Author: admin

கொல்கத்தா: மேற்கு வங்​கத்​தின் வட மாவட்​டங்​களில் பெய்த கனமழை காரண​மாக வெள்​ளப் பெருக்​கும் நிலச்​சரி​வும் ஏற்பட்டது. இதில் உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 30 ஆக அதி​கரித்​துள்​ளது. இந்​நிலை​யில் ஜல்​பைகுரி மாவட்​டத்​தில் பாதிக்​கப்​பட்ட நக்​ரகட்டா பகு​தியை பாஜகவை சேர்ந்த மால்டா உத்​தர் எம்​.பி. கஜேன் முர்​மு, சிலிகுரி எம்​எல்ஏ. சங்​கர் கோஷ் உள்​ளிட்​டோர் நேற்று முன்​தினம் பார்​வை​யிடச் சென்​றனர். இவர்​கள் மீது ஒரு கும்​பல் கல்​வீசி தாக்​கிய​தில் முர்​மு, கோஷ் ஆகியோர் பலத்த காயம் அடைந்​தனர். இவர்​கள் சிலிகுரி​யில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். 3 நாட்​களுக்​குள் அறிக்கை: இந்​நிலை​யில், முதல்​வர் மம்தா பானர்ஜி, முர்​முவை நேற்று நேரில் சந்​தித்து நலம் விசா​ரித்​தார். அப்​போது மேல் சிகிச்சை உட்பட அவருக்கு தேவை​யான அனைத்து உதவி​களை​யும் அரசு செய்​யும் என குடும்​பத்​தினரிடம் உறுதி அளித்​தார். இதுகுறித்து மத்​திய உள்​துறை அமைச்​சகத்​திடம் மக்​களவை செயல​கம் நேற்று அறிக்கை கோரியது. மேற்கு வங்க அரசிட​மிருந்து 3…

Read More

டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டிகளில் அரி​தாகவே வைடு​கள் வழங்​கப்​படு​கின்​றன. இது ஏன் என்று தெரி​யு​மா? பொது​வாக ஒரு​நாள் கிரிக்​கெட் மற்​றும் டி 20 போட்​டிகளில் ஆடு​களத்​தின் நடு ஸ்டெம்ப்​பில் இருந்து வலது பக்​க​மும், இடது பக்​கம் ஒரு கோடு வரைந்​திருப்​பார்​கள். இது​தான் வைடு லைன். இதை வைத்​து​தான் வீசப்​படும் பந்து வைடா, இல்​லையா என்​பதை நடு​வர்​கள் முடிவு செய்​வார்​கள். ஆனால் டெஸ்ட்டில் இது​போன்ற லைன்​கள் கிடையாது. நடு​வர்​கள் அதி​கள​வில் வைடு​கள் வழங்​க​மாட்​டார்​கள். ஒரு​வேளை பேட்​ஸ்​மேன் நிற்​கும் கிரீஸில் இருந்து பந்து அதி​கம் வில​கிச் சென்​றால் மட்​டுமே வைடு வழங்​கு​வார்​கள். எதற்​காக டெஸ்ட் போட்​டி​யில் மட்​டும் இதை செய்​கிறார்​கள் என்​றால் அதற்கு காரணம் உள்​ளது. ஏனெனில் ஒரு​நாள் போட்டி, டி 20 ஆட்​டங்​களில் பந்​துகள் வரையறுக்​கப்​பட்​டுள்​ளன. வரையறுக்​கப்​பட்ட பந்​துகளே உள்​ள​தால் அதற்​குள் பேட்​ஸ்​மேன்​கள் விரை​வாக ரன்​கள் சேர்க்க முயற்​சிப்​பார்​கள். அப்​படி செய்​தால்​தான் அதிக ரன்​களை இலக்​காக கொடுக்க முடி​யும் அல்​லது இலக்கை விரை​வாக எட்​டிப்​பிடிக்க…

Read More

கரூர்: “கரூரைச் சேர்ந்த 33 நபர்களின் உறவினர்களிடம் விஜய் வீடியோ கால் மூலமாக பேசி ஆறுதல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களை விரைவில் விஜய் நேரில் வந்து சந்திக்க உள்ளார். இது தொடர்பாக டிஜிபி அலுவலகத்துக்கு இமெயில் மூலமாக அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இன்று டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் சென்று அனுமதி கேட்க இருக்கிறோம்.” என்று தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண் ராஜ் கரூரில் பேட்டியளித்துள்ளார். கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த நபர்களின் உறவினர்களிடம் தவெக தலைவர் விஜய் கடந்த 2 நாட்களாக வீடியோ கால் மூலமாக பேசி ஆறுதல் தெரிவித்து வருகிறார். குறிப்பாக கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாதிக்கப்பட்டவர்கள் உறவினர்களிடம் பேசி முடித்துள்ளார். இந்த வீடியோ கால் பேசும் போது, பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளுக்கு தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த கொள்கை பரப்பு பொதுச்செயலாளரும், முன்னாள் ஐஆர்எஸ்…

Read More

தமிழ்நாட்டின் ஸ்ரேசன் பார்மாசூட்டிகல்ஸ் தயாரித்த அசுத்தமான கோல்ட்ரிஃப் இருமல் சிரப்பை உட்கொண்ட பிறகு, குறைந்தது 20 குழந்தைகள் இறந்துவிட்டனர், மேலும் ஐந்து பேர் மத்திய பிரதேசத்தில் சிறுநீரக செயலிழப்புடன் போராடுகிறார்கள். கேள்விக்குரிய சிரப்பில் ஆபத்தான அதிக அளவு டைதிலீன் கிளைகோல் (டி.இ.பாதிக்கப்பட்ட குழந்தைகளில், பெரும்பாலானவர்கள் சிண்ட்வாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் வாந்தியெடுத்தல் மற்றும் சிறுநீர் கழித்தல் போன்ற அறிகுறிகளை உருவாக்கினர். பி.டி.ஐ அறிக்கையின்படி, மத்திய அரசு, சுகாதார சேவைகளின் இயக்குநரகம் மூலம், அனைத்து மாநிலங்கள் மற்றும் தொழிற்சங்க பிரதேசங்கள் இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மற்றும் குளிர் மருந்துகளை பரிந்துரைக்க வேண்டாம் என்று கேட்கும் ஆலோசனையை வெளியிட்டது. மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் குழந்தை இறப்பு பற்றிய அறிக்கைகளுக்கு மத்தியில் ஆலோசனை வெளிவந்தது.கொடிய நச்சு: டைதிலீன் கிளைகோல்தேசிய சுகாதார நிறுவனங்களின் கூற்றுப்படி, டைதிலீன் கிளைகோல் ஒரு நிறமற்ற, மணமற்ற திரவமாகும், இது முதன்மையாக தொழில்துறை நோக்கங்களில் பயன்படுத்தப்பட்டது. இது மனித நுகர்வுக்காக…

Read More

கவின் நியூசோம் (கோப்பு புகைப்படம்) கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசோம் செவ்வாயன்று தீபாவளியை அதிகாரப்பூர்வ மாநில விடுமுறையாக மாற்றும் சட்டத்தில் கையெழுத்திட்டார்.ஏபி 268 சட்டம் ஜனவரி 1, 2026 முதல் சமூகக் கல்லூரிகள் மற்றும் பொதுப் பள்ளிகளை தீபாவளியை மூட அனுமதிக்கும் மற்றும் அரசு ஊழியர்கள் அந்த நாளை ஊதியத்துடன் எடுக்கலாம். இந்த நடவடிக்கை நியூசோமின் 2023 வீட்டோவை சாதி பாகுபாடு குறித்த மசோதாவைப் பின்பற்றுகிறது. தீபாவளியை சீக்கியர்கள், சமணர்கள் மற்றும் ப ists த்தர்களும் கொண்டாடுகிறார்கள் என்பதை இந்த மசோதா அங்கீகரிக்கிறது. நாட்டின் இந்திய-அமெரிக்க மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 20% கலிபோர்னியாவில் வாழ்கின்றனர்.நியூசோம் முன்பு லெப்டினன்ட் கவர்னராகவும், சான் பிரான்சிஸ்கோவின் மேயராகவும் பணியாற்றினார். சுகாதாரப் பாதுகாப்பு, சிவில் உரிமைகள், கல்வி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் முற்போக்கான கொள்கைகளுக்கு அவர் பரவலாக அங்கீகரிக்கப்படுகிறார்.அவரது பதிவில் ஒரே பாலின திருமணம், துப்பாக்கி பாதுகாப்பு, மரிஜுவானா சட்டப்பூர்வமாக்கல் மற்றும் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவை…

Read More

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை விஐபி பக்தர்கள் பலர் தினமும் தரிசித்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் இணை செயலாளராக பணியாற்றும் சி.ராமாராவ் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு சுப்ரபாத சேவை டிக்கெட்டுகள் மற்றும் தங்கும் விடுதி வழங்குமாறு, கடந்த மே 1-ல் டெல்லி பிரதமர் அலுவலகத்தின் பெயரில் ஒரு கடிதம் திருமலைக்கு வந்தது. அனைவருக்கும் மே 10-ம் தேதி அதிகாலை சுப்ரபாத சேவை தரிசன ஏற்பாடு செய்யப்பட்டது. பிறகு கோயில் பிரசாதங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஆனால் வந்தவர் பிரதமர் அலுவலக துணை செயலாளர் தானா என கேட்டு பிரதமர் அலுவலகத்திற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒரு மெயில் அனுப்பியது. இதனை பரிசீலித்த பிரதமர் அலுவலக உதவி இயக்குநர் ஏ.கே.சர்மா, இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். மேலும், டெல்லி சிபிஐ அதிகாரிகள் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Read More

கிறிஸ் வோக்ஸ் பந்தை பாதத்தில் வாங்கி கடும் காயத்திற்கு ஆளான ரிஷப் பண்ட் இப்போது தனது கடைசி கட்ட மறுசிகிச்சைக் கட்டத்தில் இருக்கிறார். இந்த வார இறுதியில் உடற்தகுதி மதிப்பீட்டாய்விற்குத் தயாராக இருக்கிறார். இதனையடுத்து 2025-26 ரஞ்சி டிராபி சீசனின் 2வது பாதியில் ரிஷப் பண்ட் ஆடுகிறார். இது அக்டோபர் 25ம் தேதி தொடங்குகிறது. அதாவது நவம்பர் 14ம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு ரிஷப் பண்ட் திரும்புமாறு அவர் இந்த ரஞ்சி போட்டிகளில் தன் திறமையையும் உடற்தகுதியையும் பரிசோதிக்கவுள்ளார். ஏற்கெனவே அஜித் அகார்க்கர் இது தொடர்பாக ரிஷப் பண்ட்டிடம் பேசியிருக்கிறார். ஆகவே தென் ஆப்பிரிக்கா தொடருக்கு ரிஷப் பண்ட் திரும்புகிறார் என்னும் நற்செய்தி இப்போதைக்கு உறுதியாகியுள்ளது. அவரது கால் கட்டுக்கள் நீக்கப்பட்டு இப்போது பாதத்தை நன்றாக அசைக்க முடிகிறது, இயக்க முடிகிறது என்று கூறப்படுகிறது. கால்களுக்கான பிரத்யேக பயிற்சி மற்றும் உடல் எடை…

Read More

கடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் நடிகர் சிலம்ப ரசன் வழிபட்டு, தியானம் செய்தார். கடலூர் மாவட்டம், வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசனம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். மேலும் மாத ஜோதி தரிசனமும் நடைபெறும். தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான சன்மார்க்க அன்பர்கள் கூடி ஜோதி தரிசனம் செய்வர். இங்குள்ள தருமசாலையில் உள்ள அணையா அடுப்பு இன்று வரை பலரின் பசியைப் போக்கி வருகிறது. தினமும் மூன்று வேளை சமைக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் நடிகர் சிலம்பரசன் நேற்று காலை வடலூர் சத்திய ஞானசபைக்கு வருகை தந்தார். இங்கு சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தியானம் செய்தார். சத்திய தருமசாலை, அணையா அடுப்பு பகுதிகளுக்கு சென்று பார்த்தார். தொடர்ந்து வள்ளலார் சித்திபெற்ற மேட்டுக் குப்பத்தில் உள்ள திருவறை தரிசனம்,…

Read More

சென்னை: தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​யம் சார்​பில் நடத்​தப்​படும் முதல்வர் கோப்பை போட்​டிகளுக்​கான தொடக்க விழா சென்னை கலை​வாணர் அரங்​கில் நேற்று நடை​பெற்​றது. துணை முதல்​வர் உதயநிதி முதல்​வர் கோப்​பைக்​கான ஜோதியை ஏற்​றி​வைத்​து, கோப்​பையை அறி​முகம் செய்து வைத்​தார். தொடர்ந்​து, விளை​யாட்டு வீரர்​களின் கலை நிகழ்ச்​சிகள் நடத்​தப்​பட்​டன. இதில் துணை முதல்​வர் உதயநிதி பேசி​ய​தாவது: திமுக அரசு பொறுப்​பேற்ற பிறகு முதல்​வர் கோப்​பைக்​கான போட்​டிகளை திரு​விழா​போல சர்​வ​தேச தரத்​தில் ஒவ்​வோர் ஆண்​டும் நடத்தி வரு​கிறோம். 2023-ல் நடந்த போட்​டிகளில் 3.5 லட்​சம் பேர் பங்​கேற்​றனர். அது கொஞ்​சம், கொஞ்​ச​மாக வளர்ந்​து, தற்​போது 16.28 லட்​சம் பேர் கலந்து கொள்​ளும் வகை​யில் உயர்ந்​திருக்​கிறது. தமிழகத்​தில் விளை​யாட்டை மக்​கள் இயக்​க​மாக கொண்​டாடி வரு​வதற்​கு, முதல்​வர் கோப்​பைக்​கான விளை​யாட்​டுப் போட்​டிகளும் முக்​கியக் காரண​மாகும். திறமை​யானவர்​கள் நகரங்​களில் மட்​டுமின்​றி, கிராமங்​களி​லும், மலைப் பகு​தி​களி​லும்​கூட இருப்​பார்​கள். அவர்​களைக் கண்​டறிந்​து, திறமை​களை வெளிப்​படுத்த வாய்ப்​பு​களை ஏற்​படுத்​தித் தரு​வது தமிழக அரசின்…

Read More

சென்னை: தங்கம் விலை இன்று (அக்.8) மற்றுமொரு புதிய உச்சத்தைத் தொட்டது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.11,000-ஐ தாண்டியது. சர்​வ​தேச பொருளா​தார நில​வரத்​துக்கு ஏற்ப தங்​கம் விலை​யில் ஏற்​ற​மும் இறக்​க​மும் இருந்து வரு​கிறது. இதன் அடிப்​படை​யில், செப்​.6-ம் தேதி ரூ.80,040 ஆக இருந்த ஒரு பவுன் ஆபரணத் தங்​கம் செப்​.23-ம் தேதி ரூ.85,120 ஆக உயர்ந்​தது. எச்​1பி விசா கட்​ட​ணத்தை அமெரிக்க அரசு உயர்த்​தி​யது. அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை தங்​கம் விலை உயர்​வுக்கு முக்​கியக் காரண​மாக அமைந்​தது. இதன்​பிறகு, ஓரிரு நாட்​கள் இறக்​க​மாக​வும், பெரும்​பாலான நாட்​கள் ஏற்​ற​மாக​வும் இருந்து வந்த நிலை​யில், நேற்று முன்​தினம் (அக்.6) பவுன் தங்​கம் ரூ.89 ஆயிரத்தை தொட்​டது. இதன் தொடர்ச்​சி​யாக, ஆபரணத் தங்​கத்​தின் விலை நேற்​றும் (அக்.7) பவுனுக்கு ரூ.600 உயர்ந்​து, ரூ.89,600-க்கு விற்பனை செய்​யப்​பட்​டது. இந்நிலையில் இன்று (புதன்கிழமை -…

Read More