உலர் ஸ்க்ரப்பிங், பிரபலமடையும் ஒரு வயதான நடைமுறையில், சருமத்தை வெளியேற்றுவதற்கும் நிணநீர் மண்டலத்தைத் தூண்டுவதற்கும் ஒரு கரடுமுரடான தூரிகையைப் பயன்படுத்துவதை உள்ளடக்குகிறது. இந்த எளிய வழக்கம், குளிப்பதற்கு முன் செய்யப்படுகிறது, சுழற்சியை மேம்படுத்துகிறது, நச்சு அகற்றுதலை ஊக்குவிக்கிறது, மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. சரியான நுட்பம், இயற்கையான-மழைக்கால தூரிகை மற்றும் இதயத்தை நோக்கி மென்மையான பக்கவாதம் ஆகியவற்றைப் பயன்படுத்துவது, நன்மைகளை அதிகரிப்பதற்கும் தோல் எரிச்சலைத் தவிர்ப்பதற்கும் முக்கியமானது. உலர் ஸ்க்ரப்பிங் பல நூற்றாண்டுகளாக உள்ளது. துலக்குதல் என்றும் அழைக்கப்படும் இந்த பண்டைய நடைமுறை சமூக ஊடகங்களுக்கு நன்றி, இளைஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வீட்டில் செய்யக்கூடிய இந்த எளிய ஆரோக்கிய நடைமுறை இப்போது நிணநீர் மண்டலத்தைத் தூண்டுவதற்கான ஒரு சக்திவாய்ந்த வழியாகும். குளிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு மூன்று முறை உலர்ந்த துலக்குதல், புழக்குதல் மற்றும் நிணநீர் ஓட்டத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கும். எப்படி என்று யோசிக்கிறீர்களா?…
Author: admin
பெங்களூரு: பெங்களூருவில் நகைக்கடை ஒன்றில் மர்ம நபர்கள் 3 பேர் துப்பாக்கியை காட்டி, 184 கிராம் எடையுள்ள தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பெங்களூருவில் உள்ள மாகடி சாலையில் கன்னையா லால் (46) என்பவர் நகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன் தினம் இரவு 9 மணியளவில் கடையை மூட தயாராகிக் கொண்டிருந்த நிலையில் முகமுடி அணிந்த 3 பேர் கடைக்குள் புகுந்தனர். துப்பாக்கியை காட்டி மிரட்டி கடையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 184 கிராம் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். திரைப்படத்தை போல அரங்கேறிய இந்த கொள்ளை சம்பவம் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் முழுவதுமாக பதிவாகியுள்ளது. இதுகுறித்து கன்னையா லால் என்பவர் அளித்த புகாரின்பேரில் மதநாயக்கனஹள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முதல்கட்ட…
ஸ்ரீயின் நிலை குறித்து பேட்டியொன்றில் முழுமையாக பேசியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஸ்ரீயின் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட நண்பர்கள் இணைந்து ஸ்ரீயை மீட்டு அவரைக் குணப்படுத்தி நல்வழிப்படுத்தி இருக்கிறார்கள். இது தொடர்பாக பேட்டியொன்றில் பேசியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அதில் ஸ்ரீ குறித்து லோகேஷ் கனகராஜ், “இப்போது ஸ்ரீ நன்றாக இருக்கிறான். ஒரு நாள் காலையில் வீடியோ காலில் புத்தகம் ஒன்றை வெளியிட இருப்பதாக கூறினான். சரியாக திட்டமிட்டு செய்யலாமே என்றேன். இல்ல மச்சான் உடனே பண்ணனும் என்றான். சரி பண்ணு என்று கூறிவிட்டேன். இன்ஸ்டாவில் ஏதோ ரீல் போட்டதற்கு, இவர்கள் எல்லாம் ஸ்ரீயை கவனிக்காமல் விட்டுவிட்டார்கள் என என்னையும் சேர்த்து திட்டினார்கள். இதற்காக எல்லாம் தான் சமூகவலைதளத்தில் இருந்து விலகியே இருக்கிறேன். தினமும் காலையில் எழுந்து அனைத்து விஷயங்களுக்கும் விளக்கம் அளித்துக் கொண்டிருக்க முடியாது. ஸ்ரீயை பற்றி பேச…
ரயில்வே தண்டவாளம், ரயில் பெட்டிகளில் குறைபாடு, உபகரணங்கள் செயலிழப்பு, மனித தவறுகளால் பிரதான விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ரயில் விபத்துக்களை தடுக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு கேள்வி எழுப்பினார். அதில் விபத்துக்கள் எண்ணிக்கை, முதன்மை காரணங்கள், இழப்பீடு விவரம், முன்னெச்சரிக்க நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்தும் கேட்டிருந்தார். இதற்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பதில்: “பயணிகள் பாதுகாப்பை பிரதான இலக்காக கொண்டு செயல்படும் இந்திய ரயில்வே, இதுவரை மேற்கொண்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளால் 2004 – 14-ம் ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுதோறும் 171 விபத்துகள் ஏற்பட்ட நிலையிலிருந்து 2024-25-ம் ஆண்டில் 31 என்ற அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. ரயில்வே தண்டவாளம், ரயில் பெட்டிகளில் குறைபாடு, உபகரணங்கள் செயலிழப்பு, மனித தவறுகளால் பிரதான விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த 2020-21 முதல் 2024-25-ம் ஆண்டு வரை 5 ஆண்டுகளில் இதுவரை…
அபூரணத்தையும் எளிமையையும் தழுவிய ஒரு பண்டைய ஜப்பானிய தத்துவம். ப Buddhism த்தத்தில் ஆழமாக வேரூன்றி, இயற்கையான வளர்ச்சியின் சுழற்சியில் அழகு எப்படி இருக்கிறது என்பதைக் கண்டறிய இது நமக்குக் கற்பிக்கிறது, குறைபாடற்ற தன்மையைத் தேடுவதை விட சிதைவு. மிகக் குறைவாக வாழ்வது, நிலையான வாழ்க்கையை ஊக்குவிப்பது மற்றும் சாதாரணத்தின் அழகைப் பாராட்டுவது என்பது ஜப்பானிய வாழ்க்கை முறையில் முக்கியமானது. ஜப்பானிய மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் இந்த நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்கள், கையால் தயாரிக்கப்பட்ட மட்பாண்டங்களைப் பயன்படுத்துகிறார்கள், பரிபூரணத்தை விட்டுவிட்டு, அதன் அசல் தன்மையைத் தழுவுகிறார்கள்; மற்றும் நம்பத்தகாத எதிர்பார்ப்புகளின் மீது நம்பகத்தன்மையை மதிப்பிடுதல்.
உத்தராகண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள மானசா தேவி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோயிலுக்கு செல்லும் படிக்கட்டுகளில் மின்சாரம் தாக்கிதயதாக தகவல் பரவியதையடுத்து பக்தர்கள் அங்கிருந்து இறங்கிச் செல்ல முயற்சித்துள்ளனர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் ஓட முயற்சித்ததால் அங்கு கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறை மற்றும் மீட்புப் படையினர் உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டுகளில் இருந்த மின்கம்பத்தில் மின்கசிவு ஏற்பட்டதாக தகவல் பரவியதே இந்த நெரிசலுக்கு காரணம் என்று போலீஸார் தெரிவிக்கின்றனர். மின்கம்பத்தில் உண்மையிலேயே மின்கசிவு ஏற்பட்டதா அல்லது யாரேனும் வேண்டுமென்றே வதந்தி பரப்பினார்களா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்துக்கு…
ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துக்கு ஆள் சேர்த்த வழக்கில் முக்கிய குற்றவாளி மீது பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த விவகாரம் தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் மயிலாடுதுறையில் 15, சென்னையில் 5 இடங்கள் என தமிழகத்தில் 20 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர். சென்னை புரசை வாக்கம் அழகப்பா சாலையில் இயங்கி வரும் தனியார் ஆம்புலன்ஸ் சர்வீஸ் நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அங்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணி செய்து வந்த மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசல் பகுதியைச் சேர்ந்த அல்பாசித் (26) என்பவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அல்பாசித் மற்றும் அவரது கூட்டாளிகள் தமிழகத்தில் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய இளைஞர்களை குறிவைத்து, சமூக ஊடகங்கள் மூலம் ஐஎஸ்ஐஎஸ் தொடர்பான வீடியோக்கள், ஆவணங்கள் மற்றும் படங்களை பரப்பி வந்தது தெரியவந்தது. மேலும், தமிழகத்தில்…
சென்னை: பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா உடன் நடிகரும் பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜுக்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றது. ‘மெகந்தி சர்கஸ்’, ‘பென்குவின்’ ஆகிய படங்களில் நடித்து பரவலாக கவனம் பெற்றவர் மாதம்ட்படி ரங்கராஜ். கோவையைச் சேர்ந்த இவர் புகழ் பெற்ற சமையல் கலைஞர் ஆவார். பெரும்பாலும் திரையுலக பிரபலங்கள் பலரின் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் இவரது சமையல்தான் அரங்கேறும். பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் இவரது சமையல் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ கடந்த இரண்டு சீசன்களாக நடுவராக பங்கேற்று வருகிறார். ரங்கராஜுக்கு ஏற்கெனவே ஸ்ருதி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த சூழலில் இருவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. சமீபகாலமாக பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிசில்டா…
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் பணியாற்றி வரும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிகார அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறார். இது குறித்து உச்ச நீதிமன்றம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் பணியாற்றி வரும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்குகிற தீர்ப்புகளின் தன்மை அரசியல் சாசன நெறிகளிலிருந்து பிறழ்ந்து, அநீதி இழைப்பதாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கருதுகிறார். அவர் கண்டறிந்த உண்மைகளை ஆதாரங்களுடன் ஒரு புகாராக எழுதி சட்டம் விதிகளை பின்பற்றி உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்புகிறார். அவ்வாறு மிக கண்ணியமாக, நாணயமாக, நேர்மையான வழியில் புகார் எழுதியதை அவர் சாதாரண பேச்சுகளிலோ, வேறு வகைகளிலோ ஒருபோதும் வெளிப்படுத்தவில்லை என உறுதியாகக் கூறுகிறார். அவரது புகாரை பரிசீலித்து ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என்று முடிவு செய்வது உச்ச நீதிமன்றத்தின்…
பெங்களூரு: கர்நாடகாவில் கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள் படிப்பதற்காக 31 மாவட்டங்களிலும் உண்டு உறைவிட பள்ளிகளை அமைக்க அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் வேலை தேடி வேறு இடங்களுக்கு இடம்பெயர்வதால் அவர்களின் குழந்தைகளின் கல்வி வெகுவாக பாதிக்கப்படுகிறது. இதனால் மாவட்டம்தோறும் உண்டு உறைவிட பள்ளிகளை ஆரம்பிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து கர்நாடக கட்டுமான தொழிலாளர் நல வாரியம், இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியது. இதனை ஏற்ற முதல்வர் சித்தராமையா, “கர்நாடகாவில் உள்ள 31 மாவட்டங்களிலும் கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக உண்டு உறைவிட பள்ளிகள் அமைக்கப்படும். கடந்த பட்ஜெட்டில் அறிவித்தபடி, இதற்காக ரூ.1,125 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.34 கோடி முதல் ரூ.38 கோடி வரை செலவிடப்படும். இந்த பள்ளிகளில் கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள் 6 முதல் 12-ம் வகுப்பு வரையில் இலவசமாக கல்வி கற்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது” என…
