Author: admin

பெங்களூரு: கர்நாடகாவில் 2024 முதல் இதுவரையிலான 16 மாதங்களில் 981 விவசாயிகள் தற்கொலை நடந்துள்ளதாக அரசின் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தில் மாநில காங்கிரஸ் அரசை பாஜகவும், மத்திய பாஜக அரசை காங்கிரஸும் மாறி மாறி குற்றம்சாட்டியுள்ளன. கர்நாடகாவில் 2024 முதல் 2025 ஆம் ஆண்டின் இப்போது வரையிலான 16 மாதங்களில் 981 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவற்றில், 825 விவசாயிகள் விவசாயக் காரணங்களுக்காக தற்கொலை செய்துகொண்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 138 பேர் வேறு காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டனர். அதில் இதுவரை 807 குடும்பங்களுக்கு மாநில அரசு இழப்பீடு வழங்கியுள்ளது, 18 பேருக்கான இழப்பீடு இன்னும் நிலுவையில் உள்ளது. மாவட்டங்களை பொறுத்தவரை, ஹாவேரியில் அதிகபட்சமாக 128 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். மைசூரில் 73 விவசாயிகளும், தார்வாட்டில் 72 விவசாயிகளும், பெலகாவி 71 விவசாயிகளும் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் பெங்களூரு ரூரல், பெங்களூரு அர்பன், உடுப்பி மற்றும் கோலார் ஆகிய…

Read More

ஜார்ஜியா: உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் கோனேரு ஹம்பியை வீழ்த்தி, சர்வதேச மாஸ்டரான இந்தியாவின் திவ்யா தேஷ்முக் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். மகளிர் உலகக் கோப்பையில் இந்திய வீராங்கனை சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதன்முறையாகும். இந்த மகத்தான வெற்றியின் மூலம் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வசப்படுத்தும் நான்காவது இந்திய வீராங்கனை என்ற சிறப்பைப் பெறுகிறார் திவ்யா தேஷ்முக். இவருக்கு முன்பாக கோனேரு ஹம்பி, ஆர்.வைஷாலி மற்றும் ஹரிகா ஆகிய இந்திய செஸ் வீராங்கனைகள் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றிருந்தனர். மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள பதுமி நகரில் நடந்தது. இதன் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் கோனேரு ஹம்பி – திவ்யா தேஷ்முக் மோதினர். இறுதிச்சுற்று இரு ஆட்டங்கள் கொண்டதாக நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப் போட்டிக்கான முதல் ஆட்டத்தில் ஆடிய திவ்யா தேஷ்முக், ஹம்பியுடன் 41-வது…

Read More

வான அல்லது நிழலிடா தோற்றத்துடன் ஒரு குழந்தை பெயரைத் தேர்ந்தெடுப்பது உங்கள் குழந்தையை பிரபஞ்சத்தின் அதிசயங்களுடன் இணைப்பது மட்டுமல்லாமல், காலமற்ற அழகு மற்றும் அண்ட முக்கியத்துவத்துடன் பெயரை உடைக்கிறது.

Read More

புதுடெல்லி: அகமதாபாத் விமான விபத்துக்குப் பிறகு ஏர் இந்தியாவின் அனைத்து விமானங்களிலும் கூடுதல் சோதனைகள் மேற்கொள்ளப்பட ஏர் இந்தியாவுக்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக திமுக மாநிலங்களவை எம்பி கனிமொழி என்விஎன் சோமு நாடாளுமன்றத்தில் 3 கேள்விகளை எழுப்பி இருந்தார். 1. நாட்டில் உள்ள விமானங்கள் மற்றும் விமான நிலையங்களில் பாதுகாப்பு தணிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பது உண்மையா? 2. உள்நாட்டு மற்றும் சர்வதேச வழித்தடங்களில் விமானப் பதுகாப்பு தணிக்கைகளில் உள்ள சிக்கல்களை ஆராய உயர் மட்டக் குழுவை அமைக்க அரசாங்கத்துக்கு திட்டம் உள்ளதா? 3. விமான விபத்து தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்க ஏர் இந்தியாவுக்கு அரசாங்கம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளதா? உள்நாட்டு மற்றம் சர்வதேச சேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் விமானங்களின் பாதுகாப்பு தணிக்கை அறிக்கைகளை சமர்ப்பிக்க அரசாங்கம் ஏர் இந்தியாவுக்கு உத்தரவிட்டுள்ளதா? என்று கேட்டிருந்தார். கனிமொழி என்விஎன் சோமுவின்…

Read More

சாப்பிட்ட பிறகு மந்தமாக உணர்கிறீர்களா? மென்மையான யோகா செரிமான உறுப்புகளைத் தூண்டுவதன் மூலமும் புழக்கத்தை மேம்படுத்துவதன் மூலமும் இயற்கை நிவாரணத்தை வழங்குகிறது. வஜ்ராசனா மற்றும் சுப்தா பத்தா கொனாசனா போன்ற போஸ்கள் வாயு மற்றும் அமிலத்தன்மையை எளிதாக்கும். இந்த ஆசனங்கள் பாராசிம்பேடிக் நரம்பு மண்டலத்தை செயல்படுத்துகின்றன, மனதுடன் நடைமுறையில் இருக்கும்போது தளர்வு மற்றும் சிறந்த செரிமானத்தை ஊக்குவிக்கின்றன.

Read More

இந்திய அரசியல் சாசனம் கொடுத்த உரிமை, இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு இன்னும் முழுமையாகச் சென்று சேரவில்லை, என ‘ஓபிசி ரைட்ஸ்’ அமைப்பின் தலைவர் ரத்தின சபாபதி பேசினார். பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு மற்றும் ‘ஓபிசி ரைட்ஸ்’ அமைப்பின் சார்பில், இளையோர் விழா ஈரோட்டில் நேற்று நடந்தது. விழாவில், ‘ஓபிசி ரைட்ஸ்’ அமைப்பின் தலைவர் ரத்தினசபாபதி பேசியதாவது: இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டபோது நடந்த விவாதத்தில், நாடு ஒருமித்த வளர்ச்சி அடைவதற்கு, பல தலைமுறைகளாக கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கு கல்வி வழங்க வேண்டும். அரசு நிர்வாகத்தில் அனைத்து சமுதாயத்தினரும் பங்கு பெறும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என முடிவெடுக்கப் பட்டது. அந்த சூழலில் கல்வி, வேலைவாய்ப்பு பெற வாய்ப்பில்லாத பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு, இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற இந்திய அரசியல் சாசனம் தந்த உரிமை, 42 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. இந்நிலையில், வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது, மண்டல் கமிஷனைக்…

Read More

புகைப்படம்: சைக்காலஜி லோவ் 100/ டிக்டோக் ஆப்டிகல் மாயை ஆளுமை சோதனைகள் இந்த நாட்களில் மிகவும் பிரபலமாக உள்ளன. பெயர் குறிப்பிடுவது போல, இவை எளிமையான, வேடிக்கையான மற்றும் ஈர்க்கக்கூடிய சோதனைகள், அவை ஒரு நபரின் உண்மையான ஆளுமைப் பண்புகளை சில நொடிகளில் எளிதாக வெளிப்படுத்த முடியும். இந்த சோதனைகள் பொதுவாக படம் அடிப்படையிலானவை மற்றும் படங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூறுகள் உள்ளன, இதனால் கண்களை ஏமாற்றுகின்றன. முதலில் ஒரு நபரின் கவனத்தை ஈர்ப்பதன் அடிப்படையில், அவற்றின் குறைவாக அறியப்பட்ட பண்புகளைப் பற்றி நிறைய டிகோட் செய்ய முடியும்.இந்த குறிப்பிட்ட சோதனையை ஆரம்பத்தில் சைக்காலஜி லோவ் 100 ஆல் டிக்டோக்கில் வெளியிட்ட வீடியோவில் பகிரப்பட்டது. சோதனை ஒரு பிஸ்ஸேர் படத்தை அடிப்படையாகக் கொண்டது மற்றும் முதல் பார்வையில், ஒரு நபர் அவற்றில் ஒன்றை- மீன் மற்றும் மூழ்காளர் அல்லது மனித முகங்களைக் காணலாம். ஒரு நபர் முதலில் பார்ப்பதைப்…

Read More

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் 3 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது தொடர்பாக ஸ்ரீநகரை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சினார் ராணுவப் படை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தீவிரமான துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். நடவடிக்கை தொடர்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் யார் என்பது குறித்தும் அவர்கள் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளைத் தேடும் பணியை பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தினர். ஸ்ரீநகரில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டாச்சிகாம் பகுதியை நோக்கி பயங்கரவாதிகள் நகர்ந்திருக்கலாம் என உளவுத் தகவல்கள் தெரிவித்ததை அடுத்து, அதன் அடிப்படையில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில், ஹர்வானின் முல்னார் பகுதியில்…

Read More

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயிலில் ஆடிப்பூரம் விழா இன்று நடைபெற்றது. ஆடிப்பூரம் என்பது ஆண்டாள் அவதரித்த திருநாளாகும். இந்த நாளில் பெருமாள் கோயில்களில் ஆண்டாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அதன்படி காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் சிறப்பு திருமஞ்சனமும் நடைபெற்றது. இந்த விழாவையொட்டி நூற்றுக்கணக்கான பெண்கள் கோயிலுக்கு வந்து ஆண்டாளுக்கு வளையல் அணிவித்து வழிபாடு செய்தனர். விழாவின் ஒரு பகுதியாக ஆண்டாள் உற்சவர் நடைபெற்றது, இதில் ஆண்டாள் யதோக்தகாரி பெருமாளுடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.

Read More

கூடலூர் அருகே சமூக நீதி விடுதி என்ற பெயரை கருப்பு மையால் அழித்து பார்வர்டு பிளாக் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் கள்ளர் சீரமைப்பு பள்ளிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின்கீழ் இயங்கும் பள்ளிகள் அனைத்தும் பள்ளி கல்வித்துறையுடன் இணைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் அரசு துறையின் கீழ் செயல்படும் பள்ளி, கல்லூரி விடுதிகள் சமூகநல விடுதிகள் என்றும் பெயர் மாற்றப்பட்டுள்ளன. கள்ளர் விடுதிகளை சமூக நீதி என்று பெயர் மாற்றுவதை கண்டித்து, தேனி மாவட்டத்தில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கூடலூர் அருகே உள்ள கருநாக்கமுத்தன்பட்டி விடுதி முன் கம்பம் நகர, ஒன்றிய அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விடுதியில் எழுதப்பட்டிருந்த சமூக நீதி விடுதி என்ற எழுத்துகளை கருப்பு மையால் அழித்தனர். தொடர்ந்து இந்த அறிவிப்புகளை திரும்ப பெற வேண்டும் என்று கோஷமிட்டனர். இதே…

Read More