பெண்கள் அந்த குறிப்பிட்ட மாதவிடாய் வயதை எட்டும்போது, ஈஸ்ட்ரோஜன் கணிசமாக குறைகிறது, இது உடனடியாக எலும்பு மற்றும் தசை இழப்பு, சர்கோபீனியா ஆகியவற்றை விளைவிக்கிறது, மேலும் இது ஆஸ்டியோபோரோசிஸ் வளர்ச்சியின் வாய்ப்பை அதிகரிக்கிறது. எலும்பு ஆரோக்கியத்திற்கு கால்சியம் மிகவும் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஊட்டச்சத்து என்றாலும், மெக்னீசியம் சமமாக முக்கியமானது. கால்சியத்தை சமநிலைப்படுத்துவதில் மெக்னீசியம் உதவுகிறது, உடலுக்குள் வைட்டமின் டி செயல்படுத்துகிறது மற்றும் எலும்புகளை உருவாக்குவதில் பங்கேற்பு பாத்திரத்தில் உதவுகிறது. ஒரு பெண்ணுக்கு மெக்னீசியம் இல்லையென்றால், அது உடையக்கூடிய எலும்புகளை ஏற்படுத்தக்கூடும், இதன் விளைவாக எலும்பு முறிவு, எலும்பு நோய் அதிகரிக்கும் அபாயத்திற்கு வழிவகுக்கும். பாதாம், கீரைகள் மற்றும் முழு தானியங்கள் போன்ற மெக்னீசியம் நிறைந்த உணவுப் பொருட்களைச் சேர்ப்பது உடல் அடர்த்தியை பராமரிக்க உதவும்.
Author: admin
கரூர்: கரூர் தவெக பிரச்சாரக் கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று தேசிய பட்டியலின ஆணையத் தலைவர் கிஷோர் மக்வானா கூறினார். கரூரில் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக, சம்பவம் நடைபெற்ற வேலுசாமிபுரத்தில் தேசிய பட்டியலின ஆணையத் தலைவர் கிஷோர் மக்வானா நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து, நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்து, ஆறுதல் கூறினார். பின்னர், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரையும் சந்தித்தார். பின்னர், கரூர் சுற்றுலா மாளிகையில் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல், மத்திய மண்டல ஐ.ஜி. ஜோஷி நிர்மல் குமார், எஸ்.பி. ஜோஷ் தங்கையா, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சாந்தி ஆகியோரிடம் கூட்ட நெரிசல், உயிரிழந்தவர்கள், சிகிச்சை பெற்றவர்கள் குறித்து விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் கிஷோர் மக்வானா செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரூரில் கூட்ட நெரிசலில்…
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியின் பிரச்சாரப் பயணம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 19, 20, 21-ம் தேதிகளில் நாமக்கல் மாவட்டத்தில் பழனிசாமி சுற்றுப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டு, கடந்த 19-ம் தேதி ராசிபுரம், சேந்தமங்கலம் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். கனமழை அறிவிப்பு காரணமாக செப். 20, 21-ம் தேதிகளில் நடைபெறவிருந்த பிரச்சாரப் பயணம் அக்.4, 5-ம் தேதிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டது. பின்னர், அக். 5, 6-ம் தேதிகளுக்கு மீண்டும் மாற்றம் செய்து அதிமுக தலைமை அறிவித்தது. அதன்படி இன்று திருச்செங்கோடு, குமாரபாளையம் தொகுதியிலும், நாளை நாமக்கல், பரமத்தி வேலூர் தொகுதியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், பிரச்சாரத்துக்கு தேர்வு செய்யப்பட்ட 4 இடங்களும் மாநில நெடுஞ்சாலைக்கு உட்பட்ட இடங்கள் என்பதால், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவைக் காரணம் காட்டி பிரச்சாரத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. இதனால், பிரச்சார தேதி 3-வது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
இதை நம்புவது கடினமாகத் தோன்றலாம், ஆனால் நடைபயிற்சி ஜாகிங்கை விட அதிக கொழுப்பை எரிக்கக்கூடும், இது ‘ஜப்பானிய வழி’ செய்யப்படும்போது. ஜப்பானில் உள்ள ஷின்ஷு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களால் “இடைவெளி நடைபயிற்சி பயிற்சி” என்று அழைக்கப்படும் இந்த புதிய உடற்பயிற்சி போக்கு, உடற்பயிற்சி ஆர்வலர்களிடையே ஒரு புதிய விருப்பமாக மாறியுள்ளது. என்ன ஜப்பானிய நடை நுட்பம்இடைவெளி நடைபயிற்சி என்பது விஞ்ஞான ரீதியாக வடிவமைக்கப்பட்ட உடற்பயிற்சி முறையாகும், அங்கு ஒரு சாதாரண உலாவுக்கு பதிலாக, விறுவிறுப்பான நடைபயிற்சி மற்றும் மெதுவான வேக நடைபயிற்சி ஆகியவற்றின் கலவையானது மாறி மாறி இணைக்கப்படுகிறது. நுட்பம் ஒரு எளிய தாளத்தைப் பின்பற்றுகிறது: விறுவிறுப்பான நடைபயிற்சி 3 நிமிடங்கள்மெதுவாக நடைபயிற்சி 3 நிமிடங்கள்சுழற்சியை 30 நிமிடங்கள் மீண்டும் மீண்டும் செய்தல்இந்த முறையை உருவாக்கிய பேராசிரியர்களில் ஒருவரான டாக்டர் ஹிரோஷி நோர் கூறுகையில், இந்த நுட்பம் கொழுப்பு எரியும் மற்றும் இருதய ஆரோக்கியத்திற்கு நடைபயிற்சி அதிக நன்மை பயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது,…
வேலூர்: கரூர் விவகாரத்தில் தேவை ஏற்பட்டால் விஜய் கைது செய்யப்படுவார் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காடு பகுதியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: கரூர் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் நீதிபதி பல்வேறு உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார். அதிமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார். சீமானை கேட்டால், அவரும் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று கூறுவார். யார் வேண்டுமானால் சொல்லலாம். ஆனால், தேர்தல் நேரத்தில்தான் எல்லாம் தெரியும். கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு செல்லாத முதல்வர் ஸ்டாலின் கரூருக்கு சென்றது ஏன் என்றும், விசாரணை ஆணையம் அமைத்தது குறித்தும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். எதிர்க்கட்சியினர் அப்படித்தான் பேசுவார்கள். கள்ளக்குறிச்சி சம்பவம் நடந்தபோது இருந்த சூழ்நிலை வேறு, தற்போதுள்ள சூழ்நிலை வேறு. நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது சாதாரண…
தூத்துக்குடி: கரூர் சம்பவத்துக்கு பொறுப்பேற்று விஜய் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். திருச்செந்தூர் அமலி நகருக்கு நேற்று வந்த அவர், அங்கிருந்து மீனவர்களின் படகில் நடுக்கடலுக்கு சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடலையும், கடல் வாழ் உயிரினங்களையும் பாதுகாப்பது தொடர்பாக தூத்துக்குடியில் நவ.15-ல் ‘கடல் அம்மா மாநாடு’ நடத்துகிறோம். இந்த மாநாட்டுக்கான ஆலோசனை பயணம்தான் இது. கரூர் சம்பவத்தின்போது தவெக தலைவர் விஜய்க்கு உரிய பாதுகாப்பு இருந்தது. ஆனால், மக்களுக்குத்தான் பாதுகாப்பில்லை. கரூர் சம்பவம் தொடர்பான நீதிமன்றத்தின் உத்தரவுகள் குறித்து கருத்து கூற முடியாது. விஜய்யை காப்பாற்ற வேண்டுமென பாஜக நிலைப்பாடு எடுத்துள்ளது. விஜய்யை பார்க்க வந்த கூட்டத்தால்தான் நெரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே, நடந்த சம்பவத்துக்குப் பொறுப்பேற்று, விஜய்வருத்தம் தெரிவிக்க வேண்டும். அதை விடுத்து அரசு, காவல் துறை மீது பழிபோட்டு, தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று…
Last Updated : 05 Oct, 2025 10:44 PM Published : 05 Oct 2025 10:44 PM Last Updated : 05 Oct 2025 10:44 PM கிருஷ்ணகிரி: ஒரு கட்சி என்றால் தைரியம் இருக்க வேண்டும். வீரம் இருக்க வேண்டும். நம்மால் ஒரு குடும்பத்துக்கு பாதிப்பு என்றால் முதல் ஆளாக நிற்க வேண்டும். விஜய் குறித்த நேரத்தில் அங்கு வரவே இல்லை. இது அவர் செய்த முதல் தவறு என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார். கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இதுகுறித்து பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: “தவெக நிர்வாகிகள் தலைமறைவாக இருப்பதாக சொல்கிறார்கள். தலைக்கு கத்தியா வரப்போகிறது? தூக்கிலா போடப் போகிறார்கள்? ஒரு கட்சி என்றால் தைரியம் இருக்க வேண்டும். வீரம் இருக்க வேண்டும். நம்மால் ஒரு குடும்பத்துக்கு பாதிப்பு என்றால் முதல் ஆளாக நிற்க வேண்டும். விஜய் குறித்த நேரத்தில் அங்கு வரவே…
கரூர்: கரூர் தவெக கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நேற்று தொடங்கியது. கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்து, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். மறுநாளே விசாரணையை தொடங்கிய நீதிபதி அருணா ஜெகதீசன், 2 நாட்கள் விசாரணை நடத்தினார். இதற்கிடையே, நெரிசல் சம்பவம் தொடர்பாக கரூர் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தவெக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி.மதியழகன், நிர்வாகி பவுன்ராஜ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கட்சியின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைச் செயலாளர்…
இலவங்கப்பட்டை நீண்ட காலமாக சமையலறைகள் மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் சிறிய அளவில் தவறாமல் எடுக்கும்போது இந்த மசாலா எவ்வாறு ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதை பார்த்து வருகிறது. ஒரு பொதுவான சடங்கு ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை படுக்கைக்கு முன் வெதுவெதுப்பான நீரில் கலப்பது. இது ஒரு சிகிச்சை அல்ல, ஆய்வுகள் இது இரத்த சர்க்கரை சமநிலை, செரிமானம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை நுட்பமான வழிகளில் ஆதரிக்கக்கூடும் என்று கூறுகின்றன. இந்த எளிய இரவு நேர பழக்கத்தை சிலர் தேர்வு செய்வதற்கான ஆறு ஆராய்ச்சி ஆதரவு காரணங்கள் இங்கே.
சென்னை: அரசுத் துறைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான பணியிடங்கள் 235-ல் இருந்து 119 ஆக குறைக்கவில்லை என்று மாற்றுத் திறனாளிகள் நலத்துறை விளக்கம் அளித்துள்ளது. அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் 119 பணியிடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை கடந்த மாதம் 26-ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் மாற்றுத்திறனாளிகள் மேற்கொள்ளும் சவால்களை கருத்தில் கொண்டு, அவர்களின் தகுதிக்கு ஏற்ற பதவிகள் என்ன என்ற விவரங்களையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற 119 பணிகளை நிபுணர் குழு மூலம் தேர்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் 4 நிலைகளுக்கு ஏற்ப ஏ, பி, சி, டி என்ற பிரிவில், 119 பதவிகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், மாற்றுத் திறனாளிகள் நலச்சங்கம் இந்த அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. தற்போது, 119 இடங்களே மாற்றுத் திறனாளிகள் செய்ய ஏற்ற பணிகளாக சரிபாதியாக குறைத்து திமுக அரசு…
