Author: admin

ஸ்டாக்ஹோம்: மருத்​து​வம், இயற்​பியல், வேதி​யியல், இலக்​கி​யம், அமை​தி, பொருளா​தா​ரம் ஆகிய துறை​களில் சிறப்​பான பங்​களிப்பை வழங்​கிய​வர்​களுக்கு விஞ்​ஞானி ஆல்ஃபிரட் நோபல் நினை​வாக ஆண்​டு​தோறும் நோபல் பரிசு வழங்​கப்​பட்டு வரு​கிறது. அந்த வகை​யில், இந்த ஆண்​டுக்​கான நோபல் பரிசு வென்​றவர்​கள் குறித்த அறி​விப்பு நேற்று முதல் வெளி​யிடப்​படுகிறது. இந்த ஆண்​டுக்​கான மருத்​து​வத்​துக்​கான நோபல் பரிசு அமெரிக்​காவைச் சேர்ந்த மேரி இ பிரன்​கோவ், ஃப்​ரெட் ராம்​ஸ்​டெல் மற்​றும் ஜப்​பானைச் சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி ஆகியோருக்கு பகிர்ந்​தளிக்​கப்​படு​ம் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து ஸ்வீடனின் கரோலின்​ஸ்கா மையத்​தின் நோபல் குழு வெளி​யிட்ட அறி​விப்​பில் கூறிய​தாவது: அமெரிக்​காவைச் சேர்ந்த மேரி இ பிரன்​கோவ், ஃப்​ரெட் ராம்​ஸ்​டெல் மற்​றும் ஜப்​பானைச் சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி ஆகியோர், உடலின் நோயெ​திர்ப்பு மண்​டலம் பற்றி ஆய்​வில் ஈடு​பட்​டுள்​ளனர். இவர்​களது கண்​டு​பிடிப்​பு​கள், புற்று நோய் மற்​றும் நோய்​ எ​திர்ப்​புசக்தி மூலம் சிகிச்சை அளிக்​கும் ஆராய்ச்​சிக்கு வழி​வகுத்​துள்​ளன. உடலின் சக்​தி​வாய்ந்த எதிர்ப்பு சக்தி மண்​டலம், ஒழுங்​குப்​படுத்​தப்பட…

Read More

நாகப்பட்டினம்/காரைக்கால்: கடலில் மீன்​பிடித்​துக் கொண்​டிருந்த நாகை மீனவர்​கள் 11 பேரை தாக்கி படகு​களில் இருந்த வலை உள்​ளிட்ட பொருட்​களை இலங்கை கடற்​கொள்​ளை​யர்​கள் கொள்​ளை​யடித்​துச் சென்றனர். நாகை நம்​பி​யார் நகரைச் சேர்ந்த விக்​னேஷ்(28), விமல்​(26), சுகு​மார்​(31), திரு​முரு​கன்​ (31), முரு​கன்​(38), அருண்​(27) ஆகிய 6 பேர் ஃபைபர் படகில் நேற்று முன்​தினம் இரவு கோடியக்​கரை கிழக்கே மீன்​பிடித்து கொண்​டிருந்​தனர். அப்​போது, அங்கு வந்த இலங்கை கடற்​கொள்​ளை​யர் 8 பேர், மீனவர்​களின் படகில் ஏறி இரும்​புக் கம்​பி, கட்​டை, கத்தி உள்​ளிட்ட ஆயுதங்​களால் மீனவர்​களைத் தாக்​கி, அவர்​களிடம் இருந்த வெள்ளி செயின், இன்​ஜின், செல்​போன், ஜிபிஎஸ் கரு​வி, வாக்கிடாக்கி ஆகிய​வற்றை பறித்​துச் சென்​றனர். இதே​போல, கடலில் மீன்​பிடித்​துக் கொண்​டிருந்த நம்​பி​யார் நகரைச் சேர்ந்த சசிகு​மார் ​(30), உதயசங்​கர்​(28), சிவசங்​கர்​(25), கிரு​பா(29), கமலேஷ்(19) ஆகிய 5 பேரை​யும் நேற்று முன்​தினம் இரவு தாக்​கி, இன்​ஜின், ஜிபிஎஸ், செல்​போன், 500 கிலோ வலை ஆகிய​வற்​றைப் பறித்து சென்​றனர்.…

Read More

புற்றுநோய் 2018 ல் 9.6 மில்லியன் இறப்புகளுக்கு வழிவகுத்தது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது 6 இறப்புகளில் 1 ஆகும். உலகளவில் மரணத்திற்கு இரண்டாவது முன்னணி காரணம், புற்றுநோய், இதன் தாக்கம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. 2050 வாக்கில், புதிய புற்றுநோய் வழக்குகள் 35 மில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது 2022 ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட 20 மில்லியன் வழக்குகளில் இருந்து 77% அதிகரிப்பு. சிறந்த சிகிச்சை விருப்பங்கள் மற்றும் விளைவுகளுக்கு புற்றுநோயின் அறிகுறிகளைப் பிடிப்பது மிக முக்கியம். இருப்பினும், புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளை அங்கீகரிப்பது சவாலானது, ஏனெனில் பல அறிகுறிகள் அன்றாட சுகாதார பிரச்சினைகளுடன் ஒன்றிணைகின்றன. நீங்கள் நிராகரிக்கக் கூடாத 10 அசாதாரண மாற்றங்கள் இங்கே, ஏனெனில் அவை புற்றுநோயின் எச்சரிக்கை அடையாளமாக இருக்கலாம்.

Read More

புதுடெல்லி: உ.பி.​யின் அலிகர் நகரில் கடந்த 2017-ல் ஆன்​மிக மடம் தொடங்​கிய​வர் பெண் சாமி​யார் பூஜா சகுன் பாண்டே எனும் அன்​னபூர்ணா பாரதி (40). இவருக்கு பல ஆயிரம் சீடர்​கள் உள்​ளனர். நிரஞ்​சன் அகா​டா​வில் மகா மண்​டலேஷ்வர் பட்​டம் பெற்ற இவர், அகில இந்​திய இந்து மகா சபை​யின் பொதுச் செய​லா​ள​ராக​வும் உள்​ளார். பூஜா, கடந்த 2019 ஜனவரி​யில் மகாத்மா காந்​தி​யின் நினைவு தினத்​தில் அவரது உரு​வப் பொம்​மையை துப்​பாக்​கி​யால் சுட்​டு, அதற்கு தீவைத்து எரித்​தவர். இந்த வழக்​கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்​தார். இந்த வழக்​கில் பூஜா​ மடத்தின் நிர்​வாகி​யும் தொழில​திபரு​மான அபிஷேக் குப்​தா​வும் (32) கைதானார். பிறகு அபிஷேக் – பூஜா இடையே விரோதம் ஏற்​பட்​டது. இதனால், மற்​றொரு மட நிர்​வாகி அசோக் பாண்​டேவுடன் இணைந்து அபிஷேக்கை கொலை செய்தார். இந்த வழக்கை விசா​ரித்த அலிகர் போலீ​ஸார் பஸல், அசோக் பாண்டே ஆகிய இரு​வரை​யும் கைது செய்​தனர். நேற்று…

Read More

கொழும்பு: ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடர் இந்​தி​யா, இலங்கை ஆகிய நாடு​களில் நடை​பெற்று வரு​கிறது. நேற்று முன்​தினம் இலங்​கை​யின் கொழும்பு நகரில் இந்​தி​யா, பாகிஸ்​தான் மகளிர் அணி​கள் மோதிய லீக் ஆட்​டம் நடை​பெற்​றது. முதலில் விளை​யாடிய இந்​திய மகளிர் அணி 50 ஓவர்​களில் 247 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக ஹர்​லின் தியோல் 46, ரிச்சா கோஷ் 35, பிர​திகா ராவல் 31 ஜெமிமா ரோட்​ரிக்ஸ் 32 ரன்​கள் சேர்த்​தனர். பாகிஸ்​தான் அணி தரப்​பில் டயானா பெய்க் 4 விக்​கெட்​கள் வீழ்த்​தி​னார். இதைத் தொடர்ந்து 248 ரன்​கள் என்ற இலக்​குடன் விளை​யாடிய பாகிஸ்​தான் அணி 43 ஓவர்​களில் 159 ரன்​களுக்கு சுருண்​டது. அதி​கபட்​ச​மாக சித்ரா அமின் 81, நடா​லியா பெர்​வைஷ் 33, சித்ரா நவாஷ் 14 ரன்​கள் சேர்த்​தனர். மற்ற எந்த வீராங்​க​னை​யும் இரட்டை இலக்க ரன்னை எட்​ட​வில்​லை. இந்​திய அணி தரப்​பில் கிரந்தி கவுட், தீப்தி சர்மா…

Read More

துபாய்: ஆப்​பிரிக்​கா​வின் தெற்கு பகு​தி​யில் உள்ள எஸ்​வாட்​டினி நாட்​டின் அரச பரம்​பரை​யில் வந்​தவர் மெஸ்​வாட்​டி-3. பரம்​பரை வழி அரச​ரான மெஸ்​வாட்டி, கடந்த ஜூலை மாதம் தனது 15 மனை​வி​கள், 100 உதவி​யாளர்​கள் புடைசூழ தனி விமானத்​தில் அபுதாபியில் வந்​திறங்​கி​னார். அங்கு அவருக்கு உற்​சாக வரவேற்பு அளிக்​கப்​பட்​டது. தற்​போது அரச​ராக உள்ள மெஸ்​வாட்​டி​யின் தந்தை சோபு​சா-2-வுக்கு 125 மனை​வி​கள் என்ற விஷய​மும் தற்​போது தெரிய​வந்​துள்​ளது. 15 மனை​வி​களு​டன் அரசர் மெஸ்​வாட்டி வந்​திறங்​கிய வீடியோ அண்​மை​யில் வெளி​யானது. தற்​போது அந்த வீடியோ இணை​யத்​தில் வைரலாகி​யுள்​ளது. இந்​தப் பயணத்​தின் மெஸ்​வாட்​டி​யின் 30 குழந்​தைகளும் வந்​திருந்​தனர். அதே​நேரத்​தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வரும் அரசர் மெஸ்​வாட்டி குறித்து அந்​நாட்டு மக்​கள் அதிருப்தி அடைந்​துள்​ளனர். எஸ்​வாட்​டினி நாட்​டில் மக்​கள் வாழ்​வா​தா​ரத்​துக்கே கஷ்டப்​பட்டு வரும் நிலை​யில் அவர் மட்​டும் 15 மனை​வி​கள், 30 குழந்​தைகள், 100 உதவி​யாளர்​களு​டன் தனி விமானத்​தில் வலம் வரு​வாரா என்று சமூக வலை​தளங்​களில் அந்​நாட்டு மக்​கள்…

Read More

கொழுப்பு கல்லீரல் நோயில் சோர்வு சாதாரண சோர்வு அல்ல. இது போதுமான ஓய்வுக்குப் பிறகும் குறைந்த ஆற்றலின் நிலையான உணர்வு. ஊட்டச்சத்துக்களை ஆற்றலாக மாற்றுவதில் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. கொழுப்பு அதற்குள் உருவாகும்போது, ​​இந்த ஆற்றல் செயல்முறை குறைகிறது. காலப்போக்கில், ஒருவர் வடிகட்டிய, கனமான அல்லது மந்தமானதாக உணரக்கூடும், குறிப்பாக பகலில். இது பெரும்பாலும் மன அழுத்தம் அல்லது அதிக வேலை என்று நிராகரிக்கப்படுகிறது, ஆனால் சோர்வு தினசரி தோழராக மாறும்போது, ​​அது நெருக்கமான கவனம் செலுத்துவது மதிப்புக்குரியதாக இருக்கலாம்.

Read More

சென்னை: இந்​திய குத்​துச்​சண்டை கூட்​டமைப்பு சார்​பில் பிஎஃப்ஐ கோப்​பைக்​கான குத்​துச்​சண்டை போட்டி சென்​னை​யில் நடை​பெற்​று வருகிறது. இதில் மகளிருக்​கான 60 முதல் 65 கிலோ எடை பிரிவு இறு​திப் போட்​டி​யில் அசாமை சேர்ந்த அங்​குஷிதா போரோ 3-2 என்ற கணக்​கில் ராஜஸ்​தானை சேர்ந்த பர்​தவி கிரே​வாலை தோற்​கடித்து சாம்​பியன் பட்​டம் வென்​றார். 65 முதல் 70 கிலோ எடை பிரிவு இறு​திப் போட்​டி​யில் சர்​வீசஸ் அணியை சேர்ந்த அருந்​ததி சவுத்ரி 5-0 என்ற கணக்​கில் ஆந்​தி​ராவை சேர்ந்த ஸ்நே​காவை தோற்​கடித்து பட்​டம் வென்​றார். 57 முதல் 60 கிலோ எடை பிரிவு இறு​திப் போட்​டி​யில் உலக சாம்​பியன்​ஷிப்​பில் வெண்​கலப் பதக்​கம் வென்ற பர்​வீன் ஹூடா (சாய்) 3-2 என்ற கணக்​கில் ஹரி​யா​னாவை சேர்ந்த பிரி​யாவை தோற்​கடித்​தார். 45 முதல் 48 கிலோ எடை பிரி​வில் உத்​தர​காண்​டின் நிவே​திதா கார்கி 3-2 என்ற கணக்​கில் உலக சாம்​பியன்​ஷிப்​பில் வெள்​ளிப் பதக்​கம் வென்ற மஞ்சு…

Read More

குமுளி: குடியரசு தலை​வர் திரவுபதி முர்மு ஐயப்​பனை தரிசிப்ப​தற்​காக அக். 22-ம் தேதி சபரிமலை வரு​கிறார். இதற்​கான பாதுகாப்பு ஏற்​பாடு​கள் முழு​வீச்​சில் செய்​யப்​பட்டு வரு​கின்​றன. சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் வரும் 18-ம் தேதி துலாம் மாத (ஐப்பசி) பிறப்பை முன்​னிட்டு வரும் 17-ம் தேதி மாலை நடை திறக்​கப்பட உள்​ளது. ஐப்​பசி மாத வழி​பாட்​டில் குடியரசு தலை​வர் திர​வுபதி முர்மு கலந்​து​கொண்டு ஐயப்​பனை தரிசிக்க உள்​ளார். இவர் ஏற்​கெனவே மே மாதம் சபரிமலைக்கு வரு​வ​தாக இருந்த நிலை​யில், பம்​பை, சந்​நி​தானம் உள்​ளிட்ட பகு​தி​கள் ராணுவ கட்​டுப்​பாட்​டுக்​குள் கொண்​டு​வரப்​பட்​டன. ஆனால் அப்​போது நடை​பெற்ற இந்​தி​ய-​பாகிஸ்​தான் போர்​சூழலால் அவர் சபரிமலைக்கு வர முடி​யாத நிலை ஏற்பட்டது. இந்​நிலை​யில் இந்த மாதம் அவர் வர உள்​ள​தாக தேவசம் போர்டு அதி​காரி​கள் தெரி​வித்​தனர். இதுகுறித்து தேவசம் போர்டு அமைச்சர் வி.என்​.​வாசன் கூறும்போது, குடியரசு தலை​வர் திர​வுபதி முர்மு சபரிமலைக்கு வர உள்​ளார். வரும் 22-ம் தேதி கொச்சி…

Read More

மூட்டு நீள அறுவை சிகிச்சை பெரியவர்களுக்கு அவர்களின் உயரத்தை அதிகரிக்க விரும்பும் ஒரு சாத்தியமான விருப்பத்தை வழங்குகிறது. மருத்துவ தொழில்நுட்பம் மற்றும் அறுவை சிகிச்சை நுட்பங்களில் முன்னேற்றங்களுடன், செயல்முறை மிகவும் அணுகக்கூடியதாகவும் பாதுகாப்பாகவும் மாறிவிட்டது.

Read More