புதுடெல்லி: உலக அழகி 2025-ம் ஆண்டுக்கான போட்டி இந்தியாவில் ஹைதராபாத் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்றுள்ளனர். இந்தப் போட்டியில் இருந்து பாதியிலேயே விலகினார் மிஸ் இங்கிலாந்து மில்லா மேகி. இந்நிலையில், இங்கிலாந்தின் ஊடக நிறுவனத்துடன் இந்தியாவில் நடைபெறும் உலக அழகி போட்டியில் தனக்கு கிடைத்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில் போட்டியின் ஏற்பாட்டாளர்கள் மீது சில குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்துள்ளார். “போட்டியில் பங்கேற்ற பல்வேறு நாடுகளின் அழகிகள் மேக்-அப் மற்றும் கவுன்களை அணிவதோடு நடுத்தர வயது ஆண்கள் சிலரை என்டர்டெயின் செய்ய வேண்டிய நிர்பந்தமும் இருந்தது. அது முற்றிலும் நம்பமுடியாத வகையில் இருந்தது. அந்த தருணத்தில் பாலியல் தொழிலாளி போல உணர்ந்தேன். ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அதில் நான் கலந்து கொண்டேன். ஆனால், வித்தை காட்டும் குரங்குகளை போல நாங்கள் உட்கார வைக்கப்பட்டோம். ஆறு பேர் வீற்றிருக்கும் ஒரு மேசையில் இரண்டு போட்டியாளர்கள்…
Author: admin
லிங்கா, சாரா ஆச்சர் ஜோடியாக நடிக்கும் படம், ‘தாவுத்’. திலீபன், ராதாரவி, சாய் தீனா, ஸாரா, வையாபுரி, சரத்ரவி, அர்ஜெய், அபிஷேக் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதை டர்ம் புரொடக்ஷன் ஹவுஸ் சார்பில் எஸ்.உமா மகேஸ்வரி தயாரித்துள்ளார். சரத் வளையாபதி, பிரேண்டன் சுஷாந்த் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ராக்கேஷ் அம்பிகாபதி இசையமைத்துள்ளார். படத்தை இயக்கியுள்ள அறிமுக இயக்குநர் பிரசாந்த் ராமன் கூறும்போது, “இது கேங்ஸ்டர் படம்தான். வழக்கமான ஆக்ஷன், சேஸிங் ஏதும் இல்லாத காமெடி கலந்த கேங்ஸ்டர் படமாக இருக்கும். இதுவரை பார்த்திராத புது அனுபவத்தைத் தரக்கூடிய படமாகவும் இருக்கும். படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன” என்றார்.
மஞ்சூர்: நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் மின் உற்பத்திக்கான அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் மாயாறு மற்றும் பவானி ஆகிய இரு ஆறுகள் உற்பத்தியாகின்றன. இரு ஆறுகளும் பவானி சாகர் அணை அடைந்து, அங்கிருந்து பவானியாக பயணமாகிறது. பவானி ஆறு பவானி பாசன பகுதிகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து, டெல்டா மாவட்டங்கள் வரை விரிவடைகிறது. மின் தேவைக்கும் இரு ஆறுகள் பயன்படுகின்றன. தமிழகத்தில் கோடை காலங்களில் மின்சார தங்கு தடையின்றி கிடைக்க பெரும் உதவி புரிவது, நீலகிரி மாவட்டத்தில் உள்ள புனல் நீர் மின் நிலையங்களே. நீலகிரி மாவட்டத்தில் குந்தா, பைக்காரா புனல் நீர்மின் திட்டத்தின் கீழ் உள்ள 12 மின் நிலையங்கள் மூலம் 833.77 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுகிறது. மாவட்டத்தில் பெரிய அணையாக கருதப்படும் அப்பர் பவானி அணையில் சேகரிக்கப்படும் தண்ணீர் ராட்சத குழாய் மூலம், அவலாஞ்சி, குந்தா, கெத்தை, பரளி…
‘மேற்கூரை சூரியசக்தி மின்நிலையங்களுக்கு ‘நெட்வொர்க் சார்ஜ்’ கட்டணம் வசூலிப்பதை மின்வாரியம் ரத்துசெய்ய வேண்டும்’ என, தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இது குறித்து, செய்தியாளர்களிடம் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: தமிழகத்தில் வீடுகள், தொழிற் சாலைகளில் மேற்கூரை சூரிய சக்தி மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை அமைத்திருக்கும் உயரழுத்த பிரிவினரிடம் இருந்து ‘நெட்வொர்க் சார்ஜ்’ என ஒரு யூனிட்டுக்கு ரூ.1.04ம், தாழ்வழுத்த பிரிவினருக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.1.59-ம் மின்வாரியம் வசூலிக்கிறது. இந்தக் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி பல்வேறு தொழில் நிறுவனங்கள் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், வெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்து கடந்த 2024 டிசம்பர் மாதம் உத்தரவிட்டது. இதையடுத்து, வழக்கு தொடர்ந்தவர்களுக்கு மட்டும் அந்தக் கட்டணத்தை வசூலிப்பதை மின்வாரியம் நிறுத்தியது. இந்நிலையில், கட்டணம் ரத்து செய்யப்பட்ட ஒரு நிறுவனத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்த மின்வாரியம், கடந்த மாதம்…
நம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டிய மிக முக்கியமான தாதுக்களில் மெக்னீசியம் ஒன்றாகும். இது தசைச் செயல்பாட்டிற்கு உதவுகிறது, நோய் எதிர்ப்பு சக்தி, நரம்பு சமிக்ஞைகள், எலும்பு வலிமை மற்றும் நம் இதயத்தை சீராக வைத்திருக்கிறது. எவ்வாறாயினும், அதன் முக்கியத்துவம் இருந்தபோதிலும், நம்மில் பலர் இந்த கனிமத்தில் குறைபாடுடையவர்கள், ஏனெனில் நமது உணவு உகந்ததல்ல. இருப்பினும், மெக்னீசியம் குறைபாடு மலட்டுத்தன்மைக்கு வழிவகுக்கும்? கண்டுபிடிப்போம் …மெக்னீசியத்துடன் கருவுறுதலின் உறவுஆண் மற்றும் பெண் கருவுறுதல் ஆகிய இரண்டிற்கும், மெக்னீசியம் மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது கருப்பைக்கு ஆரோக்கியமான இரத்த விநியோகத்தை பராமரிக்க உதவுகிறது, மேலும் கர்ப்பத்திற்கு மிக முக்கியமான ஹார்மோன் புரோஜெஸ்ட்டிரோன் உற்பத்தியை ஆதரிக்கிறது. இனப்பெருக்க ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துவதிலும், வீக்கத்தைக் குறைப்பதிலும் மெக்னீசியம் ஒரு பங்கைக் கொண்டுள்ளது, இது பெண்ணின் அண்டவிடுப்பின் மற்றும் முட்டை தரத்தை பாதிக்கும்.ஆய்வு என்ன சொல்கிறதுமலட்டுத்தன்மையுள்ள பெண்கள் சம்பந்தப்பட்ட ஒரு சமீபத்திய ஆய்வில், மெக்னீசியத்துடன் கூடுதலாக, முல்லேரியன் எதிர்ப்பு ஹார்மோன்…
அறிவியல் புனைகதைகளுக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான கோட்டை மழுங்கடிக்கும் ஒரு முன்னேற்றத்தில், சீன விஞ்ஞானிகள் ஒரு சக்திவாய்ந்த லேசர் அடிப்படையிலான இமேஜிங் முறையை ஒரு மில்லிமீட்டர் போன்ற சிறிய, அரிசியை விட சிறியது, கிட்டத்தட்ட 1.4 கிலோமீட்டர் (சுமார் ஒரு மைல்) தொலைவில் இருந்து வாசிக்கும் திறன் கொண்ட ஒரு சக்திவாய்ந்த லேசர் அடிப்படையிலான இமேஜிங் முறையை வெளியிட்டுள்ளனர். அழைக்கப்படும் நுட்பத்தைப் பயன்படுத்துதல் செயலில் தீவிரம் இன்டர்ஃபெரோமெட்ரிஇந்த அமைப்பு வளிமண்டல விலகல் மற்றும் நீண்ட தூரங்களில் மோசமான தீர்மானம் போன்ற பொதுவான சவால்களை கடக்கிறது. இந்த கண்டுபிடிப்பு தொல்பொருள் முதல் வனவிலங்கு கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு வரையிலான துறைகளை மாற்றியமைக்கக்கூடும். இருப்பினும், தொழில்நுட்பம் தனியுரிமை, கண்காணிப்பு மற்றும் நெறிமுறை பயன்பாடு பற்றிய புதிய கவலைகளை எழுப்புகிறது. அதன் முன்னோடியில்லாத துல்லியம் தொலைநிலை உணர்திறன் கருவிகளைச் சுற்றி கடுமையான விதிமுறைகளுக்கு வழிவகுக்கும். அதன் பொறுப்பான வரிசைப்படுத்தலை நிர்வகிக்க சர்வதேச வழிகாட்டுதல்களுக்கு நிபுணர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.சீன…
சிரியாவின் இடைக்காலத் தலைவர் அஹ்மத் அல்-ஷரா, துருக்கிக்கான அமெரிக்க தூதர் மற்றும் சிரியாவுக்கு சிறப்பு தூதர் டாம் பாராக் (ஆபி) சிரியா தாமஸ் பாராக்கிற்கான புதிதாக நியமிக்கப்பட்ட அமெரிக்க சிறப்பு தூதர் வியாழக்கிழமை, சிரிய தலைநகரில் உள்ள தூதரின் இல்லத்திற்கு 2012 ஆம் ஆண்டில் சிரியாவில் தூதரக நடவடிக்கைகளை மூடியதிலிருந்து அதிக அதிகாரப்பூர்வ அமெரிக்க அதிகாரி விஜயம் செய்தபோது வந்தார்.போரினால் பாதிக்கப்பட்ட தேசத்தில் ட்ரம்பின் கொள்கையை செயல்படுத்தும் பணியில் இருந்த பாராக், துருக்கியிற்கான அமெரிக்க தூதராகவும் உள்ளார், அவருடன் அவரது வருகையின் பேரில் சிரிய வெளியுறவு மந்திரி இருந்தார். சிரிய செய்தி நிறுவனமான சானாவின் கூற்றுப்படி, அமெரிக்க தூதரின் உத்தியோகபூர்வ இல்லத்தை திறந்து வைக்க அவர் நகரத்திற்கு வருகை தருகிறார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறைபனி உறவுகளில் ஒரு கரை சமிக்ஞை செய்தால், அமெரிக்கக் கொடி டமாஸ்கஸில் உள்ள நீண்டகால உத்தியோகபூர்வ தூதர் வீட்டிற்கு வெளியே ஏற்றப்பட்டது. சிரியாவில் உள்ள அதன்…
புதுடெல்லி: மக்கள் தொகை கணக்கெடுப்புடன் மேற்கொள்ளப்படவுள்ள சாதிவாரி கணக்கெடுப்பு மாற்றம் ஏற்படுத்தும் நடவடிக்கையாக இருக்கும் என்றும், சமூக நீதிக்கு வழிவகுக்கும் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் இன்று நடைபெற்ற இந்திய புள்ளியியல் பணி பயிற்சி முடித்த 2024 மற்றும் 2025 – ம் ஆண்டுகளுக்கான தொகுப்புகளை சேர்ந்த அதிகாரிகளிடையே உரையாற்றிய ஜக்தீப் தன்கர், “தொடக்க காலத்தில், சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைமுறையில் இருந்தது. இறுதியாக, சாதிவாரி கணக்கெடுப்பு 1931-ம் ஆண்டில் நடத்தப்பட்டது. அவ்வாறு பல முறை நடத்தப்பட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பின் மூலம் எனது சாதி குறித்து அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. எனவே சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பின் முக்கியத்துவத்தை நான் உணர்ந்துள்ளேன். மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் மேற்கொள்ளப்படும் என்ற மத்திய அரசின் முடிவு சிறப்பானது. இந்த முடிவு ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் படிநிலையாக இருப்பதுடன், சமூக நீதிக்கும் வழிவகுக்கும். இது…
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் லாவா மொபைல் நிறுவனம் லாவா போல்ட் என்1 மற்றும் போல்ட் என்1 புரோ என இரண்டு மாடல் போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலக்ட்ரானிக்ஸ் கம்பெனியான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் மொபைல் போன், ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்றவற்றை இந்த நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது இந்திய சந்தையில் லாவா போல்ட் என்1 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இதை 4ஜி மாடலாக வெளியிட்டுள்ளது லாவா நிறுவனம். இந்த பட்ஜெட் விலையில் இரண்டு வண்ணங்களில் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. லாவா போல்ட் என்1: சிறப்பு அம்சங்கள் 6.75 இன்ச் ஹெச்டி+ டிஸ்பிளே ஆண்ட்ராய்டு 14 கோ எடிஷன் Unisoc ஆக்டா-கோர் ப்ராசஸர் 13 மெகாபிக்சல் கொண்ட கேமரா பின்பக்கம் இடம்பெற்றுள்ளது 5…
விருதுநகர்: என்.சி.சி.யில் அதிக அளவில் மாணவிகளைச் சேர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக மதுரை என்.சி.சி. தலைமையக கமாண்டர் கர்னல் விகேஎஸ் சவ்கான் கூறியுள்ளார். விருதுநகர் கல்லூரி சாலையில் இயங்கி வரும் ராணுவ கேண்டீன் புதுப்பிக்கப்பட்டு குளிர் சாதன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதோடு, குளிர் சாதனம் பொறுத்தப்பட்ட காத்திருப்போர் அறை மற்றும் சிற்றுண்டி கேண்டீன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் என்சிசி மதுரை தலைமையக கமாண்டர் கர்னல் விகேஎஸ் சவ்கான் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று கேண்டீனை திறந்துவைத்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில், “விருதுநகரில் உள்ள ராணுவ கேண்டீன் தற்போது புதுப்பிக்கப்பட்டு குளிர் சாதன வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது. இந்த கேண்டீன் மூலம் ராணுவத்தினர் குடும்பத்தினர், முன்னாள் ராணுவத்தினர் சுமார் 3 ஆயிரம் பேர் பயனடைந்து வருகின்றனர். இங்கு புதிதாக காத்திருப் போர் அறையும் குளிர் சாதன கருவிகளோடு திறந்துவைக்கப்பட்டுள்ளது. சிற்றுண்டி கேன்டீனும் திறக்கப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவத்தினருக்கும் பொதுமக்களும்…