புதுடெல்லி: உத்தராகண்டில் யாத்ரீகர்களுடன் கங்கோத்ரிக்குச் சென்ற ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளானது. இதில் விமானி, ஐந்து யாத்ரீகர்கள் என ஆறு பேர் உயிரிழந்தனர். உத்தராகண்டின் டேராடூனில் இருந்து கங்கோத்ரிக்கு வியாழக்கிழமை காலை 6 யாத்ரீகர்களுடன் ஹெலிகாப்டர் கிளம்பத் தயாராக இருந்தது. கனமழை எச்சரிக்கை காரணமாக ஹெலிகாப்டர் பறக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வானிலை எச்சரிக்கை அறிவுறுத்தலை விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் விமானி புறக்கணித்ததாகவும் கூறப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் காலை 9 மணியளவில் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள கங்கனானி கிராமத்துக்கு அருகே ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளனாது. பின்பு அங்குள்ள பாகீரதி ஆற்றில் அந்த ஹெலிகாப்டர் விழுந்தது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த ஆறு யாத்ரீகர்களில் 5 பேர் மற்றும் விமானியும் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் மும்பையைச் சேர்ந்த விஜய் லட்சுமி ரெட்டி (57), ருச்சி அகர்வால் (56), கலா சந்திரகாந்த் சோனி (61), உத்தரப் பிரதேசத்தின் பரேலியைச் சேர்ந்த…
Author: admin
சென்னை: இந்தியா -பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு ‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை தள்ளிவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன், மணிரத்னம் இயக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்துள்ளார். இதில் த்ரிஷா, சிம்பு, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி என பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்தியா -பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் கமல்ஹாசன் தனது ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் தேதியை மாற்றியுள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நமது நாட்டின் எல்லைப் பகுதியில் நிலவும் சூழ்நிலைகள் மற்றும் உயர்ந்த பாதுகாப்பு நிலையை முன்னிட்டு, மே 16 ஆம் தேதி நடைபெறவிருந்த ‘தக்லைஃப்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நமது ராணுவ வீரர்கள் துணிச்சலோடு எல்லையில் தங்கள் கடமையை செய்து வரும் நிலையில், இது கொண்டாட்டத்திற்கான நேரம்…
சென்னை: தமிழக அமைச்சரவையில் 2 அமைச்சர்களின் துறைகள் பரஸ்பரம் மாற்றப்பட்டுள்ளன. துரைமுருகன் வசம் இருந்த கனிமவளத் துறை, ரகுபதிக்கும், அவரிடம் இருந்த சட்டத் துறை, துரைமுருகனுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை கடந்த ஏப்ரல் 27-ம் தேதி 6-வது முறையாக மாற்றம் செய்யப்பட்டது. அமைச்சர்களாக இருந்த பொன்முடியும், செந்தில் பாலாஜியும் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரத் துறை, அமைச்சர் சிவசங்கரிடமும், மதுவிலக்குத் துறை, முத்துசாமியிடமும் ஒப்படைக்கப்பட்டன. பொன்முடி கவனித்து வந்த வனத் துறை, ராஜகண்ணப்பனுக்கு மாற்றப்பட்டது. அமைச்சரவையில் மீண்டும் சேர்க்கப்பட்ட மனோ தங்கராஜுக்கு பால்வளத் துறை ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், 2 அமைச்சர்களின் துறைகளில் நேற்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘முதல்வரின் பரிந்துரைப்படி, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனுக்கு சட்டத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அவரிடம் இருந்த சுரங்கங்கள், கனிமவளத் துறை, அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…
சிறுநீரக கற்கள் கடுமையான வலியை ஏற்படுத்தும். அறிகுறிகள் அவற்றின் அளவு, இருப்பிடம் மற்றும் அவை சிறுநீர் ஓட்டத்தைத் தடுக்கிறதா என்பதைப் பொறுத்து மாறுபடும். சிறுநீரக கற்கள் நீரிழிவு, இருதய நோய், எலும்பு முறிவுகள் மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய் போன்ற பிற முறையான நோய்களுக்கு ஆபத்து காரணியாகும்.சிறிய சிறுநீரக கற்களின் விஷயத்தில், நீங்கள் எந்த அறிகுறிகளையும் கவனிக்க வேண்டிய அவசியமில்லை. இத்தகைய சிறிய கற்கள் பொதுவாக சிறுநீர் கழிக்கும் போது, எந்த அச om கரியமும் இல்லாமல் சிறுநீர் வழியாக செல்கின்றன. இருப்பினும், பெரிய கற்கள் பல அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடும், அவை லேசான முதல் கடுமையானவை.
புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றம் தீவிரமடைந்து வருவதை அடுத்து ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, விமானத் தாக்குதல் எச்சரிக்கைகள் காரணமாக தர்மசாலாவில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையேயான போட்டி பாதியில் கைவிடப்பட்டது. இதையடுத்து, மற்ற போட்டிகள் தொடர்பாக முடிவெடுக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), இன்று அவசர ஆலோசனை நடத்தியது. கூட்டத்துக்குப் பின்னர் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாக இயக்குநர் கே.எஸ்.விஸ்வநாதன், “ஐபிஎல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. வீரர்கள் தங்கள் இடங்களுக்குத் திரும்பி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். “நாடு போரில் இருக்கும்போது கிரிக்கெட் தொடர்வது நல்லதல்ல” என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். “ஊழியர்கள் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்புதான் மிகவும் முக்கியம். எனவே, போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுகின்றன. இந்த நேரத்தில் பிசிசிஐ நாட்டுடன் நிற்க விரும்புகிறது, இதனால் உடனடியாக ஐபிஎல் 2025…
சென்னை: பொய் வழக்கு பதிந்து போலீஸார் தன்னை தாக்கியதாக வழக்கறிஞர் அளித்த புகார் மனு தொடர்பாக டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: சென்னை பெசன்ட் நகரில் மனித உரிமைகள் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை முன்வைத்து கடந்த டிச. 10-ம் தேதி கண்கவர் அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு அனுமதியளிப்பதாக வாக்குறுதி அளித்த காவல்துறையினர், நிகழ்ச்சிக்கு முந்தைய நாள் அனுமதி இல்லை என தெரிவித்தனர். அத்துடன், நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்களை தடுத்து நிறுத்தினர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் இதுகுறித்து கேட்க சென்றபோது, போலீஸார் என் மீது பொய் வழக்கு பதிந்து, கடுமையாக தாக்கி சிறையில் அடைத்தனர். இதற்கு காரணமான காவல் ஆணையர் உள்ளிட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை ஏற்றுக்கொண்ட வழக்கு பதிவு…
நீங்கள் தசையை உருவாக்க விரும்பினால், ஒரு எளிய வீட்டில் சமைத்த உணவு போதுமானதாக இருக்காது. சப்ளிமெண்ட்ஸ் பெரும்பாலும் ‘செயற்கை’ என்பதற்கு ஒரு கெட்ட பெயரைப் பெறுகிறது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நம் உணவு, எவ்வளவு மாறுபட்டதாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தாலும், நம் உடலின் தேவைகளை ஆதரிக்க போதுமானதாக இல்லை, குறிப்பாக நீங்கள் ஒரு குறிப்பிட்ட இலக்கைத் துரத்தும்போது (எடை இழப்பு, லாபம், உடல் கொழுப்பைக் குறைத்தல் அல்லது தசையை அதிகரிக்கும்). எளிய புரதத்திலிருந்து வைட்டமின் பி 12 வரை தசை வளர்ச்சியை ஆதரிக்கவும், வலிமையை மேம்படுத்தவும், மீட்பை விரைவுபடுத்தவும் சில கூடுதல் மருந்துகள் இங்கே.
எங்கள் நிர்வாண கண் பார்வையில் இருந்து இடத்தின் பரந்த அளவில் 600 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் மறைக்கப்பட்ட ஒரு ஸ்னீக்கி ராட்சதன் உள்ளது, இது சந்தேகத்திற்கு இடமில்லாத எந்தவொரு நட்சத்திரத்தையும் சாப்பிடுகிறது. இது கருந்துளை ஒரு பிரகாசமான அலை சீர்குலைவு நிகழ்வில் (டி.டி.இ) அதன் இருப்பை அனைவருக்கும் நினைவில் வைத்தது, கிழித்தெறிந்து சந்தேகத்திற்கு இடமின்றி நட்சத்திரத்தை உட்கொண்டு, கதிர்வீச்சின் பெரிய குண்டு வெடிப்பை வெளியிடுகிறது. இந்த TDE கள் கருந்துளை நடத்தையின் சிறந்த சோதனைகள், ஒரு கருந்துளை திரட்டும்போது மிருகத்தனமான சூழலைப் பற்றிய ஒரு பார்வையை நமக்குத் தருகிறது. உற்பத்தி செய்யப்படும் கதிர்வீச்சு தொலைநோக்கிகளால் கண்டறியக்கூடிய அளவுக்கு பிரகாசமாக இருக்கிறது, இல்லையெனில் கருப்பு இடத்தை ஒளிரச் செய்கிறது.ஒரு முரட்டு சூப்பர்மாசிவ் கருந்துளையிலிருந்து முதல் அலை நிகழ்வை ஹப்பிள் கண்டறிகிறதுநாசாவின் தலைமையிலான தொலைநோக்கிகளின் வகைப்படுத்தலால் சமீபத்திய டி.டி.இ. ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி. இந்த பார்வை வானியலாளர்களுக்கு ஒரு வெளிப்பாடாக இருந்தது, ஏனெனில்…
‘ஆபரேஷன் சிந்தூரில்’ முக்கிய பங்கு வகித்த கர்னல் சோபியா குரேஷி நாடு முழுவதும் பிரபலமாகி உள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு தீர்ப்பின்போதே அவருக்கு உச்ச நீதிமன்றம் புகழாரம் சூட்டியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. கடந்த 2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி நாடாளுமன்றம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து 2001-2002-ம் ஆண்டில் எல்லைப்பகுதியில் இந்திய, பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு இடையே கடுமையான சண்டை நடைபெற்றது. அப்போது ஆபரேஷன் பராக்கிரம் என்ற பெயரில் சிறப்பு ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த நேரத்தில் பஞ்சாப் எல்லைப் பகுதியில் பணியாற்றிய சோபியா குரேஷி மிகச் சிறப்பாக செயல்பட்டார். இதற்காக அவருக்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டது. கடந்த 2006-ம் ஆண்டில் காங்கோ நாட்டில் ஐ.நா. அமைதிப் படையில் மூத்த அதிகாரியாக அவர் பணியாற்றினார். வடகிழக்கு மாநிலங்களில் வெள்ள நிவாரண மீட்புப் பணிகளிலும் அவர் மிகச் சிறப்பாக சேவையாற்றினார். ஒரு காலத்தில், இந்திய ராணுவத்தில் பெண்…
சென்னை: காஷ்மீரில் சிக்கியுள்ள தென் மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களை பாதுகாப்பாக மீட்டுவர உள்துறை மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்களுக்கு வைகோ கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பான கடிதத்தில், “தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூடு நாட்டின் எல்லைக்கு அப்பாலிலிருந்து தொடர்ந்து நடந்துவரும் சூழலில், ஸ்ரீநகர் ஷேர்-இ-காஷ்மீர் வேளாண் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்களின் எதிர்கொண்டுள்ள பாதுகாப்பற்ற சூழ்நிலையையும் அவர்கள் படும் சொல்லொணா துயரத்தையும் உங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன். உள்ளூர் மாணவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டாலும், மற்ற மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 120 மாணவர்கள் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். மேலும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர். எனவே, அவர்களை அந்தந்த மாநிலங்களுக்கு பாதுகாப்பாக அழைத்து வருமாறு எனக்கு தனிப்பட்ட அழைப்புகள், மின்னஞ்சல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. தாக்குதல்கள் நடைபெறும் மண்டலத்திலிருந்து மாணவர்களைப் பாதுகாப்பாக அழைத்து வருவதற்கு உதவ தமிழக அரசும் தயாராக உள்ளது. எனவே,…