கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் வட மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப் பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஜல்பைகுரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நக்ரகட்டா பகுதியை பாஜகவை சேர்ந்த மால்டா உத்தர் எம்.பி. கஜேன் முர்மு, சிலிகுரி எம்எல்ஏ. சங்கர் கோஷ் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் பார்வையிடச் சென்றனர். இவர்கள் மீது ஒரு கும்பல் கல்வீசி தாக்கியதில் முர்மு, கோஷ் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிலிகுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 நாட்களுக்குள் அறிக்கை: இந்நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி, முர்முவை நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது மேல் சிகிச்சை உட்பட அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என குடும்பத்தினரிடம் உறுதி அளித்தார். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் மக்களவை செயலகம் நேற்று அறிக்கை கோரியது. மேற்கு வங்க அரசிடமிருந்து 3…
Author: admin
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அரிதாகவே வைடுகள் வழங்கப்படுகின்றன. இது ஏன் என்று தெரியுமா? பொதுவாக ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி 20 போட்டிகளில் ஆடுகளத்தின் நடு ஸ்டெம்ப்பில் இருந்து வலது பக்கமும், இடது பக்கம் ஒரு கோடு வரைந்திருப்பார்கள். இதுதான் வைடு லைன். இதை வைத்துதான் வீசப்படும் பந்து வைடா, இல்லையா என்பதை நடுவர்கள் முடிவு செய்வார்கள். ஆனால் டெஸ்ட்டில் இதுபோன்ற லைன்கள் கிடையாது. நடுவர்கள் அதிகளவில் வைடுகள் வழங்கமாட்டார்கள். ஒருவேளை பேட்ஸ்மேன் நிற்கும் கிரீஸில் இருந்து பந்து அதிகம் விலகிச் சென்றால் மட்டுமே வைடு வழங்குவார்கள். எதற்காக டெஸ்ட் போட்டியில் மட்டும் இதை செய்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் உள்ளது. ஏனெனில் ஒருநாள் போட்டி, டி 20 ஆட்டங்களில் பந்துகள் வரையறுக்கப்பட்டுள்ளன. வரையறுக்கப்பட்ட பந்துகளே உள்ளதால் அதற்குள் பேட்ஸ்மேன்கள் விரைவாக ரன்கள் சேர்க்க முயற்சிப்பார்கள். அப்படி செய்தால்தான் அதிக ரன்களை இலக்காக கொடுக்க முடியும் அல்லது இலக்கை விரைவாக எட்டிப்பிடிக்க…
கரூர்: “கரூரைச் சேர்ந்த 33 நபர்களின் உறவினர்களிடம் விஜய் வீடியோ கால் மூலமாக பேசி ஆறுதல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களை விரைவில் விஜய் நேரில் வந்து சந்திக்க உள்ளார். இது தொடர்பாக டிஜிபி அலுவலகத்துக்கு இமெயில் மூலமாக அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இன்று டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் சென்று அனுமதி கேட்க இருக்கிறோம்.” என்று தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண் ராஜ் கரூரில் பேட்டியளித்துள்ளார். கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த நபர்களின் உறவினர்களிடம் தவெக தலைவர் விஜய் கடந்த 2 நாட்களாக வீடியோ கால் மூலமாக பேசி ஆறுதல் தெரிவித்து வருகிறார். குறிப்பாக கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாதிக்கப்பட்டவர்கள் உறவினர்களிடம் பேசி முடித்துள்ளார். இந்த வீடியோ கால் பேசும் போது, பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளுக்கு தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த கொள்கை பரப்பு பொதுச்செயலாளரும், முன்னாள் ஐஆர்எஸ்…
தமிழ்நாட்டின் ஸ்ரேசன் பார்மாசூட்டிகல்ஸ் தயாரித்த அசுத்தமான கோல்ட்ரிஃப் இருமல் சிரப்பை உட்கொண்ட பிறகு, குறைந்தது 20 குழந்தைகள் இறந்துவிட்டனர், மேலும் ஐந்து பேர் மத்திய பிரதேசத்தில் சிறுநீரக செயலிழப்புடன் போராடுகிறார்கள். கேள்விக்குரிய சிரப்பில் ஆபத்தான அதிக அளவு டைதிலீன் கிளைகோல் (டி.இ.பாதிக்கப்பட்ட குழந்தைகளில், பெரும்பாலானவர்கள் சிண்ட்வாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் வாந்தியெடுத்தல் மற்றும் சிறுநீர் கழித்தல் போன்ற அறிகுறிகளை உருவாக்கினர். பி.டி.ஐ அறிக்கையின்படி, மத்திய அரசு, சுகாதார சேவைகளின் இயக்குநரகம் மூலம், அனைத்து மாநிலங்கள் மற்றும் தொழிற்சங்க பிரதேசங்கள் இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மற்றும் குளிர் மருந்துகளை பரிந்துரைக்க வேண்டாம் என்று கேட்கும் ஆலோசனையை வெளியிட்டது. மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் குழந்தை இறப்பு பற்றிய அறிக்கைகளுக்கு மத்தியில் ஆலோசனை வெளிவந்தது.கொடிய நச்சு: டைதிலீன் கிளைகோல்தேசிய சுகாதார நிறுவனங்களின் கூற்றுப்படி, டைதிலீன் கிளைகோல் ஒரு நிறமற்ற, மணமற்ற திரவமாகும், இது முதன்மையாக தொழில்துறை நோக்கங்களில் பயன்படுத்தப்பட்டது. இது மனித நுகர்வுக்காக…
கவின் நியூசோம் (கோப்பு புகைப்படம்) கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசோம் செவ்வாயன்று தீபாவளியை அதிகாரப்பூர்வ மாநில விடுமுறையாக மாற்றும் சட்டத்தில் கையெழுத்திட்டார்.ஏபி 268 சட்டம் ஜனவரி 1, 2026 முதல் சமூகக் கல்லூரிகள் மற்றும் பொதுப் பள்ளிகளை தீபாவளியை மூட அனுமதிக்கும் மற்றும் அரசு ஊழியர்கள் அந்த நாளை ஊதியத்துடன் எடுக்கலாம். இந்த நடவடிக்கை நியூசோமின் 2023 வீட்டோவை சாதி பாகுபாடு குறித்த மசோதாவைப் பின்பற்றுகிறது. தீபாவளியை சீக்கியர்கள், சமணர்கள் மற்றும் ப ists த்தர்களும் கொண்டாடுகிறார்கள் என்பதை இந்த மசோதா அங்கீகரிக்கிறது. நாட்டின் இந்திய-அமெரிக்க மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 20% கலிபோர்னியாவில் வாழ்கின்றனர்.நியூசோம் முன்பு லெப்டினன்ட் கவர்னராகவும், சான் பிரான்சிஸ்கோவின் மேயராகவும் பணியாற்றினார். சுகாதாரப் பாதுகாப்பு, சிவில் உரிமைகள், கல்வி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் முற்போக்கான கொள்கைகளுக்கு அவர் பரவலாக அங்கீகரிக்கப்படுகிறார்.அவரது பதிவில் ஒரே பாலின திருமணம், துப்பாக்கி பாதுகாப்பு, மரிஜுவானா சட்டப்பூர்வமாக்கல் மற்றும் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவை…
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை விஐபி பக்தர்கள் பலர் தினமும் தரிசித்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் இணை செயலாளராக பணியாற்றும் சி.ராமாராவ் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு சுப்ரபாத சேவை டிக்கெட்டுகள் மற்றும் தங்கும் விடுதி வழங்குமாறு, கடந்த மே 1-ல் டெல்லி பிரதமர் அலுவலகத்தின் பெயரில் ஒரு கடிதம் திருமலைக்கு வந்தது. அனைவருக்கும் மே 10-ம் தேதி அதிகாலை சுப்ரபாத சேவை தரிசன ஏற்பாடு செய்யப்பட்டது. பிறகு கோயில் பிரசாதங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஆனால் வந்தவர் பிரதமர் அலுவலக துணை செயலாளர் தானா என கேட்டு பிரதமர் அலுவலகத்திற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒரு மெயில் அனுப்பியது. இதனை பரிசீலித்த பிரதமர் அலுவலக உதவி இயக்குநர் ஏ.கே.சர்மா, இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். மேலும், டெல்லி சிபிஐ அதிகாரிகள் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கிறிஸ் வோக்ஸ் பந்தை பாதத்தில் வாங்கி கடும் காயத்திற்கு ஆளான ரிஷப் பண்ட் இப்போது தனது கடைசி கட்ட மறுசிகிச்சைக் கட்டத்தில் இருக்கிறார். இந்த வார இறுதியில் உடற்தகுதி மதிப்பீட்டாய்விற்குத் தயாராக இருக்கிறார். இதனையடுத்து 2025-26 ரஞ்சி டிராபி சீசனின் 2வது பாதியில் ரிஷப் பண்ட் ஆடுகிறார். இது அக்டோபர் 25ம் தேதி தொடங்குகிறது. அதாவது நவம்பர் 14ம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு ரிஷப் பண்ட் திரும்புமாறு அவர் இந்த ரஞ்சி போட்டிகளில் தன் திறமையையும் உடற்தகுதியையும் பரிசோதிக்கவுள்ளார். ஏற்கெனவே அஜித் அகார்க்கர் இது தொடர்பாக ரிஷப் பண்ட்டிடம் பேசியிருக்கிறார். ஆகவே தென் ஆப்பிரிக்கா தொடருக்கு ரிஷப் பண்ட் திரும்புகிறார் என்னும் நற்செய்தி இப்போதைக்கு உறுதியாகியுள்ளது. அவரது கால் கட்டுக்கள் நீக்கப்பட்டு இப்போது பாதத்தை நன்றாக அசைக்க முடிகிறது, இயக்க முடிகிறது என்று கூறப்படுகிறது. கால்களுக்கான பிரத்யேக பயிற்சி மற்றும் உடல் எடை…
கடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் நடிகர் சிலம்ப ரசன் வழிபட்டு, தியானம் செய்தார். கடலூர் மாவட்டம், வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசனம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். மேலும் மாத ஜோதி தரிசனமும் நடைபெறும். தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான சன்மார்க்க அன்பர்கள் கூடி ஜோதி தரிசனம் செய்வர். இங்குள்ள தருமசாலையில் உள்ள அணையா அடுப்பு இன்று வரை பலரின் பசியைப் போக்கி வருகிறது. தினமும் மூன்று வேளை சமைக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் நடிகர் சிலம்பரசன் நேற்று காலை வடலூர் சத்திய ஞானசபைக்கு வருகை தந்தார். இங்கு சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தியானம் செய்தார். சத்திய தருமசாலை, அணையா அடுப்பு பகுதிகளுக்கு சென்று பார்த்தார். தொடர்ந்து வள்ளலார் சித்திபெற்ற மேட்டுக் குப்பத்தில் உள்ள திருவறை தரிசனம்,…
சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்படும் முதல்வர் கோப்பை போட்டிகளுக்கான தொடக்க விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. துணை முதல்வர் உதயநிதி முதல்வர் கோப்பைக்கான ஜோதியை ஏற்றிவைத்து, கோப்பையை அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து, விளையாட்டு வீரர்களின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது: திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு முதல்வர் கோப்பைக்கான போட்டிகளை திருவிழாபோல சர்வதேச தரத்தில் ஒவ்வோர் ஆண்டும் நடத்தி வருகிறோம். 2023-ல் நடந்த போட்டிகளில் 3.5 லட்சம் பேர் பங்கேற்றனர். அது கொஞ்சம், கொஞ்சமாக வளர்ந்து, தற்போது 16.28 லட்சம் பேர் கலந்து கொள்ளும் வகையில் உயர்ந்திருக்கிறது. தமிழகத்தில் விளையாட்டை மக்கள் இயக்கமாக கொண்டாடி வருவதற்கு, முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளும் முக்கியக் காரணமாகும். திறமையானவர்கள் நகரங்களில் மட்டுமின்றி, கிராமங்களிலும், மலைப் பகுதிகளிலும்கூட இருப்பார்கள். அவர்களைக் கண்டறிந்து, திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவது தமிழக அரசின்…
சென்னை: தங்கம் விலை இன்று (அக்.8) மற்றுமொரு புதிய உச்சத்தைத் தொட்டது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.11,000-ஐ தாண்டியது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலையில் ஏற்றமும் இறக்கமும் இருந்து வருகிறது. இதன் அடிப்படையில், செப்.6-ம் தேதி ரூ.80,040 ஆக இருந்த ஒரு பவுன் ஆபரணத் தங்கம் செப்.23-ம் தேதி ரூ.85,120 ஆக உயர்ந்தது. எச்1பி விசா கட்டணத்தை அமெரிக்க அரசு உயர்த்தியது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை தங்கம் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. இதன்பிறகு, ஓரிரு நாட்கள் இறக்கமாகவும், பெரும்பாலான நாட்கள் ஏற்றமாகவும் இருந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் (அக்.6) பவுன் தங்கம் ரூ.89 ஆயிரத்தை தொட்டது. இதன் தொடர்ச்சியாக, ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றும் (அக்.7) பவுனுக்கு ரூ.600 உயர்ந்து, ரூ.89,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று (புதன்கிழமை -…
