தோள்பட்டை வலி நுரையீரல் புற்றுநோயுடன் அரிதாகவே இணைக்கப்பட்டுள்ளது, ஏனென்றால் இது ஒரு தசை இழுப்பிலிருந்து உருவாகிறது என்று பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள், அல்லது வெறுமனே ‘தவறாக தூங்கினார்கள்’. மறுபுறம், மார்பு வலி கூட இதயத்துடன் அதிகமாக இணைக்கப்பட்டுள்ளது, ஆனால் நுரையீரலுக்கு அல்ல. இருப்பினும், நரம்புகள் மற்றும் மார்பு கட்டமைப்புகளுக்கு எதிராக அழுத்தும் நுரையீரல் புற்றுநோய் கட்டிகள் காயத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றாலும், மார்பு மற்றும் தோளில் உள்ள வலி மற்றும் அச om கரியத்திற்கு வழிவகுக்கிறது. நோயாளிகள் சிரிக்கும்போது, இருமல் அல்லது ஆழ்ந்த சுவாசம் தேவைப்படும் எந்தவொரு செயலையும் செய்யும்போது வலி மிகவும் கடுமையானதாகிறது. மக்கள் மார்பு வலியை அடிக்கடி கவனிக்க மாட்டார்கள், ஏனெனில் இது பல்வேறு சிறிய மருத்துவ நிலைமைகளில் தோன்றுகிறது, இது தவறான நோயறிதல்களுக்கு வழிவகுக்கிறது. தொடர்ச்சியான மார்பு அல்லது தோள்பட்டை வலியை அனுபவிக்கும் நோயாளிகளை ஒரு மருத்துவர் பரிசோதிக்க வேண்டும், ஏனென்றால் இருமல் அல்லது எடை…
Author: admin
புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு வழக்கு விசாரணைக்காக நேற்று கூடியது. அப்போது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் தனது காலணியை கழற்றி தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயை நோக்கி வீசி உள்ளார். ஆனால் அது அவர் மீது படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அவர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணைக்கு பிறகு போலீஸார் அவரை விடுவித்தனர். பின்னர் அவரை பார் கவுன்சில் சஸ்பெண்ட் செய்தது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. விசாரணை தடைபட்டது. இதனிடையே, ‘‘சனாதன தர்மத்தை அவமதிப்பதை சகித்துக் கொள்ள முடியாது’’ என கிஷோர் கோஷமிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தலைமை நீதிபதி கவாய் கூறும்போது, “இதனால் கவனத்தை சிதற விடாதீர்கள். இவை என்னை பாதிக்கவில்லை’’ என்றார். உச்ச நீதிமன்றத்தில் ராகேஷ் தலால் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஜவாரி கோயிலில் சேதமடைந்த நிலையில் உள்ள விஷ்ணு சிலையை மறுநிர்மாணம்…
சென்னை: ‘வழக்கை விசாரித்து தீர்ப்பளித்தால் நீதிபதிகள், அவர்களின் குடும்பத்தினரின் பின்புலத்தை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கின்றனர், எதையும் சிரித்துக்கொண்டே கடந்துவிட வேண்டும்’ என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். செந்தில்குமார் ஆதங்கம் தெரிவித்துள்ளார். பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக, கர்ப்பிணியான ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா போலீஸில் புகார் அளித்துள்ளார். மாதம்பட்டி ரங்கராஜைக் கடுமையாக விமர்சித்து சமூக வலைதளங்களிலும் அவர் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் தன்னைப் பற்றி சமூக வலைதளங்களி்ல் பதிவிட, பேட்டியளிக்க தடை விதிக்கக் கோரியும், ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள வீடியோக்களை அகற்றக் கோரியும் மாதம்பட்டி ரங்கராஜ், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி என். செந்தில்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன், “மாதம்பட்டி ரங்கராஜுக்கு கடந்த 2013-ம் ஆண்டு ஸ்ருதி என்பவருடன் திருமணமாகி…
(பட வரவு: Pinterest) புகழ்பெற்ற சிகையலங்கார நிபுணர் ஜாவேத் ஹபீப் தனது நாடு தழுவிய வரவேற்புரை சங்கிலிகளுக்காக அறியப்படுகிறார், அவை இந்த நாட்களில் செய்திகளில் உள்ளன, சரியான காரணங்களுக்காக அல்ல, ஆனால் மோசடி வழக்குக்காக. 100 க்கும் மேற்பட்ட கோடி ரூபாய் முதலீட்டாளர்களை மோசடி செய்ததாக ஜாவேத் ஹபீப் மற்றும் அவரது மகன் அனஸ் ஹபீப் ஆகியோருக்கு எதிராக சம்பல் போலீசார் 20 ஃபிர் பதிவு செய்துள்ளனர்.உள்ளூர் பொலிஸ் குழுக்கள் இப்போது மும்பை மற்றும் டெல்லியில் ரெய்டு இடங்களுக்கு தயாராகி வருகின்றன, அதேசமயம் குடும்பத்தின் சில உறுப்பினர்கள் மீது ஒரு பார்வை அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் விசாரணையின்படி, வழக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முந்தையது. 2023 ஆம் ஆண்டில், உத்தரபிரதேசத்தின் சம்பலின் சரயட்ரெய்ன் பகுதியில் உள்ள ராயல் பேலஸ் வெங்கட் ஹாலில் ஒரு பெரிய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.(பட வரவு: Pinterest)இந்த நிகழ்வு ஃபோலிசில் குளோபல் கம்பெனி என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டது,…
புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணியை வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், தனது செயலுக்கு வருத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு வழக்கு விசாரணைக்காக நேற்று கூடியது. அப்போது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் தனது காலணியை கழற்றி தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயை நோக்கி வீசி உள்ளார். ஆனால் அது அவர் மீது படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அவர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணைக்கு பிறகு போலீஸார் அவரை விடுவித்தனர். இதன் பின்னர் அவரை பார் கவுன்சில் சஸ்பெண்ட் செய்தது. இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய ராகேஷ் கிஷோர், “செப்டம்பர் 16 அன்று தலைமை நீதிபதியின் அமர்வில் கஜுராஹோவில் உள்ள ஜவாரி கோயிலில் உள்ள விஷ்ணுவின் சிலையை மீட்டெடுக்கக் கோரிய பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது நீதிபதி கவாய், ‘சிலையை மீட்டெடுக்க கடவுளிடம்…
நியூயார்க்: “சொந்த நாட்டுப் பெண்கள் 4 லட்சம் பேரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற நாடு பாகிஸ்தான்” என்று ஐநா பாதுகாப்பு அவையில் நடைபெற்ற விவாதத்தில் இந்தியா குற்றம் சாட்டியது. ஐநாவுக்கான பாகிஸ்தானின் நிரந்தர பிரதிநிதி சைமா சலீமின் பேசும்போது, “ஜம்மு காஷ்மீரை சுட்டிக்காட்டி இந்தியாவுக்கு எதிராகப் பேசினார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ், துரதிருஷ்டவசமாக ஒவ்வொரு ஆண்டும் எனது நாட்டுக்கு எதிராக குறிப்பாக அவர்கள் (பாகிஸ்தான்) விரும்பும் எங்கள் ஜம்மு காஷ்மீருக்கு எதிராக பாகிஸ்தான் பொய்யான குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பதை கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பெண்கள், அமைதி, பாதுகாப்பு விஷயத்தில் எங்களின் சாதனை தன்னிகரில்லாது, கறையற்றது. தனது சொந்த மக்களுக்கு எதிராக குண்டுவீசி இனப்படுகொலையை நடத்தும் ஒரு நாடு, தவறான மற்றும் மிகைப்படுத்தப்பட்ட கருத்துக்கள் மூலம் உலகை திசைதிருப்ப முயல்கிறது. 1971-ல் கிழக்கு பாகிஸ்தானில், பாகிஸ்தான் நடத்திய ஆபரேஷன் சர்ச்லைட்…
சென்னை: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் பொருளாளர் எல்.கே.சுதீஷின் தாயார் அம்சவேணி உடல்நலக்குறைவால் காலமானார். வயது மூப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அம்சவேணி, அண்மைக்காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “தேமுதிக பொதுச் செயலாளர் சகோதரி பிரேமலதா விஜயகாந்தின் தாயார் அம்சவேணி மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். பெற்றெடுத்து அன்பு செலுத்தி வளர்த்த அன்னையை இழந்து வாடும் பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக.,வின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
உலகின் மிக உயர்ந்த தம்பதிகளில் ஒருவரான ஜெஃப் பெசோஸ் மற்றும் லாரன் சான்செஸ் பெசோஸ் ஆகியோர் பேஷன் வீக்கில் பாரிஸில் தங்கள் பாவம் செய்ய முடியாத ஒருங்கிணைந்த ஆடைகளுடன் தலைகீழாக மாறினர். இந்த ஜோடி ஒரு அதிநவீன ஒற்றை நிற சாம்பல் கருப்பொருளைத் தழுவியது, ஜெஃப் பெசோஸின் புதிதாக அறிமுகமான சாம்பல் சலசலப்பு வெட்டு மற்றும் அவற்றின் குறிப்பிடத்தக்க பேஷன் ஒத்திசைவை எடுத்துக்காட்டுகிறது. ஜெஃப் ஒரு அடுக்கப்பட்ட டி-ஷர்ட், ஜீன்ஸ் மற்றும் ஒரு பாக்கெட் கோட் கொண்ட ஒரு சாதாரண மற்றும் ஸ்டைலான குழுமத்தைத் தேர்ந்தெடுத்தார், அதே நேரத்தில் லாரன் ஒரு விண்டேஜ் ஜான் கல்லியானோ சரிபார்ப்பு பிளேஸர் மற்றும் பென்சில் பாவாடை, சன்கிளாஸ்கள் மற்றும் ஒரு புதுப்பாணியான பன் ஆகியவற்றைக் கொண்டு அணுகினார். நியூயார்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸில் உயர்மட்ட தோற்றங்களைத் தொடர்ந்து, தம்பதியரின் பாரிஸ் ஒரு பேஷன்-ஃபார்வர்ட் இரட்டையராக தங்கள் நிலையை வலுப்படுத்தியது, ஒவ்வொரு பொது தோற்றத்திலும் நேர்த்தியான,…
புதுடெல்லி: கம்ப்யூட்டரில் நாம் மேற்கொள்ளும் அலுவலக பணிகளுக்கெல்லாம் நாம் வெளிநாட்டு நிறுவனங்களின் மென்பொருட்களைதான் பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில் உள்நாட்டு நிறுவனமான ஸ்ரீதர் வேம்புவின் சோஹோ நிறுவனம் ‘சோஹோ ஆபிஸ் சூட்’ என்ற ஆன்லைன் தளத்தை உருவாக்கியுள்ளது. இதில் உள்ள மென்பொருட்கள் மூலம் அனைத்து அலுவலக ஆவண பணிகளையும் மேற்கொள்ள முடியும். இந்நிலையில், மத்திய கல்வி துறை அமைச்சகம் அனைத்து அலுவலகங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: சோஹோவின் உள்நாட்டு ஆபிஸ் ஆன்லைன் மென்பொருட்களை பயன்படுத்துவதன் மூலம், சுதேசி இயக்கத்தில் நாம் தைரியமான நடவடிக்கையை எடுக்கிறோம். உள்நாட்டு புதுமையுடன் இந்தியா முன்னேற நாம் அதிகாரம் அளிக்கிறோம். இதன் மூலம் உள்நாட்டு டிஜிட்டல் கட்டமைப்பு வலுவடைந்து, நமது தரவுகள் பாதுகாப்புடையதாகவும், தற்சார்புடையதாகவும் இருக்கும். இந்த மாற்றம், உலகளாவிய டிஜிட்டல் பொருளாதாரத்தில், இந்தியாவின் நிலைப்பாட்டை வலுப்படுத்தும். சேவை பொருளாதாரம் என்ற நிலையிலிருந்து உற்பத்தி தேசம் என்ற நிலைக்கு நாடு செல்ல உதவும். மத்திய கல்வித்துறை…
சென்னை: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசின் தேசிய குற்றப்பதிவு ஆவண காப்பகம், இந்தியா முழுவதும் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் தற்கொலை தொடர்பான புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி 2022-ல் நாடு முழுவதும் 1.71 லட்சம் பேர் தற்கொலை செய்துள்ளனர். அதில் 4,690 பேர் விவசாயிகள். 6,096 பேர் விவசாயத் தொழிலாளர்கள். தொடர்ந்து 2023-ம் ஆண்டில் தற்கொலைகளின் எண்ணிக்கை கொஞ்சம் குறைந்துள்ளது. உலகின் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இந்தியா வளர்ந்து வருவதாகவும், வேளாண் உற்பத்தி உயர்ந்து, வேளாண் மகசூல் மும்மடங்கு உயர்ந்திருப்பதகாவும், இதனால் விவசாயிகள் வருமானம் இருமடங்கு அதிகரித்திருப்பதாகவும் பிரதமர் அறிவித்தும் விவசாயிகளின் தற்கொலைகள் ஏன் தொடர்கிறது. பல பருவங்களில் மகசூலில் பாதிப்புகளே அதிகம். அதேபோல் பேரிடர் கால பாதிப்புகளுக்கு நிவாரணம் கிடையாது. வேளாண் கடன்களுக்கு அபராத வட்டி, வேளாண் பொருட்களுக்கு ஆதார விலை நிர்ணயம் இல்லை போன்ற பல காரணங்களால் விவசாயிகளும், விவசாயத்…
