Author: admin

சென்னை: “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தவிர்க்க முடியாதவர்.” என்று, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம், சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று (மே 14) தொடங்கியது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 19 மாவட்ட செயலாளர்கள் மற்றும் புதுச்சேரி மாநில நிர்வாகிகள் ஆகியோருடன் தனித்தனியாக பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். முன்னதாக, 2026 தேர்தலுக்கு தயாராவது தொடர்பாக, அனைவரிடமும் படிவங்கள் வழங்கப்பட்டு எழுத்து வடிவில் கருத்துகள் பெறப்பட்டன. அதனைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், முன்னாள் அமைச்சர்கள் ஆர்.வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ ஆகியோர் மாவட்ட செயலாளர்களிடம் கருத்துகளை கேட்டறிந்தனர். அப்போது, பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள், “அதிமுகவை ஒருங்கிணைத்து 2026 சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க…

Read More

ஒவ்வொரு பெற்றோரும் நம்பிக்கையுள்ள நபர்களாகவும், கனிவானவர்களாகவும், மென்மையான மற்றும் திறமையானவர்களாகவும் வளரும் குழந்தைகளைப் பெற வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். ஒரு அளவு-பொருந்துகிறது-அனைத்துமே இல்லை என்றாலும், மகிழ்ச்சியான மற்றும் வெற்றிகரமான குழந்தைகளைக் கொண்ட பல குடும்பங்கள் பொதுவான ஒன்றைப் பகிர்ந்து கொள்கின்றன: சில சக்திவாய்ந்த வீட்டு விதிகளைச் சுற்றி கட்டப்பட்ட தெளிவான, நிலையான மதிப்புகள்.இந்த விதிகள் ஒழுக்கக் கருவிகளை விட அதிகமாக இருக்கும்-அவை உங்கள் குழந்தைகள் எப்படி நினைக்கிறார்கள், மற்றவர்களின் உறவுகளைப் பற்றி அவர்கள் எப்படி உணருகிறார்கள், அவை எப்படி வளர்கின்றன என்பதை அறிவார்கள்.வீட்டிலும் உலகிலும் செழித்து வளரும் குழந்தைகளை வளர்க்க உதவும் ஐந்து அத்தியாவசிய குடும்ப விதிகள் இங்கே.மரியாதை பேச்சுவார்த்தை அல்லஇது நீங்களும் மற்றவர்களும் மட்டுமல்ல, உங்கள் குழந்தைகள் பொன்னான விதியை அறிந்து கொள்ள வேண்டும், மரியாதை மிக முக்கியமானது. இது “தயவுசெய்து” அல்லது “நன்றி” என்று சொல்வது மட்டுமல்ல, இது ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் கேட்ட, மதிப்புமிக்க மற்றும்…

Read More

சென்னை: டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய வழக்கில், மத்திய மாநில அரசுகள், சிபிஐ, அமலாக்கத் துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாசலபதி என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அதிகவிலைக்கு விற்பனை செய்தது, பார் உரிமம் வழங்கியது உள்ளிட்டவற்றில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக, கடந்த 2017 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் சோதனை நடத்தினர். இந்நிலையில், இந்த முறைகேடுகள் தொடர்பாக டாஸ்மாக் மற்றும் அதன் அதிகாரிகளுக்கு எதிராக…

Read More

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் ஜெவாரில் நாட்டின் 6-வது செமிகண்டக்டர் ஆலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஹெச்சிஎல் மற்றும் ஃபாக்ஸ்கான் கூட்டு முயற்சியுடன் அமைக்கப்பட உள்ள இந்த ஆலை ஜெவார் விமானநிலையத்துக்கு அருகில் அமைய உள்ளது. இது 2027-ல் இருந்து இயங்கத் தொடங்கும். ஹார்ட்வேர் உருவாக்கம் மற்றும் உற்பத்தியில் நீண்ட கால வரலாறு கொண்டது ஹெச்சிஎல் நிறுவனம். ஃபாக்ஸ்கான், சர்வதேச அளவில் மிகப்பெரிய மின்பொருள் உற்பத்தி நிறுவனமாகும். இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து, யமுனா விரைவுச்சாலை தொழில்துறை மேம்பாட்டு ஆணையம் அல்லது YEIDA-வில் உள்ள ஜெவார் விமானநிலைத்துக்கு அருகில் செமிகண்டக்டர் ஆலையை அமைக்கவுள்ளது. இந்த சிப் உற்பத்தி நிறுவனம் சுமார் ரூ.37,000 கோடி முதலீட்டை ஈர்க்கும். நாட்டின் 6-வது செமிகண்டக்டர் ஆலையாக அமையவுள்ள இதற்கான ஒப்புதல் பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்டது. கூட்டத்துக்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், “ஜெவாரில்…

Read More

அழற்சியின் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன: கடுமையான மற்றும் நாள்பட்ட அழற்சி. கடுமையான அழற்சி விரைவாகத் தொடங்குகிறது, குறுகிய காலத்தில் கடுமையாகிவிடும், மேலும் அறிகுறிகள் சில நாட்கள் நீடிக்கும், பின்னர் காரணம் கட்டுப்பாட்டில் இருக்கும்போது குடியேறலாம். மறுபுறம், நாள்பட்ட அழற்சி வேறுபட்டது. இது பல மாதங்கள் முதல் பல மாதங்கள் வரை நீடிக்கும் மெதுவான, நீண்ட கால அழற்சி. உலக சுகாதார அமைப்பு (WHO) மனித ஆரோக்கியத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக நாட்பட்ட நோய்களைக் கொண்டுள்ளது. நாள்பட்ட அழற்சி போன்ற பல கடுமையான நோய்களுடன் இணைக்கப்பட்டுள்ளது:அதிக எடைநீரிழிவு நோய்மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட இருதய நோய்ஹெபடைடிஸ் போன்ற நோய்த்தொற்றுகள் சிஆட்டோ இம்யூன் நோய்புற்றுநோய்கீல்வாதம்மனச்சோர்வுஅல்சைமர் ஆஸ்துமா

Read More

புதுடெல்லி: இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதலின் போது பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கிய துருக்கிக்கு, பதிலடி கொடுக்கும் விதமாக துருக்கி ஆப்பிளை புனே வியாபாரிகள் புறக்கணித்துள்ளனர். இந்தியா-பாகிஸ்தான் மோதலில் துருக்கி ட்ரோன்களை அனுப்பி பாகிஸ்தானுக்கு உதவியதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கிய துருக்கிக்கு, பதிலடியளிக்கும் விதமாக துருக்கி ஆப்பிளை இந்திய வியாபாரிகள் புறக்கணித்துள்ளனர். இதன் காரணமாக துருக்கிக்கு 1000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. புனேவில் உள்ள வேளாண் விளைபொருள் சந்தைக் குழுவில் உள்ள ஆப்பிள் வியாபாரியான சுயோக் ஜெண்டே, “ துருக்கியில் இருந்து ஆப்பிள்களை வாங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளோம், அதற்கு பதிலாக இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், ஈரான் மற்றும் பிற பிராந்தியங்களிலிருந்து ஆப்பிள்களை வாங்க இருக்கிறோம். நாங்கள் எடுத்திருக்கும் இந்த முடிவு தேச பக்தி சார்ந்தது. துருக்கியில் பூகம்பம் ஏற்பட்டபோது, ​​அவர்களுக்கு முதலில் உதவிய நாடு இந்தியா, ஆனால் அவர்கள் பாகிஸ்தானை ஆதரித்தனர்” என்று…

Read More

புதுடெல்லி: மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது பணியாளர்களில் 3 சதவீதத்தை, அதாவது 6,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் உலக அளவில் சுமார் 2,28,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது மைக்ரோசாஃப்ட் நிறுவனம். அதே போல் 10,000 ஊழியர்களை கடந்த 2023 ஆம் ஆண்டு வேலையை விட்டு அனுப்பியிருந்தது. இந்நிலையில், தற்போது, மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது பணியாளர்களில் 3 சதவீதத்தை, அதாவது 6,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக செவ்வாயன்று அறிவித்துள்ளது. 2024-2025 கடைசி காலாண்டில், அதாவது இந்த ஆண்டு ஜனவரி தொடங்கி மார்ச் வரை மூன்று மாதங்களில் இந்நிறுவனத்தின் லாபம் எதிர்பார்ப்புகளை விட அதிகமாகத்தான் இருந்திருக்கிறது. இருப்பினும், தொழில்நுட்ப துறையில் ஏற்பட்டிருக்கும் போட்டியை சமாளிப்பதற்காக செயற்கை நுண்ணறிவை (AI) நோக்கி கவனம் செலுத்தி வருவதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் டெக் துறையில் பணிபுரியும் பலருக்கும் பெரிய அச்சத்தைக் கடத்தியிருக்கிறது.

Read More

ராமேசுவரம்: இலங்கை சிறையில் உள்ள மீனவர்களுக்கான உதவித் தொகையை தாமதமின்றி வழங்க கோரிக்கை விடப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களின் குடும்பத்திற்கு, தமிழக அரசின் உதவித் தொகையாக ரூ.350 மீனவளத் துறை மூலம் வழங்கப்படுகிறது. இந்த தொகை மீனவர்கள் சிறைக்குள் இருக்கும் நாட்களை மொத்தமாக கணக்கீடு செய்து நாள் ஒன்றுக்கு ரூபாய் 350 வீதம் அந்தந்த பகுதி மீன்வளத் துறை அலுவகம் மூலம் பாதிக்கப்பட்ட மீனவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இது பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு உதவியாக இருந்து வருகிறது. இந்நிலையில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் கடற்பகுதியில் இருந்து கடலுக்குச் சென்று இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களுக்கான இந்த உதவித் தொகை வழங்குவதில் அதிகாரிகள் தாமதம் காட்டி வருவதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் இலங்கை சிறையில் இருந்து விடுதலையான ராமேசுவரம் பகுதி மீனவர்கள் 25 பேர், 68…

Read More

2010 ஆம் ஆண்டில், மல்லிகா ஷெராவத் கேன்ஸில் ஒரு வியத்தகு மற்றும் மறக்க முடியாத நுழைவாயிலை செய்தார், அதே நேரத்தில் தனது திரைப்படமான ஹிஸ்ஸை விளம்பரப்படுத்தினார். ஆனால் ஒரு கவர்ச்சியான கவுனுக்குப் பதிலாக, அவர் ஒரு எளிய மஞ்சள் மற்றும் கருப்பு ஸ்ட்ராப்பி ஆடையைத் தேர்ந்தெடுத்தார், உண்மையிலேயே வினோதமான திருப்பத்துடன் ஜோடியாக இருந்தார்: அவள் கழுத்தில் மூன்று உண்மையான பாம்புகள் போர்த்தப்பட்டிருந்தன. கேமராக்களுக்காக அவள் புன்னகைத்தபோது, ​​ஒரு போவா கட்டுப்பாட்டாளர் அவளுக்கு அருகில் சறுக்கி, சிவப்பு கம்பளத்தை கட்ரான் கே கிலாடியின் நேரடி-செயல் பதிப்பாக மாற்றினார். ஸ்டண்ட் நிச்சயமாக கவனத்தை ஈர்த்தாலும், இந்த சந்தர்ப்பத்திற்கு மிகவும் சாதாரணமாக இருந்த அவரது ஆடை, மற்றும் பாம்பு நாடகங்கள், பேஷன் விமர்சகர்களை வெல்லவில்லை.(பட வரவு: Pinterest)

Read More

புதுச்சேரி: புதுச்சேரி மாநில அந்தஸ்துக்கான கையெழுத்து இயக்கத்தை முதல்வர் ரங்கசாமி முதல் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். புதுச்சேரிக்கு தனி மாநில தகுதி வேண்டும் என உருளையன்பேட்டை தொகுதி சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் பொதுநல அமைப்புகள் ஒன்றிணைந்து கடந்த மூன்று ஆண்டுகளாக பல கட்டங்களாக போராடி வருகின்றன. புதுச்சேரிக்கு தனி மாநிலத் தகுதி கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி கடந்த இரண்டு சட்டமன்ற கூட்டத் தொடரிலும் 15 மற்றும் 16-வது முறையாக ஒரு மனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இத்தீரமானங்கள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு தனி மாநிலத் தகுதி வழங்குவதற்கான எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்காமல் மாநில அரசு கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. இந்நிலையில் புதுச்சேரிக்கு தனி மாநில தகுதி கேட்டு மத்திய அரசை வலியுறுத்தி வரும் 27-ல், தலைநகர் புதுடெல்லிக்கு சென்று போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி, மாநிலத்…

Read More