புதுடெல்லி: பிஹார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்(எஸ்ஐஆர்) மூலமாக பல லட்சம் வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் முயற்சிக்கிறது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய ராகுல் காந்தி, ‘‘மக்களின் வாக்குகளை தேர்தல் ஆணையம் திருடுகிறது என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன’’ என்று கூறியிருந்தார். இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: வாக்குகள் திருடப்படுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறிய அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை, பொறுப்பற்றவை. குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் அனைத்து தேர்தல் அதிகாரிகளும் பாரபட்சமின்றியும் வெளிப்படையாகவும் பணியாற்றுகின்றனர். எனவே இதுபோன்ற பொறுப்பற்ற அறிக்கைகளைப் புறக்கணிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
Author: admin
Last Updated : 02 Aug, 2025 06:51 AM Published : 02 Aug 2025 06:51 AM Last Updated : 02 Aug 2025 06:51 AM இந்தி நடிகையான ஊர்வசி ரவுதெலா, தமிழில் ‘லெஜண்ட்’ படத்தில் நடித்துள்ளார். தெலுங்கிலும் நடித்துள்ள அவர், சமீபத்தில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியைப் பார்க்க லண்டன் சென்றார். அங்கு கேட்விக் விமான நிலையத்தில் ‘பேக்கேஜ் பெல்டி’ல் இருந்து அவருடைய சொகுசு சூட்கேஸ் திருடப்பட்டுள்ளது. அதில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள நகைகள் இருந்ததாகக் கூறியுள்ள அவர், இது தொடர்பாக எமிரேட்ஸ் விமான நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளார். அவர்கள் தரப்பில் எந்த உதவியும் வரவில்லை என்றும் வருத்தம் தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் இதுபற்றி பகிர்ந்துள்ள ஊர்வசி ரவுதெலா, “பேக்கேஜ் பெல்ட்டில் இருந்து சூட்கேஸ் திருடப்பட்டிருப் பது வருத்தமளிக்கிறது. இது விமான நிலைய பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்கும் செயல். இது அனைத்து பயணிகளுக்குமான பாதுகாப்பு பற்றிய…
மதுரை / தென்காசி: பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வரும்போது, அவரை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டால் கட்டாயம் ஏற்பாடு செய்வோம் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். மதுரை சிந்தாமணி பகுதியில் பாஜக தென் மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற நயினார் நாகேந்திரன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியது எதற்காக என்று தெரியவில்லை. அவர் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்புவரை, செல்போன் மூலமாக பேசிக் கொண்டுதான் இருந்தேன். அவர் விலகியதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. மோடியை சந்திக்க அனுமதி தரவில்லை என்பதால்தான், கூட்டணியில் இருந்து வெளியேறியதாக அவர் கூறுவது பற்றி எனக்குத் தெரியாது. என்னிடம் சொல்லியிருந்தால், நான் அனுமதி வாங்கித் தந்திருப்பேன். பழனிசாமி கொடுத்த அழுத்தத்தால்தான் ஓபிஎஸ் வெளியேறினார் என்று கூறுவதில் உண்மையில்லை. அவர் வெளியேறியது கூட்டணிக்கு பலவீனமா என்பது தேர்தலின்போதுதான் தெரியவரும். தமிழக…
புதுடெல்லி: அசைவ பால் மற்றும் மரபணு மாற்ற தானிய விவகாரங்களால் இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான வரி விகிதங்களை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த ஏப்ரலில் வெளியிட்டார். இதன்காரணமாக உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டது. அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளின் பங்கு சந்தைகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து வரி விகிதத்தை குறைப்பது தொடர்பாக பல்வேறு நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையை தொடங்கின. இந்திய தரப்பில் மூத்த பொருளாதார ஆலோசகர் ராஜேஷ் அகர்வாலும் அமெரிக்க தரப்பில் பிரென்டனும் கடந்த 5 மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் வேளாண் துறை சார்ந்த விவகாரங்களில் அமெரிக்காவின் கோரிக்கைகளை ஏற்க இந்தியா திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இதன்காரணமாக இரு நாடுகள் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாவதில் தொடர்ந்து காலதாமதம்…
ஒவ்வொரு தம்பதியிலும் கதைகள் உள்ளன. ஆனால் ஒன்றாக சிரிக்கும் தம்பதிகளுக்கு சிறந்த கதைகள் உள்ளன. நண்பர்களுடன் இரவு உணவிற்கு திரும்பப் பெறப்படும், அல்லது இரவில் தாமதமாக படுக்கையில் கிசுகிசுக்கப்படும் வகை. அபத்தமான தருணங்கள், சாத்தியமில்லாத சாகசங்கள், அல்லது ஒரு முறை கூட அவர்கள் இருவரும் மழையில் ஊறவைத்து, ஒரு வண்டியை வெறுங்காலுடன் எடுக்க வேண்டியிருந்தது.காலப்போக்கில், இந்த கதைகள் அவற்றின் உறவை ஒன்றாக வைத்திருக்கும் நூல்களாக மாறுகின்றன. விஷயங்கள் கடினமானதாக இருக்கும்போது, அவர்கள் திரும்பிப் பார்த்து, “எப்போது என்பதை நினைவில் கொள்ளுங்கள்…” என்று சொல்லலாம், மேலும் ஒரு கணம் கூட, அவர்கள் இன்னும் ஒரே அணியில் இருக்கிறார்கள் என்பதை உணருங்கள். சிரிப்பால் குற்றம் சாட்டப்பட்ட இந்த நினைவுகள் உணர்ச்சிபூர்வமான பசை என செயல்படுகின்றன. அவர்கள் மோசமான, வித்தியாசமான, வேடிக்கையான தருணங்களில் இருந்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் அவர்களுக்கு நினைவூட்டுகிறார்கள் – மேலும் அவர்கள் தீவிரமானவர்களையும் உயிர்வாழ்வார்கள்.
பெங்களூரு: கர்நாடகாவில் ரூ.15 ஆயிரம் ஊதியமாக பெற்ற முன்னாள் எழுத்தர் ஒருவரின் வீட்டில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் நடத்திய சோதனையில் 24 வீடுகள், 4 வீட்டு மனைகள், 40 ஏக்கர் நிலம் ஆகியவற்றின் ஆவணங்களும், ரூ.14 லட்சம் ரொக்கம், 350 கிராம் தங்க நகைகள், 1.5 கிலோ வெள்ளிப் பொருட்கள், 4 வாகனங்களும் சிக்கின. கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் ஊரக மேம்பாட்டு வாரியத்தில் எழுத்தராக பணியாற்றிய காளகப்பா நிதகுன்ட்டி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக லோக் ஆயுக்தா போலீஸாருக்கு புகார் வந்தது. அவர் தற்காலிக ஊழியராக மாதம் ரூ.15 ஆயிரம் ஊதியம் பெற்றுவந்த நிலையில், முன்னாள் அரசு பொறியாளர் சின்சோல்கருடன் இணைந்து ரூ.75 கோடி மதிப்பிலான அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை மேற்கொள்வதாக ஒப்பந்ததாரர்களிடம் பணம் வசூலித்ததாகவும் அதில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதையடுத்து லோக் ஆயுக்தா அதிகாரிகள் நேற்று கொப்பலில் உள்ள அவரது வீடு, அலுவலகம், அவரது சகோதரர் ஜெகன் குன்ட்டியின்…
தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள கல்பிகா கணேஷ், தமிழில் ‘பரோல்’ படத்தில் நடித்துள்ளார். இவர் சமீபகாலமாக அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். ஹைதராபாத்தில் உள்ள பப் ஒன்றுக்கு நண்பர்களுடன் சென்ற இவர், அங்கு ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பொருட்களைச் சேதப்படுத்தியதாக பப் நிர்வாகம் புகார் அளித்தது. இதனால் போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், இன்ஸ்டாகிராமில், தகாத வார்த்தைகளால் திட்டியதாக இளம் பெண் ஒருவர், சைபராபாத் போலீசில் கல்பிகா மீது புகாரளித்தார். இதுதொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பிரச்சினை நீதிமன்றம் வரை சென்றுள்ளது. சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றுக்குச் சென்ற அவர், அங்குள்ள மெனு கார்டுகளை வீசி, ரகளை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தனது மகள் மனநலப் பிரச்சினையில் சிக்கி இருப்பதாக அவருடைய தந்தை சங்கவர் கணேஷ், கச்சுபவுலி போலீஸில் புகார் அளித்துள்ளார். அதில், “கல்பிகா கடுமையான மனநலப் பிரச்சினையால் போராடி வருகிறார். அது…
விழுப்புரம் / சென்னை: பாமக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கை: பாமக நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ் உத்தரவுபடி, திண்டிவனம் – புதுச்சேரி செல்லும் வழியில் உள்ள பட்டானூர் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் வரும் 17-ம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர நிர்வாகிகள் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ராமதாஸ் நடத்துக்கும் கூட்டத்துக்கு போட்டியாக ஆக. 9-ம் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்று பாமக தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அன்புமணி மற்றும் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் வெளியிட்ட அறிக்கையில், “பாமக பொதுக்குழுக் கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கான்ப்ளுயன்ஸ் அரங்கில் ஆக. 9-ம் தேதி நடைபெறும். பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாது பங்கேற்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் குழப்பமடையும்போது அவர்களை வெட்கப்பட வேண்டாம், எவ்வாறு பழுதுபார்ப்பது என்பதை அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்எந்த குழந்தையும் எல்லா நேரத்திலும் கருணை காட்டவில்லை. அவர்கள் சராசரி விஷயங்களைச் சொல்லப் போகிறார்கள். அவர்கள் பொம்மைகளைப் பிடிப்பார்கள், உடன்பிறப்புகளைக் கத்துவார்கள், அல்லது பகிர்ந்து கொள்ளும்படி கேட்கும்போது கண்களை உருட்டுவார்கள். அது சாதாரணமானது. முக்கியமானது இந்த தருணங்களைத் தவிர்ப்பது அல்ல, அவற்றை நீங்கள் எவ்வாறு கையாளுகிறீர்கள் என்பதுதான்.கத்த அல்லது வெட்கப்படுவதற்கு பதிலாக, இடைநிறுத்தம். மற்ற நபர் எப்படி உணர்ந்தார் என்று அவர்கள் நினைக்கிறார்கள் என்று அவர்களிடம் கேளுங்கள். அவர்களுக்கு வார்த்தைகளைக் கொடுங்கள்: “மன்னிக்கவும், ‘மன்னிக்கவும், நான் உங்கள் உணர்வுகளை காயப்படுத்துகிறேன்’?” தருணத்தை எவ்வாறு சரிசெய்வது, அவர்கள் செய்ததை எவ்வாறு சொந்தமாக்குவது, அதை எவ்வாறு சரியாக உருவாக்குவது என்பதை அவர்களுக்குக் காட்டுங்கள்.இது உணர்ச்சி தசைகளை உருவாக்குகிறது. கருணை சரியானது அல்ல என்பதை இது அவர்களுக்குக் கற்பிக்கிறது, அவர்கள் ஒருவரை காயப்படுத்தும்போது கவனிப்பதும் அதை சரிசெய்ய முயற்சிப்பதும் ஆகும். பல…
லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 224 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 8 விக்கெட்களை இழந்து 242 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றது. லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 64 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்தது. கருண் நாயர் 52, வாஷிங்டன் சுந்தர் 19 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி மேற்கொண்டு 20 ரன்களை சேர்ப்பதற்குள் எஞ்சிய 4 விக்கெட்களையும் தாரை வார்த்தது. கருண் நாயர் 109 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்த நிலையில் ஜோஷ் டங்கின் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார். வாஷிங்டன் சுந்தர் 55 பந்துகளில்,…
