பல ஆண்டுகளாக, மேஜர் கே -பாப் நிறுவனங்களும் அவர்களது குழுக்களும் உலகின் மிகப்பெரிய குழுவான பி.டி.எஸ் -ஐ “வோல்ட்மார்ட்” போன்றவர்கள் நடத்தினர் என்று இராணுவம் கேலி செய்தது, யாரும் சத்தமாக சொல்லத் துணியவில்லை. 5 வது ஜென் சிலையின் வெளிப்பாடு எஸ்.எம். என்டர்டெயின்மென்ட்டின் ஹைபியுடனான நீண்டகால வதந்திப் போட்டி மற்றும் குறிப்பாக பி.டி.எஸ் உடன் புதிய விவாதங்களைத் தூண்டிய பின்னர் ஒரு காலத்தில் ஒரு விளையாட்டுத்தனமான ஜப் இப்போது மிகவும் உண்மையானதாக உணர்கிறது.(( பட கடன்: பி.டி.எஸ் தற்போது உலகின் மிகப்பெரிய குழுவாக உள்ளது. கடன்: x | @bts_bighit )என்.சி.டி விஷுவஸ் ஃபேன்சைனில் நடந்த சம்பவம்கேள்விக்குரிய சிலை எஸ்.எம். அக்டோபர் 2 ஆம் தேதி (கே.எஸ்.டி), குழு ஷாங்காயில் ஒரு ரசிகர் நிகழ்வை நடத்தியது, அங்கு உறுப்பினர்கள் ரசிகர்களுடன் நேரடியாக உரையாடினர்.(( பட கடன்: ஷாங்காயில் என்.சி.டி விஷுவஸ் ஃபேன்சைன் நிகழ்வு. கடன்: x | @nctwishofficial )ஒரு தொடர்பின்…
Author: admin
புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் 10 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம் என்று இந்திய விமானப் படை தளபதி ஏ.பி.சிங் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அண்மையில் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “கடந்த மே மாதம் இந்தியாவுடன் ஏற்பட்ட போரின்போது 7 இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம்’’ என்று தெரிவித்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் இந்திய விமானப் படை தளபதி ஏ.பி. சிங் டெல்லியில் நேற்று கூறியதாவது: இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம் என்று அவர்கள் (பாகிஸ்தான்) கனவு கண்டால், அந்த கனவை நான் கலைக்க விரும்பவில்லை. அவர்கள் தொடர்ந்து கனவிலேயே இருக்கட்டும். இந்தியா, பாகிஸ்தான் போரின்போது என்ன நடந்தது என்பது உலகத்துக்கு தெரியும். சுமார் 90 மணி நேரம் அதிதீவிர போர் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் பெரும் இழப்புகளை சந்தித்தது. போர் நீடித்தால் பேரழிவை…
கூடலூர்: நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் பழங்குடி இனங்களில் ஒன்றுதான் பெட்ட குறும்பர் இனம். பெட்டா என்கிற மலையை குறிக்கும் பெயரைக் கொண்டிருக்கும் இந்த மக்கள் குறும்பர் பழங்குடி இனத்தின் ஒரு பிரிவாக அறியப்படுகின்றனர். திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் தேன் சேகரிப்பு, மீன் பிடித்தல் மற்றும் வன மூலிகைகளை சேகரிக்கும் திறன் கொண்டவர்கள். பூர்வகுடிகளான இந்த மக்களுக்கு அரசின் அடிப்படை வசதிகள் என்பது இன்றளவும் எட்டாக்கனியாகவே இருப்பதால், கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார மேம்பாடு போன்றவற்றில் மிகவும் பின் தங்கிய நிலையிலேயே தவித்து வருகின்றனர். அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சிலர் மட்டுமே போராடி உயர் கல்வியைப் பெற்று முன்னேறி வருகின்றனர். அந்த வரிசையில், பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கிய பெட்ட குறும்பர் மாணவி கின்மாரி, சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் பி.ஏ, எல்.எல்.பி ஹானர்ஸ் பட்டத்தை நிறைவு செய்து தங்கள்…
சென்னை: இரண்டு தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் அடுத்த மாதம் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை ஐ.சி.எஃப் ஆலையில் தற்போது அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில் தயாரிப்பில் கவனம் செலுத்தப்படுகிறது. இதுவரை, 60-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதையடுத்து, அம்ரித் பாரத் ரயில், தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில், வந்தே மெட்ரோ உட்பட பல்வேறு வகைகளில் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன. அதிலும், தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை தயாரித்து, இரவு நேரங்களில் இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதன்படி, கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பிஇஎம்எல் நிறுவனத்தில், முதல் தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணிகள் முடிந்து, கடந்த ஆண்டு அக்டோபரில் சென்னை ஐ.சி.எஃப். ஆலைக்கு…
ஆதாரம்: தி நியூயார்க் டைம்ஸ் பிரான்சின் லோயர் பிராந்தியத்தைச் சேர்ந்த 102 வயதான யோகா ஆசிரியரான சார்லோட் சோபின், பல தசாப்தங்களாக ஒரு நடைமுறைக்கு அர்ப்பணித்துள்ளார், இது தனது உடல் ரீதியாகவும், நெகிழ்வானதாகவும், மனநல எச்சரிக்கையாகவும் இருக்கும். யோகா 50 இல் தொடங்கி 60 ஆல் கற்பித்தல், எந்தவொரு ரகசிய சூத்திரத்தையும் விட நிலைத்தன்மை, இன்பம் மற்றும் ஒரு சீரான தினசரி வழக்கத்திற்கு தனது நீண்ட ஆயுளைப் பாராட்டுகிறார். அவளுடைய காலை ஒரு எளிய காலை உணவோடு தொடங்குகிறது, அதைத் தொடர்ந்து வெளியில் நேரம் மற்றும் யோகா கற்பித்தல், அவளுடைய நல்வாழ்வுக்கு அவசியமானது என்று அவர் கருதுகிறார். ஒவ்வொரு வகுப்பிலும் அவளை ஊக்குவிக்கும் மற்றும் சவால் செய்யும் தனது மாணவர்களுடன் அவர் வளர்க்கும் சமூக தொடர்புகள் சமமாக முக்கியம். சோபினைப் பொறுத்தவரை, வயதானது இயக்கம், நினைவாற்றல் மற்றும் அர்த்தமுள்ள உறவுகளை ஒருங்கிணைக்கிறது, பிற்கால வாழ்க்கையில் உயிர்ச்சக்தி உடல் மற்றும் ஆவி இரண்டிலும்…
அமெரிக்க அரசாங்க நிதியத்தின் முட்டுக்கட்டை காரணமாக நாசா அதன் பெரும்பாலான நடவடிக்கைகளை தற்காலிகமாக அளவிட்டுள்ளது. காங்கிரஸ் ஒரு பட்ஜெட் அல்லது குறுகிய கால நிதி நடவடிக்கைகளை நிறைவேற்றத் தவறும் போது, பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்கு முக்கியமான நடவடிக்கைகளுக்கு வேலையை மட்டுப்படுத்த ஏஜென்சி கட்டாயப்படுத்தப்படுகிறது. இதன் விளைவாக, ஆராய்ச்சி மற்றும் பொது மேம்பாடு முதல் வரவிருக்கும் பணிகளுக்கான தயாரிப்பு வரை நடந்த பல திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐ.எஸ்.எஸ்) கப்பலில் விண்வெளி வீரர்களைக் கண்காணித்தல் மற்றும் சூரிய குடும்பம் முழுவதும் செயல்பாட்டில் உள்ள விண்கலத்தைப் பாதுகாத்தல் போன்ற அத்தியாவசிய பணிகள் ஒரு எலும்புக்கூடு குழுவினரின் கீழ் தொடர்கின்றன, ஆனால் பணி திட்டமிடல் மற்றும் அறிவியல் ஆய்வுகளில் தாமதங்கள் தவிர்க்க முடியாதவை.ஏன் நாசா பணிநிறுத்தம் அரசாங்க நிதி குறைபாடுகளின் போதுகாங்கிரஸால் கையகப்படுத்தப்படாத பணத்தை நாசா செலவழிப்பதை கூட்டாட்சி சட்டம் தடை செய்கிறது. நிதி குறைபாடுகளின் போது, குழு பாதுகாப்பு, விண்கலம்…
புதுடெல்லி: அசாம் பாடகர் ஜுபின் கார்க் மரணம் தொடர்பாக, அவருடன் படகில் சென்ற 2 இசைக் கலைஞர்களை கைது செய்து அசாம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அசாம் மாநிலத்தை சேர்ந்த பிரபல பாடகர் ஜுபின் கார்க், இசை நிகழ்ச்சியில் பங்கேற்க சிங்கப்பூர் சென்றிருந்தார். அங்கு கடலில் ஸ்கூபா டைவிங் நிகழ்ச்சியில் பங்கேற்க ஒரு படகில் சென்றுள்ளார். கடலில் நீந்தும் போது அவர் நீரில் மூழ்கி இறந்தார். இச்சம்பவம் தொடர்பாக ஜுபின் கார்க் மேலாளர் சித்தார்த்த சர்மா, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சியாம்கானு மகந்தா ஆகியோர் டெல்லியில் கடந்த புதன் கிழமை கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கொலை குற்றச்சாட்டுகளையும் அசாம் சிஐடி போலீஸார் சேர்த்துள்ளனர். இந்நிலையில் ஜுபின் கார்க்குடன், கடலுக்கு படகில் சென்ற இரண்டு இசை கலைஞர்கள் சேகர்ஜோதி கோசுவாமி, அம்ரித்பிரவா மகந்தா ஆகியோரை அசாம் போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்து விசாரணைக்காக குவஹாட்டி அழைத்து வந்தனர். அவர்கள் 14…
அருள்நிதி நடித்து வந்த ‘ராம்போ’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது. முத்தையா இயக்கத்தில் அருள்நிதி புதிய படமொன்றில் நடித்து வந்தார். இந்தப் படம் முழுக்க சென்னையிலேயே படமாக்கி முடிக்கப்பட்டது. தற்போது இப்படத்துக்கு ‘ராம்போ’ எனப் பெயரிடப்பட்டு இருப்பதாகவும், இப்படம் நேரடியாக சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பலருக்கும் ஆச்சரியத்தை அளித்திருக்கிறது. குறைந்த முதலீட்டில் ஒரே கட்டமாக இப்படம் படமாக்கப்பட்டது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்தினை நேரடியாக ஓடிடி வெளியீடாக முடிவு செய்திருக்கிறார்கள். அக்டோபர் 10-ம் தேதி இப்படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முழுக்க குத்துச்சண்டையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தான்யா ரவிச்சந்திரன், விடிவி கணேஷ், அபிராமி உள்ளிட்ட பலர் இப்படத்தில் அருள்நிதியுடன் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளராக ஜிப்ரான் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
கரூர்: கரூர் வேலுசாமிபுரத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா இன்று (அக்.4) காலை ஆய்வு மேற்கொண்டார். கரூரில் கடந்த செப்.27-ம் தேதி நடந்த தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 41 உயிர்கள் பறிபோனது. இந்தச் சம்பவம் இந்த ஆண்டு இந்திய அளவில் நடைபெற்ற கூட்ட நெரிசல் நிகழ்வுகளிலேயே அதிக உயிர்ப்பலி ஏற்படுத்திய நிகழ்வாக உள்ளது. மேலும், இந்திய அரசியல் வரலாற்றில், அரசியல் கட்சி பிரச்சாரத்தில் இப்படியொரு கூட்ட நெரிசல் சம்பவமே நிகழ்ந்ததில்லை என்றளவில் மோசமான சம்பவமாகவும் பதிவாகியுள்ளது. இந்நிலையில், கரூரில் சம்பவம் நடந்தன்று இரவே முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர், தமிழக காங்கிரஸ், இடதுசாரி தலைவர்கள், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், மத்திய அரசால் அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் 8 பேர் அடங்கிய குழு என பலதரப்பினரும்…
சிவகாசி: சிவகாசியில் உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலைகளுக்கு உற்பத்தி அனுமதி வழங்குவதில் ஏற்பட்ட தாமதம், ஆய்வு மற்றும் விபத்து அச்சம் காரணமாக முன்கூட்டியே பட்டாசு ஆலைகள் மூடப்பட்டதால் 30 சதவீதம் வரை உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் 20 சதவீதம் வரை விலை உயர வாய்ப்புள்ளதாக உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்தனர். சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 1,080-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. நாட்டின் மொத்த பட்டாசு தேவையில் 90 சதவீதம் சிவகாசியில் உற்பத்தி செய்யப்படுகிறது. பேரியம் நைட்ரேட் மற்றும் சரவெடி உற்பத்திக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததால், பிஜிலி, சக்கரம், புஸ்வானம், லட்சுமி, குருவி, மத்தாப்பு, ஆட்டம் பாம், உயரே சென்று வெடிக்கும் பேன்ஸி ஷாட் என 60 சதவீதம் பட்டாசுகள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன. தொடக்கம் முதலே சரிவு: சிவகாசியில் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகளில் 10 சதவீதம் தமிழகத்திலும், 90 சதவீதம் வட மாநிலங்களிலும் விற்பனை…
