Author: admin

சென்னை: பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சியால் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகிவிட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசியவர் கூறியதாவது: தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ராஜீவ் காந்தி ஐஏஎஸ் அகாடமி தொடங்க இருக்கிறோம். தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் இதில் இலவசமாக படிக்கலாம். இதன் வேந்தராக நாசே ராமசந்திரன் நியமிக்கப் பட்டுள்ளார். செயலாளராக பீட்டர் அல்போன்ஸ், இணை செயலாளர்களாக கே.வி.தங்கபாலு, கே.எஸ்.அழகிரி ஆகியோர் செயல்படுவார்கள். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்த நாளில் இதனை தொடங்க இருக்கிறோம். ராஜேந்திர சோழனுக்கு விழா எடுத்து இருக்கிறோம் என பிரதமர் மோடி வட மாநிலத்தில் பேச வேண்டும். 10 ஆண்டுகளில் தமிழகத்துக்கு ரூ.3 லட்சம் கோடி கொடுத்து இருப்பதாக மோடி கூறுகிறார். அமித்ஷா ரூ.6.80 லட்சம் கோடி என்று சொல்லிகிறார். எல்.முருகன் ரூ.12 லட்சம் கோடி என்று சொல்லிகிறார். இதில் யார் சொல்வது உண்மை ? காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில்…

Read More

வெஸ்ட்மின்ஸ்டரின் டியூக் மற்றும் டச்சஸ், ஹக் மற்றும் ஒலிவியா க்ரோஸ்வெனோரிமேஜ் வரவு: கெட்டி இமேஜஸ் பிரிட்டனின் மிக முக்கியமான பிரபுத்துவ குடும்பங்களில் ஒன்று – வெஸ்ட்மின்ஸ்டர், ஹக் மற்றும் ஒலிவியா க்ரோஸ்வெனர் டியூக் மற்றும் டச்சஸ், ஜூலை 27, 2027 அன்று தங்கள் முதல் குழந்தையை ஒன்றாக வரவேற்றனர். இங்கிலாந்து அரச குடும்பத்துடன் நெருங்கிய உறவைக் கொண்ட இந்த ஜோடி, சமீபத்தில் கோசிமா புளோரன்ஸ் க்ரோஸனோர் என்ற குழந்தை குழந்தையின் பிறப்பை அறிவித்தது.ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை, லண்டனில் பிறந்த குழந்தை கோசிமா, அறிக்கையின்படி, அரவணைப்பு, பாரம்பரியம் மற்றும் ஆழ்ந்த குடும்ப உறவுகள் நிறைந்த உலகத்திற்கு வந்தார். மக்களுடன் பகிர்ந்து கொண்ட ஒரு உத்தியோகபூர்வ அறிக்கையில், தம்பதியினர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர், “வெஸ்ட்மின்ஸ்டரின் டியூக் மற்றும் டச்சஸ் தங்கள் குழந்தை மகளின் பிறப்பை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். டச்சஸ் மற்றும் கோசிமா இருவரும் சிறப்பாக செயல்படுகிறார்கள். டியூக் மற்றும் டச்சஸ் இப்போது இந்த…

Read More

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் பாராபங்கியில் அவஸனேஸ்வர் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பலியாகினர். உ.பி. மாவட்டம் பாரபங்கியில் அவசனேஸ்வர் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் ஷ்ரவன் மாதத்தில் இக்கோயிலில் சிவனுக்கு நீரால் அபிஷேகம் செய்யும் வேண்டுதல் நிகழ்ச்சி நடைபெறும். அந்த வகையில் ஜலாபிஷேகத்துக்காக இன்று காலை அதிகளவில் பக்தர்கள் கூடியிருந்தனர். அப்போது, சில குரங்குகள் மின்சார வயரை சேதப்படுத்தியுள்ளன. மின் ஒயர் அறுந்து தகர கூடாரத்தின் மீது விழுந்தது. இதனால் கோயிலில் தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் அச்சத்தில் அங்குமிங்கும் சிதறி ஓடியுள்ளனர். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 2 பேர் பலியாகினர். 29 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து அறிந்த முதல்வர் யோகி ஆதித்யநாத், மீட்புப் பணிகளை முடுக்கிவிட உத்தரவிட்டுள்ளார். விபத்துப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்த பாராபங்கி ஆட்சியர் சஷாங் திரிபாதி, “குரங்குகள் அட்டகாசம் காரணமாகவே இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது. காயமடைந்தவர்களுக்கு உரிய…

Read More

‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘கண்ணை நம்பாதே’ படங்களை இயக்கிய மு.மாறன், அடுத்து இயக்கி இருக்கும் திரைப்படம் ‘பிளாக்மெயில்’. ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்திருக்கும் இதை ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரித்திருக்கிறார். ஆக.1-ம் தேதி வெளியாகும் இந்தப் படம் பற்றி மு.மாறனிடம் பேசினோம். “இது த்ரில்லர், டிராமா ஜானர் கதை. வழக்கமான லைன்தான். ஆனா, திரைக்கதை பரபரப்பா இருக்கும். மருந்து பொருட்களை சப்ளை பண்ற ஹீரோவுக்கும் ஒரு மருந்தகத்துல வேலை பார்க்கிற ஹீரோயின் தேஜு அஸ்வினிக்கும் காதல் வருது. அதுல ஏற்படற ஒரு பிரச்சினையை சரிபண்ண போகிற ஹீரோ சந்திக்கிற விஷயங்கள்தான் கதை. இது கோவையில நடக்கிற படம். மொத்தம் 50 நாள் ஷூட் பண்ணினோம். அதுல 35 நாட்கள் ‘நைட் ஷூட்’. அங்க இருக்கிற ஈஷா யோகா மையம் உள்பட முக்கியமான இடங்கள்ல படப்பிடிப்பை நடத்தியிருக்கோம். கதையில ‘பிளாக்மெயில்’ ஒரு மையப்புள்ளியா இருக்கும்” என்று ஆரம்பிக்கிறார் மு.மாறன். பிளாக்மெயிலோட தன்மை பணம் பறிக்கறது……

Read More

சென்னை: ​முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் ஒப்​புதல் பெறப்​பட்ட தமிழகத்​தின் வளர்ச்​சித் திட்​டங்​கள் அடங்​கிய மனுவை பிரதமர் நரேந்​திர மோடி​யிடம் அமைச்​சர் தங்​கம் தென்​னரசு வழங்க உள்​ளார். கடந்த ஜூலை 21-ம் தேதி முதல்​வர் ஸ்​டா​லினுக்கு நடைப​யிற்​சி​யின் போது தலைசுற்​றல் ஏற்​பட்​டது. இதையடுத்​து, அவர் சென்னை அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் சிகிச்​சைக்​காக அனு​ம​திக்​கப்​பட்​டார். அங்கு அவரை 3 நாட்​கள் ஓய்​வெடுக்க மருத்​து​வர்​கள் அறி​வுறுத்​தினர். இதையடுத்​து, தொடர் சிகிச்​சை​யில் மருத்​து​வ​மனை​யில் முதல்​வர் இருந்து வரு​கிறார். இருப்​பினும், அரசு மற்​றும் கட்சி தொடர்பான ஆலோ​சனை​களை தொடர்ந்து மருத்​து​வ​மனை​யில் இருந்தே மேற்கொண்டு வரு​கிறார். முதல்வரை, குடும்​பத்​தினர், அமைச்​சர்​கள், தலை​மைச்​செயலர் உள்​ளிட்ட அதி​காரி​கள் தொடர்ந்து சந்​தித்து பேசி வரு​கின்​றனர். இந்​நிலை​யில், பிரதமர் நரேந்​திர மோடி பல்​வேறு நிகழ்ச்​சிகளில் பங்​கேற்க தமிழகம் வந்​துள்​ளார். முதல்​வர் அவரை சந்​திக்க இயலாத நிலை​யில், தமிழகத்​தின் வளர்ச்​சித் திட்​டங்​கள் குறித்த மனுவை பிரதமரிடம் அளிக்க முடிவு செய்​யப்​பட்​டது. அதன் அடிப்​படை​யில், நேற்று தலை​மைச் செயலர் நா.​முரு​கானந்​தம் முதல்​வரை…

Read More

ஆரோக்கியமான மற்றும் வசதியான வாழ்க்கைச் சூழலுக்கு, குறிப்பாக குளிர்ந்த மாதங்களில் அல்லது வறண்ட காலநிலையில், உகந்த ஈரப்பதம் அளவை வீட்டிற்குள் பராமரிப்பது அவசியம். ஈரப்பதமூட்டிகள் என்பது காற்றில் ஈரப்பதத்தை சேர்க்க வடிவமைக்கப்பட்ட சாதனங்கள், உங்கள் வீடு அல்லது அலுவலகத்தில் ஒட்டுமொத்த காற்றின் தரத்தை மேம்படுத்துகிறது. உட்புற ஈரப்பதத்தை சமநிலைப்படுத்துவதன் மூலம், ஈரப்பதமூட்டிகள் வறண்ட காற்றின் விளைவுகளை எதிர்த்துப் போராட உதவுகின்றன, இது பல்வேறு சுகாதார கவலைகளுக்கு வழிவகுக்கும். நீங்கள் பருவகால மாற்றங்கள், வெப்ப அமைப்புகள் அல்லது குறைந்த ஈரப்பதம் சூழல்களைக் கையாளுகிறீர்களானாலும், ஒரு தரமான ஈரப்பதமூட்டி உங்கள் அன்றாட நல்வாழ்வில் குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை ஏற்படுத்தும்.ஈரப்பதமூட்டியைப் பயன்படுத்துவதன் சுகாதார நன்மைகள்சுவாச சிக்கல்களை நீக்குகிறது: உலர்ந்த காற்று ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் சைனசிடிஸ் போன்ற சுவாசப் பிரச்சினைகளை அதிகரிக்கும். ஈரப்பதமூட்டிகள் காற்றில் ஈரப்பதத்தை சேர்க்கின்றன, இது மெல்லிய சளி மற்றும் தெளிவான நாசி நெரிசலுக்கு உதவுகிறது, இது சுவாசிக்க எளிதாக்குகிறது.தோல் மற்றும் முடியை…

Read More

புதுடெல்லி: “பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்ததாக நீங்கள் ஏன் கருதுகிறீர்கள்? அவர்கள் உள்நாட்டு பயங்கரவாதிகளாக இருக்கலாம்” என ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய உள்துறை அமைச்சருமான ப. சிதம்பரம், ஓர் ஊடகப் பேட்டியில், “பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் எங்கே? ஏன் நீங்கள்(அரசு) அவர்களைக் கைது செய்யவில்லை? ஏன் நீங்கள் அவர்களை அடையாளம் காணவில்லை? அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 2 அல்லது 3 பேரை கைது செய்ததாக திடீரென்று ஒரு செய்தி வந்தது. இப்போது அது என்ன ஆயிற்று? இந்த வாரங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு என்ன செய்தது என்பதை வெளியிட அரசாங்கம் விரும்பவில்லை. பயங்கரவாதிகள் எங்கிருந்து வந்தார்கள் என்பதை அவர்கள் அடையாளம் கண்டிருக்கிறார்களா? நமக்குத் தெரிந்தவரை அவர்கள் உள்நாட்டு பயங்கரவாதிகளாக இருக்கலாம். அவர்கள் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் என்று நீங்கள் ஏன் கருதுகிறீர்கள்? அதற்கு…

Read More

‘சுந்தரபாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’, ‘சத்ரியன்’, ‘கொம்பு வெச்ச சிங்கம்டா’ ஆகிய படங்களை இயக்கிய எஸ். ஆர். பிரபாகரன் அடுத்து, ஸ்டோன் எலிபெண்ட் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்கியுள்ள படம், ‘றெக்கை முளைத்தேன்’. இதில் தன்யா ரவிச்சந்திரன், பிரபா, குருதேவ், நித்திஷா, மெர்லின், ஜெய்பிரகாஷ், ‘ஆடுகளம்’ நரேன், கஜராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பாடலுக்கான இசையை தீசன் அமைக்க, தரண் குமார் பின்னணி இசை அமைத்துள்ளார். கணேஷ் சந்தானம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் பற்றி எஸ். ஆர். பிரபாகரன் கூறும் போது, “இந்தமாதிரி படங்களைத் தான் இவர் எடுப்பார் என்ற சூழலில் சிக்காமல் ஒவ்வொரு படத்திலும் புதிதாக முயற்சிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் இதை க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாக்கியுள்ளேன். கல்லூரியில் சேர்ந்ததும் புதிய சிறகுகள் கிடைத்தாக உணரும் மாணவர்கள் ஒரு புறம், அதிரவைக்கும் குற்றத்தை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாகத் தன்யா ரவிச்சந்திரன் மறுபுறம் என்று தொடக்கம்…

Read More

சென்னை: ​பாமக தலை​வர் அன்​புமணி​யின் நடைபயணத்​துக்கு தடை விதிக்​கப்​பட​வில்​லை. சுற்​றறிக்கை தவறாக புரிந்து கொள்​ளப்​பட்​டுள்​ளது என்று டிஜிபி அலு​வல​கம் விளக்​கம் அளித்​துள்​ளது. பாமக நிறு​வனர் ராம​தாஸ் ஆகஸ்ட் 10-ம் தேதி பூம்​பு​காரில் மகளிர் மாநாடு நடத்​து​வதற்​கான பணி​களில் தீவிரம் காட்டி வரும் நிலை​யில், கட்சி தலை​வர் அன்​புமணி ‘உரிமை மீட்பு பயணம்’ நடத்​தப்​போவ​தாக அறி​வித்​து, செங்​கல்​பட்டு மாவட்​டம் திருப்​போரூரில் நேற்று முன்​தினம் இந்த நடைபயணத்தை தொடங்​கி​னார். இதற்கு எதிர்ப்பு தெரி​வித்த ராம​தாஸ், சட்​டம் – ஒழுங்கு பிரச்​சினையை சுட்​டிக்​காட்டி அன்​புமணி​யின் நடைபயணத்​துக்கு தடை விதிக்க வேண்​டும் என்று டிஜிபிக்கு கடிதம் அனுப்​பி​னார். இதை தொடர்ந்​து, அன்​புமணி​யின் நடைபயணத்​துக்கு டிஜிபி சங்​கர் ஜிவால் தடை விதித்​துள்​ள​தாக நேற்று முன்​தினம் தகவல் வெளி​யானது. இதுதொடர்​பான சுற்​றறிக்​கை​யும் வெளி​யாகி பரபரப்பை ஏற்​படுத்​தி​யது. இந்​நிலை​யில், இதை மறுத்​துள்ள டிஜிபி அலு​வல​கம், ‘அன்​புமணி நடைபயணத்​துக்கு தடை விதிக்​கப்​பட​வில்​லை. சுற்​றறிக்கை தவறு​தலாக புரிந்து கொள்​ளப்​பட்​டுள்​ளது’ என நேற்று விளக்​கம் அளித்​துள்​ளது.…

Read More

ஆரோக்கியமான உணவின் முக்கிய பகுதியாக பழம் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது, அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நார்ச்சத்து வழங்குகிறது. இருப்பினும், பழத்தில் பிரக்டோஸ் போன்ற இயற்கையான சர்க்கரைகள் இருப்பதால், அதிகப்படியான பழங்களை சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை உயர்த்துவதோடு வகை 2 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும் என்று சிலர் கவலைப்படுகிறார்கள். இந்த கவலை பொதுவானது, குறிப்பாக நீரிழிவு நோயைத் தடுக்க அல்லது தடுக்க முயற்சிப்பவர்களுக்கு. பழம் இரத்த சர்க்கரையையும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். பழங்கள் பல நன்மைகளை வழங்கும் அதே வேளையில், சாறுகள் அல்லது உலர்ந்த விருப்பங்களுக்கு மேல் முழு பழங்களையும் தேர்ந்தெடுப்பது சீரான இரத்த சர்க்கரை அளவைப் பராமரிக்கவும் நீரிழிவு தடுப்பை ஆதரிக்கவும் உதவும்.இரத்த சர்க்கரையில் பழ நுகர்வு தாக்கத்தைப் புரிந்துகொள்வது மற்றும் வகை 2 நீரிழிவு ஆபத்துடைப் 2 நீரிழிவு என்பது ஒரு நாள்பட்ட நிலை, இதில் உடல் இன்சுலின்…

Read More