புதுடெல்லி: மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: இங்கிலாந்துடன் தாராள வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதில் பிரதமர் நரேந்திர மோடிக்கு முக்கிய பங்கு உள்ளது. இதன்மூலம் 99 சதவீத பொருட்களை வரியே இல்லாமல் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்ய முடியும். எனவே, இது மாற்றத்தை ஏற்படுத்தும் ஒப்பந்தம். இதனால், விவசாயிகள், இளைஞர்கள், குறு, சிறு, நடுத்தர தொழில் துறை மற்றும் கனரக தொழில் துறை உட்பட அனைத்து துறைகளும் பயனடையும். குறிப்பாக இந்திய விவசாயிகளுக்கு ஏராளமான வாய்ப்புகளை உருவாக்க இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. வேளாண்மை மற்றும் எத்தனால் உள்ளிட்ட உணர்வுபூர்வமான பொருட்களை பாதுகாக்கும். அதேவேளையில் இந்தியாவின் நலன்களை விட்டுக் கொடுக்காமல் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Author: admin
புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின்போது ஆதார் ஆவணத்தை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி ஏடிஆர் தன்னார்வ தொண்டு அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில் பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. இதன்படி கடந்த 2003-ம் ஆண்டுக்கு பிறகு வாக்காளராக பதிவு செய்து கொண்டவர்கள், தாங்கள் இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்க பிறப்பு சான்று, பாஸ்போர்ட் போன்ற கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவை ஆவணமாக ஏற்கப்படாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது இந்த சூழலில் பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை எதிர்த்து காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், ஏடிஆர்…
பெங்களூரு: கர்நாடகாவில் 10-ம் வகுப்பில் தேர்ச்சிக்கு 33 சதவீத மதிப்பெண் பெற்றாலே போதும் என்று அந்த மாநில அரசு விதிமுறையை மாற்ற திட்டமிட்டுள்ளது. கர்நாடக மாநில தேர்வு மற்றும் மதிப்பீட்டு ஆணையம் இது தொடர்பான பரிந்துரையை மாநில கல்வித்துறைக்கு அனுப்பியுள்ளது. அதில், “10-ம் வகுப்பில் ஒரு பாடத்தில் 35 மதிப்பெண்ணுக்கு பதிலாக 30 மதிப்பெண் எடுத்தாலே தேர்ச்சி பெறலாம். மொத்த மதிப்பெண்ணில் 625-க்கு 33 சதவீதமான 206 மதிப்பெண் எடுத்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல மொழிப்பாட மதிப்பெண்ணை 125-ல் இருந்து 100 ஆக குறைக்கலாம்” என தெரிவித்துள்ளது. இந்தப் பரிந்துரையை ஏற்றுள்ள, தொடக்கக் கல்வித் துறை இதுகுறித்து அமைச்சரவையில் விவாதிக்க முடிவெடுத்துள்ளது. மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த திருத்தத்தை மேற்கொள்ள கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தனியார் பள்ளி நிர்வாகி அசோக் குமார் கூறுகையில், “இது வரவேற்கத்தக்க நடவடிக்கை. 10-ம்…
உங்கள் குழந்தைக்கு பிடித்த சொல் “இல்லை” என்றால் கிளப்புக்கு வருக. நீங்கள் கேட்கிறீர்கள், “நீங்கள் பூங்காவிற்கு செல்ல விரும்புகிறீர்களா?” அவர்கள் இல்லை என்று கூறுகிறார்கள். “குக்கீ வேண்டுமா?” இன்னும் இல்லை (ஐந்து விநாடிகள் கழித்து, நிச்சயமாக). ஒரு கட்டத்தில், அவர்கள் எல்லாவற்றையும் விட வார்த்தையின் ஒலியை அனுபவிக்கிறார்களா என்று நீங்கள் யோசிக்க ஆரம்பிக்கிறீர்கள்.ஆனால் இங்கே ஒரு நல்ல செய்தி: இந்த கட்டம் முற்றிலும் இயல்பானது, மேலும் நீங்கள் ஒரு மினி சர்வாதிகாரியை வளர்த்தீர்கள் என்று அர்த்தமல்ல. இது தனிப்பட்டதல்ல, சூரிய உதயத்திலிருந்து உங்கள் பொறுமையை சோதிக்க அவர்கள் ரகசியமாக சதி செய்ததாக உணரும்போது கூட.ஒரு மணி நேரம் கத்தவோ, லஞ்சம் கொடுக்கவோ அல்லது குளியலறையில் மறைக்கவோ இல்லாமல் அந்த மூக்குகளை நீங்கள் எவ்வாறு கையாள்வது? அமைதியாக இருங்கள் (நீங்கள் கத்த விரும்பினால் கூட)முடிந்ததை விட இது எளிதானது. ஆனால் உங்கள் குழந்தையின் ஆற்றலை விரக்தியுடன் பொருத்துவது விஷயங்களை அதிகரிக்கிறது. உங்கள் அமைதியான…
புதுடெல்லி: டெல்லியில் பழைய வாகனங்களை இயக்குவதற்கு விதிக்கப்பட்ட ஒட்டுமொத்த தடை நடுத்தர வர்க்க மக்களை வெகுவாக பாதிக்கும் என்பதால், இந்த தடை உத்தரவை உச்ச நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என டெல்லி அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பபட்டன. பிஎஸ்-6 தரச்சான்றிதழ் பெற்ற வாகனங்கள் பிஎஸ்-4 வாகனங்களை விட குறைவான காற்று மாசுவை வெளியிடுவதால், 10 ஆண்டு பழமையான டீசல் வாகனங்கள். 15 ஆண்டு பழமையான பெட்ரோல் வாகனங்கள் இயக்கப்படுவதற்கு சமீபத்தில் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், முதல்வர் ரேகா குப்தா தலைமையில் பாஜக அரசு பொறுப்பேற்றது. தற்போது உச்ச நீதிமன்றத்தில் டெல்லி அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: டெல்லியில் பழைய வாகனங்களை இயக்குவதற்கு விதிக்கப்பட்ட ஒட்டுமொத்த தடை தொடர்பாக எந்த அறிவியல் ஆய்வும் நடத்தப்படவில்லை. இந்த தடை நன்கு பராமரிக்கப்படும் பழைய வாகனங்களையும், மோசமாக பராமரிக்கப்படும் பழைய வாகனங்களையும் வேறுபடுத்தவில்லை. பழைய…
புதுடெல்லி: மேற்கு உ.பி.யின் மீரட் மாவட்டம், தாத்ரி கிராமத்தில் சிவன் கோயில் உள்ளது. இதன் பூசாரியாக கிருஷ்ணா என்ற பெயரில் இளைஞர் ஒருவர் கடந்த ஒரு வருடமாக பணியாற்றி வந்தார். கோயிலின் உள்ளேயே தங்கிவந்த அவரது நடவடிக்கையில் கிராமவாசிகளுக்கு சந்தேகம் எழுந்தது. இத்துடன், கோயில் உண்டியலில் பணம் குறைவதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவரது ஆதார் அட்டையை வாங்கிப் பார்த்த பிறகு அவர் கிருஷ்ணா அல்ல காசீம் எனத் தெரியவந்ததது. பிறகு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட காசீம் கைது செய்யப்பட்டார். விசாரணையில், காசீம் பிஹாரின் சீதாமடியைச் சேர்ந்த அல்தாப் என்பவரின் மகன் எனத் தெரியவந்தது. இதற்கிடையில் கோயிலின் புனிதம் கெட்டுவிட்டதாக கருதப்பட்டதை தொடர்ந்து. அகில இந்திய இந்து பாதுகாப்பு சங்கத்தின் தலைவரான சச்சின் சிரோஹி தனது சகாக்களுடன் கங்கை நீர் மற்றும் பால் ஊற்றி கோயிலை சுத்தப்படுத்தினார் இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் சச்சின் சிரோஹி கூறும்போது, “கிராமத்தின் இளம் பெண்களுடனும்…
பாங்காக்/நாம்பென்: தாய்லாந்து, கம்போடியா இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. இந்த போரில் இருதரப்பில் இதுவரை 33 பேர் உயிரிழந்து உள்ளனர். தென்கிழக்கு ஆசியாவில் தாய்லாந்து அமைந்துள்ளது. இதன் அண்டை நாடு கம்போடியா இரு நாடுகளும் 817 கி.மீ. தொலைவு எல்லையை பகிர்ந்து கொள்கிறது. பண்டைய காலத்தில் முதலாம் ராமா மன்னரால் தோற்றுவிக்கப் பட்ட ரத்தனகோசின் பேரரசு தாய்லாந்தை ஆட்சி செய்தது. இதே போல இரண்டாம் ஜெயவர்மன் மன்னரால் தோற்றுவிக்கப்பட்ட கெமர் பேரரசு கம்போடியாவை ஆட்சி செய்தது. இந்து மதத்தைப் பின்பற்றிய ரத்தனகோசின், கெமர் பேரரசுகள் தங்களது ஆட்சிக் காலத்தில் ஏராளமான இந்து கோயில்களை கட்டின. தற்போது இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளில் உள்ள இந்து கோயில்களை சொந்தம் கொண்டாடுவதில் பிரச்சினை எழுந்து போராக வெடித்திருக்கிறது. கம்போடியா, தாய்லாந்து எல்லையில் டாங்கிரெக் மலையில் அமைந்துள்ள பிரியா விகார் என்ற சிவன் கோயிலை இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடின. இதுதொடர்பாக கடந்த 1959-ம் ஆண்டில்…
புதுடெல்லி: மக்களவையில் நேற்று நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் எழுத்து மூலம் அளித்த பதில்: உலகம் முழுவதும் பல்வேறு நாட்டில் உள்ள சிறைகளில் 10,574 இந்தியர்கள் உள்ளனர். அதிகபட்சமாக ஐக்கிய அரபு அமீரக நாட்டில் 2,773 இந்தியர்கள் பல்வேறு குற்றச்சாட்டில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சவுதி அரேபியாவில் 2,379 இந்தியர்களும், நேபாளத்தில் 1,357 இந்தியர்களும், கத்தாரில் 795 இந்தியர்களும். மலேசியாவில் 380 இந்தியர்களும், குவைத்தில் 342 இந்தியர்களும், பிரிட்டனில் 323 இந்தியர்களும், பஹ்ரைனில் 261 இந்தியர்களும், பாகிஸ்தானில் 246 இந்தியர்களும் உள்ளனர். மேலும், 43 இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் மரண ண் டனை பெற்று சிறையில் உள்ளனர். இதில் அதிகபட்சமாக ஐக்கிய அரபு அமீரக நாட்டில் 21 இந்தியர்கள் உள்ளனர். அவர்கள் பொது மன்னிப்பு கேட்பதற்கான உதவிகளை இந்தியத் தூதரகங்களின் வாயிலாக செய்து வருகிறோம். இலங்கை சிறைகளில் உள்ள…
புதுடெல்லி: டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் யஷ்வந்த் வர்மா. இவரது வீட்டில் கடந்த மார்ச் மாதம் திடீரென தீப்பற்றியது. அப்போது அவர் வீட்டில் இல்லை. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீஸார் வீட்டில் தீயை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்போது ஒரு அறையில் பல மூட்டைகளில் கட்டுக்கட்டாக பணம் எரிந்து சாம்பலாகி கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது நேர்மை குறித்து சர்ச்சை எழுந்தது. இதையடுத்து யஷ்வந்த் வர்மாவை பதவியில் இருந்து நீக்க கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா நாடாளுமன்றத்துக்கு பரிந்துரைத்தார். இதை எதிர்த்து நீதிபதி யஷ்வந்த் வர்மா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்க தீர்மானம், சட்டவிதிகளின்படி மக்களவையில் முதலில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும். அவரை…
புதுடெல்லி: உலக தலைவர்களில் நம்பிக்கையான தலைவர் யார் என்று சமீபத்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் ஒவ்வொரு நாட்டு தலைவரும் எப்படி நடந்து கொள்கின்றனர் என்றும் ஆய்வு செய்யப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த புலனாய்வு நிறுவனமான மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் இந்த ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வின்போது, உலகத் தலைவர்களுக்கு அவர்களது சொந்த நாட்டில் எவ்வளவு மதிப்பு இருக்கிறது என்றும் பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதோடு உலக நாடுகளில் எந்த அளவுக்கு மரியாதை இருக்கிறது என்றும் ஆய்வு எடுக்கப்பட்டது. இவை மட்டுமல்லாமல் ஒவ்வொரு நாட்டு தலைவரும் எந்த அளவுக்கு நம்பகத்தன்மையுடன் நடந்து கொள்கின்றனர் என்றும் முந்தைய நிகழ்வுகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டது. இந்த ஆய்வு மற்றும் மதிப்பீடு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதில் முதல் 8 இடங்களை பிடித்து இருக்கும் தலைவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவர்களுக்கு கிடைத்த மதிப்பெண்கள் விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. உலகின் நம்பிக்கையான தலைவர்களில் பிரதமர் மோடிக்கு முதல்…
