Last Updated : 05 Oct, 2025 10:44 PM Published : 05 Oct 2025 10:44 PM Last Updated : 05 Oct 2025 10:44 PM கிருஷ்ணகிரி: ஒரு கட்சி என்றால் தைரியம் இருக்க வேண்டும். வீரம் இருக்க வேண்டும். நம்மால் ஒரு குடும்பத்துக்கு பாதிப்பு என்றால் முதல் ஆளாக நிற்க வேண்டும். விஜய் குறித்த நேரத்தில் அங்கு வரவே இல்லை. இது அவர் செய்த முதல் தவறு என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார். கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இதுகுறித்து பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: “தவெக நிர்வாகிகள் தலைமறைவாக இருப்பதாக சொல்கிறார்கள். தலைக்கு கத்தியா வரப்போகிறது? தூக்கிலா போடப் போகிறார்கள்? ஒரு கட்சி என்றால் தைரியம் இருக்க வேண்டும். வீரம் இருக்க வேண்டும். நம்மால் ஒரு குடும்பத்துக்கு பாதிப்பு என்றால் முதல் ஆளாக நிற்க வேண்டும். விஜய் குறித்த நேரத்தில் அங்கு வரவே…
Author: admin
கரூர்: கரூர் தவெக கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நேற்று தொடங்கியது. கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்து, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். மறுநாளே விசாரணையை தொடங்கிய நீதிபதி அருணா ஜெகதீசன், 2 நாட்கள் விசாரணை நடத்தினார். இதற்கிடையே, நெரிசல் சம்பவம் தொடர்பாக கரூர் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தவெக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி.மதியழகன், நிர்வாகி பவுன்ராஜ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கட்சியின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைச் செயலாளர்…
இலவங்கப்பட்டை நீண்ட காலமாக சமையலறைகள் மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் சிறிய அளவில் தவறாமல் எடுக்கும்போது இந்த மசாலா எவ்வாறு ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதை பார்த்து வருகிறது. ஒரு பொதுவான சடங்கு ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை படுக்கைக்கு முன் வெதுவெதுப்பான நீரில் கலப்பது. இது ஒரு சிகிச்சை அல்ல, ஆய்வுகள் இது இரத்த சர்க்கரை சமநிலை, செரிமானம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை நுட்பமான வழிகளில் ஆதரிக்கக்கூடும் என்று கூறுகின்றன. இந்த எளிய இரவு நேர பழக்கத்தை சிலர் தேர்வு செய்வதற்கான ஆறு ஆராய்ச்சி ஆதரவு காரணங்கள் இங்கே.
சென்னை: அரசுத் துறைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான பணியிடங்கள் 235-ல் இருந்து 119 ஆக குறைக்கவில்லை என்று மாற்றுத் திறனாளிகள் நலத்துறை விளக்கம் அளித்துள்ளது. அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் 119 பணியிடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை கடந்த மாதம் 26-ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் மாற்றுத்திறனாளிகள் மேற்கொள்ளும் சவால்களை கருத்தில் கொண்டு, அவர்களின் தகுதிக்கு ஏற்ற பதவிகள் என்ன என்ற விவரங்களையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற 119 பணிகளை நிபுணர் குழு மூலம் தேர்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் 4 நிலைகளுக்கு ஏற்ப ஏ, பி, சி, டி என்ற பிரிவில், 119 பதவிகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், மாற்றுத் திறனாளிகள் நலச்சங்கம் இந்த அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. தற்போது, 119 இடங்களே மாற்றுத் திறனாளிகள் செய்ய ஏற்ற பணிகளாக சரிபாதியாக குறைத்து திமுக அரசு…
சென்னை: நாட்டிலேயே தமிழகத்தில்தான் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு அதிகமாக உள்ளது. பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதை திமுக அரசு உறுதி செய்யவில்லை என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து, சமூக வலைதளப் பக்கத்தில் அவர் நேற்று வெளியிட்ட பதிவு: முதல்வரின் சொந்தத் தொகுதியான சென்னை கொளத்தூர் சட்டபேரவைத் தொகுதி திருப்பதி நகர் முதல் பிரதான சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணி ஒப்பந்த ஊழியர் குப்பன், விஷவாயு தாக்கி உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. மேலும், உடனிருந்த தூய்மைப் பணியாளர்கள் சங்கர், ஹரிஹரன் ஆகியோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் மூன்று தூய்மைப் பணியாளர்கள் உயிரைப் பறிகொடுத்து 10 நாட்கள் கூட ஆகவில்லை. தற்போது முதல்வரின் சொந்தத் தொகுதியில் மீண்டும் ஒரு உயிரைப் பறிகொடுத்திருக்கிறோம். நாட்டிலேயே தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு தமிழகத்தில் தான் அதிகமாக…
சென்னை: திமுகவின் ‘தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ எனும் பிரச்சார வாசகத்தை விமர்சித்து எந்த சண்டையும் இல்லாத போது தமிழகம் யாருடன் போராடும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளார். வள்ளலாரின் 202-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் 2 நாட்கள் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன. அதன்படி நேற்று நடைபெற்ற விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி ‘திருவருட்பா-ஆறாம் திருமுறை’ எனும் நூலின் இந்திப்பதிப்பை வெளியிட்டார். தொடர்ந்து மாணவர்களால் காட்சிப்படுத்தப்பட்ட வள்ளலார் சன்மார்க்க கண்காட்சியையும் பார்வையிட்டார். பின்னர் அவர் பேசியதாவது: இன்றைய உலகில் இருக்கும் பிரிவினைவாதம், வறுமை ஆகியவற்றை போக்கும் வழிகள் வள்ளலாரின் தத்துவங்களுக்கு உள்ளன. வள்ளலாருக்கு தரவேண்டிய மரியாதை இன்னும் கிடைக்காதது வருத்தமாக இருந்தது. அதனால்தான் 2023-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வள்ளலார் விழாவை நடத்தி வருகிறேன். வள்ளலாரை தினமும் வணங்க வேண்டும் என்பதற்காகவே வள்ளலார் சிலையை ராஜ்பவனில் அமைத்தேன். அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமின்றி மரங்களைவெட்டுவதாலும், காடுகளை அழிப்பதாலும் பருவநிலை…
சென்னை: ஸ்பெயினில் நடைபெற்ற கார் பந்தயத்தில் 3-வது இடம் பிடித்த நடிகர் அஜித்குமார் அணிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். ஸ்பெயினில் ஐரோப்பிய எண்டூரன்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் கார் பந்தயத்தில் அஜித் அணி ஒட்டுமொத்தமாக 3-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இதையொட்டி, அவருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது: பார்சிலோனாவில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் அணி ஒட்டுமொத்தமாக 3-வது இடம் பிடித்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன். இந்த வெற்றியின் மூலம் உலக அளவில் கார் பந்தயத்தில் இந்தியாவையும், தமிழகத்தையும் பெருமையடைய செய்த நடிகர் அஜித்குமாருக்கும், அவரது குழுவினருக்கும் வாழ்த்துகள். மேலும், இந்த சர்வதேசப் போட்டியின்போது, கார், பந்தய உபகரணங்கள், ஜெர்சியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இலச்சினையை பயன்படுத்தியதற்காக தமிழக அரசு சார்பில் அவருக்கும், அவரது குழுவினருக்கும் நன்றியை…
புதுடெல்லி: பாஸ்டேக் இல்லாதவர்கள் யுபிஐ பயன்படுத்தினால், வழக்கமான கட்டணத்தில் 1.25 மடங்கு செலுத்தினால் போதும் என்று மத்திய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், விரைவுச் சாலைகளில் உள்ள 1,150 சுங்கச்சாவடிகளில் தடையின்றி பயணிக்க ஏதுவாக பாஸ்டேக் வருடாந்திர பாஸ் வசதியை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்எச்ஏஐ) கடந்த சுதந்திர தினத்தின்போது அறிமுகப்படுத்தியது. அன்றைய தினம் மட்டும் 1.40 லட்சம் வாகன ஓட்டிகள் இந்த வருடாந்திர பாஸை வாங்கினர். இதையடுத்து, வருடாந்திர பாஸ் திட்டத்துக்கு வாகன ஓட்டிகளிடம் நல்ல வரவேற்பு காணப்பட்டது. இந்த நிலையில், பாஸ்டேக் இல்லாத வாகனங்கள் நவம்பர் மாதம் முதல் 1.25 மடங்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு, பாஸ்டேக் வைத்திருக்கும் ஒருவர் ரூ.100 சுங்க கட்டணம் செலுத்துவார் என்றால், அவர் ரொக்கமாக செலுத்தும்போது ரூ.200 கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும். அதேநேரம், யுபிஐ வசதியை பயன்படுத்தினால் ரூ.125…
கோவை: கரூர் விவகாரம் தொடர்பாக, தற்போது எந்த கேள்விகளும் வேண்டாம். அது தொடர்பாக விசாரணை அறிக்கை வந்த பிறகு பேசுவோம் என திமுக மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி கோவையில் இன்று (அக்.5) செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட துரை.செந்தமிழ்செல்வன், பொறுப்பேற்கும் நிகழ்வையொட்டி, காந்திபுரத்தில் பெரியார், அண்ணா, கருணாநிதி சிலைகளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு இன்று (அக்.5) நடந்தது. இதில், முன்னாள் அமைச்சரும், திமுக மேற்கு மண்டல பொறுப்பாளருமான வி.செந்தில்பாலாஜி கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “செந்தமிழ்செல்வன் முறைப்படி, கோவை மாநகர் மாவட்ட பொறுப்பளாராக பொறுப்பை ஏற்கிறார். 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளர்களை வெற்றியடையச் செய்ய வேண்டும். அதற்கான தேர்தல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கரூரில் நடந்த தவெக பிரச்சார விவகாரம் தொடர்பாக முன்னரே விரிவாக பேசி விட்டேன். இனி, விசாரணை ஆணையத்தின் விசாரணை முடிந்த பிறகு…
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன் தொடங்கியுள்ளது. தமிழில் மிக பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று ‘பிக்பாஸ்’. கடந்த 2017 முதல் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். 7 சீசன்கள் வரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தனிப்பட்ட காரணங்களால் விலகவே, கடந்த 8வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன் இன்று (அக்.5) முதல் தொடங்கியுள்ளது. இந்த சீசனையும் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். இதற்காக கடந்த சில மாதங்களாகவே போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன. இன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒவ்வொருவருவராக விஜய் சேதுபதி மேடைக்கு அழைத்து அறிமுகப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில், திவாகர், ஆரோரா சின்க்ளேர், எஃப்ஜே, விஜே பார்வதி, துஷார், கனி, சபரி, பிரவீன் காந்தி, கெமி, ஆதிரை, ரம்யா ஜோ, கானா வினோத்,…
