மெல்போர்னின் கிழக்கு புறநகர்ப் போரியோனியாவில் உள்ள ஒரு இந்து கோயில் இந்த வாரம் இனவெறி கிராஃபிட்டியால் கட்டுப்படுத்தப்பட்டது, பரவலான கண்டனம் மற்றும் பொலிஸ் விசாரணையைத் தூண்டியது.பிரிஸ்பேன் டைம்ஸ் மற்றும் தி சிட்னி மார்னிங் ஹெரால்ட் ஆகியோரால் அறிவிக்கப்பட்டபடி, “கோ ஹோம்” என்ற சொற்களைக் கொண்ட தாக்குதல் சிவப்பு கிராஃபிட்டி மற்றும் பிற இனக் குழப்பங்கள் வாடர்ஸ்ட் டிரைவில் உள்ள ஸ்ரீ சுவாமினாராயண் கோயில் முழுவதும் மற்றும் அருகிலுள்ள இரண்டு ஆசிய-இயக்கப்படும் உணவகங்கள் கிங்ஸ்லேண்ட் சீன உணவகம் மற்றும் சார்லஸ் கிங் டம்ப்ளிங் ஆகியவற்றைக் கண்டறிந்தன.மவுண்டன் நெடுஞ்சாலையில் ஒரு குணப்படுத்தும் மையமும் அதே இரவில் பழுதடைந்தது, மொத்த தளங்களின் எண்ணிக்கையை நான்காகக் கொண்டு வந்தது. “வெறுப்பு அடிப்படையிலான மற்றும் இனவெறி நடத்தைக்கு எங்கள் சமூகத்தில் முற்றிலும் இடமில்லை” என்று விக்டோரியா போலீசார் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர். நான்கு சம்பவங்களும் இணைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடந்து வருவதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.’வழிபாட்டுக்கான எங்கள் உரிமையின் மீதான தாக்குதல்’ஆஸ்திரேலியாவின்…
Author: admin
டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்களை திரும்பப் பெறவும் வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உரிய சட்டம் இயற்றவும் அவர்கள் வலியுறுத்தினர். விவசாய அமைப்புகளின் ஒரு புள்ளிவிவரத்தின்படி, இந்தியாவில் 2019 முதல் 2023 வரை வனவிலங்குகள் தாக்கியதில் 2,853 பேர் இறந்துள்ளனர். ஆண்டுக்கு சுமார் ரூ.10,000 கோடி மதிப்பிலான விவசாய பயிர்களை வனவிலங்குகள் சேதப்படுத்துகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் இழப்பீடு பெறுவதில் கடுமையான சிக்கல் நிலவுவதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் நேற்று வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி தலைமை தாங்கினார். தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் அமைப்புகளின் நிர்வாகிகள் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். போராட்டம் குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் ஈசன் முருகசாமி கூறும்போது, “இந்தியாவில் 6…
செல்ம்ஸ்ஃபோர்டு: இந்திய யு19 கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரே 64 பந்துகளில் சதம் கண்டார். இதை இங்கிலாந்து மண்ணில் நான்காவது இன்னிங்ஸில் அவர் பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய யு19 கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த நாட்டின் யு19 அணியுடன் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இந்நிலையில், 2 டெஸ்ட் போட்டிகளும் டிராவில் முடிந்தன. 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 20-ம் தேதி தொடங்கியது. இதில் இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்தது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 309 ரன்களும், இந்தியா 279 ரன்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து 324 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. 355 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா இந்தப் போட்டியின் கடைசி நாளில் விரட்டியது. வைபவ் சூர்யவன்ஷி மற்றும்…
சென்னை: சென்னை விமான நிலையத்தில் விரிவாக்கத்துக்காக நடைபெற்று வரும் 2-ம் கட்ட கட்டுமான பணிகளை, டெல்லியை சேர்ந்த அதிகாரிகள் குழு நேற்று ஆய்வு செய்தது. சென்னை விமான நிலையத்தில் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கையும், விமானங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அந்த வகையில், கடந்த 2015-ம் ஆண்டு 2.2 கோடியாக இருந்த பயணிகளின் எண்ணிக்கை, 2025-ல் 3.5 கோடியை நெருங்கியிருக்கிறது. இதையொட்டி, சென்னை விமான நிலையத்தை ரூ.2,467 கோடி மதிப்பீட்டில் 2.36 லட்சம் சதுர மீட்டரில் விரிவுபடுத்த திட்டமிட்டு, அதற்கான பணிகளை 2 கட்டங்களாக நடத்த இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்தது. அதன்படி, முதல் கட்ட பணிகள் ரூ.1,260 கோடியில் 1.49 லட்சம் சதுர மீட்டரிலும், 2-ம் கட்ட பணிகள் ரூ.1,207 கோடியில் 86,135 சதுரமீட்டரிலும் நடத்த திட்டமிடப்பட்டது. தொடர்ந்து, 2023 ஏப்ரல் முதல்கட்ட பணிகள் நிறைவடைந்து, புதிய ஒருங்கிணைந்த முனையம் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது.…
சென்னை: தங்கம் விலை நேற்று (ஜூலை 23) ரூ.75 ஆயிரத்தை தாண்டிய நிலையில் இன்று ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.1000 குறைந்துள்ளது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய காரணிகளாக உள்ளன. கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் ஒரு பவுன் தங்கம் ரூ.58 ஆயிரமாக இருந்தது. பின்னர் தங்கம் விலை படிப்படியாக உயர்ந்தது. தொடர்ந்து, தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு பவுன் தங்கம் ரூ.74 ஆயிரத்தை தாண்டியது. தங்கம் விலை மேலும் உயரும் என்று தங்க நகை வியாபாரிகள் தெரிவித்த நிலையில், ஆபரணத் தங்கம் நேற்று ரூ.75 ஆயிரத்தை தாண்டி வரலாற்றில் புதிய உச்சத்தை பதிவு செய்தது. சென்னையில் நேற்று பவுனுக்கு ரூ.760 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.75,040-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.95 உயர்ந்து ரூ.9,380-க்கு விற்கப்பட்டது. கடந்த 4…
உலகளவில் மரணத்திற்கு இதயப் பிரச்சினைகள் முக்கிய காரணமாகும், சில சமயங்களில், அதன் அறிகுறிகள் திடீரென தோன்றும், மாரடைப்புக்கு வழிவகுக்கும், வழக்கமாக இந்த நிலை மாதங்களில் மெதுவாக உருவாகிறது, சில சமயங்களில் கூட பல ஆண்டுகள் கூட. ஒவ்வொரு ஆண்டும் உங்களை மதிப்பீடு செய்வது முக்கியம் என்றாலும், குறிப்பாக நீங்கள் 40 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால், நீங்கள் கவனிக்கக்கூடிய சில அறிகுறிகள் உள்ளன. இந்த அறிகுறிகள் எப்போது வேண்டுமானாலும் தோன்றினாலும், செயலற்ற காலத்திற்குப் பிறகு, காலையில் அவை அதிகமாகக் காணப்படலாம். நீங்கள் புறக்கணிக்கக் கூடாத இதயப் பிரச்சினையின் 5 காலை அறிகுறிகள் இங்கே …
ஒரு ஆய்வு கடல் ஆராய்ச்சிக்கான ராயல் நெதர்லாந்து நிறுவனம் . இந்த சிறிய பிளாஸ்டிக், நிர்வாணக் கண்ணுக்கு கண்ணுக்கு தெரியாதது, கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு மட்டுமல்ல, மனித ஆரோக்கியத்திற்கும் கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறது. துகள்கள் மனிதர்கள் உட்பட உயிரினங்களில் ஆழமாக ஊடுருவக்கூடும், இது அறியப்படாத உயிரியல் தீங்கு விளைவிக்கும். இந்த கண்டுபிடிப்பு முன்னர் மறைக்கப்பட்ட மாசுபாட்டின் மீது வெளிச்சம் போடுகிறது, இது பெரிய பிளாஸ்டிக் குப்பைகளை விட மிகவும் பரவலானது மற்றும் தீங்கு விளைவிக்கும்.27 மில்லியன் டன் நானோபிளாஸ்டிக்ஸ் வடக்கு அட்லாண்டிக் நிறைவுஆராய்ச்சி குழு ஆர்.வி. ஒரு மைக்ரோமீட்டர்களை விட சிறிய துகள்களை வடிகட்டுவதன் மூலமும், அவற்றின் வேதியியல் கையொப்பங்களை மேம்பட்ட மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி நுட்பங்களுடன் பகுப்பாய்வு செய்வதன் மூலமும், விஞ்ஞானிகள் கடலில் மிதக்கும் நானோபிளாஸ்டிக்ஸின் சுத்த அளவை அளவிட முடிந்தது. இந்த ஆய்வு கடல் சூழலில் நானோபிளாஸ்டிக்ஸின் முதல் துல்லியமான அளவீட்டைக் குறிக்கிறது, இந்த துகள்கள் வடக்கு அட்லாண்டிக்கில் மட்டும்…
மும்பை: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து ‘டிராவல் பிளஸ் லெஷர் (Travel + Leisure)’ என்ற பயண இதழ் வெளியாகிறது. இந்த இதழ் 2025-ம் ஆண்டுக்கான சிறந்த விமான நிலையங்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. உலகளாவிய சர்வே அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 1.80 லட்சம் வாசகர்கள் பங்கேற்று 6.50 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை செலுத்தியுள்ளனர். இதன் தரவரிசையில் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம் (சிஎஸ்எம்ஐஏ) 84.23 புள்ளிகளுடன் 9-வது இடத்தை பிடித்துள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 3-வது ஆண்டாக உலகின் சிறந்த 10 விமான நிலையங்களில் ஒன்றாக இது தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய விமான நிலையமாக இது உள்ளது.துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையம் 98.57 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம், கத்தார் நாட்டின் தோகாவில் உள்ள…
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ‘கருப்பு’, மற்றும் தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் இன்னும் பெயரிடாத படங்களில் நடித்து வருகிறார் சூர்யா. அவர் தனது 50-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதையடுத்து ‘கருப்பு’ படத்தின் டீஸர் நேற்று வெளியாகி வைரலானது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இதில் த்ரிஷா நாயகியாக நடித்துள்ளார். இதற்கிடையே சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள அவருடைய இல்லத்தில் ஏராளமான ரசிகர்கள் நேற்று கூடினர். வீட்டின் மாடியில் இருந்து அவர்களைப் பார்வையிட்ட சூர்யா, கையசைத்து அவர்களின் வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டார். பின்பு ரசிகர்களுடன் செல்ஃபி வீடியோ எடுத்தார். அந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
சென்னை: சென்னையில் தூய்மைப் பணி தனியாரிடம் வழங்கப்படுவதை கண்டித்து, மாநகராட்சி செங்கொடி சங்கம் சார்பில், மாநகராட்சி தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் பங்கேற்ற மனிதச் சங்கிலி போராட்டம் 68 இடங்களில் நடைபெற்றது. சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்கள் உள்ளன. இதில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர் மண்டலங்களில் சில வார்டுகள், அம்பத்தூர் மண்டலத்தில் சில வார்டுகள் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் தூய்மைப் பணியை தனியாரிடம் மாநகராட்சி வழங்கியுள்ளது. மீதமுள்ள 5 மண்டலங்களில் 1000-க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மேற்கூறிய 5 மண்டலப் பகுதிகளிலும் தூய்மைப் பணிகளை தனியாரிடம் வழங்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் ஏற்கெனவே பணி செய்து வருவோருக்கு பணி வாய்ப்பு கிடைக்காது. இத்தனை ஆண்டுகளாக மாநகராட்சி தூய்மைப் பணி மேற்கொண்ட தங்களுக்கு பணி நிரந்தர வாய்ப்பு பறிபோகும். தனியார் பணியை மேற்கொண்டால், வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு…
