பதின்ம வயதினரை தவறாக சித்தரிக்கும் ‘பேட் கேர்ள்’ டீசரை சமூக ஊடகங்களிலிருந்து நீக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வெங்கடேஷ், ராம்குமார் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: 26.1.2025-ல் யூடியூப், இணையத்தில் ‘பேட் கேர்ள்’ என்ற திரைப்படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசரில் பதின்ம வயதினர் பற்ற தவறாக சித்தரிக்கும் காட்சிகள் உள்ளன. இந்த டீசர் தற்போதும் ஆன்லைனில் உள்ளது. இது போன்ற காட்சிகள் குழந்தைகள் ஆபாசம், குழந்தை பாலியல் சுரண்டல் ஆகிய பிரிவுகளுக்குள் வரும் குற்றமாகும். எனவே, இந்த ஆபாசமான டீசரை சமூக ஊடகங்களில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தனர்.. இந்த வழக்கில் நீதிபதி தனபால் நேற்று தீர்ப்பளித்தார். அதில், சிறுவர், சிறுமிகள் ஆபாசமாக இருப்பது போன்ற காட்சிகள் உள்ள ‘பேட் கேர்ள்’ டீசரை சமூக ஊடகங்களிலிருந்து, உத்தரவு கிடைக்கப்பெற்ற ஒரு…
Author: admin
சென்னை: கடந்த நான்கு ஆண்டுகளில் கூட்டுறவுத் துறை வாயிலாக விவசாயிகளுக்கு ரூ.53 ஆயிரம் கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: “கூட்டுறவுத் துறை மக்களுக்கு, குறிப்பாக ஏழை எளிய நலிந்த பிரிவு மக்களுக்கு நன்மைகளைச் செய்வதற்கு உருவான ஒரு துறை. இத்துறை மூலம் பல பணிகள் நிறைவேற்றப்பட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளது, நாடும் வளர்ந்துள்ளது. கூட்டுறவு சங்கங்களின் முக்கிய பணி பொதுமக்களுக்கும் தொழில் அமைப்புகளுக்கும் கடன் வழங்கி முன்னேற்றங்களுக்கு வழி வகுப்பதே ஆகும். அரசு, கூட்டுறவு அமைப்புகள் மூலம் மக்களுக்குக் கடன் உதவிகளை வழங்கி வருகிறது. கடன்களால் மக்கள் சிரமப்பட நேரும் காலங்களில் கடன்களை ரத்து செய்தும் உதவுகிறது அரசு. முதல்வர் ஸ்டாலின் 2021 தேர்தலுக்கு முன் தேர்தல் அறிக்கையில் கூறியபடி, கூட்டுறவு நிறுவனங்களில் ஒரு குடும்பத்தில் 5 பவுனுக்கு உட்பட்டு நகைக் கடன் பெற்று 31.3.2021 வரை…
மாநகராட்சி சார்பில், ரூ.50 லட்சத்தில் வேளச்சேரி மற்றும் கே.கே.நகரில் ஆன்லென் டெலிவரி ஊழியர் ஓய்வுக் கூடங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக, ஆன்லைனில் உணவு, காய்கறி, ஆடைகள், வீட்டு உபயோக பொருட்களை பொதுமக்கள் ஆர்டர் செய்வது அதிகரித்துள்ளது. இந்த ஆர்டர்களை பெற்று, பொருட்களை டெலிவரி செய்யும் பணியாளர்களும் அதிகரித்து வருகின்றனர். குறிப்பாக, உணவு டெலிவரி சேவை அதிகரித்துள்ளது. இதற்காக, டெலிவரி செய்யும் ஊழியர்கள் முக்கிய உணவகங்கள் முன்பு நீண்ட நேரம் காத்திருத்து, தயாரான உணவை பெற்று, டெலிவரி செய்ய வேண்டியுள்ளது. இதற்காக காத்திருக்கும் நேரத்தின் போது நீண்ட நேரம் கால் கடுக்க நிற்பது, செல்போன்களுக்கு சார்ஜ் செய்ய முடியாத நிலை, இயற்கை உபாதைகளை கழிக்க போதிய வசதியின்மை, வாகனங்களை நிறுத்த போதிய இடம் இல்லாமை போன்ற அடிப்படை பிரச்சினைகளை அவர்கள் எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, அண்ணா நகர் 2-வது நிழற்சாலை, அண்ணா நகர் ரவுண்டானா, ராயப்பேட்டையில் அண்ணா சாலை- ஜிபி…
ஒரு கோமா என்பது ஒரு தீவிரமான மருத்துவ நிலை, அங்கு ஒரு நபர் உயிருடன் இருக்கிறார், ஆனால் ஆழ்ந்த மயக்கமடைந்து அவர்களின் சுற்றுப்புறங்களுக்கு பதிலளிக்க முடியவில்லை. இயற்கையான தூக்கத்தைப் போலன்றி, கோமா நோயாளிகளை ஒலி, தொடுதல் அல்லது வலியால் விழித்திருக்க முடியாது. இது பெரும்பாலும் மூளைக் காயம், பக்கவாதம், தொற்று அல்லது ஆக்ஸிஜன் பற்றாக்குறையின் விளைவாகும் மற்றும் உடனடி அவசர சிகிச்சை தேவைப்படுகிறது. சில கோமாக்கள் தற்காலிகமானவை மற்றும் மீளக்கூடியவை, மற்றவை நீண்டகால இயலாமை அல்லது மரணத்திற்கு வழிவகுக்கும். காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை விருப்பங்களைப் புரிந்துகொள்வது சரியான நேரத்தில் தலையீட்டிற்கு மட்டுமல்லாமல், நிச்சயமற்ற மற்றும் உணர்ச்சி மீட்பு பயணத்தின் மூலம் குடும்பங்களை ஆதரிப்பதற்கும் முக்கியமானது.நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கோமாவின் பொதுவான காரணங்கள்காயம் அல்லது மூளைக்கு சேதம் ஏற்படுவதால் கோமாஸ் ஏற்படுகிறது. இது அதிர்ச்சி, ஆக்ஸிஜன் பற்றாக்குறை, இரத்தப்போக்கு அல்லது உடலில் நச்சு உருவாக்கம் உள்ளிட்ட நிகழ்வுகளின் காரணமாக இருக்கலாம்.…
சென்னை மயிலாப்பூரில் உள்ள இந்தியன் வங்கி கிளையில், கடந்த 1991-98 கால கட்டத்தில் போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்று வங்கிக்கு ரூ.1.42 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக விஷ்ணு வர்த்தன் கிரானைட்ஸ் நிறுவனம் மற்றும் அதன் பங்கு தாரரான ராம கிருஷ்ண பிரசாத், வங்கி தலைமை மேலாளர் சுப்புராமன் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த வங்கி மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம், ராமகிருஷ்ண பிரசாத்துக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1.55 கோடி அபராதம் விதித்தும் கடந்த 2012-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதேபோல இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி வங்கியின் தலைமை மேலாளர் சுப்பு ராமனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ராமகிருஷ்ண பிரசாத் மற்றும் சுப்புராமன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு விசாரணை நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி…
உயரடுக்கு விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு பயிற்சி, பனி குளியல் (குளிர் வீழ்ச்சிகள் என்றும் அழைக்கப்படுகிறது) இப்போது பிரதான நீரோட்டத்தில் உயர்ந்துள்ளது, வைரஸ் வீடியோக்கள், பிரபல நடைமுறைகள் மற்றும் உருமாறும் ஆரோக்கிய நன்மைகளின் கூற்றுக்கள் ஆகியவற்றால் உயர்த்தப்பட்டுள்ளது. கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போட்டிக்கு பிந்தைய மீட்பு முதல் உறைபனி தொட்டிகளைத் துணிச்சலான டிக்டோக் செல்வாக்கு வரை, குளிர் சிகிச்சையைச் சுற்றியுள்ள சலசலப்பு மறுக்க முடியாதது. பனி குளியல் புண் தசைகளை நீக்குகிறது, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது, மற்றும் மன கவனத்தை கூர்மைப்படுத்தும் என்று ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்த பனிக்கட்டி டிப்ஸ் உங்கள் உடல் மற்றும் மூளைக்கு உண்மையிலேயே பயனளிக்கிறதா? சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, அவர்கள் ஒழுங்காகவும் சரியான நபர்களாலும் செய்தால் உண்மையான சலுகைகளை வழங்குகிறார்கள்.பனி குளியல் உங்கள் உடல் மீண்டும் குதிக்க உதவுகிறதுகுளிர்ந்த நீர் மூழ்கியது தீவிரமான உடல் செயல்பாடுகளுக்குப் பிறகு வீக்கம் மற்றும் தசை வேதனையை குறைக்கலாம். இரத்த நாளங்களை…
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜூலை 28-ம் தேதி காலை ஆடிப்பூர தேரோட்டம் நடைபெறுகிறது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆண்டாள், பெரியாழ்வார் ஆகிய இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்புக்குரியது. இங்கு ஆண்டு தோறும் ஆண்டாளின் அவதார தினமான ஆடி மாத பூரம் நட்சத்திரத்தில் தேரோட்ட திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடிப்பூர தேரோட்ட திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு விசேஷ திருமஞ்சனம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன் கொடிப்பட்டம் மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு காலை 8 மணிக்கு கருட கொடியேற்றம் நடைபெற்றது. முதல் நாளான இன்று இரவு ஆண்டாள் ரெங்கமன்னார் 16 வண்டி சப்பரத்தில் 4 ரத வீதிகளில் உலா வருகின்றனர். ஜூலை 24-ம் தேதி பெரியாழ்வார் மங்களாசாசனம்…
மேட்டூர்: மேட்டர் அணை நடப்பாண்டில் 3வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை இன்று காலை 8 மணிக்கு எட்டியது. அணை நிரம்பியதை அடுத்து அணைக்கு வரும் 31,000 கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை பாசனத்துக்காக திறக்கப்படுவது வழக்கம். போதிய நீர் இருப்பு காரணமாக இந்த ஆண்டு வழக்கம்போல் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. அணையிலிருந்து திறக்கப்படும் நீரை கொண்டு சேலம், நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட 12 டெல்டா மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அடுத்த ஆண்டு ஜனவரி 28-ம் தேதி வரை 230 நாட்களுக்கு அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்படும். இதன் மூலம் குறுவை, சம்பா மற்று தாளடி பயிர்களுக்குத் தேவையான 330 டிஎம்சி நீர் வழங்கப்படும். எனினும், இருப்பைப் பொறுத்து பொதுப்பணித்துறை…
பிலடெல்பியா பொது சுகாதாரத் துறை சமீபத்தில் நகரத்தில் வெஸ்ட் நைல் வைரஸுக்கான (WNV) முதல் நேர்மறையான கொசு குளத்தை உறுதிப்படுத்தியது. வடகிழக்கு பிலடெல்பியாவில் உள்ள பென்னிபாக் பூங்கா அருகே சேகரிக்கப்பட்ட மாதிரியில் இதுவே கண்டறியப்பட்டது. மனிதர்கள் பாதிக்கப்படுவதற்கான எந்தவொரு விஷயமும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்றாலும், இங்கே வைரஸ், நோய் மற்றும் அறிகுறிகளைப் பாருங்கள் …மேற்கு நைல் வைரஸ் என்றால் என்னவெஸ்ட் நைல் வைரஸ் ஒரு வைரஸ் நோயாகும், இது முக்கியமாக பாதிக்கப்பட்ட கொசுக்களின் கடிகளால் பரவுகிறது. இந்த வைரஸ் மக்களில் நோய்களை ஏற்படுத்தும், மற்றும் கடுமையான சுகாதார பிரச்சினைகள் (அரிதான சந்தர்ப்பங்களில்). மேலும் கற்றுக்கொள்வோம் …மேற்கு நைல் வைரஸைப் புரிந்துகொள்வதுவெஸ்ட் நைல் வைரஸ் என்பது ஒரு வைரஸ் நோயாகும், இது கொசுக்களால் பரவுகிறது. வைரஸ் ஃபிளவிவைரஸ்களில் உறுப்பினராக உள்ளது, இதில் ஜிகா, டெங்கு மற்றும் மஞ்சள் காய்ச்சல் வைரஸ்களும் அடங்கும். 1937 ஆம் ஆண்டில் உகாண்டாவின் மேற்கு நைல் மாவட்டத்தில் இந்த…
சென்னை: பணிநிரந்தம் செய்யக்கோரி பகுதிநேர ஆசிரியர்கள் கடந்த 12 நாட்கள் மேற்கொண்ட தொடர் போராட்டம் முடிவுக்கு வந்தது. இறுதிநாளில் 3 ஆயிரம் பேர் பேரணியில் பங்கேற்றனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவார்கள். அதற்கு ரூ.12,500 மாத சம்பளமாக தரப்படுகிறது. மேலும், பணிநிரந்தரம் செய்யக் கோரி பகுதி நேர ஆசிரியர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே ஆட்சிக்கு வந்தால் தற்காலிக ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது. அந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி பகுதி நேரஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் சென்னையில் கடந்த ஜூலை 8-ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தினமும் வெவ்வேறு விதமாக போராட்டங்களை…
