Author: admin

கோவை: பேரூர் பட்டீசுவரர் கோயிலில் ஆகம விதிகளை மீறிய அறநிலையத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறையின் கோவை மண்டல இணை ஆணையரிடம் இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. கோவை பேரூர் பட்டீசுவரர் கோயிலில், கோயில் நடை அடைக்கப்பட்ட பிறகு, காவல் கண்காணிப்பாளருக்கு சிறப்பு அனுமதி வழங்கி தரிசனத்துக்கு அனுமதித்ததாகவும், இதனால் கோயிலின் ஆகம விதிகள் மீறப்பட்டதாகவும் பேரூர் பட்டீசுவரர் கோயில் அறநிலையத் துறை அதிகாரிகள் மீது சர்ச்சைகள் எழுந்தன. இந்தச் செயலுக்கு சிவனடியாா்கள், பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக கோவை மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில், அதன் நிர்வாகிகள் இன்று (ஜூலை 23) பாலசுந்தரம் சாலையில் உள்ள இந்து சமய அறநிலையத்து றையின் கோவை மண்டல இணை ஆணையர் அலுவலகத்துக்கு வந்தனர். மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் சதீஷ் தலைமை வகித்தார். கோட்ட…

Read More

கன்று தசைகள் பெரும்பாலும் உடற்பயிற்சிகளின் போது கவனிக்கப்படுவதில்லை, ஆனால் அவை உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தினசரி இயக்கம் மற்றும் சமநிலையை ஆதரிப்பதில் இருந்து அறிவாற்றல் வீழ்ச்சிக்கு எதிராக பாதுகாப்பது வரை, வலுவான கன்றுகள் உங்கள் படிகளுக்கு சக்தியை விட அதிகமாக செய்கின்றன. சமீபத்திய ஆராய்ச்சி சிறிய கன்று அளவிற்கும் டிமென்ஷியாவின் அதிக ஆபத்துக்கும் இடையிலான தொடர்பை எடுத்துக்காட்டுகிறது, இது குறைந்த கால் வலிமையை ஆரோக்கியமான வயதானவர்களுக்கு ஒரு முக்கியமான குறிப்பானாக மாற்றுகிறது. நீங்கள் நிலைத்தன்மையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், காயங்களைத் தடுப்பது அல்லது மூளை செயல்பாட்டை ஆதரிப்பதா, உங்கள் வழக்கத்தில் கன்று மையமாகக் கொண்ட பயிற்சிகள் உட்பட உடல் மற்றும் மன நல்வாழ்வில் குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை ஏற்படுத்தும்.கன்று அளவு மற்றும் அறிவாற்றல் ஆரோக்கியம்சிறிய கன்று சுற்றளவு குறைக்கப்பட்ட அறிவாற்றல் செயல்திறனுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. கன்றுகள் போன்ற சிறிய தசைகளில் பெரும்பாலும் கவனிக்கப்படும்…

Read More

இந்திய குடியரசு துணைத் தலைவர் ஒருவர் தனது பதவிக் காலம் முடிவதற்கு முன்னதாகவே ராஜினாமா செய்திருப்பது நாட்டின் வரலாற்றில் முதன்முறை என்பதால் மட்டுமல்ல, வழக்கம்போல் அலுவலுக்கு வந்தவர், அவரது வழக்கமான இயல்பில் எந்த மாற்றத்தையும் முகத்திலும், உடல்மொழியிலும் சிறு அறிகுறிகளைக் கூட கடத்தாதவர் ராஜினாமா செய்தது ஏன்? 4 மணி நேர இடைவெளியில் நடந்தது என்ன? என்று ஊகங்களை விட்டுவிட்டுச் சென்றதும் இந்திய அரசியலில் மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்த வேகத்திலேயே, அவருடைய ராஜினாமா ஏற்கப்படுகிறது. பிரதமரும் ஜெகதீப் தன்கருக்கு வாழ்த்துரை சொல்லிவிடுகிறார். இந்த ‘வேகம்’, ஒரு விவாத மூட்டையாக நாடு முழுவதும் குறுக்கும், நெடுக்குமாக உருண்டு கொண்டிருக்கிறது. 4 மணி நேரத்தில் நடந்தது என்ன? ராஜினாமாவுக்கு அழுத்தம் ஏற்பட்டதா? அவமானப்படுத்தப்பட்டாரா? வேறு அரசியல் கணக்குகள் போட்டு அவர் பதவி பறிக்கப்பட்டதா? இல்லை, தன்னால் அரசுக்கு ஏற்பட்ட தர்மசங்கடங்கள் விளைவாக மூத்த…

Read More

புதுச்சேரி: பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறுவோருக்கு ஆடை கட்டுப்பாட்டை விதித்து ஜிப்மர் நிர்வாகம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. பாரம்பரிய ஆடை அணியாவிட்டால் அனுமதியில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறுவோர் கருப்பு அங்கியை அணிவது வழக்கம். ஆனால் சமீபத்தில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், பட்டமளிப்பு விழாக்களில் இந்திய பாரம்பரிய உடைகளை அணியுமாறு அறிவுறுத்தியது. மாணவர்கள் தங்கள் மாநிலத்தின் கலாச்சாரத்துக்கு ஏற்ப உடைகளை வடிவமைத்துக் கொள்ளலாம் என கூறப்பட்டது. ஆனால், ஜிப்மர் நிர்வாகம் பட்டம் பெறுவோருக்கு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. புதுச்சேரியில் இயங்கி வரும் மத்திய அரசின் நிறுவனமான ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தவர்களுக்கான பட்டமளிப்பு விழா விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள மருத்துவர்களுக்காக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளன. அதில் பட்டமளிப்பு விழா ஆடையில் கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டம் பெறும் மாணவர்கள் இந்திய பாரம்பரிய உடையில் தான் வரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய உடை…

Read More

ஆரோக்கியமாக இருப்பதற்கும் நீண்ட காலம் வாழ்வதற்கும் அடிப்படை முறைகள் தேவைப்படுகின்றன, அவை செயல்படுத்த எளிதாக இருக்க வேண்டும். கண்களை மூடிக்கொண்டு ஒரு காலில் நிற்பதற்கான உடற்பயிற்சி, நீண்ட ஆயுளுக்கு உதவ எதிர்பாராத அணுகுமுறையாக செயல்படுகிறது. உடற்பயிற்சி அடிப்படையாகத் தோன்றுகிறது, இருப்பினும் இது உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை உருவாக்குகிறது, இது சமநிலையையும் இளமை தோற்றத்தையும் மேம்படுத்தும் போது உங்கள் உடலை பலப்படுத்துகிறது.கண்களை மூடிக்கொண்டு ஒரு காலில் நிற்பது என்னகண்களை மூடிக்கொண்டு ஒரு காலில் நிற்பதற்கான உடற்பயிற்சி, தரையில் ஒரு அடி உயரத்தை உயர்த்துவது, மற்ற பாதத்தை தரையில் பராமரிப்பது, பின்னர் உங்கள் கண்களை மூடிக்கொண்டது. காட்சி வழிகாட்டுதல் இல்லாதது, சமநிலையை பராமரிப்பதற்கான கூடுதல் முயற்சியை செலவழிக்க உங்கள் உடலை கட்டாயப்படுத்துகிறது. இந்த பணியின் முதல் முயற்சி கடினமாக இருக்கும், ஆனால் பயிற்சி படிப்படியாக எளிமையாக்குகிறது. தினமும் சில நிமிடங்கள் இந்த பயிற்சியைச் செய்வது எதிர்பாராத நன்மைகளுக்கு வழிவகுக்கிறது.நீண்ட…

Read More

புதுடெல்லி: அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த பிரிட்டன் நாட்டவர்களின் உடல்களை ஒப்படைப்பதில் குளறுபடிகள் நடந்துள்ளதாக பிரிட்டன் ஊடகங்கள் வெளியிட்ட செய்திக்கு இந்திய வெளியுறவுத் துறை மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 12ம் தேதி குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-8 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். விமானம் மோதிய மருத்துவமனை விடுதியில் இருந்தவர்கள் உட்பட இந்த விபத்தில் மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர். விமானம் தீ பற்றி எரிந்ததில் பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகியது. இதன் காரணமாக அத்தகைய உடல்கள் டிஎன்ஏ சோதனைகள் மூலம் அடையாளம் காணப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விபத்தில், பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த 53 பேர், போர்ச்சுகீஸ் நாட்டைச் சேர்ந்த 7 பேர், கனடாவைச் சேர்ந்த ஒருவர்…

Read More

சென்னை: நீலகிரி, தேனி, தென்காசி, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (ஜூலை 24) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய மேற்கு, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகின்றன. இதன் காரணமாக நாளை (ஜூலை 24) முதல் 29-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை (ஜூலை 24) நீலகிரி, தேனி, தென்காசி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளிலும், நாளை மறுநாள் இந்த 4 பகுதிகளுடன் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை…

Read More

முன்னாள் பிலடெல்பியா ஈகிள்ஸ் மையமும் பிரபல போட்காஸ்ட் தொகுப்பாளருமான ஜேசன் கெல்ஸ் தனது தனிப்பட்ட வாழ்க்கையிலிருந்து ஒரு ஆச்சரியமான தருணத்தை வெளிப்படுத்தியுள்ளார், அவரது மனைவி கைலி கெல்ஸை ஒரு சுறாவைப் பார்த்த பிறகு கடலில் பின்னால் சென்றார். ஜேசன் & டிராவிஸ் கெல்ஸ் போட்காஸ்டுடனான அவரது புதிய உயரத்தின் ஒரு அத்தியாயத்தின் போது இந்த வெளிப்பாடு வந்தது, அங்கு ஜேசன் இந்த சம்பவத்தை வேட்டையாடினார், அதே நேரத்தில் துணிச்சல் மற்றும் விரைவான முடிவெடுப்பதை பிரதிபலிக்கிறார். கைலி உண்மையான ஆபத்தில் இருப்பதாக தான் ஒருபோதும் நம்பவில்லை என்று அவர் தெளிவுபடுத்தினாலும், கதை நகைச்சுவை, விவாதம் மற்றும் வைரஸ் எதிர்வினைகளை ஆன்லைனில் தூண்டியது, இந்த ஜோடியின் விளையாட்டுத்தனமான டைனமிக் மற்றும் ஜேசனின் மிக மனித, அபூரண தருணங்களைக் கூட பகிர்ந்து கொள்ள விருப்பம் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது.கடுமையான என்எப்எல் ஆளுமைக்கு பெயர் பெற்ற ஜேசன் கெல்ஸ், எந்தவொரு சாதாரண நபரைப் போல பீதியையும் வெளிப்படையாக ஒப்புக்…

Read More

புதுடெல்லி: தர்மஸ்தலா கோயிலில் பெண்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டது தொடர்பாக வெளியாகும் தகவல்களில், கோயில் நிர்வாக அதிகாரி வீரேந்திர ஹெக்கடேவின் சகோதரர் ஹர்ஷேந்திர குமாருக்கு எதிராக செய்திகளை வெளியிடுவதை தடைசெய்து பெங்களூரு சிவில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று ( ஜூலை 23) மறுத்துவிட்டது. ‘தேர்ட் ஐ’ என்ற யூடியூப் சேனலுக்காக ஆஜரான வழக்கறிஞர் வேலன், இந்த மனுவை முன்கூட்டியே பட்டியலிட வாய்மொழியாகக் கோரிக்கை வைத்தார். அப்போது இந்த விவகாரத்தில் முதலில் கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அறிவுறுத்தினார். ‘தேர்ட் ஐ’ என்ற யூடியூப் சேனல் தாக்கல் செய்த அந்த மனுவில், ‘இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே வெளியிடப்பட்ட வீடியோக்களை நீக்க உத்தரவிட்ட சிவில் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். பெங்களூரு சிவில் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, தர்மஸ்தலா கோயிலில் நடந்த கடுமையான குற்றங்கள்…

Read More

சென்னை: திருநெல்வேலி எம்.பி ராபர்ட் புரூஸ் வேட்புமனுவுடன் தாக்கல் செய்த சொத்து, வழக்கு விவரங்கள் குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சி.ராபர்ட் புரூஸ், 1 லட்சத்து 65 ஆயிரத்து 620 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ராபர்ட் புரூஸ் தனது வேட்பு மனுவில் சொத்து விவரங்களையும், வழக்கு விவரங்களையும் மறைத்துள்ளதாக கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கில் சாட்சியம் அளித்த நயினார் நாகேந்திரன், தேர்தல் வேட்புமனுவில் சொத்து விவரங்கள், குற்ற வழக்குகளை மறைத்து ராபர்ட் புரூஸ் தேர்தலில் வெற்றி பெற்றதாக தெரிவித்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராபர்ட்…

Read More