ராமேசுவரம்: உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில், தமிழகத்தில் உள்ள ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் தீர்த்தங்களைப் பரிமாறிக் கொள்வதற்கான ஆன்மிக வழிபாட்டு ஒப்பந்தம் நேற்று மேற்கொள்ளப்பட்டது. சாஸ்திர மரபின்படி, ராமேசுவரத்தில் உள்ள ராமநாத சுவாமிக்கு திரிவேணி சங்கம நீரால் அபிஷேகம் செய்வதும், காசி விஸ்வநாதருக்கு ராமேசுவரம் கோடி தீர்த்த நீரால் அபிஷேகம் செய்வதும் மிகவும் முக்கியமானவை ஆகும். அதேபோல, ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையின் மணலையும், பிரயாக் சங்கம மணலுடன் கலந்து வழிபடுவதும் சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சாஸ்திர மரபுகளை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு, அதாவது காசி விஸ்வநாதருக்கு ராமேசுவரம் கோடி தீர்த்த நீரால் அபிஷேகம் செய்யவும், ராமேசுவரம் ராமநாதசுவாமிக்கு திரிவேணி சங்கம நீரால் அபிஷேகம் செய்யவும் ஆன்மிக வழிபாட்டு ஒப்பந்தம் தேவகோட்டை சமஸ்தானம் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் அபிஷேகம் செய்யப்பட்ட கோடி தீர்த்த நீருடன் தேவகோட்டை சமஸ்தான நிர்வாகிகள். இதற்காக,…
Author: admin
சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க ஒரு வாரமே இருக்கும் நிலையில், சென்னையின் திருமழிசை போலீஸ் ஸ்டேஷனில் பிரபலம் ஒருவர் சரண்டர் செய்த கைத்துப்பாக்கி காணாமல் போகிறது. வாக்காளர்களுக்கு முறை கேடாகப் பணப் பட்டுவாடா செய்ய உள்ளூர் தாதாவான கனகுவிடம் (சுஜித்) கொடுக்கப்பட்ட ரூ.10 கோடியும் காணாமல் போகிறது. ஒருபுறம், மாயமான கைத்துப்பாக்கியை கண்டுபிடிக்கும்படி பணிக்கப்படுகிறார் பயிற்சி எஸ்.ஐ ஆன புகழ் (தர்ஷன்). இன்னொரு பக்கம், கனகுவும் அவர் ஆட்களும் பணத்தைத் தேடுகிறார்கள். இரு தரப்பையும் இணைத்த புள்ளி எது? அவர்களுக்கிடையிலான முட்டலும் மோதலும் எதனால்? துப்பாக்கியும் பணமும் கிடைத்ததா? என்பது கதை. சட்டத்தைக் காக்கும் போலீஸ்காரர்களும் அதை மதிக்காத நிழலுலகக் குற்றவாளிகளும் விரும்பியோ, விரும்பாமலோ சபிக்கப்பட்ட ஒரு மோதல் களத்தில் உழல்வதுதான் திரைக்கதையின் மையம். இந்த மோதலில் வழிந்தோடும் வன்முறையின் ரத்தத்தை மீறி, அன்பும் நேயமும் அறமும் வென்றதா, இல்லையா என்பதைப் பிடிமானம் மிகுந்த திரைக்கதை எழுத்தின் வழியே, நேர்த்தியான எமோஷனல் த்ரில்லராக…
மதுரை: பொது இடங்களில் உள்ள கட்சிகள், அமைப்புகளின் கொடிக் கம்பங்களை அகற்றுவது தொடர்பான வழக்கில் சேர விரும்பும் அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஆக. 5-க்குள் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்யலாம் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, தவெக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மதுரை அமர்வில் நேற்று இடையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில், “எங்கள் கட்சியினர், சமூகத்தில் பின்தங்கியவர்களுக்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பணியாற்றி வருகின்றனர். தமிழகம் முழுவதும் ஏராளமான இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் உள்ளன. கொடிக்கம்பங்கள் அமைப்பது கட்சிகளுக்கு அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். இந்த உரிமையையாராலும் தடுக்க முடியாது. கட்சியின் கொள்கையை பரப்புவதில் கொடிக் கம்பங்கள் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. எனவே, பொதுமக்கள் அறியும் வகையில் ஆங்காங்கே கொடிக்கம்பங்களை நிறுவுவது அவசியமானது.…
நீண்டகால டிஜிட்டல் சாதன பயன்பாடு காரணமாக கண் திரிபு பெருகிய முறையில் பொதுவானது. வல்லுநர்கள் 20-20-20 விதியை பரிந்துரைக்கின்றனர்: ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும், 20 விநாடிகளுக்கு 20 அடி தூரத்தில் ஒரு பொருளைப் பாருங்கள். திரை பிரகாசத்தை சரிசெய்தல், சரியான விளக்குகளை பராமரித்தல் மற்றும் நீல ஒளி வடிப்பான்களைப் பயன்படுத்துதல் ஆகியவை உதவும். கண் திரிபு மக்களிடையே ஒரு பொதுவான கவலையாக மாறியுள்ளது, குறிப்பாக இந்த நாட்களில் இளைஞர்கள். கண்கள் தொடர்ந்து அழுத்தத்தின் கீழ் உள்ளன, டிஜிட்டல் சாதனங்களில் அதைக் குறை கூறுகின்றன. மொபைல் சாதனங்கள் அல்லது கணினித் திரைகளை அதிக நேரம் பார்த்துக் கொண்டிருந்தாலும், அல்லது புத்தகங்களைப் படித்தாலும், அல்லது டிவி பார்ப்பது, கண் திரிபு என்பது இன்றைய காலங்களில் ஒரு அமைதியான துணை. இப்போது, பெரும்பாலான வேலைகளுக்கு கணினி அல்லது மடிக்கணினியில் நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டும், மக்களை வறட்சி, மங்கலான பார்வை, தலைவலி மற்றும் கழுத்து…
லாடர்கில்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரின் முதல் ஆட்டம் நேற்று லாடர்கில் பகுதியில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 6 விக்கெட்கள் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சைம் அயூப் 57, ஃபகர் ஸமான் 28 ரன்கள் சேர்த்தனர். மேற்கு இந்தியத் தீவுகள் தரப்பில் ஷமர் ஜோசப் 3 விக்கெட்கள் வீழ்த்தினார். 179 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 164 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக ஜாண்சன் சார்லஸ் 35, ஜூவெல் ஆண்ட்ரூ 35, ஜேசன் ஹோல்டர் 30 ரன்கள் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது நவாஸ் 3, சைம் அயூப் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான்…
திருநெல்வேலி / தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக மங்கலம் பகுதியை சேர்ந்த பட்டியலின சமூக இளைஞரான மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ், கடந்த 27-ம் தேதி நெல்லை கே.டி.சி. நகரில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, இவர் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரது பெற்றோரான காவல் உதவி ஆய்வாளர்கள் சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆனால், இருவரையும் கைது செய்தால் மட்டுமே கவின் செல்வ கணேஷின் உடலை வாங்கி அடக்கம் செய்வோம் என உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், உதவி ஆய்வாளர் சரவணன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இதற்கிடையில், அதிகாரிகள் தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தை காரணமாக, கவின் செல்வகணேஷ் உடலை பெற்றுக்கொள்ள அவரது உறவினர்கள் சம்மதித்தனர். இதையடுத்து, நெல்லை…
சென்னை: தெலங்கானாவில் இருந்து சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதலில் வந்துள்ள நீதிபதி டி.வினோத்குமாருக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா நேற்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த டி.வினோத்குமாரை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதல் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது. அதையேற்று அவரை இடமாறுதல் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். அதன்படி நீதிபதி டி.வினோத் குமாருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, உயர் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். புதிய நீதிபதியான டி.வினோத்குமாரை அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வரவேற்றுப் பேசுகையி்ல், ‘‘நீதிபதி வினோத்குமாரின் சொந்த ஊர் தெலங்கானாவில் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள சூரிய பேட்டை. இந்த ஊரில் லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக கற்கால மனிதர்கள் வாழ்ந்ததாக வரலாற்று ஆவணங்கள் உள்ளன. சுத்தமான நகராட்சி என பெயர் எடுத்த ஊரும் கூட. அத்தகைய பெருமை…
சென்னை: எம்.எஸ்.சுவாமிநாதன் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு ஆக.7-ம் தேதி சர்வதேச மாநாடு டெல்லியில் நடைபெறவுள்ளது என சவுமியா சுவாமிநாதன் தெரிவித்தார். சென்னை சிவானந்தா சாலையில் உள்ள பத்திரிக்கை தகவல் அலுவலகத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன தலைவர் சவுமியா சுவாமிநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனமானது, ஊட்டச்சத்து, எழை எளிய மக்கள் மற்றும் பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் உணவு தட்டுப்பாட்டை நீக்கியது மற்றும் அனைவருக்கும் சமமான ஊட்டச்சத்து கிடைத்ததில் எம்.எஸ்.சுவாமிநாதனின் பங்கு மிகப்பெரியது. அவரின் 100-வது பிறந்தநாள் ஆக.7-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு டெல்லியில் ஆக.7 முதல் 9-ம் தேதி வரை ‘நீடித்த பசுமை புரட்சி – இயற்கையுடன் இயைந்த வாழ்க்கை’ என்ற தலைப்பில் சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டில் பல்வேறு மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்கின்றனர். மிக முக்கியமாக 120 விஞ்ஞானிகள், 300-க்கும்…
நிற்கும் கன்று உடற்பயிற்சியை வளர்ப்பது காஸ்ட்ரோக்னீமியஸ் மற்றும் சோலியஸ் தசைகளை குறிவைக்கிறது, இது இரண்டு பெரிய கன்று தசைக் குழுக்களை உருவாக்குகிறது.ஒருவருக்கொருவர் இடுப்பு தூரத்தில் உங்கள் கால்களுடன் நிற்கும்போது, ஒரு சுவர் அல்லது நாற்காலியை சமநிலை புள்ளியாகப் பயன்படுத்தும்போது இந்த பயிற்சியை நீங்கள் செய்ய வேண்டும். உங்கள் டிப்டோக்களில் நிற்கும்போது, முடிந்தவரை உங்கள் கால்விரல்களை அடைய மெதுவாக உங்கள் குதிகால் உச்சவரம்பை நோக்கி உயர்த்தவும். கட்டுப்படுத்தப்பட்ட இயக்கங்களுடன் உங்கள் குதிகால் தரையில் குறைப்பதற்கு முன், இந்த நிலையை ஒரு நொடி பராமரிக்கவும்.உங்கள் உடலை நேராக வைத்திருக்கும்போது இறுக்கமான மையத்தை பராமரிக்கவும். 10 முதல் 15 மறுபடியும் கொண்ட 2 முதல் 3 செட்களைச் செய்யுங்கள். அதிகரித்த சிரமத்திற்கு, ஒரு நேரத்தில் ஒரு அடி தூக்கும்போது நீங்கள் ஒற்றை-கால் கன்று உயர்வு செய்ய வேண்டும், அல்லது எடை சேர்க்க ஒரு கையில் ஒரு டம்பல் வைத்திருக்க வேண்டும்.
சென்னை: போதிய பணியாளர்கள் இல்லாததால் அரசு விடுதி கழிவறைகளை மாணவர்களே கழுவும் கொடுமை அரங்கேறி வருவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கான 36 அரசு ‘சமூகநீதி விடுதிகள்’ எந்தவொரு அடிப்படை வசதிகளுமின்றி நோய் பரப்பும் கூடாரங்களாகி, வாழத்தகுதியற்ற வசிப்பிடங்களாக உருமாறி வருவது அதிர்ச்சியளிக்கிறது. புழுவிழுந்த உணவும், துர்நாற்றம் வீசும் நீரும், பராமரிப்பில்லாத கழிவறைகளும், சிதிலமடைந்த கட்டிடங்களும் உள்ள அரசு விடுதிகளை வைத்துக் கொண்டு ஏழை எளிய மாணவர்களின் சமூக நீதியை நிலைநாட்டப்போவதாக திமுக அரசு பெயர் மாற்றம் செய்தது, மக்கள் வரிப்பணத்தைக் கையாடல் செய்ததை மறைக்கத்தானோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காரணம், 23 அரசு விடுதிகளில் நூலகம் அமைப்பதற்காக ரூ.21 லட்சம் செலவழிக்கப்பட்டுள்ளதாக திமுக அரசு மார்தட்டி வரும் வேளையில், பல நூலகங்களில் புத்தகங்களோ, முறையான இணையதள வசதியோ இல்லை. மாலையில் மாணவர்களுக்கு வழங்கவேண்டிய சிற்றுண்டி…
