சென்னை: டிஎன்பிஎஸ்சி மூலமாக, 400 உதவி பொறியாளர்கள், 1,850 கள உதவியாளர்களை தேர்வு செய்ய மின் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. மின் வாரியத்தில் உதவி பொறியாளர், கள உதவியாளர், கேங்மேன், லைன்மேன் போன்ற பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்துகின்றன. மின் வாரிய பணியாளர்கள் வாரியத்தின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு முதல் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்படுகின்றனர். இந்நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு முதல் உதவிப் பொறியாளர் உட்பட ஒரு சில பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்ற 258 உதவி பொறியாளர்கள் விரைவில் பணியில் சேர்க்கப்பட உள்ளனர். இந்நிலையில். தற்போது 400 உதவி பொறியாளர்கள் மற்றும் 1850 கள உதவியாளர்களை டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வு செய்ய மின் வாரியம் ஒப்புதல் ஒப்புதல் வழங்கியுள்ளது. டிஎன்பிஎஸ்சியின் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள்…
Author: admin
சிவகாசி: ஆடிப்பெருக்கையொட்டி சிவகாசியில் உள்ள அச்சகங்களில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு 2026-ம் ஆண்டுக்கான காலண்டர் ஆல்பம் வெளியிடப்பட்டது. சட்டப்பேரவை தேர்தல் வர உள்ளதால் அரசியல் கட்சிகளின் ஆர்டர்கள் அதிகம் வருவதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிவகாசியில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலுக்கு அடுத்தபடியாக அச்சுத்தொழில் பிரதானமாக உள்ளது. சிவகாசியில் உள்ள 150-க்கும் அதிகமான அச்சகங்களில் நோட்டுப் புத்தகங்கள், டைரிகள், காலண்டர்கள் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. இதில் 50-க்கும் அதிகமான அச்சகங்கள் பிரத்யேகமாக காலண்டர் தயாரிப்பில் மட்டும் ஈடுபட்டுள்ளன. இங்கு ஆண்டு தோறும் ஆடிப்பெருக்கு தினத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, அடுத்த ஆண்டுக்கான காலண்டர் ஆல்பம் வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி நேற்று ஆடிப்பெருக்கையொட்டி சிவகாசியில் உள்ள அச்சகங்களில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு 2026-ம் ஆண்டுக்கான காலண்டர் ஆல்பம் வெளியிடப்பட்டது. ரூ.25 முதல் ரூ.2,500 வரை பல்வேறு வடிவங்களில் தினசரி காலண்டர்கள், மேஜை காலண்டர்கள், மாத காலண்டர்கள் என 350-க்கும் மேற்பட்ட வடிவங்களில் காலண்டர்கள் தயாரிக்கப்பட…
பாபட்லா: ஆந்திர மாநிலம் பாபட்லா அருகே உள்ள கிரானைட் குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதுகுறித்து ஆந்திர மாநில காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் பல்லிகுரவா கிராமத்துக்கு அருகே உள்ள சத்யகிருஷ்ணா கிரானைட் குவாரியில் நேற்று காலை 16 தொழிலாளர்கள் பணியில் இருந்துள்ளனர். அப்போது, திடீரென பாறைகள் சரிந்து விழுந்ததில், 6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 10 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு நரசராவ்பேட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. பாறைகளுக்கு அடியில் சிக்கியவர்களின் உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை 2 தொழிலாளர்களின்…
சென்னை: நீலகிரி, கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், குமரிக் கடலை ஒட்டியுள்ள பகுதிகளிலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 5-ம் தேதி வரை பெரும்பாலான பகுதிகளிலும், 7, 8, 9-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் அதிகனமழையும், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை…
பெங்களூரு: வீட்டு பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடக முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு (34) சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், சிறையில் அவர் கண்ணீர் விட்டு அழுதார். இதுகுறித்து சிறைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு பாலியல் வன்கொடுமை வழக்கில் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, அவர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு கைதி எண் 15528 வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், தண்டனைக்கான முதல் இரவை அவர் சிறையில் கழித்தார். கண்ணீர் விட்டு அழுததுடன், மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதை உறுதி செய்வதற்காக சிறை மருத்துவர்கள் அன்று இரவு அவரது உடல்நிலையை பரிசோதித்தனர். அப்போது, தனது வேதனைகளை மருத்துவர்களிடம் அவர் வெளிப்படுத்தியுள்ளார். இந்த தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளதாகவும்…
மும்பை: ’ராஞ்சனா’ படத்தின் க்ளைமாக்ஸ் ஏஐ மூலம் மாற்றப்பட்டு இருப்பதற்கு நடிகர் தனுஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திப் பட இயக்குநர் ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம், ‘ராஞ்சனா’. 2013-ம் ஆண்டு வெளியான இப்படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானார் தனுஷ். ஏ.ஆர்.ரஹ்மான் இசை, நாயகியாக சோனம் கபூர் என பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியாகி வரவேற்பையும் பெற்றது. தமிழில் ‘அம்பிகாபதி’ என்ற பெயரிலும் வெளியானது. தற்போது இப்படத்தினை அப்ஸ்விங் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் நவீன தொழில் நுட்பத்துடன் வெளியிட்டு இருக்கிறது. இதற்காக படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியினை ஏஐ தொழில்நுட்ப உதவியுடம் மாற்றியமைத்திருக்கிறது. இது படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது. அண்மையில் இது குறித்து இயக்குநர் ஆனந்த் எல்.ராய் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், தற்போது நடிகர் தனுஷும் இந்த விவகாரத்துக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏஐ மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸுடன் ‘ராஞ்சனா’ படம் ரீ-ரிலீஸ் ஆனது எனக்கு…
புதுடெல்லி: இந்திய பாட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவாலும், அவரது கணவரும் முன்னாள் பாட்மிண்டன் வீரருமான பருபள்ளி காஷ்யப்பும் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக அறிவித்தனர். “நன்கு யோசித்து மற்றும் பரிசீலித்து நானும் காஷ்யப்பும் பிரிவதாக முடிவு செய்துள்ளோம். எங்கள் இருவரின் வளர்ச்சி மற்றும் அமைதிக்காக நாங்கள் பரஸ்பரமாக எடுத்த முடிவு இது. வருங்காலம் சிறந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்” என்று சமூக வலைதள பதிவு மூலம் சாய்னா நேவால் அறிவித்தார். இந்த நிலையில் பிரிவதாக அறிவித்த 19 நாட்களில் தனது முடிவை மாற்றிக் கொண்டிருக்கிறார் சாய்னா நேவால். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த சாய்னா, “சில நேரங்களில் இருப்பின் மதிப்பை தூரம் கற்றுக்கொடுக்கிறது. இதோ – மீண்டும் முயற்சிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். சாய்னா நேவாலின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.…
விஜய் டிவியில் 10 வருடங்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பல்வேறு போட்டியாளர்கள் திரையுலகின் பாடகர்களாக வலம் வருகின்றனர். இன்னும் பலர் சுயாதீன இசைக் கலைஞர்களாகவும் உள்ளனர். பிரபல முன்னணி பாடகர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் 11-வது சீசன் ஆகஸ்ட் 2 முதல் தொடங்கியது. இதில் டெல்டா தமிழ், கொங்கு தமிழ், எங்கும் தமிழ் சென்னை தமிழ் என இந்த முறை பங்கேற்பாளர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சீசனில் இயக்குநர் மிஷ்கின் நடுவராக பங்கேற்றுள்ளார். பல்வேறு திரைப்படங்களிலும் மேடை நிகழ்ச்சிகளிலும் பாடல்கள் பாடியுள்ள மிஷ்கின், ‘டெவில்’ படத்துக்கு இசையமைத்திருந்தார். மேலும் மேடை பேச்சுகளிலும் பேட்டிகளிலும் அவரது ஆழமான இசையறிவு வெளிப்படும். இந்த சூழலில் முதல்முறையாக ரியாலிட்டு நிகழ்ச்சி ஒன்றில் மிஷ்கின் நடுவராக பங்கேற்கிறார். இதில் உன்னி கிருஷ்ணன், அனுராதா ஶ்ரீராம், தமன் ஆகியோரும் நடுவர்களாக பங்கேற்கின்றனர்.
“நான் இன்று என்னவாக இருக்கிறேனோ, அதற்கு முக்கிய காரணம் என் ரசிகர்களின் அன்பும், ஆதரவும்தான். உங்கள் அன்பை என் சுயலாபத்துக்காகவோ அல்லது தவறாகவோ பயன்படுத்தமாட்டேன்” என்று நடிகர் அஜித் கூறியுள்ளார். திரைப்பட துறையில் அடியெடுத்து வைத்து 33 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு நடிகர் அஜித் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் விவரம்: “சினிமா எனும் அற்புதமான பயணத்தில் 33 வருடங்கள் நிறைவு செய்கிறேன். ஆனால், இதனை கொண்டாடுவதற்காக எழுதவில்லை. எனக்கு எண்களின் மீது நம்பிக்கை இல்லை. ஒவ்வொரு வருடமும் எனக்கு முக்கியமானதுதான். இந்தப் பயணத்துக்காக முழுமனதுடன் கைக்கூப்பி நன்றி தெரிவிக்கிறேன். இந்தப் பயணம் எனக்கு எளிதாக இல்லை. இந்தத் துறைக்கு எந்த பின்புலமோ அல்லது யாருடைய சிபாரிசோ இல்லாமல்தான் நுழைந்தேன். முழுக்க முழுக்க என் சுயமுயற்சியால் மட்டுமே சினிமாத் துறைக்குள் நுழைந்தேன். காயங்கள், மீண்டும் வருதல், தோல்வி மற்றும் அமைதி என வாழ்க்கை என்னை பல வழிகளில் சோதித்தது. ஆனால்,…
பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பிரதான வேடத்தில் நடிக்கும் ‘கந்தன்மலை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழக பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவர் ஹெச்.ராஜா. பாஜக முன்னாள் காரைக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த இவர், தற்போது அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளார். பல ஆண்டுகாலமாக அரசியலில் இருந்து வரும் ஹெச்.ராஜா தற்போது திரைப்பட நடிகராக களம் இறங்கியுள்ளார். அறிமுக இயக்குநர் வீரமுருகன் இயக்கும் புதிய படம் ஒன்றில் ஹெச்.ராஜா பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்துக்கு ‘கந்தன்மலை’ என்று பெயரிடப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் பின்னணியில் இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தை சிவ பிரபாகரன் – சந்திரசேகர் தயாரித்துள்ளனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. போஸ்டரில் ஹெச்.ராஜா முறுக்கு மீசையுடன் காணப்படுகிறார். பாஜக ஆதரவாளர்கள் பலரும் இதனை தங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து ஹெச்.ராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
