Author: admin

புதுடெல்லி: அமெரிக்க முதலீட்​டாள​ரும், நிதி விமர்​சகரு​மான ஜிம் ரோஜர்ஸ் அளித்த பேட்​டி​யில் கூறி​யுள்​ள​தாவது: உலகின் பாது​காப்​பான முதலீட்​டுக்​கான தளமாக மாற இந்​தியா தயா​ராகி வரு​கிறது. வரும் ஆண்​டு​களில் பொருளா​தா​ரத்​தில் சீனாவை விஞ்சி சிறப்​பாக செயல்​படக்​கூடிய திறன் இந்​தி​யா​விடம் உள்​ளது. பல தசாப்​தங்​களாக முதலீட்டு உலகில் இருக்​கிறேன். வாழ்க்​கை​யில் முதல் முறை​யாக டெல்லி மக்​கள் பொருளா​தா​ரத்​தின் அடிப்​படைகளை புரிந்​து​கொள்​வதை பார்க்​கிறேன். இந்​தியா மீண்​டும் எழுச்சி பெற்று வரு​கிறது. டெல்​லி​யில் உள்ள மக்​கள் என்ன செய்ய வேண்​டும் என்​பதை புரிந்​து​கொண்டு அதனை செய்ய முயற்​சிக்​கிறார்​கள். அது இந்​தி​யா​வுக்​கும் உலகுக்​கும் அற்​புத​மாக இருக்​கும். இந்​தியா உண்​மை​யில் முழு உலகத்​துட​னும் திறந்த வர்த்​தகத்​தில் ஈடுபட முடிந்​தால், அதனால் நாட்​டின் எதிர்​காலம் நீங்​கள் நம்​ப​முடி​யாத அளவுக்கு சிறப்​பான​தாக இருக்​கும். இந்​தி​யா​வில் எனக்கு முதலீடு​கள் இல்​லை. ஆனால் தற்​போது, நான் உண்​மை​யில் வேக​மாக வளர்ந்து வரும் பொருளா​தா​ரத்​தில் முதலீடு செய்ய விரும்​பு​கிறேன். சந்தை சரிந்து சிறிது காலத்​துக்கு மந்​த​மாக இருந்​தால்…

Read More

புதுடெல்லி: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மூலம் இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்தது என டிஆர்டிஓ முன்னாள் தலைவர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) முன்னாள் தலைவர் டாக்டர் ஜி.சதீஷ் ரெட்டி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: எந்த ஒரு நாடும் சுயசார்புடன் இருக்க வேண்டியது அவசியம். ஒரு நாடு தன்னுடைய திறன்களை வளர்த்துக்கொண்டால், அது நவீன தொழில்நுட்பங்களையும் மேம்படுத்திக் கொள்ளும். மேலும் அந்த முறைகள் இந்தியாவுக்கு மட்டுமே தெரியும் என்றால் எதிரிகளுக்கு பதிலே இருக்காது. எதிரி நாடுகளுடனான அடுத்த போரில் சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்திருந்தது. அது இப்போது நிறைவேறி உள்ளது. சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணைகள், விமானங்கள், ட்ரோன்கள், டி4 உள்ளிட்ட ட்ரோன் எதிர்ப்பு சாதனங்கள், ஏவுகணை எதிர்ப்பு சாதனங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி பாகிஸ்தானின் தாக்குதலை…

Read More

ஆர்.கே.வித்யாதரன் தயாரித்து, இயக்கியுள்ள படம் ‘ஸ்கூல்’. இதில் பூமிகா சாவ்லா, யோகிபாபு, கே.எஸ். ரவிகுமார் மூவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நிழல்கள் ரவி, பகவதி பெருமாள், சாம்ஸ், பிரியங்கா வெங்கடேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். ‘ஸ்கூல்’ பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு இளையராஜா பாடல்கள் எழுதி இசையமைத்துள்ளார். ஆதித்யா கோவிந்தராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் பற்றி வித்யாதரன் கூறும்போது, “இது உளவியல் ரீதியான த்ரில்லர் கதையைக் கொண்ட படம். இன்றைய பள்ளி மாணவ- மாணவிகளின் கண்ணோட்டத்தில் சமுதாயத்தில் நடக்கும் கொலை, தற்கொலை, விபத்து, கலவரம் போன்ற பல முக்கியமான க்ரைம் சம்பவங்களைப் பற்றி அலசும் விதமாக விறுவிறுப்பான திரைக்கதையை அமைத்துள்ளோம். இன்றைய இளைய தலைமுறைக்குத் தேவையான பாடமாக உருவாக்கி இருக்கிறோம். மே 23-ம் தேதி வெளியாகிறது. படத்துக்குக் கன்னட நடிகர் உபேந்திரா வாழ்த்து தெரிவித்துள்ளார்” என்றார். இயக்குநர் ஆர்.கே வித்யாதரன் ஏற்கெனவே உபேந்திரா, ரேணுகா மேனன், ரீமாசென் நடித்த ‘நியூஸ்’ என்ற…

Read More

சென்னை: இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டம் மூலம் 3.57 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சாலை விபத்துகளில் சிக்கியவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்த திட்டம் தமிழகத்தில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டம் கடந்த 2021 டிசம்பர் 18-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கிவைக்கப்பட்டது. சாலை விபத்துகளில் சிக்கியவர்களை உடனடியாக மீட்டு, அவர்களைக் காப்பாற்றுவதே இதன் நோக்கம். தமிழகத்தில் அதிக சாலை விபத்துகள் நடைபெறும் 500-க்கும் மேற்பட்ட இடங்களைக் கண்டறிந்து, அருகில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளைத் தேர்ந்தெடுத்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின்படி, விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைகளில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5,000 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமில்லாமல், மற்ற மாநிலம் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவராக இருந்தாலும், விபத்துக்குள்ளானால் முதல்…

Read More

மும்பை: இன்போசிஸ் நிறுவன பங்கு மதிப்பைவிட பாகிஸ்தான் பங்குச் சந்தையின் மொத்த சந்தை மதிப்பு குறைவாக உள்ளது. இந்திய ராணுவ வலிமையுடன் ஒப்பிடும்போது பாகிஸ்தானின் ராணுவ வலிமை பலவீனமாக உள்ளது. இந்தியா, பாகிஸ்தான் இடையே சமீபத்தில் ஏற்பட்ட மோதலில் இது வெட்டவெளிச்சமானது. இதுபோல பொருளாதார ரீதியிலும் இரு நாடுகளுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி உள்ளது. இந்திய பொருளாதாரத்தின் மொத்த மதிப்பு 4 லட்சம் கோடி டாலராக (ரூ.340 லட்சம் கோடி) உள்ள நிலையில் பாகிஸ்தான் பொருளாதாரத்தின் மதிப்பு வெறும் 350 பில்லியன் டாலராக (ரூ.29.7 லட்சம் கோடி) உள்ளது. இதுபோல இந்தியாவுடன் ஒப்பிடும்போது பாகிஸ்தான் பங்குச் சந்தையின் மதிப்பும் மிகவும் சொற்பமானதுதான். அந்நாட்டு பங்குச் சந்தையில் (பிஎஸ்எக்ஸ்) உள்ள 476 முன்னணி நிறுவனங்களின் ஒட்டுமொத்த பங்கு மதிப்பு வெறும் ரூ.5.66 லட்சம் கோடி மட்டுமே. இது இந்தியாவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் பங்கு மதிப்பான ரூ.6.26 லட்சம் கோடியைவிட…

Read More

ஹில்ஸைச் சேர்ந்த அன்பான எழுத்தாளர், ரஸ்கின் பாண்ட் பலரால் அதிகம் படிக்கப்பட்டு விரும்பப்படுகிறார். காதல் மற்றும் வாழ்க்கை குறித்த அவரது அழகான மேற்கோள்களை இங்கே பட்டியலிடுகிறோம், அவரது கையொப்பம், எளிமை, அரவணைப்பு மற்றும் ஞானத்தின் கலவையை கைப்பற்றுகிறோம்:

Read More

ஜெனீவா: அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பரம் 115 % வரியை குறைத்து உள்ளன. இதன்காரணமாக இரு நாடுகள் இடையிலான வர்த்தக போர் முடிவுக்கு வந்திருக்கிறது. உலகம் முழுவதும் சுமார் 180-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான வரி விகிதங்களை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த ஏப்ரலில் வெளியிட்டார். இதன்படி சீன பொருட்களுக்கு 34 சதவீத வரி விதிக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக அமெரிக்க பொருட்களுக்கு 34 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று சீன அரசு அறிவித்தது. இதன்பிறகு இரு நாடுகளும் தொடர்ச்சியாக வரி விகிதங்களை அதிகரித்தன. இறுதியில் சீன பொருட்களுக்கு 145 சதவீத வரியை அமெரிக்கா விதித்தது. சீன அரசு சார்பில் அமெரிக்க பொருட்களுக்கு 125 சதவீத வரி விதிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கு இடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வர்த்தக போர் நீடித்து வந்தது. இதன்காரணமாக சுமார் 600 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இதனிடையே சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் அமெரிக்கா,…

Read More

இந்தி இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப், தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வருகிறார். ‘மகாராஜா’ படத்தில் அவர் நடிப்பு பேசப்பட்டது. அவர், ‘தி இந்து’ நாளிதழ் சமீபத்தில் நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசும்போது, பான் இந்தியா திரைப்படங்கள் மிகப்பெரிய மோசடி என்று விமர்சித்தார். இதுபற்றி அவர் கூறும்போது, “பான்-இந்தியா’ என்ற சொல் ஒரே நேரத்தில் பல்வேறு இந்திய மொழிகளில் வெளியாகும் படங்களைக் குறிக்கிறது. ‘பாகுபலி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்த போக்கு அதிகரித்துவிட்டது. அடுத்து, ‘கேஜிஎஃப்’, ‘புஷ்பா’ போன்ற படங்களின் பிளாக்பஸ்டர் வெற்றி, பான் இந்தியா விநியோகத்தை மேலும் அதிகரித்தன. இது இன்னும் அதிகரிக்கும். ஒரு, பான் இந்தியா திரைப்படம் 3 முதல் 4 வருடங்கள் தயாரிக்கப்படுகின்றன. பல பேர் அந்தப் படத்தை நம்பி வாழ்கிறார்கள். அவர்கள் வாழ்க்கை முறையும் மூன்று முதல் நான்கு ஆண்டுகள் படத்தைச் சார்ந்தே இருக்கின்றன. ஆனால், தயாரிப்பாளரின் முழு பணமும் படத்துக்குச் செல்வதில்லை. அர்த்தமற்ற…

Read More

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி மலர்க் கண்காட்சியை தொடங்கிவைத்து, பல்வேறு நிகழ்ச்சிகள் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஊட்டிக்கு வந்தார். ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சி வரும் 15-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடக்கிறது. இந்தக் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். பின்னர், கோவையில் இருந்து மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலை வழியாக ஊட்டி வந்தார். நீலகிரி மாவட்டத்தின் நுழைவுவாயிலான குஞ்சப்பனை பகுதியில் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா ஆகியோர் முதல்வரை வரவேற்றனர். நீலகிரி மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எம்.ராஜு தலைமையில் வழியெங்கும் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சேரிங்கிராஸ் பகுதியில் நகரச் செயலாளர் ஜார்ஜ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், தமிழக அரசின் விருந்தினர் மாளிகைக்கு மதியம் 2.45 மணிக்கு முதல்வர் வந்தார். அவருடன்…

Read More

புதுடெல்லி: தஹாவூர் ராணா, சோட்டா ராஜன் உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ள டெல்லி திஹார் சிறைக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள திஹார் சிறை 1958-ம் ஆண்டு திறக்கப்பட்டது. சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இதில் 9 சிறை வளாகங்கள் உள்ளன. இது நாட்டின் மிகப்பெரிய சிறை வளாகங்களில் ஒன்றாக விளங்குகிறது. இதில், மும்பை தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தஹாவூர் ராணா, மும்பை தாதா சோட்டா ராஜன் மற்றும் நீரஜ் பவானா உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகள் மற்றும் தீவிரவாதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைக்கான பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிறைத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், திஹார் சிறை வளாகத்தில் பல அடுக்கு பாதுகாப்பு சோதனை மேற்கொள்ளப்படுவதுடன் கூடுதல் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தீவிரவாதிகள் மற்றும் ரவுடி கும்பல் தலைவன் உட்பட தீவிரமான குற்றப் பின்னணி கொண்ட கைதிகள் 24 மணி…

Read More