சென்னை: சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏடிஜிபி ஜெயராம், நாளை (ஜூலை 24) விசாரணைக்கு ஆஜராக சம்மன் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காதல் திருமண விவகாரத்தில் திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தேனி மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபரான வனராஜா, முன்னாள் எஸ்ஐ மகேஸ்வரி, மணிகண்டன், கணேசன், வழக்கறிஞர் சரத்குமார் ஆகிய 5 பேரை திருவாலங்காடு போலீஸார் கடந்த ஜூன் 13-ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் ஆயுதப்படை ஏடிஜிபி எச்.எம்.ஜெயராம் மற்றும் கே.வி.குப்பம் எம்எல்ஏ- வான பூவை ஜெகன்மூர்த்தி மீதும் குற்றம் சாட்டப்பட்டது. போலீஸார் பூவை ஜெகன்மூர்த்தி மீது வழக்கு பதிவு செய்த நிலையில், அவருக்கு உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. ஏடிஜிபி ஜெயராம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த கடத்தல் வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வரும் நிலையில், கைதான வனராஜா, மணிகண்டன், கணேசன் ஆகியோர் தங்களுக்கு…
Author: admin
சென்னை: சென்னையில் இன்று (புதன்கிழமை) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.75,000-ஐ தாண்டி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் முக்கியக் காரணிகளாக உள்ளன. அதனடிப்படையில், ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், இன்று (ஜூலை 23) 22 ஆபரணத் காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.95 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,380-க்கும், பவுனுக்கு ரூ.760 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.75,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஐந்து நாட்களாக 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக உயர்ந்துள்ளது: ஜூலை 23 ஒரு பவுன் ரூ.75,040 ஜூலை 22 ஒரு பவுன் ரூ.74,280 ஜூலை 21 ஒரு பவுன் ரூ. 73,440 ஜூலை 19 ஒரு பவுன் ரூ. 73,360 ஜூலை 18…
அல்சைமர் நோய் என்பது மிகவும் பொதுவான வகை டிமென்ஷியா, படிப்படியாக நினைவகம், சிந்தனை மற்றும் தினசரி செயல்பாட்டை பாதிக்கிறது. இது பொதுவாக வயதானவர்களை பாதிக்கும் அதே வேளையில், சில நபர்கள் ஆரம்பகால அல்சைமர் நோயை அனுபவிக்கிறார்கள், 65 வயதிற்கு முன்னர் அறிகுறிகளை வளர்த்துக் கொள்கிறார்கள்-சில நேரங்களில் 40 அல்லது 50 களின் முற்பகுதியில். மிகவும் அரிதானது என்றாலும், இதுபோன்ற வழக்குகள் நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் தனித்துவமான உணர்ச்சி மற்றும் மருத்துவ சவால்களை முன்வைக்கின்றன. ஆரம்பகால கண்டறிதல் மற்றும் தலையீடு அறிகுறிகளை நிர்வகிக்கவும் வாழ்க்கைத் தரத்தை பாதுகாக்கவும் உதவும்.ஆரம்பகால அல்சைமர் நோய் என்னஆரம்பத்தில் தொடங்கிய அல்சைமர் 65 வயதிற்கு முன்னர் நோய் வெளிப்படும் நிகழ்வுகளைக் குறிக்கிறது. இது அனைத்து அல்சைமர் நிகழ்வுகளிலும் சுமார் 5-10% மட்டுமே கணக்கில் இருந்தாலும், இது பெரும்பாலும் வேலை செய்யும், குடும்பங்களை வளர்க்கும் மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கையை நடத்தும் நபர்களை கணிசமாக பாதிக்கும்.இரண்டு முக்கிய வகைகள் உள்ளன:அவ்வப்போது ஆரம்பகால…
கீதா கோபிநாத் (கோப்பு புகைப்படம்) புதுடெல்லி: சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எஃப்) இரண்டாவது கட்டளையான கீதா கோபிநாத், ஆகஸ்ட் மாத இறுதியில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தனது பதவிக்கு திரும்புவதற்காக விலகுவார் என்று சர்வதேச நாணய நிதியம் திங்களன்று அறிவித்தது.கீதா கோபிநாத்தின் வெளியேறும் நேரம் சர்வதேச நாணய நிதியத்திற்குள் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது, மேலும் அவரது சொந்த முடிவால் தூண்டப்பட்டதாக நம்பப்படுகிறது என்று செய்தி நிறுவன ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. முதலில் ஹார்வர்டை இந்த நிதியில் பணியாற்ற விட்டு வெளியேறிய அவர், இப்போது பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக தனது பாத்திரத்தை மீண்டும் தொடங்க உள்ளார். அவர் புறப்படுவது அமெரிக்க கருவூலத்திற்கு ஒரு வாரிசு முன்மொழிய ஒரு சாளரத்தைத் திறக்கிறது – இது ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உலகளாவிய வர்த்தக இயக்கவியலை மறுவடிவமைக்கவும், உலகெங்கிலும் உள்ள இறக்குமதிகள் மீதான கட்டணங்களின் மூலம் நாட்டின் தொடர்ச்சியான வர்த்தக பற்றாக்குறையை கட்டுப்படுத்தவும் அழுத்தம் கொடுக்கிறார். 2019 ஆம் ஆண்டில்…
பெங்களூரு: பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் அதிகாலையில் போதைப் பொருள் கடத்தல் நடைபெறுவதாக வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பெங்களூரு மண்டல அதிகாரிகள் விமான நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குவாஹாட்டியில் இருந்து பெங்களூரு விமானத்தில் வந்த 2 இளம்பெண்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களின் உடைமைகளை அதிகாரிகள் பரிசோதித்தனர். அவர்களின் பெட்டியில் வழக்கத்துக்கு மாறாக, 40-க்கும் மேற்பட்ட சோப்புகள் இருந்தன. அவற்றின் உறையை பிரித்து சோதித்தபோது, அதில் வெள்ளை நிற பொடி கண்டு பிடிக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் சோதித்தபோது கோகைன் போதைப் பொருள் என்பது உறுதி செய்யப்பட்டது. ஒட்டுமொத்தமாக 7.5 கிலோ கோகைன் போதை பொருள் சிக்கியது. அதனை உடனடியாக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.14.69 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டதில் 24 வயதான பெண் மணிப்பூரை சேர்ந்தவர் எனவும்,…
சென்னை: பள்ளிகளில் கணிதம், அறிவியல் ஆசிரியர்கள் உடற்கல்வி பாடவேளையை கடன் வாங்காதீர்கள் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். பள்ளிக் கல்வித் துறை சார்பில் 2024-25ம் கல்வியாண்டில் நடைபெற்ற சர்வதேச (135), தேசிய (1,350), மாநில (4,293) அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற 5,788 மாணவ, மாணவிகளுக்குபாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்து மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். பள்ளிக் கல்வித் துறை சார்பில் தொடங்கப்பட்ட ஆற்றல் மிகு உடற்கல்வி திட்டத்தின் கீழ், மாணவர்களின் நல்வாழ்வை உறுதிபடுத்துவதை நோக்கமாக கொண்டு ‘உடற்கல்வி ஆசிரியர் வளநூல்’ எனும் புத்தகத்தை 3 தொகுதிகளாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். முதல் பிரதியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பெற்றுக்கொண்டார். அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: பாடப்புத்தகத்தில் இருக்கும் கல்வி மட்டுமின்றி, விளையாட்டு மூலமாகவும் நிறைய விஷயங்களை…
ஒரு அற்புதமான கண்டுபிடிப்பில், விஞ்ஞானிகள் மனித முடி வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் மூலக்கூறு அமைப்புகளை அடையாளம் கண்டுள்ளனர், முடி மீண்டும் வளர்ப்பை ஊக்குவிக்கும் இயற்கை, ஆக்கிரமிப்பு அல்லாத சிகிச்சைகளுக்கான புதிய சாத்தியங்களைத் திறக்கிறார்கள். ஸ்டெம் செல் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சையில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, ஆண்ட்ரோஜெனெடிக் அலோபீசியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய நம்பிக்கையை வழங்குகிறது, இது முடி உதிர்தலின் மிகவும் பொதுவான வடிவமாகக் கருதப்படுகிறது, இந்த நிலை எல்லாவற்றிற்கும் மேலாக நிரந்தரமாக இருக்காது என்பதை வெளிப்படுத்துகிறது. மயிர்க்கால்கள் செயலற்றதாக மாறும் உயிரியல் சமிக்ஞைகளின் முறிவை சுட்டிக்காட்டுவதன் மூலம், ஆராய்ச்சியாளர்கள் இப்போது செயலற்ற நுண்ணறைகளை புதுப்பிக்க முடியும் என்று நம்புகிறார்கள். இது அடுத்த சில ஆண்டுகளுக்குள் தனிப்பயனாக்கப்பட்ட, போதைப்பொருள் இல்லாத மற்றும் அறுவை சிகிச்சை இல்லாத முடி மறுசீரமைப்பு முறைகளுக்கு வழிவகுக்கும்.மீட்டெடுக்கப்பட்ட மூலக்கூறு சமிக்ஞைகள் மூலம் முடி உதிர்தல் மீளக்கூடியதாக இருக்கலாம்: புதிய ஆய்வு கண்டுபிடிக்கிறதுமுடி உதிர்தலுக்கான பெரும்பாலான தற்போதைய சிகிச்சைகள் முன்னேற்றத்தை குறைக்கின்றன அல்லது…
புதுடெல்லி: பாஜகவின் கொள்கைகளை எதிர்க்கும் சமாஜ்வாதி கட்சி இந்துத்துவாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதாகவே கருதப்படுகிறது. இந்நிலையில் வரும் 2027 உ.பி. தேர்தலை முன்னிட்டு அக்கட்சியின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. உ.பி.யில் தற்போதைய ஷ்ராவண மாதத்தில் சமாஜ்வாதி சார்பில் காவடி யாத்திரைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு முன்பாக கேதார்நாத்தில் இருப்பது போன்ற ஒரு சிவன் கோயிலை விரைந்து கட்டி முடிப்பதில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் இறங்கி உள்ளார். இந்த கோயில், அகிலேஷின் சொந்த ஊரான எட்டாவாவின் சபாரி பூங்கா அருகே 2021 முதல்கட்டப்பட்டு வருகிறது. இதுபோன்ற நடவடிக்கை மூலமாக சமாஜ்வாதி இந்துத்துவா ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க முயல்வதாக கருதப்படுகிறது. எட்டவா கோயிலுக்காக அகிலேஷ் தனது தலைமையிலேயே ஓர் அறக்கட்டளை அமைத்துள்ளார். இக்கோயிலுக்கு உ.பி., உத்தராகண்ட் ஆன்மிகவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சார் தாம் தீர்த்த புரோஹித் மகா பஞ்சாயத்து, அகில பாரதிய அகாடா பரிஷத் உள்ளிட்ட அமைப்புகள் இந்த எதிர்ப்பு பட்டியலில்…
காசாவில் மூன்றே நாட்களில் 21 சிறுவர்கள் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பலியானதாக ஐ.நா தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் தீவிர ராணுவ நடவடிக்கை காரணமாக பாலஸ்தீனத்தின் காசாவில் உணவு பற்றாக்குறை மற்றும் மனித அத்துமீறில்கள் அரங்கேறுவது தொடர்கிறது. ‘தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்’ என்றார் பாரதி. ஆனால், ராணுவ நடவடிக்கை காரணமாக உறவு, உடமை என அனைத்தையும் இழந்து நிற்கும் காசா வாழ் மக்களுக்கு உண்ண முறையான உணவு கூட கிடைப்பதில்லை. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் 81 பேர் உயிரிழந்தனர். அதில் 31 பேர் உதவி தேடி சென்றவர்கள். இதை மத்திய கிழக்கு பகுதியில் பிரபலமாக உள்ள செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான மோதல் கடந்த 2023-ல் அக்டோபர் 7-ம் தேதி தொடங்கியது. அன்று முதல் ஜூலை 22, 2025 வரையில் இந்த மோதலில் சுமார் 59,106 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.…
ஆதிபராசக்தியின் 51 சக்தி பீடங்களில் கமல பீடமாக திருநெல்வேலி காந்திமதியம்மன் கோயில் விளங்குகிறது. திருஞானசம்பந்தரால் தேவாரப்பாடல் பெற்ற தலமான நெல்லையப்பர் கோயிலும், அருகிலேயே காந்திமதியம்மன் கோயிலும் இரட்டைக் கோயில்களாக திருநெல்வேலியில் நடுநாயகமாக அமைந்திருக்கின்றன. பஞ்ச சபைகளில் இது தாமிர சபை. நெல்லையப்பருக்கு அபிஷேகம் செய்யப்படும்போது லிங்கத்தில் அம்பிகையின் உருவம் தெரிவது ஓர் அற்புத காட்சியாகும். வடிவுடை நாயகி, நெல்லை நாயகி என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் காந்திமதியம்மன், கமலபீட நாயகியாய் அருள்பாலிக்கிறார். தங்கள் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு நடப்பது போலவே அன்னையின் திருமண விழா, அதையடுத்து வளைகாப்பு விழா ஆண்டுதோறும் இக்கோயிலில் பக்தர்களால் நடத்தப்படுகிறது. ஆடிப்பூர வளைகாப்பு விழாவின் நான்காம் நாளில் வளைகாப்பு வைபவம் நடைபெறுகிறது. அத்துடன் புரட்டாசி நவராத்திரி திருவிழா, திருக்கல்யாண திருவிழா, ஆனி பெருந்திருவிழா போன்றவையும் சிறப்பாக நடத்தப்படு கின்றன. ஆடி வெள்ளிக்கிழமைகளில் புதிய பட்டு உடுத்தி, சந்தனம், ஜவ்வாது பூசி, தலையலங்காரம் செய்து, மாலை அணிந்து, தங்க…
