Author: admin

வீட்டு மனை பிரிவுக்கு அப்ரூவல் கேட்கும் ரியல் எஸ்டேட் காரர்களிடம் ‘கவனிக்கச்’ சொல்லி கை நீட்டுவது அரசியல் வாதிகளுக்கு பழகிப் போன சமாச்சாரம் தான். ஆனால், வேலூர் மேயர் தரப்பும் எம்எல்ஏ தரப்பும் பிளாட்களை குறைந்த விலைக்கு எழுதிக் கேட்பதாக அதிமுக-வினர் பகீர் குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். வேலூர் மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் மனைப்பிரிவுக்கு ஒப்புதல் கேட்டு மாதக்கணக்கிலும், ஆண்டுக் கணக்கிலும் பலரும் காத்திருக்கின்றனர். மனைப் பிரிவுக்கு ஒப்புதல் தரவேண்டுமானால் இடத்தின் மதிப்புக்கு ஏற்ற விதத்தில் சம்திங் கொடுக்க வேண்டும் அல்லது அதற்கு நிகரான விலையில் பிளாட்களை பத்திரம் பதிந்து கொடுக்க வேண்டும் என மாநகராட்சி தரப்பில் கண்டிஷன் போடுவதாலேயே இந்தத் தேக்க நிலை என்கிறார்கள். வேலூரைச் சேர்ந்த தொழில​திபர் தண்​ட​பாணி என்​பவர் மாநக​ராட்சி எல்​லைக்​குள் வசந்​த​புரம் பகு​தி​யில் உள்ள தனது பூர்விக சொத்​தான சுமார் 1.74 ஏக்​கர் நிலத்தை வீட்டு மனை​களாக பிரித்து கடந்த 2022-ல் லே அவுட் அப்​ரூவலுக்கு…

Read More

விழுப்புரம்: அன்​புமணி​யின் நடைபயணத்தை மக்​களும், கட்​சி​யினரும் ஏற்க மாட்​டார்​கள் என்று பாமக நிறு​வனர் ராம​தாஸ் கூறினார். விழுப்​புரம் மாவட்​டம் திண்​டிவனம் அடுத்த தைலாபுரத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: பாமக​வின் வேர் தைலாபுரத்​தில் மட்​டும்​தான் இருக்​கிறது. கட்​சிக்கு நிறு​வனர்​-தலை​வர் இரண்​டும் நான்​தான். பாமக தலை​வர் என்று வேறுயாரையும் (அன்​புமணி) குறிப்​பிடக் கூடாது. தலை​மைக்​கும், தலை​வருக்​கும் கட்​டுப்​ப​டா​மல் யாத்​திரை செல்​வ​தால் துளி​யும் பயனில்​லை. தொண்​டரும், மக்​களும் அன்​புமணி​யின் நடைபயணத்தை ஏற்க மாட்​டார்​கள். இது தொடர்​பாக காவல் துறை மற்​றும் உள்​துறை தலை​மைக்கு முறைப்​படி புகார் கொடுத்​துள்​ளோம். எனது கட்​டளையை மீறி நடைபயணம் செல்​லும் அன்​புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்​பது தேவையற்​றது. எனது வீட்​டில் வைக்​கப்​பட்ட ஒட்​டு​கேட்​புக் கருவி கிளியனூர் காவல் நிலைய ஆய்​வாளரிடம் ஒப்​படைக்​கப்​பட்​டது. இந்​திய அளவில் திறமை​யான தமிழக சைபர் க்ரைம் போலீ​ஸார் விசா​ரணை நடத்​தி​னால், 2 நாட்​களில் கரு​வியை வைத்​தவரைக் கண்​டு​பிடித்​து​விடலாம். இது தொடர்​பாக சைபர் க்ரைம் மற்​றும்…

Read More

தூத்துக்குடி: காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்ட ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினர். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங் கலத்தை சேர்ந்த மென்பொருள் பொறியாளரான கவின் செல்வ கணேஷ் (27). இவர், கடந்த 27-ம் தேதி திருநெல்வேலி கேடிசி நகர் பகுதியில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, இவர் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சாதி மாறி காதலித்ததால் நடந்த இந்த கொலை தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சுர்ஜித்தின் தாய், தந்தை ஆகிய இருவரும் காவல்துறையில் உதவி ஆய்வாளர்களாக பணிபுரி கின்றனர். அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரையும் கைது செய்ய வலியுறுத்தி,…

Read More

சென்னை: சிங்​கப்​பூரின் 60-வது தேசிய தினத்தை முன்​னிட்டு ‘சிங்கா 60’ கலைத் திரு​விழா சென்​னை​யில் நேற்று தொடங்​கியது. முதல் நாள் நிகழ்ச்​சி​யில் இடம்​பெற்ற இந்​தி​ய-சிங்​கப்​பூர் ஓவிய, சிற்​பக்​கலைஞர்​களின் படைப்​பு​கள் பார்​வை​யாளர்​களை வியக்க வைத்​தன. சிங்​கப்​பூர் நாட்​டின் 60-வது தேசிய தினம் விரை​வில் கொண்​டாடப்பட உள்ள நிலை​யில், ‘இந்து தமிழ் திசை’, ‘தி இந்து’ மற்​றும் ‘தி இந்து பிசினஸ் லைன்’ இணைந்து சென்​னை​யில் ‘சிங்கா 60’ என்ற பிரம்​மாண்ட கலை திரு​விழாவை 10 நாட்​கள் நடத்​துகின்​றன. இசை, நாடகம், ஆவணப் ​படம், அரசி​யல், கலை, கலாச்​சா​ரம், சமையல், குழு விவாதம், கருத்​தரங்​கம் என பல்​சுவை நிகழ்ச்​சிகளை உள்​ளடக்​கிய இத்​திரு​விழா அடை​யாறு பத்​ம​நாபா நகரில் உள்ள ஃபோரம் ஆர்ட் கேலரி​யில் நேற்று கோலாகல​மாக தொடங்​கியது. இக்​கண்​காட்​சியை சிங்​கப்​பூர் துணை தூதர் எட்​கர் பாங்க் தொடங்​கி​வைத்து பார்​வை​யிட்​டார். அவர் பேசும்​போது, “சிங்​கப்​பூர் தனது 60-வது தேசிய தினத்தை கொண்​டாடும் வேளை​யில் இந்​தி​யா-சிங்​கப்​பூர் இரு நாடு​களுக்கு…

Read More

சென்னை: ‘வேர்​களைத் தேடி’ திட்​டத்​தின்​கீழ் 14 நாடு​களில் இருந்து தமிழகம் வந்​துள்ள 99 அயலக தமிழ் இளைஞர்​களின் பண்​பாட்டு சுற்​றுப் பயணத்தை சென்​னை​யில் முதல்​வர் ஸ்டா​லின் தொடங்கி வைத்​தார். இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: அயலகத் தமிழ் இளைஞர்​களுக்​கான ‘வேர்​களைத் தேடி’ என்ற கலாச்​சார பரி​மாற்ற சுற்​றுலா திட்​டத்தை சிங்​கப்​பூரில் கடந்த 2023-ல் நடை​பெற்ற தமிழ் கலை, பண்​பாட்டு நிகழ்ச்​சி​யில் முதல்​வர் ஸ்டா​லின் தொடங்கி வைத்​தார். தமிழ் கலை, பண்​பாடு, கலாச்​சா​ரத்தை அயலக தமிழர்​களிடம் பரி​மாற்​றம் செய்​வது, புலம்​பெயர்ந்து வாழும் இளைஞர்​களுக்கு தமிழகத்​தின் ‘மரபின் வேர்​களோடு’ உள்ள தொடர்பை புதுப்​பிப்​பது ஆகிய​வையே இதன் நோக்​கம். அதன்​படி, ஆண்​டு​தோறும் அயல​கத்​தில் வாழும் 18-30 வயது தமிழ் இளைஞர்​கள் தேர்ந்​தெடுக்​கப்​படு​வார்​கள். அவர்​கள் தமிழகத்​துக்கு அழைத்து வரப்​பட்​டு, தமிழக அரசு சார்​பில் வரலாற்று சிறப்​புமிக்க இடங்​களுக்கு சுற்​றுலா அழைத்​துச் செல்​லப்​படு​வார்​கள். தமிழின் தொன்​மை, தமிழர் வாழ்​வியல், கலாச்​சா​ரம், கட்​டிடம், சிற்​பக்​கலை, நீர் மேலாண்​மை, ஆடை,…

Read More

கால்சியம் குறைபாடு அல்லது ஹைபோகல்சீமியா, உடலில் உள்ள கால்சியம் அளவு இயல்பை விடக் குறையும் போது ஏற்படுகிறது, இது தசை இயக்கம், நரம்பு சமிக்ஞை மற்றும் எலும்பு வலிமை போன்ற முக்கிய செயல்பாடுகளை பாதிக்கிறது. பெரும்பாலும் மருத்துவ நிலைமைகள், மருந்துகள் அல்லது உணவைக் காட்டிலும் மோசமான உறிஞ்சுதல் ஆகியவற்றால் ஏற்படுகிறது, இந்த குறைபாடு தசைப்பிடிப்பு, சோர்வு, உடையக்கூடிய நகங்கள், வறண்ட சருமம் மற்றும் பல் பிரச்சினைகள் போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கும். கடுமையான சந்தர்ப்பங்களில், இது வலிப்புத்தாக்கங்கள், ஒழுங்கற்ற இதய துடிப்புகள் அல்லது ஆஸ்டியோபோரோசிஸை ஏற்படுத்தக்கூடும். விரல்களில் கூச்சம் அல்லது அடிக்கடி தசை வலி போன்ற ஆரம்ப அறிகுறிகளை அங்கீகரிப்பது அவசியம். சரியான நேரத்தில் நோயறிதல் மற்றும் சரியான சிகிச்சையானது, கூடுதல் மற்றும் உணவு மாற்றங்கள் உட்பட, கால்சியம் குறைபாட்டின் நீண்டகால சிக்கல்களைத் தடுக்க உதவும்.கால்சியம் குறைபாடு மற்றும் அதன் பொதுவான அறிகுறிகள் மற்றும் அறிகுறிகளைப் புரிந்துகொள்வது எலும்பு வலிமை, தசை சுருக்கம்…

Read More

திருச்சி: திருச்சி மாவட்டம் துவாக்குடிமலையில் இயங்கி வரும் திருச்சி மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பள்ளி மே 8-ம் தேதி தமிழக முதல்வரால் திறந்துவைக்கப்பட்டது. இப்பள்ளியில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். உண்டு, உறைவிட பள்ளியான இதில், தமிழகத்தின் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த வேலூர் மாவட்டம் கொடியநத்தம் வசந்தநகர் எம்.குப்பம் பகுதியைச் சேர்ந்த பலராமன் மகன் யுவராஜ்(17) என்பவர் நேற்று காலை விடுதி அறையில் உள்ள மின் விசிறியில் கேபிள் வயரில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்த துவாக்குடி போலீஸார், அங்கு சென்று யுவராஜ் உடலை திருச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.…

Read More

இத்தாலியில் தயாரிக்கப்பட்ட மற்றும் 83 2.83 லட்சம் விலையில் இந்த ஆடை, மெதுவாக எரியும் ஏ-லைன் பாவாடையுடன் ஒரு உருவம்-கட்டிப்பிடிக்கும் மேல் பாதியைக் கொண்டுள்ளது-இது ஒரு நேர்த்தியான, உலகளவில் புகழ்ச்சி அளிக்கும் வெட்டு. ஆனால் இந்த பகுதியை உண்மையிலேயே ஒதுக்கி வைக்கும் விவரங்கள்: பல பாக்கெட்டுகள் (ஆம், ஃபேஷன் செயல்படக்கூடும்), புலப்படும் சீம்கள் மற்றும் தங்க ஸ்னாப் பொத்தான்கள் மினிக்கு அதன் ஸ்மார்ட், வடிவமைக்கப்பட்ட விளிம்பைக் கொடுத்தன. காதல் மலர் ஜாகார்ட் ஒரு மென்மையான பரிமாணத்தை சேர்த்தது, கட்சி-தயார் முதல் ஓடுபாதை-தகுதியானதாக குழுமத்தை உயர்த்தியது.

Read More

வாஷிங்டன்: உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான புதிய வரி விதிப்பு நடவடிக்கை ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்திய பொருட்களுக்கான 25 சதவீத வரி விதிப்பு மாற்றமின்றி நீடிக்கும் நிலையில், பாகிஸ்தானுக்கான வரியை 10 சதவீதம் குறைத்து ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க அதிபராக ட்ரம்ப் கடந்த ஏப்ரல் மாதம் பதவியேற்றார். அப்போது, ‘‘அமெரிக்க பொருட்களுக்கு பிற நாடுகள் எந்த அளவுக்கு வரி விதிக்கிறதோ, அதே அளவுக்கு அமெரிக்காவும் பதில் வரி விதிக்கும்’’ என்று அறிவித்தார். இந்தியாவுக்கு முதலில் 26 சதவீத வரி விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பிறகு, அமெரிக்காவின் விடுதலை நாளை முன்னிட்டு அந்த வரி 1 சதவீதம் குறைக்கப்பட்டு 25 சத வீதமாக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த வரி விதிப்பை தவிர்க்கும் வகையில், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள ஜூலை 9-ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டது.…

Read More

திருநெல்வேலி: நெல்லையில் ஆணவக் கொலையான கவின் செல்வகணேஷ் உடல் அவரது தந்தை சந்திரசேகர், தம்பி பிரவீன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஐந்து நாட்களுக்குப் பின்னர் கவினின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டுள்ளனர். முன்னதாக, அமைச்சர் கே.என்.நேரு நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் ஆகியோர் கவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். கவின் உடல் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் கிராமத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூக இளைஞரான மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் கடந்த 27-ம் தேதி திருநெல்வேலி கேடிசி நகரில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இவர் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரன் சுர்ஜித் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சாரணடைந்த நிலையில், சுர்ஜித் மற்றும் அவரது பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.…

Read More