சபியாசாச்சி முகர்ஜி ‘ஹெரிடேஜ் பிரைடல் 2025-26’ ஐ அறிமுகப்படுத்துகிறார், நவீன இந்திய திருமண உடையை மறுவரையறை செய்யும் ஒரு தொகுப்பு சாராம்சம் மற்றும் அமைதிக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம். சேகரிப்பு அதிகப்படியான கிளர்ச்சியாளர்கள், பணக்கார கைவினைத்திறன், குறைந்தபட்ச துப்பட்டாக்கள் மற்றும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட நகைகளுடன் கட்டுப்படுத்தப்பட்ட ஸ்டைலிங்கை வலியுறுத்துகிறது. இது சுய-உறுதியான இருப்புடன் பாரம்பரியத்தை உள்ளடக்கிய மணப்பெண்களுக்கு பல்துறை, சிந்தனைமிக்க துண்டுகளை நோக்கி ஒரு கலாச்சார மாற்றத்தை பிரதிபலிக்கிறது, கலாச்சார நினைவகத்தை சமகால தெளிவுடன் கலக்கிறது. திகைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட செழிப்பான திருமண உடைகள் உலகில், சபியாசாச்சி முகர்ஜி மீண்டும் ஸ்கிரிப்டை புரட்டுகிறார். ‘ஹெரிடேஜ் பிரைடல் 2025-26 – தி நியூ இந்தியா’ என்ற தலைப்பில் அவரது சமீபத்திய தொகுப்புடன், புகழ்பெற்ற வடிவமைப்பாளர் பிரைடல் கோடூரின் தீவிரமான புதிய பார்வையை முன்வைக்கிறார், இது காட்சிக்கு மேலான தன்மையைத் தேர்வுசெய்கிறது, அதிகப்படியான சாராம்சம்.வேலைநிறுத்தம் செய்யும் இன்ஸ்டாகிராம் இடுகை மூலம் அறிவிக்கப்பட்டது, சேகரிப்பு எதிர்பார்த்தவர்களுக்கு எதிராக…
Author: admin
புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “புலம்பெயர்ந்த 6.5 லட்சம் பேர் தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதாக வெளிவரும் தகவல் ஆபத்தானது மற்றும் சட்டவிரோதமானது ஆகும். இது தென் மாநில மக்கள் தங்களுக்கு விருப்பமான அரசை தேர்ந்தெடுக்கும் உரிமையில் தலையிடுவது போன்றது ஆகும்” என கூறியிருந்தார். இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 19(பி) பிரிவின்படி, ஒரு தொகுதியில் தங்கியிருக்கும் எவரும் (சொந்த வீடு இல்லாவிட்டாலும்) அங்கு தன்னை வாக்காளராக பதிவு செய்து கொள்ள உரிமை உள்ளது. எனவே, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் டெல்லியில் தற்காலிகமாக வசித்து வந்தாலும் அவர் அங்கு தன்னை வாக்காளராக பதிவு செய்துகொள்ள முடியும். இதுபோல, பிஹாரைச் சேர்ந்த ஒருவர் சென்னையில் தற்காலிகமாக தங்கியிருந்தாலும் இங்கு தன்னை வாக்காளராக பதிவு செய்துகொள்ள முடியும். எனவே, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த…
தனது ஆதர்சம் விராட் கோலி போலவே சிராஜும் போர்ச்சுக்கல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சிறந்த ரசிகர். எப்போதும் காலை 8 மணிக்கு எழுந்திருக்கும் சிராஜ், டெஸ்ட் போட்டியின் கடைசி நாளன்று நிலைகொள்ளா மன நிலையில் 6 மணிக்கெல்லாம் எழுந்து விட்டதாக பேட்டியில் கூறியுள்ளார். முதல் நாள் ஹாரி புரூக் அடித்த ஷாட்டை பவுண்டரியில் கேட்ச் பிடித்து விட்டு, தெரியாமல் பவுண்டரிக்குள் விழுந்து விட்ட சிராஜினால்தான் ஆட்டம் 5-ம் நாளுக்கு வந்தது, இல்லையெனில் இவரே 4-ம் நாளிலேயே இங்கிலாந்தை பொட்டலம் கட்டியிருப்பார். அது சிக்ஸர் ஆனதும் அவருக்குள் பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அழுத்தம் தன்னை பற்றிக் கொள்ள விடாமல் அழுத்தத்தை எதிரணி மீது திருப்பி இரண்டு நீண்ட அட்டகாசமான ஸ்பெல்களை அவர் வீசினார். அதுவும் 5-ம் நாள் வந்தவுடனேயே பிரசித் கிருஷ்ணா 2 பவுண்டரிகளைக் கொடுத்ததும் ஜேமி ஸ்மித் ஆட்டத்தை முடித்து விடுவார் என்றே தோன்றியது. ஆனால், பிரசித் கிருஷ்ணாவும்…
‘காந்தாரா’ படத்தின் 3-ம் பாகத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘காந்தாரா’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, அதன் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. அக்டோபர் 2-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகள் விரைவில் துவங்கவுள்ளன. இதனையும் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி நடித்துள்ளார். ஹோம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இதனை தயாரித்துள்ளது. ’காந்தாரா’ படத்துக்கு முன் என்ன நடந்தது என்பதை தான் ‘காந்தாரா 2’ ஆக உருவாக்கி இருக்கிறார் ரிஷப் ஷெட்டி. இதனைத் தொடர்ந்து 3-ம் பாகம் உருவாக்கும் திட்டமும் வைத்திருக்கிறார். அதில், ‘காந்தாரா’ படத்துக்குப் பின் என்ன நடந்தது என்று சொல்ல திட்டமிட்டு இருக்கிறார் ரிஷப் ஷெட்டி. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஜூனியர் என்.டி.ஆரிடம் பேசியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை ஜூனியர் என்.டி.ஆர் தரப்பும் மறுக்கவில்லை. இதனால் இந்த தகவல் உண்மையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் ஜூனியர் என்.டி.ஆர் தனது…
சென்னை: முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டு அங்கே நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று மலர்தூவி மரியாதை செய்தார். இதைத் தொடர்ந்து நினைவிடங்களில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார். அண்ணா நினைவிடத்தில், ஸ்தூபி, சிலை புதுப்பிக்கும் பணி, புல்வெளிகளை பராமரித்தல், உடைந்துள்ள பளிங்குக் கற்களை சீரமைத்தல், தரையில் மழைநீர் தேங்காத வண்ணம் சீர் செய்யும் பணி, அண்ணா வளைவு முகப்பை தூய்மை செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கருணாநிதி நினைவிடத்தில் கலைஞர் உலக அருங்காட்சியகத்தில் கலைஞர் நிழலோவியங்கள், உரிமைப் போராளி கலைஞர், அரசியல் கலை அறிஞர் கலைஞர், கலைஞரின் சிந்தனைச் சிதறல்கள், சரித்திர நாயகனின் சாதனைப் பயணம், கலைஞர் புத்தக விற்பனை நிலையம் ஆகிய…
உங்கள் தூக்க நிலை உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும் போது உங்கள் ஆளுமையின் அம்சங்களை வெளிப்படுத்தக்கூடும். தூக்கம் ஓய்வெடுக்க ஒரு நேரம் அல்ல – இது உங்கள் உடல் திசுக்களை சரிசெய்து, நினைவுகளை ஒருங்கிணைக்கும், ஆற்றல் அளவை மீட்டெடுக்கும் போது. இருப்பினும், உங்கள் தூக்க நிலை ஆறுதலைக் காட்டிலும் அதிகமாக பாதிக்கப்படக்கூடும். சில தோரணைகள் முதுகெலும்பு சீரமைப்பு, செரிமானம், சுவாசம் மற்றும் ஆளுமை போக்குகளை கூட பாதிக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த தொடர்புகள் முழுமையானவை அல்ல என்றாலும், ஓய்வின் போது உடலும் மனமும் எவ்வாறு இணைகின்றன என்பதைப் பற்றிய புதிரான நுண்ணறிவுகளை அவை வழங்குகின்றன. நீங்கள் ஒரு கரு போஸில் சுருண்டிருந்தாலும் அல்லது ஒரு நட்சத்திர மீனைப் போல விரிவடைந்தாலும், உங்கள் தூக்க பழக்கம் உங்கள் உடல் நல்வாழ்வு மற்றும் உணர்ச்சி நிலையின் முக்கிய அம்சங்களை வெளிப்படுத்தக்கூடும். வெப்எம்டி அறிவித்தபடி, சிறிய மாற்றங்கள் உங்கள் இரவு ஓய்வை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை…
மொஹாலி: பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் குடும்பத்தினரின் சம்மதம் இல்லாத காதல் திருமணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கிராம சபையில் ஊர் மக்கள் ஒன்றுகூடி தீர்மானம் போட்டு, அதை நிறைவேற்றி உள்ளனர். இது இப்போது சர்ச்சையாகி உள்ளது. சண்டிகரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மனக்பூர் ஷெரீஃப் கிராமத்தில்தான் இந்த தீர்மானம் கடந்த மாதம் 31-ம் தேதி நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து கிராம பஞ்சாயத்து நிர்வாகிளில் ஒருவரான தல்வீர் சிங் கூறியதாவது: “இது தண்டனை அல்ல. எங்களது பாரம்பரிய மரபு மற்றும் மதிப்புகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கை இது. நாங்கள் காதல் திருமணம் அல்லது சட்டத்துக்கு எதிரானவர்கள் அல்ல. அதை எங்கள் பஞ்சாயத்தில் நாங்கள் அனுமதிக்கவில்லை” என அவர் தெரிவித்துள்ளார். தங்கள் கிராமம் மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் தான் இந்த தடை பொருந்தும் என மனக்பூர் ஷெரீஃப் கிராமத்தினர் தெரிவித்துள்ளனர். குடும்பத்தினரின் சம்மதம் இல்லாமல்…
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 7-வது ஆண்டு நினைவு தினமான ஆக.7-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியாக சென்று, நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தவுள்ளனர். 7ம் தேதி காலை 7 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொது செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் அமைதிப் பேரணி நடக்கவுள்ளது. இதன்படி அண்ணா சாலை, ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலை அருகில் இருந்து புறப்படுகிறது. பின்னர் வாலாஜா சாலை வழியாகச் சென்று காமராஜர் சாலையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
மிகவும் பிரபலமான செல்லப்பிராணி பறவைகளில் ஒன்று, பட்ஜெரிகர்கள் அல்லது நண்பர்கள் மகிழ்ச்சியான பறவைகள் மற்றும் அவை மகிழ்ச்சியான செல்லப்பிராணிகளை உருவாக்குகின்றன-குறிப்பாக முதல் முறையாக பறவை உரிமையாளர்களுக்கு. இந்த செல்லப்பிராணிகளைப் பெறுவதற்கு முன்பு ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்களை இங்கே பட்டியலிடுகிறோம்:
புர்ஹான்பூர்: மத்திய பிரதேச மாநிலம் நவாரா பகுதியில் நேபா நகர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்தவர் பாக்யஸ்ரீ நம்தே தனுக் (35). இவரை முஸ்லிமாக மதம் மாறி தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஷேக் ரயீஸ் (42) என்பவர் கட்டாயப்படுத்தி வந்துள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில், பாக்யஸ்ரீ வீட்டில் இருந்தபோது ஷேக் ரயீஸ் நேற்றுமுன்தினம் இரவு திடீரென உள்ளே நுழைந்தார். பின்னர் கத்தியால் அவரது கழுத்தை அறுத்தார். அத்துடன் பல முறை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் உடலை கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி சில மணி நேரங்களில் ஷேக் ரயீஸை கைது செய்தனர். இதுகுறித்து புர்ஹான்பூர் போலீஸ் கூடுதல் எஸ்பி அன்தர் சிங் கனேஷ் கூறுகையில், ‘‘கைது செய்யப்பட்ட ஷேக் ரயீஸ் மீது கொலை, சித்ரவதை உட்பட பல பிரிவுகளின்…
