புதுடெல்லி: “பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்ததாக நீங்கள் ஏன் கருதுகிறீர்கள்? அவர்கள் உள்நாட்டு பயங்கரவாதிகளாக இருக்கலாம்” என ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய உள்துறை அமைச்சருமான ப. சிதம்பரம், ஓர் ஊடகப் பேட்டியில், “பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் எங்கே? ஏன் நீங்கள்(அரசு) அவர்களைக் கைது செய்யவில்லை? ஏன் நீங்கள் அவர்களை அடையாளம் காணவில்லை? அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 2 அல்லது 3 பேரை கைது செய்ததாக திடீரென்று ஒரு செய்தி வந்தது. இப்போது அது என்ன ஆயிற்று? இந்த வாரங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு என்ன செய்தது என்பதை வெளியிட அரசாங்கம் விரும்பவில்லை. பயங்கரவாதிகள் எங்கிருந்து வந்தார்கள் என்பதை அவர்கள் அடையாளம் கண்டிருக்கிறார்களா? நமக்குத் தெரிந்தவரை அவர்கள் உள்நாட்டு பயங்கரவாதிகளாக இருக்கலாம். அவர்கள் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் என்று நீங்கள் ஏன் கருதுகிறீர்கள்? அதற்கு…
Author: admin
‘சுந்தரபாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’, ‘சத்ரியன்’, ‘கொம்பு வெச்ச சிங்கம்டா’ ஆகிய படங்களை இயக்கிய எஸ். ஆர். பிரபாகரன் அடுத்து, ஸ்டோன் எலிபெண்ட் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்கியுள்ள படம், ‘றெக்கை முளைத்தேன்’. இதில் தன்யா ரவிச்சந்திரன், பிரபா, குருதேவ், நித்திஷா, மெர்லின், ஜெய்பிரகாஷ், ‘ஆடுகளம்’ நரேன், கஜராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பாடலுக்கான இசையை தீசன் அமைக்க, தரண் குமார் பின்னணி இசை அமைத்துள்ளார். கணேஷ் சந்தானம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் பற்றி எஸ். ஆர். பிரபாகரன் கூறும் போது, “இந்தமாதிரி படங்களைத் தான் இவர் எடுப்பார் என்ற சூழலில் சிக்காமல் ஒவ்வொரு படத்திலும் புதிதாக முயற்சிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் இதை க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாக்கியுள்ளேன். கல்லூரியில் சேர்ந்ததும் புதிய சிறகுகள் கிடைத்தாக உணரும் மாணவர்கள் ஒரு புறம், அதிரவைக்கும் குற்றத்தை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாகத் தன்யா ரவிச்சந்திரன் மறுபுறம் என்று தொடக்கம்…
சென்னை: பாமக தலைவர் அன்புமணியின் நடைபயணத்துக்கு தடை விதிக்கப்படவில்லை. சுற்றறிக்கை தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று டிஜிபி அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகஸ்ட் 10-ம் தேதி பூம்புகாரில் மகளிர் மாநாடு நடத்துவதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், கட்சி தலைவர் அன்புமணி ‘உரிமை மீட்பு பயணம்’ நடத்தப்போவதாக அறிவித்து, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் நேற்று முன்தினம் இந்த நடைபயணத்தை தொடங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராமதாஸ், சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை சுட்டிக்காட்டி அன்புமணியின் நடைபயணத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று டிஜிபிக்கு கடிதம் அனுப்பினார். இதை தொடர்ந்து, அன்புமணியின் நடைபயணத்துக்கு டிஜிபி சங்கர் ஜிவால் தடை விதித்துள்ளதாக நேற்று முன்தினம் தகவல் வெளியானது. இதுதொடர்பான சுற்றறிக்கையும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதை மறுத்துள்ள டிஜிபி அலுவலகம், ‘அன்புமணி நடைபயணத்துக்கு தடை விதிக்கப்படவில்லை. சுற்றறிக்கை தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது’ என நேற்று விளக்கம் அளித்துள்ளது.…
ஆரோக்கியமான உணவின் முக்கிய பகுதியாக பழம் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது, அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நார்ச்சத்து வழங்குகிறது. இருப்பினும், பழத்தில் பிரக்டோஸ் போன்ற இயற்கையான சர்க்கரைகள் இருப்பதால், அதிகப்படியான பழங்களை சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை உயர்த்துவதோடு வகை 2 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும் என்று சிலர் கவலைப்படுகிறார்கள். இந்த கவலை பொதுவானது, குறிப்பாக நீரிழிவு நோயைத் தடுக்க அல்லது தடுக்க முயற்சிப்பவர்களுக்கு. பழம் இரத்த சர்க்கரையையும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். பழங்கள் பல நன்மைகளை வழங்கும் அதே வேளையில், சாறுகள் அல்லது உலர்ந்த விருப்பங்களுக்கு மேல் முழு பழங்களையும் தேர்ந்தெடுப்பது சீரான இரத்த சர்க்கரை அளவைப் பராமரிக்கவும் நீரிழிவு தடுப்பை ஆதரிக்கவும் உதவும்.இரத்த சர்க்கரையில் பழ நுகர்வு தாக்கத்தைப் புரிந்துகொள்வது மற்றும் வகை 2 நீரிழிவு ஆபத்துடைப் 2 நீரிழிவு என்பது ஒரு நாள்பட்ட நிலை, இதில் உடல் இன்சுலின்…
பால்கர்: மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இரண்டு மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் 53 வயது காவலாளி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். பால்கர் மாவட்டத்தில் விரார் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இரண்டு மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய அப்பள்ளியின் காவலாளி கைது செய்யப்பட்டார். ஜூன் 15 முதல் 20 வரை நடந்த இச்சம்பவத்தில், 17 மற்றும் 15 வயதுடைய இரு மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இச்சம்பவம் பள்ளியின் கேண்டீனில் நடந்ததாகவும், குற்றம் சாட்டப்பட்டவர் சனிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டதாகவும் அர்னாலா போலீஸார் தெரிவித்தனர். பள்ளியின் நிர்வாகத்திடமிருந்து புகார் பெற்ற பிறகு, காவலாளி ரேமண்ட் வில்சன் டயஸ் மீது பிஎன்எஸ் பிரிவு 75 மற்றும் போக்சோ சட்டத்தின் பிரிவு 5, 8 மற்றும் 12 இன் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளதாகவும் அர்னாலா போலீசார் தெரிவித்தனர். முன்னதாக, ஆகஸ்ட் 2024 இல், மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தின்…
ராஷ்மிகா மந்தனா நடிக்கும் படம் ‘மைசா’. நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையான இதை அறிமுக இயக்குநர் ரவீந்திர புள்ளே இயக்குகிறார். அன்ஃபார்முலா பிலிம்ஸ் தயாரிக்கிறது. தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் முதல் தோற்றம் ஏற்கெனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றது. ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்துக்கு பிரபல ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குநரும் ஜாக்கி சான் படங்களில் பணியாற்றியவருமான ஆன்டி லாங் சண்டைக் காட்சிகளை அமைக்கிறார். இவர் பிரபாஸ் நடித்த ‘கல்கி2898 ஏடி’ மற்றும் சில இந்தி படங்களிலும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் இதன் தொடக்க விழா பூஜை ஹைதராபாத் அன்னபூர்ணா ஸ்டூடியோவில் நேற்று நடந்தது. பிரபல தயாரிப்பாளர் ராமாநாயுடு கிளாப் அடித்து தொடங்கி வைத்தார். நடிகை ராஷ்மிகா மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். முன்னதாக இந்தப் படம் பற்றி இயக்குநர் ரவீந்திர புள்ளே கூறும்போது, “இதன் கதை, கதாபாத்திரங்கள், கலை நுணுக்கம் என அனைத்தும் ரசிகர்களைக் கவரும்.…
பிரதமர் மோடியின் இரண்டு நாள் தமிழக பயணம் என்பது அரசு நிகழ்வுகளையொட்டியது என்றாலும் கூட, இடையிடையே அரசியல் தருணங்களையும் கவனிக்க முடிந்தது. முதல் நாள் இரவு, தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்துவைத்து, 4,900 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி. மறுநாள், அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் வளாகத்தில், மத்திய கலாச்சாரத் துறை சார்பில் ராஜேந்திர சோழனின் பிறந்த நட்சத்திரமான ஆடி திருவாதிரை விழா, கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்று, ராஜேந்திர சோழன் உருவம் பொறித்த நினைவு நாணயம், திருவாசக தொகுப்பு நூலை அவர் வெளியிட்டார். இந்த நிகழ்வுகளுக்காக தமிழகம் வந்த பிரதமர் மோடியை, திருச்சி விமான நிலையத்தில் வரவேற்றவர்களில் முக்கியமானவர், அதிமுக பொதுச் செயலாளர்…
எல்கடையில் வாங்கிய தயாரிப்புகளில் ஒரு செல்வத்தை செலவழிக்காமல் ஒளிரும், மென்மையான சருமத்தைப் பெறுவதற்கான எளிதான வழியைத் தேடுகிறீர்களா? வீட்டில் தயாரிக்கப்பட்ட உடல் ஸ்க்ரப்கள் இயற்கையான, மலிவு மற்றும் பயனுள்ள தீர்வாகும். உங்கள் சமையலறையிலிருந்து காபி, சர்க்கரை, தேங்காய் எண்ணெய் அல்லது ஓட்ஸ் போன்ற எளிய பொருட்களால் தயாரிக்கப்படுகிறது, இந்த ஸ்க்ரப்கள் மெதுவாக எரியும், இறந்த சருமத்தை அகற்றி, சுழற்சியை அதிகரிக்கும். நீங்கள் உலர்ந்த, மந்தமான அல்லது உணர்திறன் வாய்ந்த தோலைக் கொண்டிருந்தாலும், உங்களுக்காக இங்கே ஒரு ஸ்க்ரப் செய்முறை உள்ளது. அவை ரசாயனமில்லாதவை, ஆழமாக ஊட்டமளிக்கும், மேலும் சூப்பர் எளிதானவை. ஒளிரும் தோலுக்கான சிறந்த வீட்டில் தயாரிக்கப்பட்ட உடல் ஸ்க்ரப்களில் ஐந்து இங்கே உள்ளன, அவை உங்கள் உடலை மென்மையாகவும், புத்துணர்ச்சியுடனும், கதிரியக்கமாகவும் இருக்கும், இவை அனைத்தும் 15 நிமிடங்களுக்குள் இருக்கும்.கதிரியக்க சருமத்திற்கு 5 வீட்டில் உடல் ஸ்க்ரப்கள்ஒளிரும் தோலுக்காக காபி மற்றும் தேங்காய் எண்ணெய் உடல் ஸ்க்ரப்காபி ஆன்டிஆக்ஸிடன்ட்களால் நிரம்பியுள்ளது,…
புதுடெல்லி: சமாஜ்வாதி எம்பி டிம்பிள் யாதவ் குறித்து, அகில இந்திய இமாம்கள் கூட்டமைப்பின் தலைவர் மவுலானா சஜித் ரஷிதியின் ஆபாச பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பாஜக எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக எம்பிக்கள் மவுலானா சஜித் ரஷிதியின் பேச்சுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதில், ஆண் எம்பிக்களும் ஏராளமான பெண் எம்பிக்களும் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலங்களவை எம்பி தர்மஷிலா குப்தா, “இது டிம்பிள் யாதவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த பெண்களுக்கும் அவமானம். சமாஜ்வாதி கட்சித் தலைவர்கள் அமைதியாக இருப்பது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. அகிலேஷ் யாதவின் மனைவி அவமதிக்கப்பட்டுள்ளார், ஆனால் அவரே அமைதியாக இருக்கிறார். உங்கள் வீட்டுப் பெண்களுக்கு ஆதரவாக நீங்கள் நிற்க முடியாவிட்டால், நீங்கள் அரசியலை விட்டு வெளியேற வேண்டும். மவுலானா அனைத்து பெண்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். பாஜக எம்பி பன்சுரி ஸ்வராஜ், “மவுலானா சஜித்…
நடிகர் தர்ஷன், காளி வெங்கட், அர்ஷா சாந்தினி பைஜூ, வினோதினி, தீனா நடித்துள்ள படம் ‘ஹவுஸ் மேட்ஸ்’. டி.ராஜவேல் இயக்கி இருக்கிறார். பிளேஸ்மித் ஸ்டூடியோஸ் சார்பில் எஸ்.விஜய பிரகாஷ் தயாரித்துள்ளார். எம்.எஸ்.சதீஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயன் புரொடக் ஷன்ஸ் வழங்கும் இந்தப் படம் ஆக.1-ம் தேதி வெளியாகிறது. இதன் செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குநர் ராஜவேல் கூறும்போது, “முதல் படம் எடுப்பது சவாலான விஷயம். எடுத்த படத்தை வெளியிடுவது இன்னும் சவாலானது. அதை எஸ்கே புரொடக்க்ஷன் எளிமையாக செய்து கொடுத்தது. சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி. இயக்குநர் அஜய் ஞானமுத்துவிடம் பணியாற்றியபோது நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். தர்ஷன், காளி வெங்கட், வினோதினி மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. படத்தில் நிறைய சின்ன சின்ன சர்ப்ரைஸ் இருக்கிறது. படம் பார்க்கும்போது தெரியும்” என்றார்.
