Author: admin

புதுடெல்லி: பாகிஸ்தானில் இயங்கும் டிஆர்எப் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்திருப்பது, இந்தியா – அமெரிக்கா இடையே உள்ள கருத்து இடைவெளியை குறைக்கும் என்று சசி தரூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சசி தரூர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகளில், “பஹல்காம் தாக்குதலுக்கு உரிமை கோரிய லஷ்கர் இ தொய்பா அமைப்பின் துணை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் (டிஆர்எஃப்) அமைப்பை அமெரிக்க வெளியுறவுத்துறை பயங்கரவாத அமைப்பாக அறிவித்ததை நான் வரவேற்கிறேன். அந்த அமைப்பின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கான அழுத்தத்தை இது பாகிஸ்தானுக்குக் கொடுக்கும். வாஷிங்டனுக்கான எனது பயணத்தின்போது, பயங்கரவாத அமைப்புகளுக்கு பாதுகாப்பான புகலிடத்தை பாகிஸ்தான் இன்னமும் வழங்கிக் கொண்டிருப்பதை அமெரிக்கா ஏன் வேடிக்கை பார்க்கிறது என நான் கேட்டபோது, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் அமெரிக்காவுடன் பாகிஸ்தான் ஒத்துழைப்பதாக தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, காபூல் விமான நிலையத்தில் 23 அமெரிக்கக் கடற்படையினரைக் கொன்ற அபே கேட் குண்டுவெடிப்புக்குக்…

Read More

முதல் 3 நாட்களுக்கு பப்ளிக் ரிவ்யூ விவகாரம் தொடர்பாக விஷால் கூறிய கருத்துக்கு தனஞ்செயன் பதிலடிக் கொடுத்துள்ளார். சமீபத்தில் ‘ரெட் ஃப்ளவர்’ படத்தின் விளம்பரப்படுத்தும் விழாவில் விஷால் பேசும்போது, “திரையரங்க உரிமையாளர்களுக்கு ஒரு கோரிக்கை. ஒரு திரைப்படம் வெளியாகும்போது முதல் 3 நாட்களுக்கு மட்டும் திரையரங்க உரிமையாளர்கள் பப்ளிக் ரிவ்யூ எடுக்க அனுமதிக்க வேண்டாம். வெளியில் அவர்கள் எடுத்துக் கொள்ளட்டும்” என்று தனது பேச்சில் கூறியிருந்தார். இது திரையுலக வட்டாரத்தில் பரவலாக விவாதிக்கப்பட்டது. விஷாலின் கருத்துக்கு தயாரிப்பாளர் தனஞ்செயன் பதிலடிக் கொடுத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ‘பிளாக்மெயில்’ இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக தனஞ்செயன் கலந்துக் கொண்டார். அவர் தனது பேச்சில் விஷால் கருத்து தொடர்பாக குறிப்பிடும்போது, “முதல் மூன்று நாட்கள் ரிவ்யூ செய்ய வேண்டாம் என்று விஷால் அண்மையில் இதே மேடையில் சொல்லியிருந்தார். அதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மூன்று நாட்கள் ரிவ்யூ வரவில்லை என்றால்…

Read More

நாமக்கல்: “வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளதன் ஒரே நோக்கம் திமுகவை ஆட்சியில் இருந்து விரட்டுவதுதான். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி, என்பதை அறிவித்துவிட்டோம். இதில் எவ்விதமான குழப்பமும் இல்லை.” என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். மேலும், சாதாரண மக்களை ஏமாற்றி கிட்னி விற்பனையில் ஈடுபடுபவர்களை முழுமையாக கண்டறிய சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் மறைந்த பாஜக மாநில பொது செயலாளர் சேலம் ஆடிட்டர் ரமேஷின் 12ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட பாஜக தலைவர் ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு ஆடிட்டர் ரமேஷின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து பாஜக…

Read More

ஃபேஷன் தொழில் நிச்சயமாக பாணிக்கும் கலைக்கும் இடையிலான வரிகளை மங்கலாக்கியுள்ளது, பிராண்டுகள் மேலேயும் அதற்கு அப்பாலும் செல்கின்றன. ஆனால் மறுபுறம், சில வடிவமைப்பாளர்கள் அன்றாட பொருட்களிலிருந்து உத்வேகம் பெறுகிறார்கள், இதன் விளைவாக அணியக்கூடியதை விட மிகவும் விசித்திரமான மற்றும் அபத்தமான உருப்படிகள் உருவாகின்றன. இது மற்றொரு நாள் மற்றும் மற்றொரு வினோதமான வடிவமைப்பாளர் பை வைரலாகி, நாங்கள் இருவரும் ஆச்சரியமாகவும் குழப்பமாகவும் விட்டுவிடுகிறது. ஃபேஷன் நிறுவனமான லூயிஸ் உய்ட்டன் அதை மீண்டும் தங்கள் லைஃப் பியூய் பையுடன் செய்துள்ளார், இது அலைகளை உருவாக்குகிறது, அதாவது சரியான காரணங்களுக்காக இல்லை. அங்குள்ள உயர்-ஃபேஷன் வித்தியாசத்தின் ஒரே பகுதி இதுதான் என்று நீங்கள் நினைத்தால், வேறு என்ன பட்டியலை உருவாக்கியது என்பதைப் பார்க்கும் வரை காத்திருங்கள்.

Read More

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் பாலசோரில் பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தால் கல்லூரி மாணவி ஒருவர் சமீபத்தில் தீக்குளித்து உயிரிழந்த பரபரப்பு அடங்குவதற்குள், புரி மாவட்டத்தில் 15 வயது சிறுமியை சில மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துக் கொல்ல முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. புரி மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவர் தனது தோழியின் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது, பயாபர் கிராமத்தில் மூன்று மர்ம நபர்கள் சிறுமியின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து சிறுமி ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து ஒடிசா மாநில துணை முதல்வரும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் அமைச்சருமான பிரவதி பரிதா, “புரி மாவட்டத்தில் உள்ள பலங்காவில், பதினைந்து வயது சிறுமி ஒருவர் மீது சிலர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த செய்தியைக் கேட்டு நான் மிகவும்…

Read More

சென்னை: “பழனிசாமி விரித்திருப்பது ரத்தினக் கம்பளம் அல்ல. பாஜகவின் பாசிச ரத்தக் கம்பளம் என்பதை திமுகவின் தோழமை கட்சிகளும் மக்களும் அறிவார்கள்” என தமிழக அமைச்சரும், திமுக மூத்த நிர்வாகியுமான கே.என்.நேரு கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் பயணம் போய்க் கொண்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தினம் தினம் கேலிக் கூத்துகளை அரங்கேற்றி நெட்டிசன்களுக்கு ட்ரோல் மெட்டிரியல் ஆகிக் கொண்டிருக்கிறார். ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பைத் தயவு செய்து மாற்றிவிடுங்கள் பழனிசாமி. ’சம்பந்தியை மீட்டோம்; சம்பாதித்த பணத்தைக் காப்போம்’, ’மக்களை மறப்போம்; தமிழ்நாட்டை விற்போம்’, ’மகனைக் காப்போம்; சம்பந்தியை மீட்போம்’ எனத் தலைப்பை மாற்றிக் கொண்டு பழனிசாமி, பாஜக அடிமை பயணத்தைத் தொடங்கலாம். பாஜக கூட்டணியை விட்டு விலகுவது போல 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு நாடகத்தை அரங்கேற்றி, கூட்டணிக் கட்சிகளை அதிமுகவில் சேர்க்க முயன்றார்…

Read More

முதன்முறையாக, ஆராய்ச்சியாளர்கள் குழு நமது சூரியனுக்கு அப்பாற்பட்ட ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி ஒரு கிரகத்தின் பிறப்பைக் கைப்பற்றியுள்ளது. அவதானிப்புகள் ஆரம்பத்தில் கைப்பற்றப்பட்டன கிரக உருவாக்கம்ஒரு நட்சத்திரத்தைச் சுற்றியுள்ள பூமி போன்ற கிரகங்களுக்கு வழிவகுக்கும் அண்ட செயல்முறைக்கு ஒரு அரிய பார்வை.அட்டகாமா பெரிய மில்லிமீட்டர்/சப்மில்லிமீட்டர் வரிசை (அல்மா) தொலைநோக்கி மற்றும் நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி ஒரு புதிய கிரக அமைப்பின் உருவாக்கத்தை கைப்பற்ற. விஞ்ஞானிகள் பெயரிடப்பட்ட ஒரு குழந்தை நட்சத்திரத்தைச் சுற்றி கிரகத்தை உருவாக்கும் பொருளின் முதல் விவரங்களை உருவாக்குவதைக் கண்டறிந்தனர் ஹாப்ஸ் -315சுமார் 1,300 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. ஹாப்ஸ் -315 ஒரு ‘புரோட்டோ-ஸ்டார்’ என்று கருதப்படுகிறது, அதாவது இது நட்சத்திர பரிணாம வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இந்த இளம் நட்சத்திரங்கள் பெரும்பாலும் புரோட்டோபிளேனட்டரி டிஸ்க்குகளால் சூழப்பட்டுள்ளன – கிரகங்கள் பிறக்கும் இடத்தில் வாயு மற்றும் தூசியின் மேகங்கள் சுழலும்.இந்த படம் சிலிக்கான் மோனாக்சைடு (SIO)…

Read More

புதுடெல்லி: “இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு; இங்கு சிறுபான்மையினர் பாதுகாப்பாக உள்ளனர். இந்து பெரும்பான்மை இருப்பதால், சிறுபான்மையினர் முழுமையான சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் பெற்று வருகின்றனர்” என்று மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த கிரண் ரிஜிஜு, “இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இங்கு சிறுபான்மையினர் பாதுகாப்பாக உள்ளனர். இந்தியாவில் தங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்றும் எனவே நாங்கள் நாட்டை விட்டு வெளியேற தயாராக இருப்பதாகவும் கூறும் சிறுபான்மையினர் ஒருவரைக்கூட நான் பார்க்கவில்லை. ஆனால், காங்கிரஸ் ஆதரவு பெற்ற இடதுசாரி சுற்றுச்சூழல் அமைப்பு, இந்தியாவில் சிறுபான்மையினர் சித்ரவதை செய்யப்படுகிறார்கள், படுகொலை செய்யப்படுகிறார்கள், அடித்துக்கொல்லப்படுகிறார்கள் என்றெல்லாம் இடைவிடாது பிரச்சாரம் செய்து வருகிறது. இதுபோன்ற ஒரு கதையை கட்டமைப்பது நாட்டுக்கு உதவாது. இந்தியாவில் மக்கள் சட்டத்துக்கு கட்டுப்படுகிறார்கள். நாம் ஒரு மதச்சார்பற்றவர்களாக இருக்கிறோம். நமக்கு ஒரு அரசியல்சாசனம் உள்ளது. இங்கே பெரும்பான்மையினராக இருந்தாலும் சரி, சிறுபான்மையினராக…

Read More

உக்ரைனில் மூன்றரை ஆண்டுகளாக நடந்து வரும் போர் காரணமாக உள்நாட்டில் போதைப் பொருள் கடத்தல், ஆயுதங்கள் கடத்தல், மனிதர்களை கடத்துதல், பொருளாதார குற்றங்கள் உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. ரஷ்யா தொடுத்த போர் தொடங்கி மூன்றரை ஆண்டுகள் ஆகி உள்ள நிலையில், உக்ரைனில் நிகழும் குற்றங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாக ஐ.நா போதைப்பொருள் மற்றும் குற்றப்பதிவு அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தல் மற்றும் உற்பத்தி, ஆன்லைன் மோசடிகள், ஆயுதக் கடத்தல், பொருளாதாரக் குற்றங்கள், ஆட்கடத்தல், சட்டவிரோத வெளியேற்றம் ஆகிய 6 அம்சங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு ஐ.நா இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் விவரம்: உக்ரைன் மக்களுக்கு போர் சொல்லொணாத் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. அதோடு, திட்டமிட்ட முறையில் நடக்கும் குற்றங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது. போருக்குப் பிந்தைய மறுகட்டமைப்புக்கான பயணத்தில் இது ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். 2022 முதல்…

Read More