இருமல் மருந்து சாப்பிட்ட 16 குழந்தைகள் உயிழந்துள்ளனர். இதையடுத்து அந்த மருந்து விற்பனைக்கு 9 மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. மத்திய பிரதேசம் சிந்த்வாரா மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கோல்ட்ரிப் இருமல் மருந்து காரணமாக முதல் குழந்தை உயிரிழந்தது. ஆனால், அடுத்த 15 நாட்களுக்குள் 5 வயதுகுட்பட்ட ஆறு குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பால் அடுத்தடுத்து உயிரிழந்தன. சளி, இருமல், லேசான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவர்கள் இருமல் சிரப் உள்ளிட்ட வழக்கமான மருந்துகளை பரிந்துரைத்துள்ளனர். ஆனால், அந்த மருந்தை எடுத்துக்கொண்ட பின்பு சில நாட்களுக்குள் அந்த குழந்தைகளுக்கு சிறுநீர் வெளியேறுவது குறைந்தது. இதையடுத்து, அவர்களுக்கு சிறுநீரக தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. டயாலிசிஸ் கிகிச்சை தொடங்கிய சில நாட்களுக்குள் குழந்தைகள் அடுத்தடுத்து இறந்தனர். உயிரிழந்த குழந்தைகளில் சிலர் மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். பின்னர் நடத்தப்பட்ட உடற்கூராய்வில், குழந்தைகளின் சிறுநீரகங்களில் டைஎதிலீன் கிளைகோல் இருப்பது கண்டறியப்பட்டது. இது, விஷத்துடன் தொடர்புடைய…
Author: admin
புதுக்கோட்டை மாவட்ட திமுகவில் 2 ஆக இருந்த அன்னவாசல் ஒன்றியம், தற்போது 4 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் விராலிமலை தொகுதியை கைப்பற்றும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 13 ஒன்றியங்கள் உள்ளன. இதில், திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகள் தங்களது நிர்வாக வசதிக்காக ஒவ்வொரு ஒன்றியத்தையும் 2 அல்லது 3 ஆக பிரித்து, நிர்வாகிகளை நியமனம் செய்து கட்சிப் பணியாற்றி வருகின்றன. அதன்படி, விராலிமலை தொகுதிக்கு உட்பட்ட அன்னவாசல் ஒன்றியத்தை ஏற்கெனவே வடக்கு, தெற்கு என 2 ஆக பிரிக்கப்பட்டிருந்தது. இதில் வடக்கு ஒன்றிய செயலாளராக ஆர்.ஆர்.எஸ்.மாரிமுத்து, தெற்கு ஒன்றிய செயலாளராக கே.எஸ்.சந்திரன் ஆகியோர் இருந்தனர். தற்போது இந்த ஒன்றியம் மொத்தம் 4 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. இதில், வடக்கு, தெற்கு ஒன்றியங்களுக்கு ஏற்கெனவே உள்ள நிர்வாகிகள் பொறுப்பாளர்களாக தொடர்கின்றனர். புதிதாக பிரிக்கப்பட்டுள்ள மேற்கு ஒன்றியத்துக்கு கட்சியின் பொதுக்குழு உறுப்பினரான…
காலாவதியான உணவு ஆலோசனை, தயாரிப்பு முறைகள் அல்லது பொதுவான தவறான எண்ணங்கள் காரணமாக பல உணவுகள் ‘ஆரோக்கியமற்றவை’ என்று முத்திரை குத்தப்படுகின்றன. இருப்பினும், பல உருப்படிகள் பெரும்பாலும் நிராகரிக்கப்பட்டவை அல்லது பதப்படுத்தப்பட்டவை என நிராகரிக்கப்படுகின்றன உண்மையில் ஊட்டச்சத்து நிறைந்தவை மற்றும் மிதமான முறையில் சாப்பிடும்போது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்க முடியும். உறைந்த காய்கறிகள் தங்கள் வைட்டமின்களைத் தக்கவைத்துக்கொள்வதில் இருந்து நார்ச்சத்து நிரம்பிய காற்று-பாப் பாப்கார்ன் வரை, இந்த உணவுகள் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் இதய ஆரோக்கியமான சேர்மங்களை வழங்குகின்றன. சீரான உணவில் அவற்றை சேர்ப்பது ஆற்றலை அதிகரிக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்கும் மற்றும் நீண்டகால ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும். முதல் பார்வையில் ஆரோக்கியமற்றதாகத் தோன்றக்கூடிய ஏழு ஆச்சரியமான உணவுகள் இங்கே உள்ளன, ஆனால் உங்கள் உடலுக்கு உண்மையிலேயே நன்மை பயக்கும்.6 அன்றாட உணவுகள் ஆரோக்கியமற்றவை ஆனால் ஊட்டச்சத்து நிறைந்தவை என்று முத்திரை குத்தப்பட்டனஉறைந்த காய்கறிகள்உறைந்த காய்கறிகள் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை, ஏனெனில்…
ஜபல்பூர்: பிஹார் தேர்தலில் பெனிபட்டி தொகுதியில் போட்டியிட விரும்புவதாக பிரபல நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர் தெரிவித்துள்ளார். நர்மதா மஹோத்சவம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூருக்கு வருகை தந்துள்ள மைதிலி தாக்கூர் அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன். எங்கள் சொந்த ஊர் உள்ள பெனிபட்டி தொகுதியில் போட்டியிட விரும்புகிறேன். எனது கிராமப் பகுதியுடன் எனக்கு நெருக்கமான தொடர்பு இருப்பதால் அங்கு போட்டியிட விரும்புகிறேன். அங்கிருந்து தொடங்குவது எனக்கு கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பைத் தரும். மக்களைச் சந்திப்பது, அவர்களுடன் பேசுவது போன்றவற்றை நான் என் கிராமத்தில் இருந்து தொடங்கினால் எனக்கு இன்னும் சவுகரியமாக இருக்கும். எனினும், இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை” என தெரிவித்துள்ளார். மதுபானி மாவட்டத்தில் உள்ள பெனிபட்டி தொகுதியின் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினராக பாஜகவைச் சேர்ந்த மாநில அமைச்சர் வினோத் நாராயண் ஜா உள்ளார். கடந்த 2020…
ஏதென்ஸ்: “இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஒரு நாடு தடுக்கையில் அவர்களை எதிர்த்து கடல் வழியாக செல்ல வேண்டிய சூழல் உருவானதே ஒரு பெரும் அவல நிலை தான்.” என்று சூழலியல் செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்க் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தின் காசா பகுதி வாழ் மக்களுக்கு வேண்டிய நிவாரண உதவி பொருட்களுடன் பார்சிலோனாவில் இருந்து 50 படகுகளில் சூழலியல் செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்க் உள்பட சுமார் 500 செயற்பாட்டர்கள் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் பயணம் மேற்கொண்டனர். இந்தப் படகுகளை இஸ்ரேல் கடற்படையினர் இடைமறித்தனர். அதிலிருந்தவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர். இவர்கள் படிப்படியாக நாடுகடத்தப்பட்ட நிலையில், கிரெட்டா தன்பெர்க் உள்பட 160 பேர் ஞாயிற்றுக்கிழமை கிரீஸுக்கு நாடுகடத்தப்பட்டனர். அவர்கள் ஏதென்ஸ் விமான நிலையம் வந்தபோது ஏராளமான சமூக செயற்பாட்டாளர்கள் அவர்களை வரவேற்றனர். அப்போது பேசிய கிரெட்டா, “கடல் வழியாகக் கூட நிவாரணம் காசா சென்று சேரக் கூடாது என்று மனிதமற்ற இஸ்ரேலின் முயற்சியை முறியடிக்கும்…
மாவட்டத்தின் முதன்மைப் பதவியை அண்மையில் பறிகொடுத்திருக்கும் ஆளும் கட்சி புள்ளி மீது அமலாக்க வலையில் சிக்கி இருக்கும் அதிமுக்கிய புள்ளி, தொடர் குற்றச்சாட்டுகளை தலைமைக்கு பட்டியல் போட்டிருந்தாராம். அதிமுக ‘பெல்’ பிரமுகருடன் ஸ்லீப்பிங் பார்ட்னராக இருந்து சில பல வேலைகளை செய்து வருவது குறித்தும் அந்தப் பட்டியலில் இருந்ததாம். தனக்கெதிராக அமலாக்கப் புள்ளி ஆதாரங்களை திரட்டுவது தெரிந்ததுமே, சாதி ரீதியில் சத்தான அமைச்சர் ஒருவரிடம் டோட்டல் சரண்டர் ஆகிவிட்டாராம் மாவட்டப் புள்ளி. அமைச்சரின் கொங்கு விசிட்டின் போது விருந்தினர் மாளிகையில் அவரை தனக்கு நெருக்கமான சிலருடன் சென்று சந்தித்துப் பேசிய மாவட்டப் புள்ளி, “அவரை மீறி என்னால் அரசியல் செய்யமுடியவில்லை. எதைத் தொட்டாலும் குறுக்கே வந்து நிற்கிறார். நம்ம ரெண்டு பேரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணு. இந்த முறை எப்படியாவது எனக்கு சீட் வாங்கிக் கொடுத்து அமைச்சராக்கி விடுங்கள். நான் அமைச்சராகிவிட்டால் அவரை இந்தப் பக்கமே வரவிடாமல் செய்துவிடலாம். எனது ஏரியாவில் உங்களுக்கு…
தோள்பட்டை வலி நுரையீரல் புற்றுநோயுடன் அரிதாகவே இணைக்கப்பட்டுள்ளது, ஏனென்றால் இது ஒரு தசை இழுப்பிலிருந்து உருவாகிறது என்று பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள், அல்லது வெறுமனே ‘தவறாக தூங்கினார்கள்’. மறுபுறம், மார்பு வலி கூட இதயத்துடன் அதிகமாக இணைக்கப்பட்டுள்ளது, ஆனால் நுரையீரலுக்கு அல்ல. இருப்பினும், நரம்புகள் மற்றும் மார்பு கட்டமைப்புகளுக்கு எதிராக அழுத்தும் நுரையீரல் புற்றுநோய் கட்டிகள் காயத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றாலும், மார்பு மற்றும் தோளில் உள்ள வலி மற்றும் அச om கரியத்திற்கு வழிவகுக்கிறது. நோயாளிகள் சிரிக்கும்போது, இருமல் அல்லது ஆழ்ந்த சுவாசம் தேவைப்படும் எந்தவொரு செயலையும் செய்யும்போது வலி மிகவும் கடுமையானதாகிறது. மக்கள் மார்பு வலியை அடிக்கடி கவனிக்க மாட்டார்கள், ஏனெனில் இது பல்வேறு சிறிய மருத்துவ நிலைமைகளில் தோன்றுகிறது, இது தவறான நோயறிதல்களுக்கு வழிவகுக்கிறது. தொடர்ச்சியான மார்பு அல்லது தோள்பட்டை வலியை அனுபவிக்கும் நோயாளிகளை ஒரு மருத்துவர் பரிசோதிக்க வேண்டும், ஏனென்றால் இருமல் அல்லது எடை…
புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு வழக்கு விசாரணைக்காக நேற்று கூடியது. அப்போது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் தனது காலணியை கழற்றி தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயை நோக்கி வீசி உள்ளார். ஆனால் அது அவர் மீது படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அவர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணைக்கு பிறகு போலீஸார் அவரை விடுவித்தனர். பின்னர் அவரை பார் கவுன்சில் சஸ்பெண்ட் செய்தது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. விசாரணை தடைபட்டது. இதனிடையே, ‘‘சனாதன தர்மத்தை அவமதிப்பதை சகித்துக் கொள்ள முடியாது’’ என கிஷோர் கோஷமிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தலைமை நீதிபதி கவாய் கூறும்போது, “இதனால் கவனத்தை சிதற விடாதீர்கள். இவை என்னை பாதிக்கவில்லை’’ என்றார். உச்ச நீதிமன்றத்தில் ராகேஷ் தலால் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஜவாரி கோயிலில் சேதமடைந்த நிலையில் உள்ள விஷ்ணு சிலையை மறுநிர்மாணம்…
சென்னை: ‘வழக்கை விசாரித்து தீர்ப்பளித்தால் நீதிபதிகள், அவர்களின் குடும்பத்தினரின் பின்புலத்தை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கின்றனர், எதையும் சிரித்துக்கொண்டே கடந்துவிட வேண்டும்’ என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். செந்தில்குமார் ஆதங்கம் தெரிவித்துள்ளார். பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக, கர்ப்பிணியான ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா போலீஸில் புகார் அளித்துள்ளார். மாதம்பட்டி ரங்கராஜைக் கடுமையாக விமர்சித்து சமூக வலைதளங்களிலும் அவர் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் தன்னைப் பற்றி சமூக வலைதளங்களி்ல் பதிவிட, பேட்டியளிக்க தடை விதிக்கக் கோரியும், ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள வீடியோக்களை அகற்றக் கோரியும் மாதம்பட்டி ரங்கராஜ், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி என். செந்தில்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன், “மாதம்பட்டி ரங்கராஜுக்கு கடந்த 2013-ம் ஆண்டு ஸ்ருதி என்பவருடன் திருமணமாகி…
(பட வரவு: Pinterest) புகழ்பெற்ற சிகையலங்கார நிபுணர் ஜாவேத் ஹபீப் தனது நாடு தழுவிய வரவேற்புரை சங்கிலிகளுக்காக அறியப்படுகிறார், அவை இந்த நாட்களில் செய்திகளில் உள்ளன, சரியான காரணங்களுக்காக அல்ல, ஆனால் மோசடி வழக்குக்காக. 100 க்கும் மேற்பட்ட கோடி ரூபாய் முதலீட்டாளர்களை மோசடி செய்ததாக ஜாவேத் ஹபீப் மற்றும் அவரது மகன் அனஸ் ஹபீப் ஆகியோருக்கு எதிராக சம்பல் போலீசார் 20 ஃபிர் பதிவு செய்துள்ளனர்.உள்ளூர் பொலிஸ் குழுக்கள் இப்போது மும்பை மற்றும் டெல்லியில் ரெய்டு இடங்களுக்கு தயாராகி வருகின்றன, அதேசமயம் குடும்பத்தின் சில உறுப்பினர்கள் மீது ஒரு பார்வை அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் விசாரணையின்படி, வழக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முந்தையது. 2023 ஆம் ஆண்டில், உத்தரபிரதேசத்தின் சம்பலின் சரயட்ரெய்ன் பகுதியில் உள்ள ராயல் பேலஸ் வெங்கட் ஹாலில் ஒரு பெரிய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.(பட வரவு: Pinterest)இந்த நிகழ்வு ஃபோலிசில் குளோபல் கம்பெனி என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டது,…
