Last Updated : 08 Oct, 2025 07:55 AM Published : 08 Oct 2025 07:55 AM Last Updated : 08 Oct 2025 07:55 AM சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவில் பேருந்து சிக்கி 15 பயணிகள் உயிரிழந்தனர். 20 பேர் மண்ணில் புதைந்துள்ளனர். இமாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அங்கு மழை, வெள்ளம், நிலச்சரிவு காரணமாக கடந்த சில மாதங்களில் 320 பேர் உயிரிழந்துள்ளனர். ரூ.3 லட்சம் கோடிக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழலில் இமாச்சல பிரதேசத்தின் பிலாஸ்பூர் பகுதியில் கனமழை காரணமாக நேற்று மாலை நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக சென்ற பேருந்து நிலச்சரிவில் சிக்கியது. தகவல் அறிந்து போலீஸார் மற்றும் தீயணைப்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஜேசிபி இயந்திரம் மூலம் மண்ணை அகற்றும் பணி நடைபெற்றது.…
Author: admin
புதுடெல்லி: மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் வரும் 10-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக அமையக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அகமதாபாத்தில் இருந்ததை போன்று டெல்லி ஆடுகளத்தில் புற்கள் சீராக இல்லை. ஒரு சில பகுதிகளில் மட்டுமே புற்கள் உள்ளன. மேலும் ஆடுகளத்தின் அடிப்பகுதி கருப்பு மண் கொண்டு தயார் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக கருப்பு மண் கொண்டு செய்யப்படும் ஆடுகளங்கள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே இருக்கும். மேலும் ஆடுகளம் உலரத் தொடங்கும்…
‘ராஜா கிளி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான உமாபதி ராமையா, அடுத்து இயக்கும் படத்தில் நட்டி என்ற நட்ராஜ் சுப்ரமணியம் ஹீரோவாக நடிக்கிறார். கண்ணன் ரவி குரூப்ஸ் மற்றும் காந்தாரா ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் அரசியல் கதையை கொண்டது. அவருடன் இணைந்து, தம்பி ராமையா, ஷ்ரிதா ராவ், சாந்தினி தமிழரசன், விஜி சந்திரசேகர், வடிவுக்கரசி, இளவரசு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இயக்குநர் உமாபதி ராமையா கூறும்போது, “நிஜத்தை அடிப்படையாகக் கொண்டு நகைச்சுவையுடன் உருவாகும் பொழுதுபோக்கு படம் இது. நட்டி சார் ஹீரோவாக இணைந்திருப்பது மகிழ்ச்சி. இது அரசியல் திரைப்படம் என்றாலும் நகைச்சுவை, பொழுதுபோக்கு கலந்த படைப்பாக இருக்கும்” என்றார். கதை, உரையாடல்களை தம்பி ராமையா எழுதியுள்ளார். இந்தப்படத்துக்கு தர்புகா சிவா இசை அமைக்கிறார்.
நாமக்கல்: கரூர் விவகாரத்தில் அரசியல் கட்சி என்ற அந்தஸ்தை தவெக இழந்துவிட்டது. எனவே, அக்கட்சியின் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார். நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று வழிபட்ட அர்ஜுன் சம்பத், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் திமுக கூட்டணியினர் தொடர்ந்து பாலஸ்தீனத்துக்கு ஆதரவு என்ற போர்வையில் தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். அத்தகைய இயக்கங்களை தடை செய்ய வேண்டும். கரூர் நகரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் அப்பாவி மக்கள் 41 பேர் உயிரிழந்தனர். சென்னை மெரினா கடற்கரையில் நடந்த விமானப்படை சாகச நிகழ்ச்சியில், முதல்வர் முன்னிலையில் 60 பேர் மயக்கமடைந்தனர். 6 பேர் உயிரிழந்தனர். அரசியல், பொது நிகழ்ச்சிகளில் கூட்ட மேலாண்மையை சரிவர கடைப்பிடிப்பதில்லை. திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நெரிசலில் பக்தர்கள் சிக்குவதைத் தடுத்து, அவர்களுக்கு உரிய பாதுகாப்பு தர வேண்டும். கரூரில் தவெக…
கோல்ட்ரிஃப் இருமல் சிரப் சோகம் மீண்டும் இந்தியாவின் மருந்து பாதுகாப்பு அமைப்பில் இடைவெளிகளை அம்பலப்படுத்தியுள்ளது. டாக்டர் லான்சலோட் பிண்டோ, பி.டி. இந்துஜா தேசிய மருத்துவமனையின் ஆலோசகர் சுவாசவியலாளர், இத்தகைய மாசுபாடு ஏன் ஆபத்தானது, மற்றும் இருமல் சிரப் உண்மையிலேயே தேவைப்படும்போது விளக்குகிறதுகோல்ட்ரிஃப் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் கேரளாவில் குறைந்தது 14 குழந்தைகளின் இறப்புகளுடன் இணைக்கப்பட்ட இருமல் சிரப், 48.6% டைதிலீன் கிளைகோல் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது, இது கிட்டத்தட்ட 500 மடங்கு பாதுகாப்பான வரம்பாகும். இத்தகைய நச்சு இரசாயனத்தை உட்கொள்வது குழந்தைகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதை விளக்க முடியுமா?டைதிலீன் கிளைகோல் எந்த அளவிலும், ஒரு மருந்தில் இருக்கக்கூடாது. டைதிலீன் கிளைகோல் (டிகிரி) மற்றும் எத்திலீன் கிளைகோல் (எ.கா.) ஆகியவை ஆண்டிஃபிரீஸ், வண்ணப்பூச்சுகள், பிரேக் திரவங்களில் பயன்படுத்தப்படும் தொழில்துறை கரைப்பான்கள் மற்றும் மனித நுகர்வுக்கு அல்ல. அவர்கள் மலிவான கரைப்பான்கள் என்பதால், நேர்மையற்ற உற்பத்தியாளர்கள் கிளிசரால் போன்ற அதிக விலை, பாதுகாப்பான மற்றும்…
மெல்பர்ன்: இந்திய கிரிக்கெட் அணி இம்மாதத்தின் 3-வது வாரத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஒருநாள் போட்டித் தொடரின் ஆட்டங்கள் வரும் 19, 23, 25-ம் தேதிகளில் பெர்த், அடிலெய்டு, சிட்னி ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது. ஐந்து டி20 போட்டிகள் அக்டோபர் 29 (கான்பெர்ரா), அக்டோபர் 31 (மெல்பர்ன்), நவம்பர் 2 (ஹோபார்ட்), நவம்பர் 6 (கோல்ட் கோஸ்ட்) மற்றும் நவம்பர் 8 (பிரிஸ்பன்) ஆகிய தேதிகளில் நடைபெகிறது. இந்நிலையில் ஒருநாள் போட்டி தொடர் மற்றும் டி 20 தொடரின் முதல் 2 ஆட்டங்களில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. கேப்டன் பாட் கம்மின்ஸ் முதுகு வலி காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் ஒருநாள் போட்டித் தொடருக்கும் மிட்செல் மார்ஷ் கேப்டனாக தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச டி 20 போட்டியில்…
கும்பகோணம்: கரூர் சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார். கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: விஸ்வ இந்து பரிஷத் நடத்திய முருக பக்தர்கள் மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, வரும் 25, 26, 27-ம் தேதிகளில் ஒரே நேரத்தில் பல லட்சம் பேர் கந்த சஷ்டி கவசம் படிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60 பேர் உயிரிழந்த போது செல்லாத முதல்வர் ஸ்டாலின், கரூருக்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார் என்றால், அதற்கு காரணம் அரசியல்தான். கரூர் மாவட்ட எஸ்.பி. திமுககாரர்போல செயல்படுகிறார். கரூர் சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத எஸ்.பி.யை உடனே சஸ்பெண்ட் செய்ய வேண்டும். அதேபோல, கரூர் மாவட்ட ஆட்சியர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசு கடமை தவறியதால் 41 பேர் உயிரிழந்தனர். நிர்வாகத் தோல்வியை…
ஐந்து நிமிடங்கள் அல்லது அதற்கும் குறைவான நீடித்த உடல் செயல்பாடுகளின் குறுகிய வெடிப்புகள், உட்கார்ந்த பெரியவர்களில் இருதய உடற்திறனை கணிசமாக மேம்படுத்த முடியும் என்று புதிய ஆராய்ச்சி தெரிவிக்கிறது. இந்த அணுகுமுறை, படிக்கட்டு ஏறுதல் அல்லது வலிமை பயிற்சிகள் போன்ற நடவடிக்கைகளை உள்ளடக்கியது, அதிக பின்பற்றுதல் விகிதங்களை நிரூபித்தது மற்றும் நேரம் மற்றும் உந்துதல் போன்ற பொதுவான தடைகளை சமாளிக்க ஒரு நடைமுறை தீர்வை வழங்குகிறது. உங்கள் இருதய உடற்தகுதியை மேம்படுத்த தின்பண்டங்களின் உதவியை நாடுவதை கற்பனை செய்து பாருங்கள்! நாங்கள் உடற்பயிற்சி தின்பண்டங்களைப் பற்றி பேசுகிறோம். ஒரு புதிய ஆய்வில், உடற்பயிற்சி தின்பண்டங்கள் உடல் செயலற்ற பெரியவர்களின் இருதய உடற்தகுதியை அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வின் கண்டுபிடிப்புகள் பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசினில் ஆன்லைனில் வெளியிடப்படுகின்றன.உடற்பயிற்சி தின்பண்டங்கள் என்றால் என்ன?உடற்பயிற்சி தின்பண்டங்கள் என்பது உடல் செயல்பாடுகளின் வேண்டுமென்றே குறுகிய வெடிப்புகள். இது படிக்கட்டுகள், வலிமை பயிற்சிகள் அல்லது தை…
பள்ளி மாணவர்களுக்கான ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் பேரலல் பார்ஸ் பிரிவில் சென்னையை சேர்ந்த விஷ்யந்த் சாய் 10.25 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். சென்னையை சேர்ந்த மதிகரன் (9.95) வெள்ளிப் பதக்கமும், சேலத்தை சேர்ந்த ஜஸ்வின் (9.80) வெண்கலப் பதக்கமும் வென்றனர். முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் வேளச்சேரியில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் டேபிள் வால்ட் போட்டியில் கோவையை சேர்ந்த காவியன் 12.07 புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். மதுரையை சேர்ந்த எஸ்.முகமது அயாஸ் (10.88) வெள்ளிப் பதக்கமும், சென்னையை சேர்ந்த ஜெயராம் கதிர் (10.15) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர். பள்ளி மாணவிகளுக்கான கூடைப்பந்தில் தூத்துக்குடி அணி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் தங்கப் பதக்கம் வென்றது. சென்னை அணி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் வெள்ளிப் பதக்கமும், கோவை அணி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் வெண்கலப் பதக்கமும் கைப்பற்றின. கேம்…
இயக்குநர் வெற்றி மாறன் ‘விடுதலை’, ‘விடுதலை 2’ படங்களை அடுத்து ‘வாடிவாசல்’ படத்தை இயக்குவதாக இருந்தது. இதை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க இருந்தார். சூர்யா ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமானார். அவருடன் இயக்குநர் அமீர் உள்ளிட்டோர் நடிப்பதாக இருந்தது. இந்தப் படத்துக்கு டெஸ்ட் ஷூட்டும் நடத்தப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் சிலம்பரசன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இது ‘வடசென்னை’யின் 2 வது பாகமாக இருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில் அதை மறுத்த இயக்குநர் வெற்றிமாறன், இது வட சென்னை யுனிவர்ஸ் கதை என்றும் ‘வட சென்னை’ படத்தின் 2-ம் பாகம் இல்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்தப் படத்தின் புரமோ அக்.4-ம் தேதி வெளியாவதாக இருந்தது. சென்சார் காரணங்களால் அது தாமதமானது. இந்நிலையில் இந்தப் படத்தின் தலைப்பு, முதல் தோற்ற போஸ்டரோடு வெளியாகி இருக்கிறது. படத்துக்கு ‘அரசன்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில்…
