தமிழகத்தில் ஏற்படும் விபத்துகளில் பெரும்பாலானவை குடிபோதையில் வாகனங்களை இயக்குவதால் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அடுத்ததாக, அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களால் விபத்துகள் நிகழ்வதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வாகன ஓட்டிகள் குடித்திருக்கிறார்களா என, ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதில் பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதால், காவல் துறை கடமைக்காக ஆய்வு செய்கின்றன. ஆனால், பாரம் ஏற்றி வரும் வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவுதான் ஏற்றப்பட்டிருக்கிறதா என எளிதாக சோதிக்க முடியும். வட்டார போக்குவரத்து துறையினர், காவல் துறையினர் தங்கள் பணியை சரியாக செய்தால், சாலை விபத்துகள் தவிர்க்கப்படும். ஆனால், இந்த இரு துறைகளும் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி, தங்கள் வருவாயை மட்டும் அதிகரித்து கொள்கின்றன. செங்கல்பட்டு மாவட்டத்தில் நூறுக்கும் மேற்பட்ட லாரிகள் கனிமவளத்தை கொண்டு செல்கின்றன. இதில் அதிக பாரம் ஏற்றினால், அதிக வாடகை பெறலாம் என்ற எண்ணத்தில் சில ஓட்டுநர்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மீறி பாரம் ஏற்றி செல்கின்றனர். அதனை…
Author: admin
தென்னிந்தியாவுக்கு ஒரு குடும்ப பயணத்தைத் திட்டமிடுவது பற்றி யோசிக்கிறீர்களா? சிறந்த தேர்வு. இந்த பகுதி அனைவருக்கும் ஒரு சிறிய விஷயத்தை வழங்குகிறது, வரலாற்று கோயில்கள், பசுமையான மலைகள், கடற்கரை தப்பித்தல் மற்றும் வனவிலங்கு சஃபாரிகள் கூட. நீங்கள் குழந்தைகள், மூத்தவர்கள், அல்லது ஆர்வமுள்ள ஆய்வாளர்களின் கலவையுடன் பயணம் செய்கிறீர்களோ, இந்த இடங்கள் ஆறுதல், வேடிக்கை மற்றும் கலாச்சாரத்தை மிகச்சரியாக கலக்கின்றன. கூடுதலாக, அவை செல்லவும், நன்கு இணைக்கப்பட்டவை, மற்றும் முடிவில்லாத நடைபயிற்சி அல்லது சிக்கலான பயணத்திட்டங்கள் தேவையில்லாத நடவடிக்கைகள் நிறைந்தவை. நினைவுகள் மற்றும் தளர்வு ஆகிய இரண்டிற்கும் உத்தரவாதம் அளிக்கும் தென்னிந்தியாவில் ஏழு குடும்ப நட்பு இடங்களின் உங்கள் இறுதி பட்டியல் இங்கே.ஒரு குடும்ப பயணத்திற்கு 7 தென்னிந்திய இடங்களை பார்வையிட வேண்டும்கூர்க், கர்நாடகாஇதில் காணப்படுகிறது: மேற்கு தொடர்ச்சி மலைகள், பெங்களூரில் இருந்து 5-6 மணி நேரம்.இதற்கு ஏற்றது: இயற்கை பிரியர்கள், உணவுப்பொருட்கள் மற்றும் குளிர்ச்சியான தேடுபவர்கள்”இந்தியாவின் ஸ்காட்லாந்து” என்று அழைக்கப்படும்…
இந்தியாவில் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ் என்று அனிருத் புகழாரம் சூட்டியிருக்கிறார். ஆகஸ்ட் 14-ம் தேதி ரஜினி – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘கூலி’ வெளியாக இருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்துக்கு இசையமைத்துள்ள அனிருத் அளித்துள்ள பேட்டியில், “லோகேஷ் கனகராஜுக்கு பிடித்த கதைக்களம் கேங்ஸ்டர் டிராமா. அவர் அதில் ஊறிவிட்டார். நிஜவாழ்க்கையில் அவர் ஒரு குழந்தை. இவரா இந்தப் படத்தை எடுத்தார் என்பது மாதிரி தெரியும். இந்தியாவில் உள்ள சிறந்த இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். அவரது கதையில் தலைவர் ரஜினி இருந்தால் எப்படியிருக்கும் என்பதை காணலாம். இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இப்படியொரு நடிகர்கள் கூட்டணி வேறு எந்தவொரு படத்துக்குமே அமையாது. 3 பாடல்கள் மற்றும் அனைத்து நடிகர்களின் பின்புற காட்சிகள் மட்டுமே இதுவரை வந்திருக்கிறது. ’கூலி ’ஒரு புத்திசாலித்தனமான படம். இவ்வளவு நடிகர்களை வைத்து லோகேஷ்…
சென்ட்ரல் ரயில் நிலையத்தின் அழகை கெடுக்கும் வகையில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அருகே கொட்டப்படும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுவதாக ரயில் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, பல்லவன் சாலை ஆகியவற்றை இணைக்கும் சென்னை மத்திய சதுக்கம் பகுதியானது நாள்தோறும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் இடமாகும். இங்கு வரும் பயணிகளும், பொதுமக்களும் சாலைகளை கடப்பதற்கு மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைகளை தான் பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக சென்ட்ரல் ரயில் நிலையத்தையும், பூங்கா ரயில் நிலையத்தையும், சென்ட்ரல் மெட்ரோ ரயிலுடன் இணைக்கும் வகையில் பக்கிங்காம் கால்வாய் அருகே அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையை பலரும் உபயோகப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்த மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைக்கான நுழைவு வாயில் முன்பு, பக்கிங்காம் கால்வாயையொட்டி வைக்கப்பட்டிருக்கும் குப்பைத்தொட்டி எப்போதும் குப்பைகள் நிறைந்து காணப்படுவதுடன், அதன் அருகே குப்பைகள் குவிந்து அலங்கோலமாக காட்சியளிக்கிறது. இதனால் மெட்ரோ ரயில்…
பித்தப்பை அகற்றுதல் அறுவை சிகிச்சை, கோலிசிஸ்டெக்டோமி என்றும் அழைக்கப்படுகிறது, இது பித்தப்பை, வீக்கம் அல்லது பித்த நாளத் தடைகளுக்கு சிகிச்சையளிக்க உலகளவில் செய்யப்படும் மிகவும் பொதுவான அறுவை சிகிச்சை முறைகளில் ஒன்றாகும். இந்த அறுவை சிகிச்சை பெரும்பாலும் வலியிலிருந்து நீடித்த நிவாரணத்தை அளிக்கிறது மற்றும் உயிருக்கு ஆபத்தான சிக்கல்களைத் தடுக்கிறது, பல நோயாளிகள் தற்காலிக அல்லது நீண்டகால செரிமான மாற்றங்களை அனுபவிக்கிறார்கள். பித்தப்பை அகற்றுதல் அறுவை சிகிச்சை நாள்பட்ட வலி அல்லது பித்தப்பைக் கற்களைக் கொண்ட நபர்களுக்கு வாழ்க்கையை மாற்றும், ஆனால் இது செரிமான பக்க விளைவுகள் மற்றும் தற்காலிக சிக்கல்களுடன் வரக்கூடும். அதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான மக்கள் நேரத்துடன் நன்றாக மாற்றுகிறார்கள், குறிப்பாக உணவு பரிந்துரைகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களைப் பின்பற்றுவதன் மூலம். அறுவைசிகிச்சை விருப்பங்களை நாடுபவர்களுக்கு, உணவு சரிசெய்தல், கூடுதல் மற்றும் மாற்று சிகிச்சைகள் போன்ற முழுமையான அணுகுமுறைகள் நிவாரணம் அளிக்கக்கூடும், ஆனால் மருத்துவ வழிகாட்டுதலின் கீழ் மட்டுமே…
இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற முடியாமல் போனதால் தன் மகன் அபிமன்யூ ஈஸ்வரன் மனச்சோர்வடைந்து விட்டதாக அவரது தந்தை அணித்தேர்வுக்குழு மீது சாடல் தொடுத்துள்ளார். சில வீரர்கள் ஐபிஎல் ஆட்டங்களை வைத்து என் மகனைத் தாண்டி டெஸ்ட் அணியில் இடம்பிடித்து விடுகின்றனர், என் மகன் பரிசீலிக்கப்படமால் போய் விட்டான், இது நியாயமற்றது என்கிறார் அபிமன்யூ ஈஸ்வரனின் தந்தை ரங்கநாதன் ஈஸ்வரன். ஆங்கில நாளேடு ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் கூறும்போது, “என் மகன் அபிமன்யூ மனச்சோர்வில் இருக்கிறான். இப்படித்தான் நடக்கும். ஐபிஎல் ஆட்டங்களை வைத்து சில வீரர்கள் டெஸ்ட் அணியில் இடம்பிடிக்கின்றனர். நீண்ட நாள் வடிவத்தில் ஐபிஎல் ஆட்டத்திறனை கணக்கில் எடுத்துக் கொள்வதா? ரஞ்சி, துலீப், இரானி கோப்பைகளில் ஆடும் ஆட்டங்கள்தான் டெஸ்ட் அணியில் இடம்பெற அளவுகோலாக இருக்க வேண்டும்.” என்று சாடினார். அபிமன்யூ ஈஸ்வரன் டெஸ்ட் அணி சாத்தியங்களுக்குள் 2022ம் ஆண்டு பங்களாதேஷ் டூரின் போதே வந்து விட்டார். ஆனால்…
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகேயுள்ள படைவீடு (படவேடு) என்ற கிராமத்தில் ரேணுகாம்பாள் கோயில் அமைந்துள்ளது. கமண்டல நதியின் கரையோரம் அமைந்துள்ள இந்த கோயிலில் ஆடி மாதம் 7 வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் ஆடி பெருவிழா மிகவும் விசேஷமாகும். சக்தி பீடங்களில் மிகவும் முக்கியமான தலமாக இருக்கிறது. இங்கு அம்மன் சிரசு சுயம்புவாக எழுந்தருளி, பக்தர்களுக்கு அருளாசி வழங் குகிறார். அம்மன் சந்நிதிகளில் குங்குமம் பிரசாதமாக தரப்படுவது வழக்கம். ஆனால், படவேடு ரேணுகாம்பாள் கோயிலில் பூமியில் இருந்து வெட்டி எடுக்கப்படும் மண் பிரசாதமாக வழங்கப்படுகிறது. கோயில் சுற்றுச்சுவர்களின் மீது சிங்கத்திற்கு பதிலாக பசுவின் சிலைகளே உள்ளது. அம்மன் சந்நிதிகளில் பலிபீடம் முன்பாக யாழி அல்லது சிங்கம் இருக்கும். இங்கு மட்டும் எருது உள்ளது தனிச்சிறப்பு. சக்திக்குள் அனைத்தும் அடங்கும் என்பதை உணர்த்தும் வகையில் கோயில் கருவறையில் அம்மன் சுயம்பு சிரசுவாகவும், மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் அரூபங்களுடன் அருள்பாலிக் கின்றனர். ஆதிசங்கரரால் பிரதிஷ்டை…
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று சந்தித்துள்ளார். பின்னர் அவர், “2026 தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கூட்டணி அரசு என்ற பேச்சுக்கே இடமில்லை” எனத் தெரிவித்துள்ளார். 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரேமலதா விஜயகாந்த், ஓபிஎஸ் மற்றும் வைகோ என வரிசையாக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரின் மகன் துரை வைகோ ஆகியோர் சந்தித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வந்திருக்கும் நிலையில், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரிக்க அவரின் வீட்டிற்கு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது, முதல்வரின் உடல்நலம் குறித்து வைகோ விசாரித்தார் என சொல்லப்படுகிறது. பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: மு.க.முத்து மறைவு குறித்து துக்கம் விசாரித்தேன். அதோடு, முதல்வர் ஸ்டாலினின் உடல்நலம்…
ஆஞ்சினா என்பது இதயத்திற்கு இரத்த ஓட்டத்தைக் குறைப்பதால் ஏற்படும் ஒரு குறிப்பிட்ட வகை மார்பு வலி, பெரும்பாலும் கரோனரி தமனி நோய் போன்ற நிலைமைகள் காரணமாக. இது பொதுவாக அழுத்தம், இறுக்கம், கனமானது அல்லது எரியும் உணர்வு போல உணர்கிறது, மேலும் கைகள், தாடை அல்லது பின்புறம் கதிர்வீச்சு செய்யலாம். ஆஞ்சினா மாரடைப்பின் எச்சரிக்கை அடையாளமாக இருக்கலாம், ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது. ஆஞ்சினா எப்போதுமே இதய பிரச்சினைகளுடன் தொடர்புடையது என்றாலும், பொதுவாக மார்பு வலி நுரையீரல் நோய்த்தொற்றுகள், அமில ரிஃப்ளக்ஸ், தசை திரிபு அல்லது பதட்டம் போன்ற பல்வேறு காரணங்களிலிருந்து எழக்கூடும். வேறுபாட்டைப் புரிந்துகொள்வது சரியான நேரத்தில் மருத்துவ கவனிப்பு மற்றும் அடிப்படை நிலைமைகளை சரியான முறையில் கண்டறிவதை உறுதிப்படுத்த உதவுகிறது.ஆஞ்சினா என்றால் என்ன, அது என்ன உணர்கிறதுஆஞ்சினா என்பது மார்பு வலி அல்லது அச om கரியம், இது உங்கள் இதயத்திற்கு போதுமான இரத்த ஓட்டம் கிடைக்காதபோது ஏற்படும் அச om…
புதுடெல்லி: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தை கைது செய்யச் சொல்லி மேலதிகாரிகள் தனக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் எனினும், தான் மறுத்துவிட்டதாகவும் தீவிரவாத தடுப்புப் பிரிவு முன்னாள் விசாரணை அதிகாரி மெஹபூப் முஜாவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கை தீவிரவாத தடுப்புப் பிரிவு எப்படி விசாரித்தது, ஏன் அவ்வாறு விசாரித்தது என்பதை என்னால் சொல்ல முடியாது. ஆனால், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், ராம் கல்சங்கரா, சந்தீப் டாங்கே, திலீப் படிதார் போன்றவர்கள் தொடர்பாக எனக்கு சில ரகசிய உத்தரவுகள் வழங்கப்பட்டன. இந்த உத்தரவுகள் அனைத்தும் பின்பற்றத்தக்கவை அல்ல. மோகன் பாகவத்தை கைது செய்யச் சொல்லி எனக்கு அழுத்தம் தரப்பட்டது. மூத்த அதிகாரிகள் அதற்கான அழுத்தத்தை தந்தனர். அவரைப் போன்ற ஓர் ஆளுமையை கைது செய்வது எனது திறனுக்கு அப்பாற்பட்டது. உத்தரவுகளை நான் பின்பற்றாததால் என் மீது பொய் வழக்கு பதியப்பட்டது.…
