விழுப்புரம்: திண்டிவனத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடந்த வாரம் சந்தித்தார். இந்நிலையில், தைலாபுரத்துக்கு முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் நேற்று சென்று, பாமக நிறுவனர் ராமதாஸிடம், தனது குடும்பத்தில் நடைபெறும் திருமணத்துக்கான அழைப்பைக் கொடுத்தார். பின்னர் இருவரும் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினர். இதுகுறித்து பாமக தரப்பில் கேட்டபோது, “தமிழகத்தின் அரசியல் கள நிலவரம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட, தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இடம் பெற வேண்டும் என்ற அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியின் விருப்பத்தை சி.வி.சண்முகம் முன்வைத்திருக்கிறார்” என்றனர்.
Author: admin
உடல் பருமன் மற்றும் பிற வளர்சிதை மாற்ற நோய்களுக்கு ஒரு தேயிலை விடைபெறுவதை கற்பனை செய்து பாருங்கள். உடல் பருமனை சமாளிக்க ஆராய்ச்சியாளர்கள் ஒரு எளிய வழியைக் கண்டறிந்துள்ளனர். இது ஒரு தேநீரைப் பருகுவது போல எளிமையாக இருக்கலாம். ஒரு சமீபத்திய ஆய்வு வளர்சிதை மாற்ற நோய்களைக் கையாள்வதிலும், எடை நிர்வாகத்திற்கு உதவுவதிலும் ஒரு குறிப்பிட்ட தேயிலை திறனை எடுத்துக்காட்டுகிறது. இந்த தேயிலை சாறு கணிசமாகக் குறைக்கப்பட்ட எடை, மேம்பட்ட குளுக்கோஸ் உணர்திறன் மற்றும் பருமனான எலிகளில் இன்சுலின் எதிர்ப்பு என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இந்த பண்டைய பானம் தசைச் சிதைவையும் தடுத்தது மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகப்படியான கொழுப்பை குறிவைத்தது. வளர்சிதை மாற்ற நோய்கள் முன்னெப்போதையும் விட அதிகரித்து வருகின்றன, அவற்றைக் கையாள்வதற்கு தேநீர் முக்கியமாக இருந்தால் என்ன செய்வது? ஆம், எடை மேலாண்மை உட்பட உங்கள் அனைத்து வளர்சிதை மாற்ற சிக்கல்களுக்கும் தேநீர் விடையாக இருக்கலாம்! சாவோ பாலோ ஆராய்ச்சி…
சென்னை: திட்டமிட்டபடி அக்டோபர் 12-ம் தேதி முதுகலை பட்டதாரி தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 1,996 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1), கணினி பயிற்றுநர் (கிரேடு-1) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை ஆசிரியர் வாரியம் ஜூலை 10-ம் தேதி அன்று வெளியிட்டு அதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை ஜூலை 10 முதல் ஆகஸ்ட் 12 வரைபெற்றுக்கொண்டது. எழுத்துத்தேர்வு அக். 12-ம் தேதி நடைபெறும் என அறிவித்தது. இந்நிலையில், இந்த ஆண்டு கல்வி உளவியல் மற்றும் பொது அறிவு பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டிருப்பதால் அப்பாடங்களுக்கு தயாராகும் வகையில் தேர்வை 3 வாரம் தள்ளிவைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், முதுகலை ஆசிரியர் தேர்வை தள்ளிவைப்பது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் பரிசீலிக்கலாம் என அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து, முதுகலை ஆசிரியர் தேர்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் கடந்த வாரம்…
சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவுபடுத்த மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமையகத்தில் மின்வாரிய கழகங்களுக்கிடையிலான உயர்மட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடைபெற்றத்து. இந்த கூட்டத்தில் பேரிடர் மேலாண்மை மற்றும் பருவ மழைக்கால முன்னேற்பாடுகள், பணியாளர் தேவை மற்றும் மனிதவள செயல்முறைகள், சட்ட விவகாரங்கள், நுகர்வோர் சேவை மற்றும் குறைதீர் வழிமுறைகள், அறிவிப்புகள், திட்டங்கள் கண்காணிப்பு மற்றும் நிதி முன்னேற்றம், மின் உற்பத்தி, தடையில்லா மின் விநியோகம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, இதற்கு முன் நடந்த கூட்டங்களில் அனைத்து வட்டங்களிலும் தேவையான தளவாடப் பொருட்களை மழைக்கு முன்பாக இருப்பு வைக்க வேண்டும் என அறிவுறுத்திய நிலையில், அது சரியாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை உயரதிகாரிகள் கண்காணித்து அறிக்கை மற்றும் புகைப்படங்கள் அனுப்பவும், வடகிழக்கு பருவமழை சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து, தயார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டது.…
சென்னை: தமிழகம் முழுவதும் சர்வர் பிரச்சினையால் சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு நடைபெறாமல் முடங்கியது. பல மணி நேரம் ஆவணங்களுடன் காத்திருந்த பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். தமிழகம் முழுவதும் 11 பதிவு மண்டலங்களில் 56 பதிவு மாவட்டங்களின்கீழ், 587 பதிவு அலுவலகங்கள் செயல்பட்டு வரும் சூழலில், சில நேரங்களில் சர்வர் பிரச்சினையால் பதிவுப்பணிகள் முடங்கி, பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சனிக்கிழமை முதலே பொதுமக்கள் பதிவு ஆவணங்கள் உள்ளீடு செய்தல் மற்றும் டோக்கன் பெறும் போர்ட்டலில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நேற்று திங்கள்கிழமை காலை முதலே, சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவுப்பணிகள் முடங்கின. சர்வர் பிரச்சினையால் ஆவணங்களை பதிவு செய்ய முடியாமல், பதிவு அலுவலர்கள் திணறினர். இதனால், காலை முதல் வரிசையாக டோக்கன் அடிப்படையில் காத்தி ருந்த பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். இதையடுத்து, பதிவுத்துறை தலைமை அலுவலகத்தில் சர்வரை சரிசெய்யும் பணியில், அதனை பராமரிக்கும் தனியார்…
சென்னை: கரூரில் 41 பேர் உயிரிழந்த கோர சம்பவத்தில் அரசியல் சதி இருக்கிறதா என தமிழக மக்கள் கேட்கும் கேள்விக்கு விடை காண சிபிஐ விசாரணையை முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க வேண்டும் என்று தமிழக பாஜக வலியறுத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கை: கரூரில் நடந்த தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான கோர சம்பவத்தில் கண்துடைப்புக்காக திமுக அரசு நியமித்துள்ள முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான குறுகிய கால அவகாச விசாரணை ஆணையத்தின் அறிக்கையால் எந்தவித பயணம் ஏற்படாது என்பதால், தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் உடனடியாக சிபிஐ விசாரணையை அறிவிக்க வேண்டும். மிக முக்கியமாக இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் தமிழக அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும். நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் பிரேத பரிசோதனை செய்யும்போது முழுமையாக வீடியோ எடுக்கப்பட…
சென்னை: அரசியல் பலத்தை காட்டவே விஜய் திட்டமிட்டு 4 மணி நேரம் தாமதமாக வந்தார் என்று கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக போலீஸ் எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்தனர். இதனிடையே, கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் குறித்து காவல்துறை எஃப்ஐஆரில் பதிவு செய்துள்ள பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதில், “விஜய் அரசியல் பலத்தை காட்ட திட்டமிட்டு 4 மணி நேரம் தாமதமாக வந்துள்ளார். மரக் கிளைகளிலும், கடை கொட்டகைகளிலும் தொண்டர்கள் ஏறி அமர்ந்தனர். மரக்கிளை முறிந்ததால் கீழே நின்றவர்கள் மீது விழுந்தனர். பல இடங்களில் நிபந்தனைகள் மீறப்பட்டன. தவெக கட்சி நிர்வாகிகள் இதை எதையும் கண்டு கொள்ளவில்லை. மெயின்ரோடு வழியாக வந்து காலதாமதமாக, போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தி நிபந்தனையை மீறினர். தவெக நிர்வாகிகள் ஆனந்த், நிர்மல் குமார்…
மதுரை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க தவெக தலைவர் விஜய்க்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் கோரிக்கை வைத்துள்ளதாக தவெக வழக்கறிஞர் அணி மாநிலச் செயலாளர் அறிவழகன் தெரிவித்தார். மதுரையில் தவெக வழக்கறிஞர் அணி மாநிலச் செயலாளர் அறிவழகன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகளில் மிகப்பெரிய சதிவலை பின்னப்பட்டுள்ளது என எங்கள் மனுவில் கூறியுள்ளோம். எனவே காவல்துறை இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது எனவும், சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளோம். இதில் இரண்டு நிவாரணங்கள் கேட்டுள்ளோம். கரூரில் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி பதிவுகளை நீக்கிவிடுவார்கள், எனவே அதனை பாதுகாக்க வேண்டும். கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க விஜய்க்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளோம். இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதி…
தினமும் எந்த சவால்களையும் எதிர்கொள்ளாமல், உங்கள் புரதத் தேவைகளை எளிதாக நிறைவேற்ற முடியும். பெரும்பாலான பெரியவர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு கிலோ உடல் எடையில் 0.8 முதல் 1 கிராம் புரதம் தேவைப்படுகிறது, ஆனால் விளையாட்டு வீரர்கள் மற்றும் குறிப்பிட்ட மருத்துவ தேவைகள் உள்ளவர்களுக்கு அதிக புரதம் தேவைப்படுகிறது. சிறந்த புரத ஆதாரங்கள் விலங்கு மற்றும் தாவர அடிப்படையிலான உணவுகளிலிருந்து வருகின்றன. விலங்கு சார்ந்த புரத மூலங்களில் மெலிந்த இறைச்சிகள், மீன், கோழி, முட்டை, பால் பொருட்கள் போன்றவை அடங்கும். மறுபுறம், பீன்ஸ், பயறு, டோஃபு, கொட்டைகள் மற்றும் விதைகளில் புரத உள்ளடக்கம் தாவர அடிப்படையிலான புரத மூலங்களாக செயல்படுகிறது. சைவ அல்லது சைவ உணவுகளைப் பின்பற்றுபவர்கள், தேவையான அனைத்து அமினோ அமிலங்களையும் பெற, பல தாவர அடிப்படையிலான உணவுகளை சாப்பிட வேண்டும். உங்கள் தினசரி புரத உட்கொள்ளலை பல உணவு முழுவதும் விநியோகிக்கும்போது உடல் புரதத்தை சிறப்பாக உறிஞ்சுகிறது, அதற்குப்…
புதுச்சேரி: புதுச்சேரியில் அனைத்து உயர்கல்விக்கும் 100 சதவீத கல்விக் கட்டண விலக்கு தர ஆளுநர் கைலாஷ்நாதன் ஒப்புதல் தந்துள்ளார். புதுச்சேரியில் மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் உட்பட உயர்கல்விக்கு சென்டாக் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. ‘சென்டாக்’ மூலம் அரசு ஒதுக்கீட்டில் மருத்துவம், பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு காமராஜர் கல்வி நிதியுதவி திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து உயர்கல்விக்கும் அரசு ஒதுக்கீட்டின் கீழ் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு கல்வி நிதியுதவி அளிக்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள் வலியுறுத்தி வந்தன. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும், சட்டசபையிலும், அரசு விழாக்களிலும் உயர்கல்வியில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களுக்கு முழு கல்வித் தொகையும் வழங்கப்படும் என அறிவித்தார். இருப்பினும் இதற்கான அரசாணை வெளியிடப்படாமல் இருந்தது. இந்த நிலையில் உயர்கல்விக்கு கல்வி உதவித்தொகை வழங்க ஆளுநர் கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்துள்ளார். தொடர்ந்து உயர் மற்றும்…
