சென்னை: நீலகிரி, தேனி, தென்காசி, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (ஜூலை 24) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய மேற்கு, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகின்றன. இதன் காரணமாக நாளை (ஜூலை 24) முதல் 29-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை (ஜூலை 24) நீலகிரி, தேனி, தென்காசி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளிலும், நாளை மறுநாள் இந்த 4 பகுதிகளுடன் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை…
Author: admin
முன்னாள் பிலடெல்பியா ஈகிள்ஸ் மையமும் பிரபல போட்காஸ்ட் தொகுப்பாளருமான ஜேசன் கெல்ஸ் தனது தனிப்பட்ட வாழ்க்கையிலிருந்து ஒரு ஆச்சரியமான தருணத்தை வெளிப்படுத்தியுள்ளார், அவரது மனைவி கைலி கெல்ஸை ஒரு சுறாவைப் பார்த்த பிறகு கடலில் பின்னால் சென்றார். ஜேசன் & டிராவிஸ் கெல்ஸ் போட்காஸ்டுடனான அவரது புதிய உயரத்தின் ஒரு அத்தியாயத்தின் போது இந்த வெளிப்பாடு வந்தது, அங்கு ஜேசன் இந்த சம்பவத்தை வேட்டையாடினார், அதே நேரத்தில் துணிச்சல் மற்றும் விரைவான முடிவெடுப்பதை பிரதிபலிக்கிறார். கைலி உண்மையான ஆபத்தில் இருப்பதாக தான் ஒருபோதும் நம்பவில்லை என்று அவர் தெளிவுபடுத்தினாலும், கதை நகைச்சுவை, விவாதம் மற்றும் வைரஸ் எதிர்வினைகளை ஆன்லைனில் தூண்டியது, இந்த ஜோடியின் விளையாட்டுத்தனமான டைனமிக் மற்றும் ஜேசனின் மிக மனித, அபூரண தருணங்களைக் கூட பகிர்ந்து கொள்ள விருப்பம் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது.கடுமையான என்எப்எல் ஆளுமைக்கு பெயர் பெற்ற ஜேசன் கெல்ஸ், எந்தவொரு சாதாரண நபரைப் போல பீதியையும் வெளிப்படையாக ஒப்புக்…
புதுடெல்லி: தர்மஸ்தலா கோயிலில் பெண்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டது தொடர்பாக வெளியாகும் தகவல்களில், கோயில் நிர்வாக அதிகாரி வீரேந்திர ஹெக்கடேவின் சகோதரர் ஹர்ஷேந்திர குமாருக்கு எதிராக செய்திகளை வெளியிடுவதை தடைசெய்து பெங்களூரு சிவில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று ( ஜூலை 23) மறுத்துவிட்டது. ‘தேர்ட் ஐ’ என்ற யூடியூப் சேனலுக்காக ஆஜரான வழக்கறிஞர் வேலன், இந்த மனுவை முன்கூட்டியே பட்டியலிட வாய்மொழியாகக் கோரிக்கை வைத்தார். அப்போது இந்த விவகாரத்தில் முதலில் கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அறிவுறுத்தினார். ‘தேர்ட் ஐ’ என்ற யூடியூப் சேனல் தாக்கல் செய்த அந்த மனுவில், ‘இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே வெளியிடப்பட்ட வீடியோக்களை நீக்க உத்தரவிட்ட சிவில் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். பெங்களூரு சிவில் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, தர்மஸ்தலா கோயிலில் நடந்த கடுமையான குற்றங்கள்…
சென்னை: திருநெல்வேலி எம்.பி ராபர்ட் புரூஸ் வேட்புமனுவுடன் தாக்கல் செய்த சொத்து, வழக்கு விவரங்கள் குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சி.ராபர்ட் புரூஸ், 1 லட்சத்து 65 ஆயிரத்து 620 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ராபர்ட் புரூஸ் தனது வேட்பு மனுவில் சொத்து விவரங்களையும், வழக்கு விவரங்களையும் மறைத்துள்ளதாக கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கில் சாட்சியம் அளித்த நயினார் நாகேந்திரன், தேர்தல் வேட்புமனுவில் சொத்து விவரங்கள், குற்ற வழக்குகளை மறைத்து ராபர்ட் புரூஸ் தேர்தலில் வெற்றி பெற்றதாக தெரிவித்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராபர்ட்…
மனதை வளைக்கும் ஆப்டிகல் மாயை இணைய பயனர்களின் கண்காணிப்பு திறன்களை சோதிக்க சவால் விடுகிறது. வைரஸ் படம் ஒரு சாதாரண காட்சிக்குள் ஒரு விலங்கை மறைக்கிறது, பார்வையாளர்களை வெறும் 15 வினாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும். பெரிதாக்குதல் அல்லது மேலதிக சிந்தனை அனுமதிக்கப்படாததால், விதிவிலக்கான கருத்து உள்ளவர்கள் மட்டுமே வெற்றிபெற முடியும். உங்கள் மூளை மிகவும் கூர்மையானது என்று நினைக்கிறீர்களா? அதை சோதனைக்கு உட்படுத்துவோம்சில படங்கள் முதலில் தோன்றும் அல்ல. ஒரு சாதாரண காட்சியைப் போல தோற்றமளிக்கும் பின்னால் ஒரு மறைக்கப்பட்ட ரகசியம் உள்ளது, மேலும் விதிவிலக்கான அவதானிப்பு திறன் உள்ளவர்கள் மட்டுமே அதை சிதைக்க முடியும். தந்திரங்கள் இல்லை, வித்தைகள் இல்லை, உங்கள் கண்கள் மாயைக்கு எதிராக.ஆயிரக்கணக்கான ஸ்டம்பிங் செய்வதற்கு வைரலாகிவிட்ட ஒரு படத்தை நீங்கள் பார்க்கிறீர்கள். படத்திற்குள் எங்கோ, ஒரு விலங்கு வெற்றுப் பார்வையில் ஒளிந்து கொண்டிருக்கிறது. திருப்பம்? அதைக் கண்டுபிடிக்க உங்களுக்கு 15 வினாடிகள் மட்டுமே உள்ளன. பெரிதாக்கவில்லை,…
புதுடெல்லி: சீன நாட்டவர்கள் இந்தியாவுக்கு சுற்றுலா வருவதற்கான விசா சேவையை, 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா மீண்டும் நாளை (ஜூலை 24) தொடங்குகிறது. இது தொடர்பாக சீனாவில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் சமூக ஊடக பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “சீன குடிமக்கள் இந்தியாவுக்கு வருகை தர சுற்றுலா விசாவுக்கு ஜூலை 24 முதல் விண்ணப்பிக்கலாம். முதலில் ஆன்லைன் முறையில் விசா கோரி விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு, இந்திய விசா விண்ணப்ப மையத்தில் விசா விண்ணப்பம் மற்றும் பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சீனாவின் குளோபல் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சீன குடிமக்கள் இந்தியாவுக்கு சுற்றுலா செல்ல சுற்றுலா விசா கோரி பீஜிங், ஷாங்காய், குவாங்சோ ஆகிய மாநகரங்களில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையங்களில் நேரில் சமர்ப்பித்து விசா பெறலாம். 2020-ம் ஆண்டு சுற்றுலா விசா சேவை நிறுத்தப்பட்ட 5…
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையில் இருந்து மக்களை கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார். திருநெல்வேலியில் தாமிரபணியில் உயிர்நீத்த மாஞ்சோலை தொழிலாளர்களின் 26-வது நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்ற டாக்டர் கிருஷ்ணசாமி, தாமிரபரணி ஆற்றில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியது: ”திருநெல்வேலியில் மண்ணுரிமை, மனித உரிமை வேண்டி போராட்டம் நடத்திய மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தின்போது தாமிரபரணியில் உயிர்நீத்தவர்களுக்கு நினைவு மண்டபம் அமைப்பதற்கு நதிக்கரையில் இடம் கோரியுள்ளோம். எங்களது சொந்த செலவில் நினைவு மண்டபம் கட்ட தயாராக இருக்கிறோம். ஆனால், அரசு தற்போது வரை இதற்கு செவி சாய்க்கவில்லை. 2028-ம் ஆண்டு வரை மாஞ்சோலையில் இருந்து மக்களை வெளியேற்றக் கூடாது என்ற நிலையில், மக்களுக்கு குடிநீர், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர மறுத்து, அவர்களை கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கைகளில்…
இளைஞர்களிடையே ஸ்டீராய்டு பயன்பாடு அதிகரித்து வருகிறது, உடற்பயிற்சி செல்வாக்கு செலுத்துபவர்கள், உடல் பட அழுத்தங்கள் மற்றும் எளிதான ஆன்லைன் அணுகல் ஆகியவற்றால் இயக்கப்படுகிறது. ஆனால் பல பயனர்கள் உணராதது என்னவென்றால், இந்த கட்டுப்பாடற்ற தயாரிப்புகளில் ஆபத்தான அசுத்தங்கள் இருக்கலாம். ஒரு புதிய ஆஸ்திரேலிய ஆய்வு அதிர்ச்சியூட்டும் ஆதாரங்களை வெளிப்படுத்துகிறது: கறுப்பு சந்தையில் விற்கப்படும் பெரும்பாலான அனபோலிக் ஸ்டீராய்டு தயாரிப்புகள் தவறாக பெயரிடப்பட்டுள்ளன, மேலும் மோசமாக, பலவற்றில் ஈயம், ஆர்சனிக் மற்றும் காட்மியம் போன்ற நச்சு கனரக உலோகங்கள் உள்ளன. இந்த அசுத்தங்கள் புற்றுநோய், உறுப்பு சேதம் மற்றும் நீண்டகால அறிவாற்றல் வீழ்ச்சிக்கு அமைதியாக பங்களிக்கக்கூடும். ஸ்டீராய்டு பயன்பாடு தொடர்ந்து வளர்ந்து வருவதால், குறிப்பாக ஜிம்-செல்வோர் மத்தியில், அவசர சுகாதார எச்சரிக்கைகள் மற்றும் தீங்கு குறைப்பு உத்திகள் முன்பை விட இப்போது அவசியம்.கனரக உலோகங்களால் மாசுபடுத்தப்பட்ட ஸ்டெராய்டுகள்; ஆய்வு வெளிப்படுத்துகிறதுஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் ஜிம்-செல்வோர் மற்றும் ஆன்லைன் விற்பனையாளர்களிடமிருந்து பெறப்பட்ட 28…
புதுடெல்லி: கங்கைகொண்ட சோழபுரத்தில் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ள ஆடித் திருவாதிரை திருவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய கலாசாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்த தினத்தையும், தென்கிழக்கு ஆசியாவில் அவரது கடல்சார் பயணத்தின் 1000-வது ஆண்டையும், கங்கை கொண்ட சோழபுரம் கோயிலின் கட்டுமானத் தொடக்கத்தை நினைவுகூரும் வகையிலும் ஆடித் திருவாதிரை திருவிழாவாக ஜூலை 23 முதல் ஜூலை 27 வரை மத்திய அரசு கலாச்சார அமைச்சகம் கங்கைகொண்ட சோழபுரத்தில் கொண்டாடுகிறது. இத்திருவிழா கலாச்சார அமைச்சகத்தின் கீழ் தஞ்சாவூரில் உள்ள தென் மண்டல கலாச்சார மையத்தின் ஆதரவுடன் பயிற்சி பெற்ற மாணவர்களின் தேவாரம் திருமுறை மற்றும் கலாஷேத்ரா கலைஞர்களின் நிகழ்ச்சி உள்ளிட்ட கலாச்சார நிகழ்ச்சிகளுடன் 23-ம் தேதி மாலை தொடங்குகிறது. இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் சோழ சைவம், கோயில் கட்டடக்கலை பாரம்பரிய…
கோவை: மதுரை ஆதீனம் மீதான அடக்குமுறையை தமிழக அரசு கைவிட வேண்டும் என கோவை தெற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் மிகப் பழமையான மடங்களில் ஒன்றான மதுரை ஆதீனத்தின் 293-வது பீடாதிபதி ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் மீது, இந்து விரோத திமுக அரசு அடக்குமுறையை ஏவி விட்டிருக்கிறது. கடந்த மே 2-ம் தேதி சென்னை, காட்டாங்கொளத்தூரில் நடைபெற்ற, உலக சைவ சித்தாந்த மாநாட்டில் பங்கேற்க மதுரை ஆதீனம் காரில் சென்றபோது உளுந்தூர்பேட்டை அருகே கார் விபத்தில் சிக்கியது. தன்னை கொல்ல நடந்த சதி என்றும், விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்தவர்களின் அடையாளங்களையும் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து மதுரை ஆதீனம் மீது வழக்குப் பதிவு செய்த திமுக அரசு, அவரை கைது செய்ய தீவிர முயற்சி மேற்கொண்டது. அவருக்கு முன்ஜாமீன் வழங்கிய உயர் நீதிமன்றம், அவர் வசிக்கும் இடத்துக்கே…
