புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்த ஜெகதீப் தன்கர் 2 நாட்களுக்கு முன்னர் திடீரென ராஜினாமா செய்தார். இந்திய அரசியலமைப்பின் பிரிவு 68-ன் படி, புதிய குடியரசு துணைத் தலைவரை அடுத்த 6 மாதங்களுக்குள் தேர்வு செய்ய வேண்டும். இதன்படி, செப்டம்பர் 2025-க்குள் இதற்கான தேர்தல் நடத்தப்பட உள்ளது. மத்தியில் ஆட்சிக்கு தலைமை வகிக்கும் பாஜக, அடுத்த 10 ஆண்டுகளில் வரவிருக்கும் தேர்தல்களை கருத்தில் கொண்டு, முக்கிய அரசியலமைப்பு பதவிகளுக்கான நியமனங்களை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் மொத்தம் உள்ள 782 உறுப்பினர்களில், 394 பேரின் ஆதரவு தேவை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (என்டிஏ) மக்களவையில் 293 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 129 எம்.பி.க்களும் ஆதரவாக உள்ளனர். என்டிஏ.வுக்கு பெரும்பான்மை உள்ளது. எதிர்க்கட்சிகளிடம் 150 எம்.பி.க்களே உள்ளனர். அதனால், எதிர்க்கட்சிகள் போட்டி வேட்பாளரை அறிவித்தாலும் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லை. குடியரசு துணைத்…
Author: admin
கதிர் இயக்கிய ‘காதல் தேசம்’ மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் அப்பாஸ். தொடர்ந்து, விஐபி, பிரியா ஓ பிரியா, பூச்சூடவா, ஜாலி, ஆசைத்தம்பி என பல படங்களில் நடித்தார். கடந்த பத்து வருடங்களுக்கு முன் சினிமாவை விட்டுவிட்டு நியூசிலாந்து சென்ற அவர், இப்போது மீண்டும் நடிப்புக்குத் திரும்பி இருக்கிறார். அவர், ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதை பியாண்ட் பிக்சர்ஸ் மூலம் ஜெயவர்த்தனன் தயாரிக்க, ஜெய்காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்கிறார். மரியா ராஜா இளஞ்செழியன் இயக்குகிறார். கவுரி பிரியா, கதாநாயகியாக நடிக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசைஅமைக்கிறார். மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்கிறார். படம் பற்றி மரியா ராஜா இளஞ்செழியன் கூறும்போது, “இது நகைச்சுவை நிரம்பிய குடும்பப்படமாக இருக்கும். இப்போதுபொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஜி.வி.பிரகாஷ், இதுவரை பண்ணாத கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அப்பாஸ் என்ன கேரக்டரில் நடிக்கிறார் என்பதை இப்போது சொல்ல இயலாது. அவருடைய கம்பேக்…
சென்னை: சென்னையில் இன்று 3, 16, 96, 129, 160, 171 ஆகிய 6 வார்டுகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற உள்ளது. திருவொற்றியூர் மண்டலம், 3-வது வார்டு, எண்ணூர், மார்க்கெட் தெரு, அன்னை சிவகாமி நகர் 5-வது தெருவில் உள்ள சமூகநலக் கூடத்திலும், மணலி மண்டலம், 16-வது வார்டு, சடையன்குப்பம், அந்தோணியார் ஆலய சமூகநலக் கூடத்திலும், அண்ணாநகர் மண்டலம், 96-வது வார்டு, அயனாவரம், பரசுராமேஸ்வரன் கோவில் தெருவில் உள்ள வெற்றி மஹாலிலும் ‘உங்களுடன் ஸ்டாலின்’திட்ட முகாம் இன்று நடைபெறும். மேலும், கோடம்பாக்கம் மண்டலம், 129-வது வார்டு, சாலிகிராமம், கே.கே.சாலையில் உள்ள சுடர்மா திருமண மண்டபத்திலும், ஆலந்தூர் மண்டலம், 160-வது வார்டு, சன்னியாசி சுபேதார் தெருவில் உள்ள எஸ்.வி.எஸ்.ஜெயின் சங்கத்திலும், அடையாறு மண்டலம், 171-வது வார்டு, ராஜா அண்ணாமலைபுரம், காமராஜ் சாலை, என்.எஸ்.கார்டன் பகுதியில் புதிய கட்டிடம் ஆகிய 6 வார்டுகளில் நடைபெறவுள்ளது. இந்த முகாம்கள் காலை 9 முதல்…
சியா விதைகள், பிரபலத்தைப் பெறும் ஒரு சூப்பர்ஃபுட், முழு அல்லது தரையில் நுகரப்படலாம். இருவரும் இதேபோன்ற ஊட்டச்சத்து நன்மைகளை வழங்கும்போது, தரை சியா விதைகளை ஜீரணிக்க எளிதாக இருக்கலாம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர், குறிப்பாக செரிமான பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு. சியா விதைகளை அரைப்பது ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களை உறிஞ்சுவதை மேம்படுத்துகிறது என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. சியா விதைகள் போன்ற சூப்பர்ஃபுட்கள் எங்கள் சரக்கறைகளுக்குத் திரும்பியுள்ளன, செல்வாக்கு செலுத்துபவர்களுக்கும் ஆரோக்கிய குருக்களுக்கும் நன்றி. மிருதுவாக்கிகள் முதல் புட்டுகள் வரை அனைத்தும், சியா விதைகள் அனைத்து சரியான காரணங்களுக்காகவும் உணவு காட்சியைக் கைப்பற்றியுள்ளன. சியா விதைகளை சாப்பிட பல வழிகளை ஆராய்ந்த பிறகு, மக்கள் இப்போது அவற்றை அரைக்கிறார்கள். ஆம், நீங்கள் அதை சரியாகப் படித்தீர்கள். தரையில் சியா விதைகள்! காலை உணவு மற்றும் இனிப்புக்காக தரை சியா விதை உணவுகளை சாப்பிடுவதில் இணையம் வெறி கொண்டது. ஆனால் அது உண்மையில் மிகைப்படுத்தலுக்கு…
புதுடெல்லி: அல்காய்தா தீவிர வாத அமைப்புடன் தொடர்புடைய நான்கு தீவிரவாதிகளை குஜராத் தீவிரவாத தடுப்பு படை (ஏடிஎஸ்) நேற்று கைது செய்துள்ளது. இதுகுறித்து ஏடிஎஸ் டிஐஜி சுனில் ஜோஷி கூறியதாவது: நீண்ட தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு அல் காய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய நான்கு பேரை குஜராத் தீவிரவாத தடுப்புப் படை அதிரடியாக கைது செய்துள்ளது. 2 தீவிரவாதிகள் குஜராத் அகமதாபாத் நகரிலிருந்தும், ஒருவர் டெல்லி மற்றும் ஒருவர் நொய்டாவிலிருந்தும் கைது செய்யப்பட்டுள்ளனர். முகமது ஃபைக், முகமது ஃபர்தீன், செஃபுல்லா குரேஷி, ஜீஸன் அலி என்ற அந்த நால்வரும் பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர்கள். கைது செய்யப்பட்டுள்ள அந்த நால்வரிடம் தீவிரவாத இயக்கங்களுடன் அவர்களுக்கு உள்ள தொடர்புகள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு சுனில் ஜோஷி தெரிவித்தார்.
திருச்சி: திமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளர்கள்போல ஐஏஎஸ் அதிகாரிகள் செயல்படுவதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். தமிழகம் வரும் பிரதமர் மோடியை வரவேற்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் திருச்சி மாநகர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை வகித்தார். கோட்டப் பொறுப்பாளர் கருப்பு முருகானந்தம், மாநகர் மாவட்டத் தலைவர் ஒண்டிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர், நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் விரோத சக்தியான திமுக தொடர்ந்து ஆட்சியில் இருக்கக் கூடாது. தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது. அரசு செலவில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சி மூலம் திமுகவை வளர்க்கிறார்கள். இதற்காக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்துள்ளனர். அவர்கள் திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர்கள்போல செயல்படுகிறார்கள். ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்பது…
‘நாம் கனவு காணும்’ போலவே, அமைதியான வாழ்க்கையை விட்டு வெளியேறுவதைப் போல வசதியாக இருப்பது உணர்கிறது, ஆனால் இந்த அமைதி குறுகிய காலமாகும். உங்கள் சொந்த ஆறுதல் மண்டலத்தில் இருப்பதற்கு நீங்கள் மிகவும் பழகிவிட்டீர்கள், ஒரு கட்டத்திற்குப் பிறகு, அது உங்கள் திறனை அடைவதிலிருந்து உங்களை பின்னுக்குத் தள்ளத் தொடங்குகிறது.எனவே, நீங்கள் வசதியாக இல்லாததால் பொதுப் பேச்சைத் தவிர்த்தால், நீங்கள் ஒருபோதும் நம்பிக்கையையோ அல்லது தலைமைத்துவ குணங்களையோ உருவாக்க மாட்டீர்கள், மற்றவர்கள் உங்கள் வாய்ப்புகளை பறிப்பதை நீங்கள் கண்டிப்பீர்கள்.
பெங்களூரு: கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரி உட்பட 8 அரசு அதிகாரிகளின் வீடுகளில் லோக் ஆயுக்தா போலீஸார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.50 கோடி மதிப்பிலான பணம், தங்க நகைகள் மற்றும் ஆவணங்கள் சிக்கின. கர்நாடக மாநிலத்தில் அரசு பணியில் உள்ள முக்கிய அரசு அதிகாரிகள் ஊழலில் ஈடுபடுவதாக லோக் ஆயுக்தா போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் லோக் ஆயுக்தா போலீஸார் நேற்று பெங்களூரு, மங்களூரு, மைசூரு, துமக்கூரு, குடகு, கொப்பல், பெலகாவி உள்ளிட்ட இடங்களில் உள்ள 8 அரசு அதிகாரிகளுக்கு சொந்தமான 45 இடங்களில் சோதனை நடத்தினர். நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை 6 மணி வரை நீடித்தது. இந்த சோதனையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டனர். பெங்களூரு நகர்ப்புற ரயில்வே திட்டத்தின் சிறப்பு துணை ஆணையரும் ஐஏஎஸ் அதிகாரியுமான வசந்தி அமருக்கு சொந்தமான ஆர்.டி.நகர் வீட்டில் சோதனை…
காஞ்சிபுரம்: ஏகனாபுரத்தை மையமாக வைத்து நடைபெற்று வந்த பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம் விரிவடைந்து நேற்று வளத்தோட்டம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பொதுமக்கள் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார கிராமங்களை உள்ளடக்கி பசுமை வெளி விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து 5300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. ஏகானாபுரம் உள்ளிட்ட சில கிராமங்கள் முழுமையாக கையகப்படுத்தப்பட உள்ளன. விவசாய நிலங்கள், வீடுகள், மனைகள், ஏரி, குளங்கள் என பல்வேறு வகையான நிலங்கள் இந்த விமான நிலையத்துக்காக கையகப்படுத்தப்பட உள்ளன. இந்த விமான நிலையம் அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்து நிலம் கையகப்படுத்தும் பணிகளை தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் எடுத்து வருகிறது. இந்த அமைப்பு சார்பில்…
அமெரிக்க கன்சர்வேடிவ் வர்ணனையாளரான கேண்டஸ் ஓவன்ஸ் இப்போது கவனத்தை ஈர்க்கிறார், காரணங்களுக்காக. பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் முதல் லேடி பிரிஜிட் மக்ரோன் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கின் மையத்தில் நம்பிக்கையற்ற அரசியல் வர்ணனையாளர் இருந்தார். தாராளமயம் மற்றும் அவரது டிரம்ப் சார்பு செயல்பாட்டைப் பற்றிய கூர்மையான விமர்சனங்களுக்காக மிகவும் பிரபலமானவர், ஓவன்ஸ் இப்போது பிரிஜிட் மக்ரோன் ஆண் பிறந்தார் என்று கூறி ஒரு பரபரப்பான சதித்திட்டத்தை பரப்பிய குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். என்ன நடந்தது?பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் அவரது மனைவி பிரிஜிட் மக்ரோன் ஆகியோர் அமெரிக்க கடின வலதுசாரி போட்காஸ்டர் கேண்டஸ் ஓவன்ஸ் மீது அவதூறு வழக்கை தாக்கல் செய்துள்ளனர். பாலிடிகோ அறிவித்தபடி, பிரான்சின் முதல் ஜோடி, டெலாவேர் மாநில நீதிமன்றத்தில் தாக்கல் செய்தபடி, பிரெஞ்சு முதல் பெண்மணி ஒரு உயிரியல் ஆணில் பிறந்தார் என்ற வதந்திகளைப் பரப்புவதில் ஓவன்ஸ் லாபம் ஈட்டியதாக குற்றம் சாட்டினார்.கேண்டஸ்…
