Author: admin

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் மூலம் நீதி வென்றுள்ளது என்று பஹல்காம் தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தார் கண்ணீர் மல்கத் தெரிவித்தனர். ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான பஹல்காமில் கடந்த மாதம் 22-ம் தேதி தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தியதில் 26 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை இந்திய ராணுவத்தினர், பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதலை நடத்தினர். இதனை தொடர்ந்து, பஹல்காம் தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ‘நீதி வென்றது’ என்று தெரிவித்துள்ளனர். மேலும் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியதற்காக பிரதமர் மோடிக்கு அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த சமீர் குஹாவும் ஒருவர். சமீர் குஹாவின் மனைவி சார்போரி குஹா கூறும்போது, “இது நடக்க வேண்டிய ஒன்றுதான். தீவிரவாதத்தை ஆதரிக்கும் மொத்த பாகிஸ்தானுமே அழித்தொழிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் இதுபோன்ற (பஹல்காம் தாக்குதல் போன்ற) சம்பவங்கள் மீண்டும்…

Read More

இஸ்லாமாபாத்: “பாகிஸ்தான் நிச்சயம் பழிவாங்கும். இந்தப் போரை இறுதிவரை எடுத்துச் செல்வோம். என் பாகிஸ்தான் மக்களே, உங்கள் பாதுகாப்புக்காக, நமது ராணுவம் நிற்கும். நாம் எப்போதும் ஒற்றுமையாக இருப்போம்” என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டு மக்களிடம் உரையாற்றிய அவர் கூறியது: “இந்தியா நடத்திய தாக்குதலில் உயிர்நீத்த அப்பாவிகளின் ரத்தத்துக்கு பழிவாங்குவோம் என்று நாங்கள் உறுதி ஏற்றுள்ளோம். பாகிஸ்தான் தனது தற்காப்புக்காக ஒரு பயங்கரமான பதிலடியை வழங்க முடியும் என்பதைக் காட்டினோம். எல்லைப் பகுதியில், சுமார் ஒரு மணி நேரம் சண்டை நடந்தது. பாகிஸ்தான் விமானிகள் வான்வெளியில் இருந்து தாக்கினர், எதிரியின் விமானங்கள் துண்டு துண்டாகச் சிதறின. பாகிஸ்தான் நிச்சயம் பழிவாங்கும். இந்தப் போரை இறுதிவரை எடுத்துச் செல்வோம். என் பாகிஸ்தான் மக்களே, உங்கள் பாதுகாப்புக்கு நமது ராணுவம் நிற்கும். நாம் எப்போதும் ஒற்றுமையாக இருப்போம். பாகிஸ்தான் பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நம்மை நம் பாதையிலிருந்து…

Read More

தனது ‘ரெட்ரோ’ படத்தின் மூலம் கிடைத்த லாபத்தில் இருந்து ரூ.10 கோடியை அகரம் அறக்கட்டளைக்காக வழங்கியுள்ளார் நடிகர் சூர்யா. இது தொடர்பாக சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், “பகிர்தலே மிகச் சிறந்த மகிழ்ச்சி. நடிகனாக எனக்கு அடையாளம் கொடுத்து, என் முயற்சிகளை அங்கீகரித்து உயர்த்திய இந்த சமூகத்திடம், வெற்றியைப் பகிர்ந்து கொள்வது எப்போதும் மனநிறைவை தருகிறது. ‘ரெட்ரோ’ திரைப்படத்திற்கு நீங்கள் அளித்த பேராதரவு, மகிழ்ச்சியான வெற்றியைப் பரிசளித்து இருக்கிறது. கடினமான சூழல் வரும்போதெல்லாம் உங்கள் அன்பும், ஆதரவுமே என்னை மீண்டெழ துணை நிற்கிறது. அதற்காக பொதுமக்களுக்கும், அன்பான தம்பி தங்கைகளுக்கும் என் உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் எனக்கு அளித்திருக்கும் அடையாளத்தை, அர்த்தமுள்ளதாக, அழகானதாக மாற்றவே அகரம் ஃபவுண்டேஷன் தொடங்கப்பட்டது. அற உணர்வுள்ள தன்னார்வலர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்கள், நன்கொடையாளர்கள், கல்லூரி நிறுவனங்கள் என அனைவரும் இணைந்த கூட்டு இயக்கமாக அகரம் செயல்பட்டு வருகிறது. அனைவரின் பங்களிப்போடு பல ஆயிரம் மாணவர்களின்…

Read More

சென்னை: சாலை விபத்தில் காயமடைபவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கும் மத்திய அரசின் திட்டத்துக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முன்னாள் எம்.பி. சரத்குமார் ஆகியோர் வரவேற்பும் நன்றியும் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நயினார் நாகேந்திரன்: இந்தியாவில் ஓராண்டுக்கு சராசரியாக 1.8 லட்சத்துக்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் நிகழ்கின்றன. இந்நிலையில் சாலை விபத்து நிகழ்ந்த முதல் 7 நாட்களுக்குள் காயமடைந்தவர்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை தனியார் மருத்துவமனைகளில் கட்டணமில்லா சிகிச்சை அளிக்கப்படும் எனும் முக்கிய முடிவை அறிவித்து, அதை உடனடியாக நடைமுறைக்கும் கொண்டு வந்துள்ள மத்திய அரசுக்கு நன்றியையும், வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்து உயிர் காக்கும் முக்கிய அறிவிப்பாகும். கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதமே முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்திய இத்திட்டத்தை, தற்போது நடைமுறைக்கு கொண்டுவந்துள்ள மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரிக்கும் எனது நன்றி. இத்திட்டத்தின் மூலம்,…

Read More

கம்ப்யூட்டட் டோமோகிராபி (சி.டி) ஸ்கேன் நவீன நோயறிதலில் ஒரு மூலக்கல்லாக மாறியுள்ளது, இது பல்வேறு மருத்துவ நிலைமைகளைக் கண்டறிந்து நிர்வகிக்க உதவும் விரிவான படங்களை வழங்குகிறது.எவ்வாறாயினும், இந்த ஸ்கேன்களிலிருந்து கதிர்வீச்சு வெளிப்பாடு அமெரிக்காவில் ஆண்டுதோறும் கணிசமான எண்ணிக்கையிலான புற்றுநோய் வழக்குகளுக்கு பங்களிக்கக்கூடும் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.2023 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் சுமார் 93 மில்லியன் சி.டி ஸ்கேன் செய்யப்பட்டது, இதில் சுமார் 62 மில்லியன் நோயாளிகள் ஈடுபட்டனர். ஜமா இன்டர்னல் மெடிசினில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், இந்த ஸ்கேன்கள் சுமார் 103,000 எதிர்கால புற்றுநோய் நோயறிதல்களுக்கு வழிவகுக்கும் என்று மதிப்பிடுகிறது, இது நாட்டின் அனைத்து புதிய புற்றுநோய்களிலும் கிட்டத்தட்ட 5% ஆகும். “சி.டி அடிக்கடி உயிர் காக்கும் வகையில் உள்ளது, இருப்பினும் அதன் சாத்தியமான பாதிப்புகள் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை, மேலும் மிகச் சிறிய புற்றுநோய் அபாயங்கள் கூட அமெரிக்காவில் சி.டி பயன்பாட்டின் மிகப்பெரிய அளவைக் கொடுக்கும் எதிர்கால புற்றுநோய்களுக்கு வழிவகுக்கும்”…

Read More

பாகிஸ்​தான் மற்​றும் பாக். ஆக்​கிரமிப்பு காஷ்மீரில் இந்​திய விமானப்​படை நேற்று ஸ்கால்ப், ஹேமர் ஏவு​கணை​கள் மூலம் தாக்குதல் நடத்​தியது. பாகிஸ்​தானில் உள்ள 9 தீவிர​வாத முகாம்​கள் மீது நேற்று 24 தாக்​குதல்​கள் நடத்​தப்​பட்​டன. இந்த தாக்​குதலில் ஸ்கால்ப் மற்​றும் ஹேமர் வகை ஏவுகணை​கள் பயன்​படுத்​தப்​பட்​டன. இதில் ஸ்கால்ப் ஏவு​கணை 1,300 கிலோ எடை கொண்டது. ரபேல் போன்ற அதிநவீன போர் விமானங்​களில் இந்த ஏவு​கணையை பொருத்த முடி​யும். இந்த ஏவு​கணை தொலை தூர இலக்​கு​களை துல்​லிய​மாக தாக்​கும். இந்த ஏவு​கணையை எம்​பிடிஏ என்ற ஐரோப்​பிய நிறு​வனம் தயாரிக்​கிறது. பதுங்கு குழிகள் மற்​றும் முக்​கிய கட்​டிடங்​களை தகர்ப்​ப​தற்கு இந்த ஏவு​கணை பயன்​படுத்​தப்​படு​கிறது. ரஷ்​யா​வில் தாக்​குதல் நடத்த உக்​ரைன் ஸ்கால்ப் வகை ஏவு​கணை​களை பயன்​படுத்​தி​யது. ஹேமர் ஏவு​கணைகள் குறுகிய தூர தரை இலக்​கு​களை வானிலிருந்து தாக்​கு​வதற்கு பயன்​படுத்​தப்​படு​கின்​றன. இதை பிரான்ஸ் நாட்​டின் சஃப்​ரான் எலக்ட்​ரானிக்ஸ் நிறு​வனம் தயாரிக்​கிறது. இந்த ஏவு​கணை​கள் மூலம் நிலை​யான இலக்​கு​கள்…

Read More

சென்னை: சிந்தாதிரிப்பேட்டையில் ரூ.2.92 கோடியில் கட்டப்பட்டுள்ள நவீன மீன் அங்காடியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். சென்னையில் உள்ள மீன் அங்காடிகளில் சிந்தாதிரிப்பேட்டை மீன் அங்காடி, முக்கியமானது. மீன் அங்காடிக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சிந்தாதிரிப்பேட்டை, ஜோதியம்மாள் நகரில், சிங்கார சென்னை 2.0 திட்டம் மற்றும் சென்னை மாநகராட்சியின் மூலதன நிதியின் கீழ் ரூ.2.92 கோடி மதிப்பீட்டில் நவீன மீன் அங்காடி கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 82 கடைகளுடன் கட்டப்பட்ட இந்த கட்டிடமானது புயலினால் சேதமடையாமல் இருக்கும் வகையில் டென்சைல் கட்டுமானத்துடன் கூடிய மேற்கூரை, மீன் கழிவுகளை வெளியேற்றும் வகையில் 28 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சேகரிப்புத் தொட்டி, குப்பைகளை எளிதாக அகற்றுவதற்கான அமைப்புகள் மற்றும் வழிகாட்டிப் பலகைகள், 10,555 லிட்டர் கொள்ளளவு கொண்ட பயோ டைஜஸ்ட் அமைப்பு உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. திறன் மேம்பாட்டு மையம்: அதேபோல் திருவல்லிக்கேணி…

Read More

குழந்தையின் மூளை மற்றும் நினைவக தக்கவைப்பின் வளர்ச்சியில் சரியான ஊட்டச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. குழந்தைகளில் மூளை ஆரோக்கியத்தையும் நினைவகத்தையும் ஆதரிக்கும் பத்து சத்தான உணவுகள் இங்கே.

Read More

‘‘பாகிஸ்தானுடன் பதற்றத்தை அதிகரிக்கும் நோக்கம் இல்லை. பாகிஸ்தான் தாக்குதலில் இறங்கினால் மீண்டும் பதிலடி கொடுக்க இந்தியா தயாராக உள்ளது’’ என உலக நாடுகளிடம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று விளக்கம் அளித்தார். பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் மார்கோ ரூபியோ, இங்கிலாந்து பாதுகாப்பு ஆலோசகர் ஜொனாதன் பவல், சவுதி அரேபியா பாதுகாப்பு ஆலோசகர் முசைத் அல் அய்பன், ஜப்பான் பாதுகாப்பு ஆலோசகர் மசாடாகா ஒகானா ஆகியோரிடம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று போனில் பேசினார். பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர், பாகிஸ்தான் ஆகிய பகுதிகளில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது மட்டும் தாக்குல் நடத்தியது குறித்து விளக்கினார். அப்போது, ‘‘பாகிஸ்தானுடன் பதற்றத்தை அதிகரிக்கும் நோக்கம் இல்லை எனவும், ஆனால், பாகிஸ்தான் தாக்குதல் நடவடிக்கையில் இறங்கினால் மீ்ண்டும் பதிலடி கொடுக்க இந்தியா தயாராக உள்ளது’’ என இந்தியாவின் நிலைப்பாட்டை…

Read More

சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெறும் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டில் தொண்டர்கள் அமைதி, கட்டுப்பாட்டுடன் பங்கேற்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தொண்டர்களுக்கு அவர் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா வரும் 11-ம் தேதி நடைபெற உள்ளது. அனைவரும் வியக்கும் வண்ணம் இந்த விழாவை பிரம்மாண்டமாகவும், அதே நேரத்தில் அமைதி மற்றும் கட்டுப்பாட்டுடனும் நடத்த வேண்டியது அவசியம். நாம் இந்த மாநாட்டை நடத்துவது, நமது வலிமையை காட்டுவதற்காக அல்ல. தமிழக வளர்ச்சி, சமூகநீதி மற்றும் மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு தேவையான திட்டங்களை மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கையாக முன்வைத்து நிறைவேற்ற செய்வதுதான் இந்த மாநாட்டின் நோக்கம். நாம் முன்னேறினால் மட்டும் போதாது. கல்வி, சமூகநிலையில் பின்தங்கியுள்ள அனைத்து சமுதாயங்களும் முன்னேற வேண்டும் என்பதுதான் நமது உன்னத நோக்கம். மாநாட்டுக்கான நமது கோரிக்கைகளும் அந்த நோக்கத்தை சார்ந்தே வடிவமைக்கப்பட்டுள்ளன.…

Read More