Author: admin

பெங்களூரு: இந்தியாவின் மனித விண்வெளிப் பயண அபிலாஷைகளுக்கான ஒரு மைல்கல்லில், நாடு தனது முதல் மருத்துவ மற்றும் உளவியல் தேர்வு மற்றும் விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி நெறிமுறைகளை உள்நாட்டில் சரிபார்க்கிறது. பெங்களூரில் உள்ள இந்திய விமானப்படையின் (ஐ.ஏ.எஃப்) ஏரோஸ்பேஸ் மெடிசின் (ஐஏஎம்) மற்றும் ஐ.சி.எம்.ஆர் ஆகியவற்றால் கூட்டாக நடத்தப்பட்ட “அனுகாமி”, பத்து நாள்-ஜூலை 7 முதல் 17 வரை-மனித விண்வெளி அனலாக் பரிசோதனையை வெற்றிகரமாக முடிப்பதன் மூலம் சரிபார்ப்பு அடையப்பட்டது.இந்தியாவின் நீண்டகால மனித விண்வெளிப் பயணத் திட்டத்தை வடிவமைப்பதை நோக்கமாகக் கொண்ட பெரிய காகன்யான் அனலாக் பரிசோதனையின் (கணெக்ஸ்) ஒரு பகுதியான இந்த பயிற்சி. இப்போது வரை, இந்தியாவில் விண்வெளி வீரர் தயாரிப்பு சர்வதேச ஒத்துழைப்புகளில் பெரிதும் சாய்ந்துள்ளது, வேட்பாளர்கள் குறிப்பிட்ட பணி பயிற்சிக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் எதிர்கால பயணங்களுக்காக இந்திய விண்வெளி வீரர்களைப் பயிற்றுவிக்க, கண்காணிக்க மற்றும் தயாரிக்கக்கூடிய உள்நாட்டு அமைப்புகளை உருவாக்குவதற்கான மாற்றத்தை கணெக்ஸ் குறிக்கிறது.மாறுபட்ட பங்கேற்பாளர்கள்அனுகாமியின்…

Read More

புதுடெல்லி: நாடாளுமன்ற கூட்டம் நாளை தொடங்க உள்ள நிலையில், இந்த கூட்டத் தொடரில் பாஜக அரசுக்கு எதிராக செயல்படுவது குறித்து இண்டியா கூட்டணி கட்சிகள் நேற்று தீவிர ஆலோசனை நடத்தின. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, திரிணமூல் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் பங்கேற்றன. இண்டியா கூட்டணியில் இருந்து விலகியதாக அறிவித்த ஆம் ஆத்மி இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. கடந்த 2024 மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை (என்டிஏ) தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இண்டியா கூட்டணியை உருவாக்கியது. இந்த கூட்டணியில் காங்கிரஸ், திரிணமூல், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. மேலும், இண்டியா கூட்டணி 2024 மக்களவை தேர்தலுக்காக மட்டுமே அமைக்கப்பட்டது என அதில் இருந்த பெரும்பாலான கட்சிகள் அவ்வப்போது கூறிவந்தன. இதற்கிடையே, 2024 மக்களவை தேர்தலுக்கு பின்னர் நடைபெற்ற ஹரியானா,…

Read More

சென்னை: சேரக்​கூ​டாத இடத்​தில் அ​தி​முக கூட்​டணி சேர்ந்​திருப்​ப​தாக​வும், அதனால் பழனி​சாமி​யின் அழைப்பை நிராகரிக்கிறோம் என்​றும் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் இரா.​முத்​தரசன் தெரி​வித்​துள்​ளார். சிதம்​பரத்​தில் நடந்த அதி​முக​வின் பிரச்​சா​ர கூட்டத்​தில் பேசிய அக்​கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி, விசிக, கம்​யூனிஸ்ட் கட்​சிகள் எங்​களது கூட்​ட​ணிக்கு வந்​தால் ரத்​தின கம்​பளம் விரித்து வரவேற்க தயா​ராக இருக்​கிறோம் என பேசி​னார். இதுதொடர்​பாக சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் இரா.​முத்​தரசன் கூறிய​தாவது: அதி​முக பாஜக​வுடன் உறவில் இருந்த நிலையில், இனி பாஜக​வுடன் சேரப்​போவ​தில்லை என அக்​கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி அறி​வித்​தார். இப்​போது மீண்டும் பாஜக​வுடன் இணைந்​திருக்​கிறார். அப்​படி இணை​ய​வேண்​டிய கட்​டா​யம் என்ன? பாஜக – அதி​முக கூட்​டணி ஆட்சி அமைக்​கும் என திட்​ட​வட்​ட​மாக தெரி​வித்த மத்திய உள்​துறை அமைச்​சர் அமித்​ஷா, அந்த ஆட்​சி​யின் அமைச்​சர​வை​யில் பாஜக பங்​குபெறும் என்​றும் கூறி​யிருக்​கிறார். ஒரு திரைபடத்​தில் நடிகர் வடிவேலு ரவுடிகளை போலீ​ஸார் அழைத்து செல்​லும்​போது, நானும் ரவுடி​தான் எனக்​கூறி போலீஸ் வாகனத்​தில்…

Read More

கொல்கத்தா: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி மூலம் ஏராளமானோரிடம் ரூ.100 கோடிக்கு மேல் பணம் பறித்த கும்பலை சேர்ந்த பெண் உட்பட 9 பேருக்கு, நாட்டிலேயே முதல்முறையாக மேற்கு வங்க நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. சமீபகாலமாக, நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடி அதிக அளவில் நடந்து வருகிறது. வீடியோ அழைப்பில் தொடர்பு கொள்ளும் மர்ம நபர்கள் தங்களை அரசு உயர் அதிகாரிகள் என்று அறிமுகம் செய்துகொள்வார்கள். “உங்கள் பெயரில் போதை பொருள் கடத்தப்பட்டுள்ளதால், டிஜிட்டல் அரெஸ்ட்டில் வைக்கப்பட்டுள்ளீர்கள். இதில் இருந்து தப்ப வேண்டுமானால், நாங்கள் கூறும் வங்கிக் கணக்குக்கு பணத்தை மாற்றுங்கள்” என்று கூறுவார்கள். இந்தியாவில் இதுபோல வீடியோ வழியில் தொடர்பு கொண்டு டிஜிட்டல் அரெஸ்ட் செய்ய சட்டத்தில் இடம் இல்லை என்று மத்திய அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. ஆனாலும், அரசு அலுவலகம் போன்ற பின்னணியில் அதிகாரிகள் போலவே சீருடை அணிந்த நபர்கள் மிரட்டுவதால், அப்பாவி மக்கள்…

Read More

சென்னை: சென்னையில் நடைபெற்ற சைவ சிந்தாந்த மாநாட்டில் பங்கேற்க கடந்த மே 2 அன்று சென்னை நோக்கி வந்த மதுரை ஆதீனத்தின்கார் மீது உளுந்தூர்பேட்டை அருகே மற்றொரு கார் மோதியது. இந்த சம்பவம் தொடர்பாக மாநாட்டில் மதுரை ஆதீனம், பேசியது இரு மதத்தினருக்கு இடையே மோதலைத் தூண்டும் வகையில் உள்ளதாகக்கூறி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர் அளித்த புகாரின்பேரில், சென்னை சைபர் க்ரைம் போலீஸார் மதுரை ஆதீனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி மதுரை ஆதீனம், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். போலீஸார் தரப்பில் பெருநகர அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் ஆஜராகி ஆட்சேபம் தெரிவித்தார். பதிலுக்கு ஆதீனம் தரப்பில் இந்த வழக்கு அரசியல் உள் நோக்கத்துடன் பாரம்பரியம் கொண்ட மதுரை ஆதீனத்துக்கு எதிராக பதியப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.…

Read More

Last Updated : 20 Jul, 2025 01:14 AM Published : 20 Jul 2025 01:14 AM Last Updated : 20 Jul 2025 01:14 AM கொச்சி: லட்சத்தீவு பகுதியில் ஏராளமான குட்டி தீவுப் பகுதிகள் உள்ளன. இவற்றில் 10 தீவுகளில் மக்கள் வசிக்கின்றனர். இவற்றில் ஒன்று பிட்ரா தீவு. இங்கு 105 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த தீவு அமைந்துள்ள பகுதி நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியமான இடமாக கருதப்பட்டது. அதனால் இந்த தீவு முழுவதையும் ராணுவத் தேவைகளுக்காக கையகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதையடுத்து லட்சத்தீவு வருவாய் துறை சார்பில் கடந்த 11-ம் தேதி அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. பிட்ரா தீவின் இருப்பிடம் நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியமான இடமாக கருதப்படுவதால், இந்த தீவு முழுவதையும் பாதுகாப்புத்துறையிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக நில கொள்முதல், மறுவாழ்வு சட்டப்படி, இங்கு வசிக்கும் மக்கள், கிராம சபா உட்பட…

Read More

சென்னை: பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்ற தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொடர்ந்த வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றம் ஆக.18-க்கு தள்ளிவைத்துள்ளது. தமிழகம் முழுவதும் பொது இடங்கள் மற்றும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் உள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகள் மற்றும் சங்கங்களின் கொடிக்கம்பங்களை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து, தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமை செயலர், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடந்த 15-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், ‘‘தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கொடிக்கம்பங்களையும் ஜூலை 18-க்குள் அகற்ற வேண்டும்’’ என அறிவுறுத்தியிருந்தார். தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு…

Read More

ஒரு புதிய ஆப்டிகல் மாயை, ‘விரிவாக்கும் துளை’, மூளை மற்றும் அனிச்சைகளைத் தந்திரம் செய்கிறது, இதனால் இருண்ட இடத்திற்குள் நுழைவதைப் போல மாணவர் விரிவாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒரு ஆய்வில் 86% மக்கள் மாயையை உணர்கிறார்கள், கருந்துளைகள் வண்ணங்களை விட வலுவான மாணவர் எதிர்வினைகளைத் தூண்டுகின்றன. இது நம் மாணவர்கள் உணரப்பட்ட ஒளிக்கு எதிர்வினையாற்றுவதை அறிவுறுத்துகிறது, உடல் ஒளி ஆற்றல் மட்டுமல்ல, காட்சி அமைப்பு சிக்கலான நுண்ணறிவுகளை வழங்குகிறது. நீங்கள் ஒரு பெரிய ஆப்டிகல் மாயை ஆர்வலராக இருந்தால், அதையெல்லாம் நீங்கள் பார்த்ததாக நினைத்தால், மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது. ஏனெனில் இந்த ஒளியியல் மாயை மூளைக்கு குழப்பமானதல்ல, ஆனால் மனித அனிச்சை உடலியல் மட்டத்தில் ஏமாற்றுகிறது. ஆம், அது சரி. இது நிச்சயமாக மங்கலான இதயமுள்ளவர்களுக்கு அல்ல. 2022 ஆய்வில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மாயை, மனித நரம்பியல் அறிவியலில் எல்லைகளில் வெளியிடப்படுகிறது.துளை விரிவாக்குதல்இந்த படத்தைப் பாருங்கள். மத்திய கருந்துளை விரிவடைவதை…

Read More

பெங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்தவர் ரோஹன் சல்டானா (42). ரியல் எஸ்டேட் தொழிலதிபரான இவர் தன்னை பெரிய கோடீஸ்வரராக காட்டிக்கொண்டுள்ளார். ரோஹன் சல்டானா பெங்களூரு, மங்களூரு, கோவா, மும்பை ஆகிய இடங்களை சேர்ந்த தொழிலதிபர்களிடம் கோடிக்கணக்கில் கடன் வாங்கி தருவதாகக்கூறி ஏமாற்றியதாக காவல் துறையில் புகார்கள் குவிந்துள்ளன. இதையடுத்து, நேற்று முன்தினம் நள்ளிரவில் மங்களூருவில் உள்ள ஜேபினமோகர் பகுதியில் விலை உயர்ந்த காரில் சென்ற ரோஹன் சல்டானாவை போலீஸார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவரது பங்களாவுக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். மிகவும் ஆடம்பரமாக கட்டப்பட்டிருந்த அந்த பங்களாவில் விலை உயர்ந்த வாகனங்கள், ரகசிய அறைகள், ராசியான தாவரங்கள், ரூ.72 லட்சம் மதிப்புள்ள பழமையான வெளிநாட்டு மது வகைகள், விலை உயர்ந்த வாசனை திரவியங்கள், ரூ.35 லட்சம் ரொக்கம், 667 கிராம் தங்க நகைகள், ரூ.2.76 கோடி மதிப்புள்ள வைர நகைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். ரூ.300 கோடி வரை மோசடி:…

Read More

மயிலாடுதுறை: மயி​லாடு​துறை​யில் வாக​னம் பறிக்​கப்​பட்​ட​தாக கூறப்​படும் நிலை​யில், தனது அலு​வல​கத்​துக்குகாவல் துணைக் கண்​காணிப்​பாளர் நடந்து சென்ற வீடியோ, சமூக வலை​தளங்​களில் வைரலாகி பரபரப்பை ஏற்​படுத்​தி​யது. மயி​லாடு​துறை மாவட்ட மது​விலக்கு அமலாக்​கப் பிரிவு டிஎஸ்​பி​யாக கடந்த ஆண்டு நவம்​பர் முதல் சுந்​தரேசன் பணி​யாற்றி வரு​கிறார். சட்​ட​விரோத மது, சாரா​யம் கடத்​தலில் ஈடு​படு​வோர் மீது இவர் கடும் நடவடிக்​கைகளை மேற்​கொண்டு வரு​கிறார். இந்​நிலை​யில், இவரது வாக​னத்தை பறித்​துக் கொண்​ட​தால், டிஎஸ்பி சுந்​தரேசன் வீட்​டில் இருந்து அலு​வல​கத்​துக்கு நடந்து செல்​லும் வீடியோ சமூக வலை​தளங்​களில் பரவியது. இதுகுறித்து டிஎஸ்பி சுந்​தரேசன் கூறிய​தாவது: கடந்த 5-ம் தேதி அமைச்​சரின் பாது​காப்பு பணிக்​காக எனது வாக​னத்தை மாவட்ட காவல் துறை தரப்​பில் கேட்​டார்​கள். எழுத்​துப்​பூர்​வ​மாக உத்​தரவு பிறப்​பித்​தால் வாக​னத்தை வழங்​கு​வ​தாக தெரி​வித்​தேன். இதனால், என்னை திருச்​செந்​தூர் கும்​பாபிஷேக பாது​காப்​புப் பணிக்கு அனுப்​பி​வைத்​தனர். அந்​தப் பணி முடிந்து திரும்​பிய பின்னர், முதல்​வர் வருகை பாது​காப்​புப் பணிக்கு அனுப்​பினர். அந்​தப் பணியை…

Read More