Author: admin

செங்கல்பட்டு: ‘கொள்கையற்ற அதிமுகவினால் பத்தாண்டுகள் பாழான தமிழ்நாட்டை மக்களின் ஆதரவுடன் மீட்டெடுத்து, இந்த நான்கு ஆண்டுகளில் வளப்படுத்தியிருக்கிறோம். வரலாறு காணாத வகையில், வளர்ச்சிப் பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம். இதை திராவிடத்துக்கு எதிரான பாஜகவும், “திராவிடம் என்றால் என்னவென்றே தெரியாது” என்று சொன்ன பழனிசாமியின் அதிமுகவும், மீண்டும் கபளீகரம் செய்யலாம் என்று பார்க்கிறார்கள்’ என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், “ சுயமரியாதை இயக்கத்தின் தொடர்ச்சி திராவிடர் கழகம் என்றால், திராவிடர் கழகத்தின் நீட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகம். கருத்தியல் உறுதியோடு போராட்ட வாழ்வை வாழும் திராவிடர் கழகத் தோழர்கள் அனைவருக்கும் எனது ‘சல்யூட்!’ அதிலும், 92 வயது இளைஞராக, ஓய்வின்றி, தமிழ்ச் சமுதாயத்துக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கும் கி.வீரமணிக்கு என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். திமுக உருவானபோது,…

Read More

மேட்டூர்: மேட்டூர் அருகே பாலமலை வனப்பகுதியில் வழி தவறி சிக்கி தவித்த 36 பக்தர்களை வனத்துறையினர் மற்றும் போலீஸார் மீட்டனர். மேட்டூர் அருகே பாலமலையில் சித்தேஸ்வரன் கோயில் கடல் மட்டத்திலிருந்து 3,800 மீட்டர் உயரத்தில் உள்ளது. புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வனப்பகுதி வழியாக நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அப்போது, பக்தர்கள் நடந்து செல்லும் பாதை குறுகலாகவும், அடர்ந்த வனப்பகுதியாகவும் உள்ளது. இந்நிலையில், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஈரோடு மாவட்டம் குருவரெட்டியூர் வனப்பகுதி வழியாக சித்தேஸ்வரன் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து விட்டு, இன்று மாலை வனப்பகுதியில் இருந்து கீழே இறங்கத் தொடங்கினர். அப்போது ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 35 பேர், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 36 பேர் வழி தவறி சென்று அடந்த வனப்பகுதிக்குள்…

Read More

பங்கஜ் திரிபாதி தைரியமான புதிய தோற்றத்தை வெளியிடுகிறார், விண்டேஜ் ராயல்டியை நவீன ஃபேஷனுடன் கலக்கிறார் (படம்: இன்ஸ்டாகிராம்) பங்கஜ் திரிபாதியின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் இடுகை ஃபேஷன் மற்றும் பொழுதுபோக்கு வட்டங்கள் மூலமாகவும், சரியான காரணங்களுக்காகவும் சிற்றலைகளை அனுப்பியுள்ளது, ஏனெனில் இது ரசிகர்களும் பிரபலங்களும் ஒரே மாதிரியாக பேசுவதை நிறுத்த முடியாது என்று தைரியமான மற்றும் வேலைநிறுத்தம் செய்யும் புதிய தோற்றத்தைக் காட்டுகிறது. அவரது தீவிரமான நடிப்பு மற்றும் சிரமமின்றி திரை இருப்புக்காக கொண்டாடப்பட்ட திரிபாதி, விண்டேஜ் இந்திய ராயல்டியை சமகால உயர்-ஃபேஷன் நாடகத்துடன் கலக்கும் ஒரு அலங்காரத்தை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். நடிகர் மிகச்சிறிய பாணியைக் காட்டிலும் இயற்கையான கவர்ச்சிக்காக அறியப்படுகிறார், அவரது சமீபத்திய இடுகை ரசிகர்களையும் பேஷன் ஆர்வலர்களையும் சலசலக்கச் செய்ததில் ஆச்சரியமில்லை, படங்கள் உண்மையானதா அல்லது AI- உருவாக்கப்பட்டதா என்ற கேள்விகளைத் தூண்டுகிறது. பொருட்படுத்தாமல், நடிகரின் தைரியமான பேஷன் அறிக்கையை புறக்கணிக்க முடியாது.இந்த வெள்ளிக்கிழமை தனது இன்ஸ்டாகிராம் கைப்பிடிக்கு…

Read More

தமிழகத்தைப் போலவே 2026-ல் தேர்தலைச் சந்திக்கும் புதுச்சேரியிலும் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. அங்கு, தற்சமயம் எந்தக் கட்சியிலும் இல்லாத சில முக்கியத் தலைவர்கள் சேர்ந்து, முன்னாள் முதல்வர் நாராயணசாமியும் இந்நாள் முதல்வர் ரங்கசாமியும் இல்லாத ஒரு மாற்று அணியை உருவாக்குவதற்கான முயற்சியில் இறங்கி இருப்பது தான் இப்போது ஹாட் டாபிக்! புதுச்​சேரி​யில் ஆளும் என்​.ஆர்​.​காங்​கிரஸ் கூட்​ட​ணி​யில் அங்​கம் வகிக்​கும் பாஜக, இம்​முறை​யும் அதே கூட்​ட​ணி​யில் தொடர வேண்​டும் என நினைக்​கிறது. ஆனால், பாஜக உடன் அடிக்​கடி முரண்டு பிடிக்​கும் ரங்​க​சாமி, கூட்​டணி விவ​காரத்​தில் இன்​னும் மவுனம் கலைக்​காமலேயே இருக்​கி​றார். கடைசி நேரத்​தில் விஜய்யை வைத்து அவர் ஒரு புதுக்​கணக்​குப் போட்​டாலும் போடலாம் என்​கி​றார்​கள். இதே கூட்​ட​ணி​யில் இருக்​கும் அதி​முக-​வும் ஒரு​வித​மான ஊசலாட்​டத்​திலேயே இருக்​கிறது. காங்​கிரஸ் – திமுக கூட்​ட​ணி​யும் அடிக்​கடி கலகக் கூட்​ட​ணி​யாக கலர் மாறிவ​ரு​கிறது. மொத்​தம் உள்ள 30 தொகு​தி​களில் 20 எங்​களுக்கு வேண்​டும் என இரண்டு கட்​சிகளுமே இப்​போது…

Read More

ஜெய்ப்பூர்: மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் 11 குழந்தைகள் இருமல் மருந்துகளால் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், உயிரிழந்த குழந்தைகள் வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அரசு வழங்கிய மருந்துகளால் உயிரிழக்கவில்லை என்றும் ராஜஸ்தான் சுகாதார அமைச்சர் கஜேந்திர சிங் கின்ஸ்வர் தெரிவித்துள்ளார். ஜெய்ப்பூரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய கின்ஸ்வர், “இறந்த குழந்தைகள் வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தனர். அரசு வழங்கிய மருந்துகளை உட்கொண்ட பிறகு இறக்கவில்லை. இருமல் மருந்துகளால் எந்தக் குழந்தையும் இறக்கவில்லை. ஒருவருக்கு மூளைக்காய்ச்சல் , மற்றொருவருக்கு சுவாச தொற்று பிரச்சினை இருந்தது. குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட மருந்துகள் பரிசோதிக்கப்பட்டு அதில் பிரச்சினையில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பெரியவர்களுக்கான மருந்துகள் சிறு குழந்தைகளுக்கு வழங்கப்பட்டால், அவை தீங்கு விளைவிக்கும். அதனால்தான் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் பொருத்தமானதா என்பதை தெளிவாகக் குறிப்பிடும் ஒரு புதிய முறையை நாங்கள் அறிமுகப்படுத்தவுள்ளோம். அரசாங்கத்தின் தரப்பில் எந்த அலட்சியமும் இல்லை.…

Read More

சென்னை: “தவெக தலைவர் விஜய் கரூர் சம்பவத்துக்கு தார்மிக பொறுப்பேற்று இருந்தால், நீதிமன்றம் கூட இவ்வளவு கண்டனம் தெரிவித்திருக்காது. கரூர் சம்பவத்தில் இபிஎஸ் தரம் தாழ்ந்த அரசியல் செய்கிறார்” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “கரூரில் நடந்தது விபத்துதான். தவெக நிர்வாகிகளுக்கு போதிய அனுபவம் இல்லை. அவர்கள் வேண்டுமென்றே எதையும் செய்திருக்க வாய்ப்பில்லை. எந்த தலைவரும் சொந்தக் கட்சித் தொண்டர் இறப்பதை விரும்ப மாட்டார்கள் என்ற முதல்வரின் கருத்து சரிதான். முதல்வர் யதார்த்தத்தை கூறியுள்ளார். தவெக தலைவர் விஜய் கரூர் சம்பவத்துக்கு தார்மிக பொறுப்பேற்று இருந்தால், நீதிமன்றம் கூட இவ்வளவு கண்டனம் தெரிவித்திருக்காது. உணர்ச்சிவசப்பட்டு பேசும் சீமான் கூட கரூர் விவகாரத்தை நிதானமான கையாள்கிறார். ருசி கண்ட பூனையை போல எப்படியாவது பதவிக்கு வந்துவிட வேண்டுமென்று பதவி வெறியில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆடு நனையுதேனு…

Read More

பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை அதிகபட்சம் இரண்டு கட்டங்களாக நடத்துமாறு இந்திய தேர்தல் ஆணையத்தை, அரசியல் கட்சிகள் கேட்டுக்கொண்டன. பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாத இறுதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்ற நிலையில், தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் விவேக் ஜோஷி, சுக்பீர் சிங் சந்து ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஆறு தேசிய கட்சிகள், ஆறு மாநில கட்சிகள் என அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிஹார் பாஜக தலைவர் திலிப் குமார் ஜெய்ஸ்வால், “தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 28 நாட்களுக்குப் பிறகு வாக்களிக்கும் தேதிகள் இருக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் பாஜக சார்பில் வலியுறுத்தினோம். ஒன்று அல்லது அதிகபட்சம் இரண்டு கட்டங்களாக தேர்தலை நடத்தி முடிக்குமாறும் கோரிக்கை வைத்துள்ளோம்.…

Read More

தூத்துக்குடி: ‘கடலையும், கடல் வாழ் உயிரினங்களையும் எப்படி பாதுகாத்திடுவது என்பது குறித்து தூத்துக்குடியில் வரும் நவ.15-ம் தேதி கடல் அம்மா மாநாடு நடத்துகிறோம்’ என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் வரும் நவ.15-ம் தேதி கடல் அம்மா மாநாடு நடைபெற உள்ளது. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்வதற்காக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று காலை திருச்செந்தூர் அமலி நகர் பகுதிக்கு வந்தார். அங்கிருந்த மீனவர்களது படகில் சீமான் நடுக்கடலுக்கு சென்று பார்வையிட்டார். தொடர்ந்து சிமான் செய்தியாளர்களிடம் கூறியது: “கடலையும், கடல் வாழ் உயிரினங்களையும் எப்படி பாதுகாத்திடுவது என்பது குறித்து தூத்துக்குடியில் வரும் நவ.15-ம் தேதி கடல் அம்மா மாநாடு நடத்துகிறோம். ஏற்கெனவே மலைகளின் மாநாடு, மரங்களின் மாநாடு நடந்தது. கரூர் சம்பவத்தால் அந்த செய்தி மக்களிடம் போய் சேரவில்லை. எனவே கடல் அம்மா மாநாட்டுக்கான ஆலோசனை பயணம் தான் இது.…

Read More

பிரதிநிதித்துவ நோக்கத்திற்காக AI படம் எம்.பி. மற்றும் ராஜஸ்தானில் 12 குழந்தைகள் சோகமான மரணத்திற்குப் பிறகு குழந்தை மக்கள்தொகையில் இருமல் சிரப் பயன்படுத்துவது குறித்து இந்த மையம் ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது. சிரப்ஸில் உள்ள நச்சு தொழில்துறை இரசாயனமான டைதிலீன் கிளைகோல் (டி.இ.ஜி) இருப்பதை ஆய்வக பகுப்பாய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன, இது சிறுநீரக காயங்களுக்கு காரணமாக இருப்பதாக நம்பப்படுகிறது. அதே நிறுவனத்தால் தயாரிக்கப்படும் பிற தயாரிப்புகளை விற்பனை செய்வதைத் தடைசெய்வதோடு, கோல்ட்ரிஃப் மற்றும் நெக்ஸ்ட்ரோ-டி.எஸ் சிரப் விற்பனைக்கு எம்.பி. அரசாங்கம் உடனடியாக தடை விதித்துள்ளது. எம்.பி. முதல்வர் டாக்டர் மோகன் யாதவ் முன்பு ட்விட்டர் ‘எக்ஸ்’ மீதான தடையை அறிவித்தார்.இருமல் மற்றும் குளிர் மருந்துகள் இரண்டு வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படவோ அல்லது விநியோகிக்கப்படவோ கூடாது என்று அனைத்து மாநிலங்கள் மற்றும் தொழிற்சங்க பிரதேசங்களுக்கு தொழிற்சங்க சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரம்பத்தில் காய்ச்சல் மற்றும் குளிர் போன்ற லேசான அறிகுறிகள் வழங்கப்பட்ட…

Read More

பஸ்தர்: “மாவோயிஸ்டுகளுடன் பேசுவதற்கு என்ன இருக்கிறது? ஒன்று அவர்கள் சரணடைய வேண்டும், இல்லாவிட்டால் பாதுகாப்புப் படையினரை எதிர்கொள்ள வேண்டும்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரின் பஸ்தர் மாவட்ட தலைநகரான ஜக்தால்பூரில் நடைபெற்ற பஸ்தர் தசரா உற்சவம் மற்றும் சுதேசி மேளா நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அமித் ஷா, “மாவோயிஸ்ட் அச்சுறுத்தலுக்கு மார்ச் 31, 2026 அன்றுடன் விடை கொடுப்பது என முடிவெடுக்கப்பட்டுவிட்டது. ஆனால், சிலர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளனர். பஸ்தர் உள்பட மாவோயிஸ்ட்களால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் வளர்ச்சியை உறுதிப்படுத்த மத்திய அரசும் சத்தீஸ்கர் அரசும் உறுதிபூண்டுள்ளன. இதில், பேசுவதற்கு என்ன இருக்கிறது? லாபகரமான சரணடைதல் மற்றும் மறுவாழ்வு கொள்கையை நாங்கள் வகுத்துள்ளோம். வாருங்கள், உங்கள் ஆயுதங்களை கீழே போடுங்கள். ஆயுதங்களை கைகளில் எடுத்து பஸ்தரின் அமைதியை சீர்குலைக்க முயன்றால், எங்கள் ஆயுதப்படைகள், துணை ராணுவப்படைகள், காவல்படைகள் பதிலடி கொடுக்கும். இங்குள்ள தண்டேஸ்வரி அம்மன் கோயிலுக்குச்…

Read More