Author: admin

பந்தலூர் அருகேயுள்ள நச்சேரி காட்டுநாயக்கர் பழங்குடியினர் கிராமத்துக்கு சாலை வசதி இல்லாததால் வீடுகட்ட அரசின் உத்தரவு கிடைத்தும், வீடு கட்ட முடியாத நிலை உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட அய்யன்கொல்லி எருமாடு செல்லும் சாலையில் நச்சேரி என்ற கிராமத்தில் பண்டைய பழங்குடியினரான காட்டுநாயக்கர் மக்கள், 20 குடும்பங்களாக வசித்து வருகின்றனர். இவர்கள் செல்லும் சாலையில் முகப்புப் பகுதியில் தனியார் சாலை என்று அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை கடந்து சென்றால் ஒரு பகுதியில் தனியார் தோட்டமும், ஒற்றையடிப் பாதையும் உள்ளது. இந்த ஒற்றையடிப்பாதை வழியாக கிராமத்துக் குள் செல்லவிடாமல் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: நச்சேரி கிராமத்தில் மண்ணின் மைந்தர்களான பழங்குடியினர் மக்கள் காலங்காலமாக வசித்து வரும் நிலையில், எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் தவித்து வருகின்றனர். மக்கள் செல்லும் ஒற்றையடிப் பாதையில் தடுப்புச் சுவர் கட்டப்…

Read More

அனுபவமுள்ள நாய் உரிமையாளர்கள் மட்டுமே கையாள வேண்டும்சில நாய் இனங்கள் மிகவும் நட்பானவை மற்றும் பராமரிக்க எளிதானவை என்றாலும், சிலருக்கு மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க இன்னும் கொஞ்சம் உறுதியான பயிற்சி, சமூகமயமாக்கல் மற்றும் கட்டமைப்பு தேவை. அனுபவம் வாய்ந்த நாய் உரிமையாளர்களுக்கு மிகவும் பொருத்தமான சில இனங்களை இங்கே பட்டியலிடுகிறோம்.

Read More

புதுடெல்லி: ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அடுத்த குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 21 ஆகும். வாக்குப்பதிவு செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும், அதே நாளில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு துணைத் தலைவராக பதவி வகித்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அந்த பதவியிடம் காலியாக இருப்பதை கடந்த ஜூலை 22 வெளியிடப்பட்ட அறிவிப்பில் உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியது. இந்தச் சூழலில் தற்போது குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

‘துடரும்’ இயக்குநர் தருண்மூர்த்தி இயக்கத்தில் கார்த்தியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தருண்மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘துடரும்’. மாபெரும் வசூல் சாதனை படைத்த இப்படம் பல்வேறு மொழிகளில் டப்பிங் செய்தும் வெளியிடப்பட்டது. இதன் இயக்குநர் தருண்மூர்த்தியை பல்வேறு திரையுலக பிரபலங்களும் பாராட்டியிருந்தார்கள். மேலும், அவருடைய அடுத்த படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவானது. தற்போது தருண்மூர்த்தி இயக்கத்தில் கார்த்தியை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. இதனை ‘கருடன்’ மற்றும் ‘மாமன்’ படங்களைத் தயாரித்த குமார் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக விசாரித்த போது, இப்போதைக்கு ‘மார்ஷல்’ மற்றும் ‘கைதி 2’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தவுள்ளார் கார்த்தி. அதனைத் தொடர்ந்து வேறு எந்தவொரு படத்துக்கும் கார்த்தி சம்மதம் தெரிவிக்கவில்லை என்கிறார்கள். விரைவில் உண்மை என்ன என்பது தெரியவரும்.

Read More

கோவில்பட்டி: தீப்பெட்டி தொழிலுக்கு சவாலாக உள்ள ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் லைட்டர்களை தடை செய்ய மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுப்போம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்தார். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சார பயணத்துக்காக நேற்றிரரவு அதிமுக பொதுச்செயலாளர் கோவில்பட்டிக்கு வந்தார். தொடர்ந்து இன்று காலை அருள்தரும் செண்பகவல்லி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் தனியார் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் கடலை மிட்டாய் உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடினார். மாவட்டம் உருவாக்க வேண்டும்: அப்போது நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் எம்.பரமசிவம் பேசும்போது, மாவட்ட தலைநகருக்கான அனைத்து தகுகளையும் கொண்ட கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு மாவட்டம் உருவாக்க வேண்டும். தீப்பெட்டி தொழிலுக்கு அச்சுறுத்தலாக உள்ள ஒரு முறை பயன்படுத்தக்கூடிய லைட்டர்களை தடை செய்ய வேண்டும் என தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகிறோம். தமிழக அரசிடம் கோரிக்கை…

Read More

இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு, ஆக.1-ம் தேதி (இன்று) முதல் 25 சதவீத வரிவிதிப்பை அமல்படுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று முன்தினம் அறிவித்தார். தமிழ்நாட்டின் தொழில் நகரமான திருப்பூர் டாலர் சிட்டி என்றழைக்கப் படுகிறது. திருப்பூரில் பின்னலாடைத் தொழில் கடந்த பல ஆண்டு காலமாக கோலோச்சி வரும் நிலையில், அமெரிக்காவின் புதிய வரி விதிப்பால் பின்னலாடைத் துறை உட்பட இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் பாதிக்கப்படுமென தொழில்துறையினர் கருதுகின்றனர். திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் 30 சதவீதம் ஏற்றுமதி, அமெரிக்க சந்தையை நம்பி இருப்பதால், இந்த வரி விதிப்பு அவர்களது ஏற்றுமதியை வெகுவாக குறைக்கும். அமெரிக்கா இந்த வரியை விதிப்பதற்கு, இந்திய பொருட்களின் மீது அமெரிக்கா விதித்திருந்த வர்த்தகக் கட்டுப்பாடுகளை காரணம் காட்டியுள்ளது. இது தொடர்பாக திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கூறியதாவது: இந்தியாவின் இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீதம் அமெரிக்கா வரி விதித்திருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது. இருப்பினும் இது…

Read More

பல ஆண்டுகளாக, சுகாதார வல்லுநர்கள் மிகக் குறைவான மற்றும் அதிக தூக்கம் நல்வாழ்வை எதிர்மறையாக பாதிக்கும் என்று எச்சரித்துள்ளனர். ஆனால் புதிய ஆராய்ச்சி பிரச்சினை தூக்கத்தின் அளவு தனியாக இருக்காது, ஆனால் மக்கள் எவ்வளவு தொடர்ச்சியாகவும் துல்லியமாகவும் தூங்குகிறார்கள் என்று கூறுகிறது. ஜூன் 3, 2025 அன்று சுகாதார தரவு அறிவியலில் வெளியிடப்பட்ட ஒரு பெரிய ஏழு ஆண்டு ஆய்வு, அணியக்கூடிய உடற்பயிற்சி டிராக்கர்களைப் பயன்படுத்தி கிட்டத்தட்ட 90,000 பெரியவர்களைக் கண்காணித்தது. ஒழுங்கற்ற தூக்க முறைகள் -மொத்த தூக்க நேரம் மட்டுமல்ல – பார்கின்சன், சிறுநீரக செயலிழப்பு மற்றும் வகை 2 நீரிழிவு உள்ளிட்ட 172 நோய்களின் அபாயத்துடன் வலுவாக இணைக்கப்பட்டுள்ளன என்பதை கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன. பல உடல்நல அச்சுறுத்தல்கள் அமைதியாகத் தொடங்கக்கூடும், வேரில் மோசமான தூக்கம்.ஒழுங்கற்ற தூக்கம் நீங்கள் நினைப்பதை விட தீங்கு விளைவிக்கும்தங்களுக்கு எட்டு அல்லது அதற்கு மேற்பட்ட மணிநேர தூக்கம் கிடைப்பதாக நம்பிய பல நபர்கள் உண்மையில்…

Read More

நாக்பூர்: நமது நாட்டின் அனைத்து மொழிகளுக்கும் மூலம் சமஸ்கிருதம் எனத் தெரிவித்துள்ள ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், நாட்டின் தொடர்பு மொழியாக சமஸ்கிருதத்தை மாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். நாக்பூரில் உள்ள கவி கல்குரு காளிதாஸ் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அபினவ் பாரதி சர்வதேச கல்விக் கட்டிடத்தை இன்று திறந்துவைத்துப் பேசிய மோகன் பாகவத், “சமஸ்கிருதத்தை புரிந்து கொள்வதற்கும் அதில் உரையாடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. நான் சமஸ்கிருத மொழியை கற்றுக்கொண்டேன். ஆனால், என்னால் சரளமாகப் பேச முடியவில்லை. சமஸ்கிருதம் ஒவ்வொரு வீட்டையும் சென்றடைய வேண்டும். சமஸ்கிருதத்தை நாட்டின் தொடர்பு மொழியாக மாற்ற வேண்டும். இதற்கான அவசியம் இருக்கிறது. நாடு தற்சார்பு அடைய வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்து இருக்கிறது. அதற்காக நாம் நமது அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். மொழி என்பது ஓர் உணர்வு. ஸ்வத்வம் (நற்குணங்கள்) என்பது பொருள் சார்ந்தது அல்ல. தனித்துவமான அது மொழி மூலம் வெளிப்படுகிறது. சமஸ்கிருதம்தான்…

Read More

என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம் என முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி எம்எல்ஏ தெரிவித்தார். கரூர் அருகேயுள்ள பண்டுதகாரன்புதூரில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவிகளுடன் கலந்துரையாடிய வி.செந்தில் பாலாஜி, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசியது: பெண்கள் அரசு அதிகாரிகளாகி மக்களுக்கு சேவை செய்வதுபோல, அரசியலிலும் ஈடுபட்டு பெண்களுக்கான உரிமைகள், சேவைகளை பெற வேண்டும். என் மீதான ஊழல் குற்றச்சாட்டில் எனக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை. முன்னாள் முதல்வர் பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என 18 எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் புகார் அளித்தோம். அதன் பிறகு என் மீது வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. வேலைக்காக ரூ.1.5 லட்சம் இழந்ததாக சொல்லும் நபர்கள், ரூ.50 லட்சத்துக்கு வழக்கறிஞர்களை நியமித்து நீதிமன்றத்தில் வாதாட முடிகிறது என்றால், அதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என தெரிந்துகொள்ளலாம். அரசியல் களத்தில் மக்களை சந்தித்து வெற்றி பெற முடியாதவர்கள், தேர்தல்…

Read More

இந்த நாட்களில் ஒரு புதிய பெற்றோருக்குரிய புஸ்வேர்ட் பிடிக்கிறது, இது FAFO என அழைக்கப்படுகிறது. FAFO இணைய ஸ்லாங்கை “f *** சுற்றி மற்றும் கண்டுபிடி” என்ற இணைய ஸ்லாங்கைக் குறிக்கிறது, இது தற்போது ஆன்லைனில் பிரபலமாக இருக்கும் பிரபலமான பெற்றோருக்குரிய மூலோபாயமாக உருவாகியுள்ளது. தொடர்ச்சியான வயதுவந்த மேற்பார்வை தேவையில்லை என்றாலும், நடைமுறை வாழ்க்கைப் பாடங்கள் இயற்கையான அனுபவங்களிலிருந்து வெளிவரக்கூடும் என்பதை குழந்தைகளுக்குக் காட்ட பெற்றோர்கள் இன்று இந்த போக்கைப் பயன்படுத்துகிறார்கள்.என்ன செய்கிறது FAFO பெற்றோர் சராசரிFAFO பெற்றோரின் முக்கிய கொள்கை, குழந்தைகளைத் தடுப்பதற்குப் பதிலாக அல்லது தொடர்பில்லாத விளைவுகளை வழங்குவதற்குப் பதிலாக, அவர்களின் முடிவுகளின் விளைவுகளை எதிர்கொள்ள அனுமதிப்பதை உள்ளடக்குகிறது. உதாரணமாக, முந்தைய எச்சரிக்கைகள் இருந்தபோதிலும் ஜாக்கெட்டுகளை அணிய மறுக்கும்போது, பெற்றோர்கள் குழந்தைகளுக்கு வெளியே குளிரைக் கண்டறிய அனுமதிக்க வேண்டும். இதேபோல், பெற்றோர்கள் தங்கள் வீட்டுப்பாடங்களைச் செய்ததற்காக குழந்தையைத் துடைக்க மாட்டார்கள், ஏனெனில் அவர்கள் பின்னர் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.FAFO…

Read More