புதுடெல்லி: அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 25 சதவீத வரி விதித்துள்ளது. இது வரும் 7-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஓராண்டில் அமெரிக்காவுக்கு 8 ஆயிரத்து 650 கோடி டாலர் மதிப்புள்ள பொருட்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகின்றன. இவற்றில், அமெரிக்காவின் வரிவிலக்கு சட்ட விதிப்படி, பாதிப்பொருட்களுக்கு அமெரிக்கா வரிவிலக்கு அளிக்கிறது. மருந்து பொருட்கள், எரிசக்தி பொருட்கள், முக்கியமான கனிமங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவற்றுக்கு 25 சதவீத வரிவிலக்கு பொருந்தாது. எனவே, 4 ஆயிரத்து 800 கோடி டாலர், அதாவது மொத்த ஏற்றுமதியில், ஏறத்தாழ பாதி மதிப்புள்ள இந்திய ஏற்றுமதிக்கு மட்டுமே பாதிப்பு இருக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இந்த 25 சதவீத புதிய வரிவிதிப்பு இந்தியாவில் மிகக்குறைந்த அளவிலான தாக்கத்தையே ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தி இழப்பு 0.2…
Author: admin
ஒரு நபரின் வயதைப் பொருட்படுத்தாமல், மனித கல்லீரல் குறிப்பிடத்தக்க இளமையாக இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த இளமை நிலை நிலையான செல்லுலார் புதுப்பித்தல் மூலம் பராமரிக்கப்படுகிறது, பெரும்பாலான கல்லீரல் செல்கள் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படுகின்றன. இருப்பினும், அதிக டி.என்.ஏ கொண்ட ஒரு சிறிய பகுதியினர் ஒரு தசாப்தம் வரை வாழ முடியும், இது தீங்கு விளைவிக்கும் பிறழ்வுகளுக்கு எதிராக ஒரு பாதுகாப்பு பொறிமுறையாக செயல்படக்கூடும். எப்போதும் இளமையாக இருப்பது பற்றி பேசுங்கள். மனிதகுலம் இன்னும் இளமைத்தன்மையுடன் வெறி கொண்ட நிலையில், ஒரு உறுப்பு ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டதாக மாறிவிடும்! உங்கள் கல்லீரல். நீங்கள் 20 அல்லது 80 ஆக இருந்தாலும், உங்கள் கல்லீரல் மூன்று வயதிற்குள் உயிரியல் ரீதியாக உள்ளது. ஆம், அது சரி. ஒரு நபரின் உண்மையான வயதைப் பொருட்படுத்தாமல், சராசரியாக மூன்று வயதிற்குட்பட்ட மனித கல்லீரல் வாழ்நாள் முழுவதும் உயிரியல் ரீதியாக இளமையாக இருப்பதை ஒரு சர்வதேச விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது.…
ஈரோடு: எனக்கு கடிதம் எழுதியதற்கு ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆதாரம் இருக்கிறதா என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார். ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோயிலில், ஆடிப்பெருக்கையொட்டி நடந்த ஹோமம் மற்றும் சிறப்பு பூஜையில் பங்கேற்ற நயினார் நாகேந்திரன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. சொத்து வரி, மின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துஉள்ளது. தேர்தல் நெருங்குவதால்தற்போது அனைத்து மகளிருக்கும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்குவதாக கூறுகின்றனர். திமுகவினர் தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றவில்லை. நாமக்கல் மாவட்டம் கிட்னி விற்பனையில் முதல் இடத்தில் உள்ளது. அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மேடையில் திமுக எம்.பி. எம்எல்ஏ இடையே ஏற்பட்டுள்ள மோதல், அவர்களிடம் ஒற்றுமை இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது. திமுகவில் மட்டுமல்லாது, இண்டியா கூட்டணியிலும் ஒற்றுமை இல்லை. தேர்தலின்போது யாருக்கு எவ்வளவு சீட்டு ஒதுக்கப்படும் என்பதைவிட, திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். ஓ.பன்னீர்செல்வம் எழுதிய…
Last Updated : 04 Aug, 2025 06:07 AM Published : 04 Aug 2025 06:07 AM Last Updated : 04 Aug 2025 06:07 AM ஆறுமுகமங்கலத்தில் கவின் செல்வகணேஷ் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை. தூத்துக்குடி: சாதிய வன்கொடுமை கொலைகளுக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கு.செல்வப்பெருந்தகை கூறினார். நெல்லையில் கொல்லப்பட்ட ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் வீடு தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தில் உள்ளது. இங்கு வந்த செல்வப்பெருந்தகை கவின் செல்வகணேஷின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கல்வியில் சிறந்து விளங்கிய இளைஞரை படுகொலை செய்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவேதான் சாதிய வன்கொடுமை படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். விரைவில் சட்டப்பேரவையைக் கூட்டி இந்த சட்டத்தை இயற்ற வேண்டும். கவின் குடும்பத்துக்கு…
கடினமான காலங்களில் உங்கள் பிள்ளைக்கு சொல்ல வேண்டிய 10 விஷயங்கள்சொற்கள் தோட்டாக்கள் போன்றவை, குறிப்பாக இது ‘பெற்றோர்-கிட்’ திசையாக இருந்தால், அனைவருக்கும் மதிப்பு தெரியும். சிரமங்களின் போது, ஒரு குழந்தை உதவி கேட்கக்கூடிய முதல் நபராக பெற்றோர்கள் இருக்க வேண்டும். உங்கள் பிள்ளைக்கு அதிக பரிவுணர்வுடன் இருக்க உதவும் 10 சொற்றொடர்கள் இங்கே.
குழந்தைகள் புத்தகங்களிலிருந்து கற்றுக்கொள்வதை விட தங்கள் சுற்றுப்புறங்களிலிருந்து கற்றுக்கொள்கிறார்கள். அவர்களைச் சுற்றியுள்ளவர்களிடமிருந்து நிறைய தகவல்களை அவர்கள் உள்வாங்குகிறார்கள். இது அவர்களின் ஆளுமையை மட்டுமல்ல, அவர்களின் கல்வி செயல்திறனையும் பிரதிபலிக்க முடிந்தது. சில எளிய சடங்குகளுடன் உங்கள் குழந்தைகளை கூர்மையாக மாற்ற முடிந்தால் என்ன செய்வது? இல்லை, நாங்கள் மந்திரத்தைப் பற்றி பேசவில்லை, ஆனால் ஒரு அதிசயத்தைப் போலவே செயல்படும் வேண்டுமென்றே குடும்ப மரபுகளை உருவாக்குவது பற்றி. உணர்ச்சி ரீதியான பின்னடைவு, ஆர்வம் மற்றும் கற்றலுக்கான அன்பை வளர்க்கக்கூடிய ஐந்து எளிய குடும்ப மரபுகள் இங்கே உள்ளன, இவை அனைத்தும் கல்வி வெற்றியில் முக்கியமானவை.
இல்லை. மக்கள் பெரும்பாலும் மாரடைப்புக்காக இருதயக் கைதுக்கு தவறாகப் புரிந்து கொண்டாலும், அவர்கள் ஒன்றல்ல. மாரடைப்பு இருதயக் கைதுக்கு காரணமாக இருக்கலாம், ஆனால் அவை வேறுபட்ட நிலைமைகள். இதய தசையின் ஒரு பகுதிக்கு இரத்த ஓட்டத்தை அடைப்பதன் மூலம் மாரடைப்பு ஏற்படுகிறது, பொதுவாக இரத்த உறைவு மூலம். இதன் விளைவாக, இதய தசைகள் சேதமடைகின்றன. மாரடைப்பு என்பது ஒரு தீவிரமான நிலை, மேலும் ஆபத்தானது. இருதயக் கைது, மறுபுறம், இதய செயலிழப்புகளின் மின் அமைப்பு போது ஏற்படுகிறது. இதயம் சரியாக அடிப்பதை நிறுத்துகிறது, இரத்தத்தை பம்ப் செய்யும் திறன் திடீரென்று நின்றுவிடும்.
சென்னை: அரசுப் பள்ளிகளில் திறன் இயக்கத்தில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு வாரம்தோறும் வெள்ளிக்கிழமை தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் மொழிப்பாடம் மற்றும் கணிதத் திறனை மேம்படுத்தும் வகையில் ‘திறன்’ எனும் இயக்கம் 6 மாதம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த திறன் இயக்கம் பள்ளிகளில் சிறப்பாக செயல்படுத்தப்பட வேண்டும். திறன் இயக்க மாணவர்கள் தனியாக அமர வைக்கப்பட்டு வகுப்பறைச் செயல்பாடுகள் தொடங்கப்பட்டிருக்க வேண்டும். அந்த வகையில் மாணவர்களுக்கு அடிப்படை கற்றல் தேர்வு நடத்தப்பட வேண்டும். அதில் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களைச் சேர்த்து பயிற்சி தரவேண்டும். வகுப்புகளுக்கு தலா 90 நிமிடம் வீதம் 30 நாட்கள் பயிற்றுவிக்க வேண்டும். இதுதவிர…
சென்னை: பொறியியல் மாணவர்களுக்கான முதலாமாண்டு வகுப்புகள் ஆகஸ்ட் 11-ம் தேதி முதல் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 417 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு 3-ம் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 7 முதல் 20-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. அத்துடன் பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு முடிவடைகிறது. இந்நிலையில் பல்கலை.யின் 4 வளாக கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் ஆகஸ்ட் 11-ல் தொடங்கி டிசம்பர் 10-ம் தேதி வரை நடத்தப்படும். அதற்குமுன் மாணவர்களுக்கான அறிமுக வகுப்புகள் ஆகஸ்ட் 5 முதல் 9-ம் தேதி வரை நடைபெறும். இதேபோல், பல்கலை. இணைப்பு அங்கீகாரம் இதர கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் ஆகஸ்ட் 18 முதல் டிசம்பர் 10-ம் தேதி வரையும், இவர்களுக்கான அறிமுக வகுப்புகள் ஆகஸ்ட் 11 முதல் 14-ம் தேதி வரை நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் மின்சார கார் தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைக்கிறார். வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடியில் ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில், தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு இந்த ஆலைக்கு அடிக்கல் நாட்டினார். முதல்கட்டமாக ரூ.1,120 கோடி செலவில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தற்போது வி.எஃப்-6, வி.எஃப்-7 வகை கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு தயாராக உள்ளன. இந்நிலையில், மின்சார கார் தொழிற்சாலை திறப்பு விழா இன்று காலை 10.30 மணி அளவில் நடைபெறுகிறது. முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் காலை 10 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து காரில் வின்ஃபாஸ்ட்…
