்ட பின்னர் மீண்டும் வருகிறது. மிதமான (தினசரி 1-2 தேக்கரண்டி) நன்மை பயக்கும் அதே வேளையில், அதிகப்படியான உட்கொள்ளல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் அல்லது மோசமான கொழுப்பை அதிகரிக்கும். முன்பே இருக்கும் சுகாதார நிலைமைகளைக் கொண்டவர்களுக்கு மருத்துவரை அணுகுவது அறிவுறுத்தப்படுகிறது. நறுமண நெய்யில் சமைத்த மிருதுவான பராத்தா அல்லது நீராவி அரிசி மீது நெய் டல்லோப் அல்லது நெய் போடி இட்லியின் ஒரு தட்டு போன்ற எதுவும் இல்லை. நெய் உடனான இந்தியாவின் காதல் விவகாரம் காலமற்றது. அதன் கால்நடைகளை மாற்றியமைக்கும் ஒரு கலாச்சாரத்தில், நெய் உணவு மட்டுமல்ல, தெய்வங்களுக்கு ஒரு பிரசாதமும் கூட. நெய் இந்தியாவின் பாஸ்போர்ட்டை பழமையான ஆரோக்கியத்திற்கான பாஸ்போர்ட்டாக இருந்து வருகிறது, மேலும் ஆயுர்வேதத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து வருகிறது, இது நாட்டின் சமையல்…
மறைமலை நகர்: திராவிடத்துக்கு எதிராக பாஜகவும் திராவிடம் என்றால் என்ன என்று தெரியாத பழனிச்சாமியின் அதிமுகவும், மீண்டும் தமிழகத்தை கபளீகரம் செய்ய நினைப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையை அடுத்த மறைமலை நகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு நேற்று நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடந்த இம்மாநாட்டில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியது: பெரியார் பெயரில் பிரமாண்ட நூலகம் மற்றும் அறிவியல் ஆய்வு மையத்துக்கு என்னுடைய சம்பளம் மற்றும் திமுகவின் 126 எம்எல்ஏக்கள், 31 எம்.பி.க்களின் ஒரு மாதம் சம்பளமாக சுமார் ஒன்றரை கோடி ரூபாய் வழங்கப்படும். அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்கும் திட்டத்தை செயல்படுத்தியிருக்கிறோம். இதில், பெண்களையும் அர்ச்சகராக்கி இருக்கிறோம். காலனி என்ற சொல்லை அகற்றி இருக்கிறோம். சாதிப் பெயரால் இருக்கும் விடுதியை சமூகநீதி விடுதியாக மாற்றி இருக்கிறோம். சாதியில் இறுதி எழுத்து ‘ர்’ முடியும் வகையில் மாற்றக் கோரி பிரதமருக்கு மனு…
சட்டவிரோதமாக 47,000 வெளிநாட்டு மாணவர்கள் கனடாவில் இருக்கலாம் என்று ஐ.ஆர்.சி.சி கூறுகிறது. கனடாவில் சட்டவிரோதமாக நாட்டில் தற்போதுள்ள 47,000 வெளிநாட்டு மாணவர்கள் உள்ளனர், குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை கனடா ஒரு காமன்ஸ் கமிட்டியில் வெளிப்படுத்தப்பட்டது. அவர்கள் மாணவர்களாக நாட்டிற்குள் நுழைந்தனர், ஆனால் பின்னர் அவர்கள் விசா விதிமுறைகளை மீறிவிட்டு, நாட்டில் தங்குவதற்கு தகுதியற்றவர்கள் என்று தேசிய பதவியால் அறிவிக்கப்பட்டபடி ஐ.ஆர்.சி.சி தெரிவித்துள்ளது. ஏஜென்சியின் இடம்பெயர்வு ஒருமைப்பாட்டின் தலைவரான ஆயிஷா ஜாபர், கனடா மாணவர்களாக நுழைந்த 47,175 பேர் “இணக்கமற்றவர்கள்” என்று கூறினார், அதாவது அவர்கள் விசாவின் விதிமுறைகளின்படி வகுப்புகளில் கலந்து கொள்ளவில்லை.கூட்டத்தில், ஐ.ஆர்.சி.சி அதிகபட்ச மோசடியை அடையாளம் கண்டுள்ள இடத்திலிருந்து ஏதேனும் குறிப்பிட்ட நாடுகள் இருக்கிறதா என்று ஜாபரிடம் கேட்கப்பட்டது. “எந்த குறிப்பிட்ட நாடுகளில் ஐ.ஆர்.சி.சி அடையாளம் காணப்பட்டுள்ளது? கன்சர்வேடிவ் எம்.பி. மைக்கேல் ரெம்பல் கார்ன் கார்னரிடம் கேட்டார்.”இந்தியா சிறந்த நாடுகளில் ஒன்றாகும்” என்று ஜாபர் கூறினார். கனடாவின் பிந்தைய…
சென்னை: மாநில பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை திடீர் பயணமாக கோவையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். கரூரில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஆறுதல் கூறியதுடன் சம்பவ இடத்தையும் பார்வையிட்டார். கரூருக்கு வந்த பாஜக எம்.பி.க்கள் விசாரணை குழுவுடனும் அண்ணாமலை சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில் திடீரென நேற்று கோவையில் இருந்து விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர், அமித் ஷா மற்றும் பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோரைச் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அப்போது தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து ஆலோசிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
அன்ஷுலா கபூர் எப்போதுமே தனது புத்துணர்ச்சியூட்டும் நேர்மை மற்றும் பூமிக்கு கீழே உள்ள கவர்ச்சிக்காக தனித்து நிற்கிறார். மறைந்த மோனா ஷூரி கபூரின் மகள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோரின் அன்பான ஆளுமை மற்றும் உடல்-நேர்மறை வக்காலத்துக்காக அறியப்பட்டவர், உண்மையான, தொடர்புபடுத்தக்கூடிய சிக்கல்களைப் பற்றி பேசுவதில் இருந்து ஒருபோதும் விலகிச் செல்வதில்லை, “கவர்ச்சியாக” இல்லை.சமீபத்தில், கபூர் குடும்பத்தினர் நீண்டகால காதலன் ரோஹன் தக்கரிடம் தனது நிச்சயதார்த்தத்தை கொண்டாடியபோது, அன்ஷுலா ரசிகர்களுக்கு வேறு ஏதாவது நேசிக்க வேண்டும்: அவரது தனிப்பட்ட சுகாதார வழக்கத்தைப் பற்றிய ஒரு பார்வை. அவரது அவ்வளவு பொதுவான ஆனால் முற்றிலும் அவசியமான சுகாதாரப் பழக்கவழக்கங்களின் பட்டியல் சுய பாதுகாப்பு ஆடம்பரத்தைப் பற்றியது அல்ல என்பதற்கான நினைவூட்டலாகும், இது ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும் ஆறுதல், ஆரோக்கியம் மற்றும் சிறிய தினசரி சடங்குகளைப் பற்றியது.மஹீப் கபூர் அன்ஷுலா | இணையம் அவளைப் பாராட்டுகிறதுஅன்ஷுலா எளிமையான, புத்திசாலி, மற்றும்…
நாளுக்கு நாள் ‘அரட்டை’ மெசேஜிங் செயலி குறித்த டாக் மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. குறிப்பாக, இந்த செயலியை வடிவமைத்து வெளியிட்டுள்ளது இந்திய நிறுவனமான சோஹோ தான். அதனால் இந்த செயலி குறித்த ஆர்வம் பெரும்பாலான இந்தியர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதன் வெளிப்பாடு தான் இந்த செயலியின் டவுன்லோடு எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது. சாமானியர்கள் தொடங்கி ஆட்சி அதிகாரத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் வரை இந்த செயலி குறித்த பேச்சுதான். இதில் அப்படி என்ன ஸ்பெஷல்? அரட்டை மற்றும் வாட்ஸ்-அப் செயலுக்கு இடையே உள்ள வித்தியாசம் என்ன என்பது குறித்து விரிவாக பார்ப்போம். சோஹோ நிறுவனம்: கடந்த 1996-ல் தொடங்கப்பட்ட பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனம்தான் சோஹோ கார்ப்பரேஷன். அமெரிக்காவில் இதன் செயல்பாடு தொடங்கியது. தொடக்கத்தில் நெட்வொர்க் மேனேஜ்மேன்ட் சார்ந்த மென்பொருளை இந்த நிறுவனம் வழங்கியது. படிப்படியாக இதன் செயல்பாடு உலக அளவில் விரிவடைந்தது. சாப்ட்வேர் டெவலப்மென்ட், சோஷியல் நெட்வொர்க்கிங் சர்வீஸ்,…
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 அணித் தேர்வில் ஹர்ஷித் ராணா தேர்வு குறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார். கம்பீருக்கு ஆமாஞ்சாமி போடுபவர்களாக இருந்தால் அணியில் தேர்வு என்று ஸ்ரீகாந்த் கடும் காட்டமாக விமர்சன மட்டையைச் சுழற்றியுள்ளார். அதே போல் ஒருநாள் அணியில் பேக்-அப் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படாததையும் கடுமையாக விமர்சித்தார் ஸ்ரீகாந்த். வீரர்களிடையே பாதுகாப்பின்மை உணர்வை உருவாக்கி வருகிறார்கள், மாற்றி மாற்றி எடுப்பதும் கவிழ்ப்பதுமாக அணியைத் தேர்வு செய்து வருகின்றனர். நன்றாக ஆடுபவர்களுக்கு வாய்ப்பில்லை, ஆடாதவர்களுக்கு வாய்ப்பு இப்படியெல்லாம் செய்யலாமா என்று ஸ்ரீகாந்த் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார். நவம்பர் 2024-ல் அடுத்தடுத்து மூன்று வடிவங்களிலும் ஹர்ஷித் ராணா அறிமுகமானார். சமீப ஆசியக் கோப்பை வெற்றி அணியில் இருந்தார் ராணா. இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெள்ளைப்பந்து தொடரில் 4 ஸ்பெஷலிஸ்ட் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக தன் யூடியூப் சேனனில் ஸ்ரீகாந்த் கூறும்போது,…
