ஆதாரம்: வாஷிங்டன் போஸ்ட் உலகளவில் மிகவும் பரவலாக நுகரப்படும் பிரதான உணவுகளில் ஒன்றான உருளைக்கிழங்கு, சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டிஸ் மலைகளில் முதலில் வளர்க்கப்பட்டது. அதன் மகத்தான விவசாய மற்றும் பொருளாதார முக்கியத்துவம் இருந்தபோதிலும், உருளைக்கிழங்கின் ஆழ்ந்த பரிணாம தோற்றம் நிச்சயமற்றதாகவே இருந்தது, ஏனெனில் தாவரங்கள் அரிதாகவே வலுவான புதைபடிவ ஆதாரங்களை விட்டுவிடுகின்றன. இப்போது, விஞ்ஞானிகள் அதன் வம்சாவளியை ஒன்பது மில்லியன் ஆண்டுகளுக்கு பின்னால் கண்டுபிடித்துள்ளனர், இன்றைய உருளைக்கிழங்கு ஒரு பண்டைய தக்காளி மூதாதையருக்கும் எட்டூபெரோசம் என்று அழைக்கப்படும் ஒரு காட்டு, காசநோயற்ற தாவரத்திற்கும் இடையிலான ஒரு கலப்பினத்தின் விளைவாகும் என்பதைக் கண்டறிந்துள்ளது. இந்த திருப்புமுனை உருளைக்கிழங்கு அவர்களின் கிழங்கு உருவாக்கும் திறனைப் பெற்றது, கடுமையான தட்பவெப்பநிலைகளுக்கான ஒரு முக்கியமான தழுவல், மற்றும் இறுதியில் 100 க்கும் மேற்பட்ட காட்டு உருளைக்கிழங்கு இனங்களுக்கு வழிவகுத்தது என்பதை விளக்குகிறது.எப்படி ஒரு ஆலை போன்ற தக்காளி முதல் உருளைக்கிழங்கை உருவாக்க காட்டு இனங்கள்…
Author: admin
லண்டன்: இங்கிலாந்து உடனான கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 52 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்த போட்டியின் 2-ம் நாள் ஆட்டத்தின் ஹைலைட்ஸ் குறித்து பார்ப்போம். ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டி கடந்த வியாழக்கிழமை லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 224 மற்றும் இங்கிலாந்து 247 ரன்கள் எடுத்தன. இந்திய அணி தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்துள்ளது. 2-ம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியை 224 ரன்களில் ஆல் அவுட் செய்த பிறகு இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஸாக் கிராவ்லி மற்றும் பென் டக்கெட் இணைந்து அதிரடி தொடக்கம் கொடுத்தனர். இந்திய அணியின் பந்துவீச்சை வெளுத்து கட்டினர். 12.5 ஓவர்களில் 92 ரன்கள் சேர்த்தனர். டக்கெட் 38 பந்துகளில் 43…
சென்னை: மருத்துவர்களையும், மருத்துவமனையையும் நாடுபவர்களை நோயாளிகள் என்றழைக்காமல், மருத்துவப் பயனாளிகள் என்றழைக்கலாம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) காலை தொடங்கிவைத்துப் பேசியது: “சில நாட்களுக்கு முன்னர் எனக்கு தலைசுற்றல் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கே சில பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்று அனுமதிக்கப்பட்டேன். அங்கு இருந்தபோதும் கூட முக்கியமான அரசு அலுவல்களை மேற்கொண்டேன். ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் பற்றி அதிகாரிகள், ஆட்சியர்கள், மக்களிடம் ஆலோசனை செய்தேன். தூத்துக்குடி வந்த பிரதமரிடம் தமிழக அரசின் கோரிக்கை மனுவை அளிக்க ஒப்புதல் வழங்கினேன். உடல்நலன் பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதே எனது இலக்கு. மருத்துவமனையிலிருந்து திரும்பிய பின்னர் நான் கலந்து கொண்டு பேசிய முதல் நிகழ்ச்சி இதுவே. நான் ஆட்சிக்கு வந்தபோது, கரோனா 2-வது அலையின் தாக்கத்தால் தமிழக அரசு மிகுந்த நெருக்கடியில் இருந்தது. நான்…
சென்னை: தங்கம் விலை இன்று ஒரே நாளில் பவுன் ஒன்றுக்கு ரூ.1,120 ஏற்றம் கண்டுள்ளது. இதனால் ஒரு பவுன் ரூ.74,320-க்கு விற்பனை ஆகிறது. ஆபரணத் தங்கம் நேற்று ஒரு பவுன் ரூ.73,200 என இருந்தது குறிப்பிடத்தக்கது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய காரணிகளாக உள்ளன. கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் ஒரு பவுன் தங்கம் ரூ.58 ஆயிரமாக இருந்தது. பின்னர் தங்கம் விலை படிப்படியாக உயர்ந்தது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கும் நடைமுறை குறித்த அந்த நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் அறிவிப்புக்கு பின்னர் தங்கம் விலை உயர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது. தற்போது ஆடி மாதம் என்பதால் தமிழகத்தில் திருமணம் மாதிரியான சுப நிகழ்ச்சிகள் அதிகம் திட்டமிடப்படாத நிலையில் தங்கம் விலை உயர்ந்துள்ளதும் கவனிக்தக்கது. மேலும், வரும் ஆவணி மாத முகூர்த்த…
ஒரு குழந்தையாக குழந்தைகள் புத்தகத்தில் தொலைந்து போவதற்கான மந்திர உணர்வு நினைவில் இருக்கிறதா? பெரியவர்களாக, அதே பக்கங்களை மறுபரிசீலனை செய்வது ஒரு நேர காப்ஸ்யூலைத் திறப்பது மற்றும் நீங்கள் முன்பு அணுக முடியாத ஞானம் மற்றும் உணர்ச்சியின் அடுக்குகளைக் கண்டுபிடிப்பது போல் உணரலாம்.இந்த கதைகள் தாங்க ஒரு காரணம் இருக்கிறது. குழப்பமான காலங்களில், அவை தெளிவு அளிக்கின்றன. உலகம் அபத்தமானது அல்லது அதிகமாக உணரும்போது, அவை ஆறுதல் அளிக்கின்றன. குழந்தைகளின் இலக்கியம் பெரியவர்களுக்கு தாழ்மையான, பரிவுணர்வு மற்றும் வாழ்க்கையின் குழப்பத்தை எளிமையான, ஆனால் அர்த்தமுள்ள வழிகளில் பிடுங்குவதன் மூலம் அடித்தளமாக இருக்க உதவுகிறது. பல பெரியவர்கள் ஆழமாக நகரும், சில நேரங்களில் வாழ்க்கை கூட துரிதப்படுத்தும் பத்து நம்பமுடியாத புத்தகங்கள் இங்கே. ஒவ்வொன்றும் நீங்கள் நீண்ட காலம் வாழ்ந்ததும், இன்னும் ஆழமாக உணர்ந்ததும் வித்தியாசமாக தாக்கும் கருப்பொருள்களையும் உண்மைகளையும் கொண்டு செல்கிறது.
Last Updated : 02 Aug, 2025 07:29 AM Published : 02 Aug 2025 07:29 AM Last Updated : 02 Aug 2025 07:29 AM புதுடெல்லி: இந்தியர்களிடமிருந்து டிஜிட்டல் மோசடிகள் மூலமாக கடந்த 2024-ம் ஆண்டில் ரூ.23,000 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதாக டேட்டாலீட்ஸ் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மேலும் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2024-ல் சைபர் குற்றவாளிகள் மூலம் ரூ.22,842 கோடியை இந்தியர்கள் இழந்துள்ளனர். இந்த நிலையில், நடப்பாண்டில் இந்தியர்கள் டிஜிட்டல் மோசடி மூலம் இழக்கும் தொகை ரூ.1.2 லட்சம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று, சைபர் குற்றங்கள் தொடர்பாக 2024-ல் சுமார் 20 லட்சம் பேர் புகார் அளித்துள்ளனர். லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்… Follow FOLLOW US
சென்னை: தமிழகத்தில் திடக்கழிவு மேலாண்மையில் ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்குவதற்காக தூய்மை தமிழ்நாடு நிறுவனம் மற்றும் சென்னை ஐஐடி இடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு முன்னெடுப்புகளில் தற்போது தமிழகத்தில் உள்ள நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் தினந்தோறும் உருவாகும் திடக்கழிவுகளை மேலாண்மை செய்வதில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் தூய்மை இயக்கம் என்ற ஒருங்கிணைந்த அமைப்பு சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின்கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பம்: இந்த இயக்கத்தை செயல்படுத்த தூய்மை தமிழ்நாடு நிறுவனம் என்ற அமைப்பு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தூய்மை இயக்கத்தின்கீழ் உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் மாநிலத்துக்கான நிலையான கழிவு மேலாண்மை தீர்வுகளுக்கான நடவடிக்கைகளை தூய்மை தமிழ்நாடு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, தூய்மை தமிழ்நாடு நிறுவனம் மாநிலம் முழுவதும் உருவாகும் திடக்கழிவுகளை அறிவியல்பூர்வமாக நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி சரியான…
ஒரு சிறிய மன விளையாட்டுக்கான நேரம்! இதை ஒரு ஷாட் கொடுத்து, சேர்க்கையை யூகிக்கவும்: இது மாவுச்சத்து, சுவையற்றது, மணமற்றது, மற்றும் ஒவ்வொரு தொகுக்கப்பட்ட உணவுப் பொருள்களிலும், புரதம் நிறைந்த உணவுகள் முதல் குழந்தை சூத்திரம் வரை காணப்படுகிறது. ஆயினும்கூட, பெரும்பாலான மக்கள் இதைக் கேள்விப்பட்டதில்லை, அதன் விளைவுகளை கேள்வி எழுப்பியது. இந்த பொதுவான உணவு சேர்க்கையை நாங்கள் இப்போது பல ஆண்டுகளாக உட்கொண்டு வருகிறோம், ஆனால் அதன் மோசமான விளைவுகளுக்கு யாரும் அதை ஒப்புக் கொள்ளவில்லை. தொகுக்கப்பட்ட உணவுகளை தடிமனாக்க, பாதுகாக்க அல்லது இனிமையாக்க இது பயன்படுகிறது, இது விஞ்ஞானிகளிடையே சிவப்புக் கொடிகளை உயர்த்துகிறது, இது நம் குடல் ஆரோக்கியத்தை அமைதியாக எவ்வாறு சீர்குலைக்கக்கூடும்.ஒழுங்குமுறை நிறுவனங்களால் பெரும்பாலும் “பாதுகாப்பானது” என்று பெயரிடப்படுகிறது, புதிய ஆராய்ச்சி மால்டோடெக்ஸ்ட்ரின் நல்லதை விட அதிக தீங்கு செய்யக்கூடும் என்று கூறுகிறது. அழற்சி குடல் நிலைமைகள், இரத்த சர்க்கரை கூர்முனைகள் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு…
பெங்களூரு: பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடக முன்னாள் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் மஜத முன்னாள் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து அவரது வீட்டு பணிப்பெண், மஜத கிராம பஞ்சாயத்து தலைவி உட்பட 5 பெண்கள் பிரஜ்வலுக்கு எதிராக புகார் அளித்தனர். அதன்பேரில் அவர் மீது 5 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறப்பு விசாரணை பிரிவு போலீஸார் இவ்வழக்கில் 1,632 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். பெங்களூருவில் மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு…
சென்னை: மெட்ரோ ரயில்களில் நடப்பாண்டு ஜூலை மாதத்தில் ஒரு கோடியே 3 லட்சத்து 78 ஆயிரத்து 835 பேர் பயணம் செய்துள்ளனர். இது சென்னை மெட்ரோ ரயில் வரலாற்றிலேயே அதிக பட்ச எண்ணிக்கையாகும். இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு 10 ஆண்டு நிறைவு பெற்ற நிலையில், ஜூலை மாதத்தில் பயணித்த பயணிகள் எண்ணிக்கை சாதனை அளவாக உள்ளது. ஜூலை மாதத்தில் க்யூஆர் குறியீடு முறையைப் பயன்படுத்தி 45 லட்சத்து 66 ஆயிரத்து 58 பேரும், பயண அட்டைகளை பயன்படுத்தி 6 லட்சத்து 55 ஆயிரத்து 991 பேரும், சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி 51 லட்சத்து 56 ஆயிரத்து 786 பேரும் பயணம் செய்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
